21

21

வவுனியா- யாழ் ரயில் மீளமைப்புக்கு 42 கோடி ரூபா நிதி கிடைத்துள்ளது

26parliament.jpgவவுனியா விற்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ரயில் நிலையங்களை மீளமைப்பதற்காக 42 கோடி ரூபா உள்நாட்டு, வெளிநாட்டு உதவிகள் கிடைத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாய்மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘உதுரு மிதுரு’ திட்டம் தொடர்பாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் தெரிவித்திருந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, ‘உதுருமிதுரு’ திட்டத்திற்கான பிரசாரப் பணிகளுக்கு ஒரு கோடி ரூபா செலவிடப்பட்டதாக ஜே.வி.பி. எம்.பி.

ஒருவர் பாராளுமன்றத்தலி பொய்யான தகவலொன்றை தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கான பிரசாரப் பணிகளுக்கு ரயில் திணைக்களத்தினூடாக 10 இலட்சம் ரூபா கூட செலவிடப்படவில்லை. எனது நேரடிக் கண்காணிப்பின் கீழே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் தவறான செய்திகளை பரப்பி சபையையும் மக்களையும் தவறாக வழிநடத்த வேண்டாமென கோருகிறேன்.

மோதல் காரணமாக சேதமான ரயில் நிலையங்களை மீளமைக்க நாம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். இதற்காக நிதியமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி ரயில் பாதைகளை மீளமைக்க 42 கோடி ரூபா அனுசரணை கிடைத்துள்ளது என்றார்.

262 கோடி செலவில் ரயில் பெட்டிகள்

மற்றொரு வாய்மூல வினாவுக்குப் பதிலளித்த அமைச்சர், 2006ம் ஆண்டு முதல் ரயில் பெட்டிகள், இன்ஜின்கள் என்பன கொள்வனவு செய்வதற்கு 262 கோடி ரூபா செலவிடப்பட்ட தாகவும் இந்தக் காலப்பகுதியில் 100 ரயில் பெட்டிகள், இன்ஜின்கள் மற்றும் சிற்றுண்டி கூட பெட்டிகள் என்பன கொள்வனவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதில் 57 மூன்றாம் வகுப்பு பெட்டிகளும் 24 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் 6 சிற்றுண்டி கூட பெட்டிகளும் அடங்குவதாகவும் அவர் கூறினார்.

ஊவா முதல்வராக சசீந்திர சத்திய பிரமாணம்: செந்தில் உட்பட 4 அமைச்சர்களும் பதவியேற்பு

shasendrakumararajapaksa.jpgஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சசீந்திர குமார ராஜபக்ஷ, நேற்று ஆளுநர் நந்தா மெத்யூ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இவ் வைபவத்தின் போது ஊவா மாகாண முதலமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட சசீந்திர குமார ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குரக்கன் நிற சால்வை ஒன்றையும் அணிவித்தார்.

ஊவா மாகாண சபையின் முதலமைச்சரும், ஏனைய அமைச்சர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மாகாண ஆளுநர் நந்தா மெத்யூவ் ஆகியோர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். அதே நேரம் ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் சகலரும் இவ் வைபவத்தில் ஜனாதிபதி முன்னிலையில் கூட்டாக சத்தியப் பிரமாணம் செய்தனர்.

*  சசீந்திர குமார ராஜபக்ஷ முதலமைச்சர், நிதி, திட்டமிடல், சட்டம், ஒழுங்கு, கல்வி, உள்ளூராட்சி மன்றங்கள், கலாசார விவகாரம், போக்குவரத்து, காணி, நீர்ப்பாசனம், பொருளாதார மேம்பாடு, கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, நிர்மாணத்துறை ஆகிய அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்.

* செந்தில் தொண்டமான் – இளைஞர் விவகாரம், விளையாட்டு, சமூக சேவைகள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, மின்சக்தி, எரி சக்தி, புடவைக் கைத்தொழில், சிறு கைத் தொழில்துறை ஆகிய அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்.

* ஏ.எம். புத்ததாச – சுகாதாரம், உண்ணாட்டு வைத்தியம், சிறுவர் பாதுகாப்பு, நன்நடத்தை, மகளிர் விவகாரம் ஆகிய அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்.

* அனுர ரவீந்திர விதான கமகே – விவசாயம், கமநல அபிவிருத்தி, கால் நடை வளர்ப்பு, நன்னீர் மீனவ கைத்தொழில், சுற்றாடல் மற்றும் சுற்றுலா ஆகியதுறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர்.

* ஆர்.எம். குமாரசிறி ரத்நாயக்கா – நெடுஞ் சாலை அபிவிருத்தி, வீடமைப்பு, நீர்வழங்கல், நுகர்வோர் விவகார, கூட்டுறவு, உணவு வழங்கல் மற்றும் விநியோகம் என்பவற்றுக்குப் பொறுப்பான அமைச்சர்.

இதேவேளை மாகாண சபை உறுப்பினர்களான டாக்டர் ரோகண புஷ்பகுமாரவை சபைத் தலைவராகவும், சாலிய சுமேதவை உப தலைவராகவும், ஆளும் கட்சி பிரதம கொறடாவாக ராஜா பந்துசேனவையும், சபை முதல்வராக விஜித பேருகொடவையும் மாகாண சபையின் முதலாவது அமர்வின்போது தெரிவு செய்யுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன இவ் வைபவத்தின் போது ஆலோசனை முன் வைத்தார்.

வன்முறைகளுக்கு நடுவே ஆப்கான் தேர்தல்கள் முடிவடைந்துள்ளன

vote000.jpgஆப்கானிஸ் தானில் கிளர்ச்சிக்காரர்களின் அச்சுறுத்தல்களையும் மீறி அதிபர் தேர்தலில் மக்கள் வாக்களித்ததிருப்பதை அந்நாட்டின் அததிபர் ஹமீத் கர்சாய் பாராட்டியுள்ளார். வாக்குபதிவு தினமான வியாழனன்று மட்டும் எழுபது தாக்குதல்கள் நடந்ததுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கர்சாய் அவர்களின் முக்கியப் போட்டியாளர்களின் ஒருவரான அஷ்ரஃப் கனி, நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் வாக்குப்பதிவின்போது பரவலாக முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒரு சில புகார்கள் மட்டுமே வந்திருப்பதாக ஆப்கானிய தேர்தல் ஆணையம் கூறுகிறது. சில வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகளில் வாக்காளர்கள் காத்திருந்தபடியால், வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு கடைசியாக நடந்த அதிபர் தேர்தலை விட இம்முறை வாக்குப்பதிவு குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது என காபூலில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்

சம்பூரில் இடம்பெயர்ந்த மக்கள் மூன்று மாதத்தினுள் மீள்குடியேற்றம்

26parliament.jpgதிருகோண மலை, சம்பூர் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களை மூன்று மாத காலத்தினுள் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமென்று மீள்குடியேற்ற அனர்த்த, நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சம்பூர் அதிஉயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சு வார்த்தை நடத்தி மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த அமைச்சர் ரிஷாத், சம்பூர் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை நிராகரிப்பதாகவும் கூறினார்.

மீள்குடியேற்றம் தொடர்பாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் வை.எம்.நவரட்ன பண்டா எழுப்பிய, வாய்மூல விடைக்கான கேள்வியொன்றுக்குப் பதில் அளிக்கையிலேயே அமைச்சர் ரிஷாத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை, மீளக்குடியமர்த்தப்பட்டவர்களின் விபரங்கள் தொடர்பில் பா.உ.நவரட்ன பண்டா கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ரிஷாத், இந்த ஆண்டில் 2,88,938 பேர் இடம்பெயர்ந்ததாகவும், இதுவரை 59,600 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் விளக்கினார்.

கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றம் 98% நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், மட்டக்களப்பில் 35,766 குடும்பங்களும், திருகோணமலையில் 22,068 குடும்பங்களும், மன்னாரில் 669 குடும்பங்களும் அம்பாறையில் 51 குடும்பங்களும், யாழ்ப்பாணத்தில் 1054 குடும்பங்களும் இதுவரை மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் நேற்றுக்காலை 9.30ற்கு வழமைக்கு மாறாகப் பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரட்னவின் தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார சபா பீடத்திற்கு வருகை தந்தார்.

அமைச்சரின் பதிலுக்குப் பின்னர், துணைக் கேள்வி எழுப்பிய ஜே.வி.பி. உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க, ‘சம்பூரில் பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்கள், அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவதற்குப் பதிலாக, அவர்களின் வாழ்விடத்தில் மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்காக இந்தியாவுக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேறு இடங்களுக்குச் செல்ல விரும்பாமல் தொடர்ந்து இரண்டு வருடமாக ஐந்து முகாம்களில் உள்ளனர்” என்றார்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வேறு இடங்களில் குடியமர மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். சொந்த இடங்களுக்குச் செல்வதானால், பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள முடியும். நானறிந்தவரை சம்பூர் இந்தியாவுக்கு வழங்கப்படவில்லை” என்றதுடன்,

அதேநேரம், எதிர்க்கட்சிகளுக்கு நிவாரணக் கிராமங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நிமல் மெத்திவக்க நியமனம்

nimal_madiwaka.jpgபொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். உடனடி அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண இவருக்கான பதவி நியமனத்தை நேற்று வழங்கியதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான நிமல் மெத்திவக்க பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிகளுக்கு மேலதிகமாக ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றுவார். பொலிஸ் ஊடகப் பேச்சாளராக இதுவரை கடமையாற்றி வந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர இவ்வாரம் முதல் ஓய்வுபெறுகின்றார். ஊடகப் பேச்சாளராக நீண்டகாலம் பொறுப்பிலிருந்த இவர் ஊடகத்துறைக்கு செய்தி வழங்குவதில் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.

ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான நிமல் மெத்திவக்க மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபராகவும் போக்குவரத்து ஒழுங்கு மற்றும் திட்டமிடல் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபராகவும் கடமையாற்றி வருகின்றார்.

இலங்கையின் முதலாவது காற்றாடி மின் உற்பத்தி நிலையம் புத்தளத்தில்

wind_powerss.jpgகாற்றாடி மூலம்  மின்சாரம் உற்பத்தி செய்யும் இரு நிலையங்கள்  புத்தளம் மாவட்டத்தில் நிறுவப்படவுள்ளன. இலங்கை முதலீட்டுச் சபையின் அனுமதிக்காக இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் உதவி முகாமையாளர் டட்லி பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கையில் அமைக்கப்படும் காற்றாடி மூலமான முதலாவது மின் உற்பத்திததிட்டம் இதுவாகும். இத்திட்டத்திற்கு 4255 மில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 மெகாவொட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இதன் நிர்மானப்பணிகள்  இரு உள்நாட்டு நிறுவனங்கள மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்குத் தேவையான இயந்திர உபகரணங்கள் மற்றும் கருவிகள் ஸ்பைன் நாட்டில் இருந்து தருவிக்கப்படவுள்ளது. காற்றாடி மூலம் மின் உற்பத்தி செய்யும் 25 டேபைன்கள்  இங்கு பொருத்தப்படவுள்ளன.    

சர்வதேச தரமுடையதாக இத்திட்டம் அமுல்படுத்தப்படுமென இலங்கை முதலீட்டுச் சபையின்  உதவி முகாமையாளர் மேலும்  தெரிவித்துள்ளார். 

இலங்கையில் 30 வருடங்களுக்குப் பின்னர் சனத்தொகை மதிப்பீடு!

0000sri-lanka-map.jpg இலங்கையில் 30 வருடங்களுக்குப் பின்னர் சனத்தொகை மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 2011 ஆம் ஆண்டில் இந்த நடவடிக்கை முற்றுப்பெறும் என்றும் சனத்தொகை மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் டி.பீ.பி.எஸ் வைத்தியரத்ன தெரிவித்தார்.

10 வருடங்களுக்கு முன்னர் சனத்தொகை மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கௌளப்பட்டபோதும் அப்போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால் அப்பணி முழுமையடையவில்லை என்றும் அவர் கூறினார்.

ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள வீடுகள் அந்த வீடுகளில் வசிப்பவர்களின் விபரங்கள் என்பன ஆரம்ப கட்ட நடவடிக்கையாக பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.சனத்தொகை மதிப்பீட்டு நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்ற பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அம்பாந்தோட்டை துறைமுக பணிகள் அடுத்த ஆண்டு பூர்த்தி

yappa.jpgஅம்பாந் தோட்டை துறைமுக நிர்மாண பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் பூர்த்தியடைந்து விடும் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாவது கப்பல் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த துறைமுகத்திற்கான முதலாவது இறங்குதுறையை நிர்மாணிக்கும் பணிகள் நிறைவு பெறும் தறுவாயில் உள்ளதாக தெரிவித்த அவர் 500 மீற்றர் தூரம் வரை இறங்குதுறை தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். நாரஹேன்பிடியிலுள்ள தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தகவல் தருகையில்,

கொழும்பைப் போன்று கிராமப் புறத்தையும் அபிவிருத்தி செய்யும் பொருட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2011ம் ஆண்டு இறுதியிலே இந்த துறைமுக நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. எனினும், தமது இலக்குக்கு முன்னரே தற்பொழுது வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முடிந்துள்ளது.

39,080 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நிர்மாண பணிகள் முன்னெடுக்கப் படவுள்ளன. இவற்றில் 33,218 மில்லியன் ரூபாவை சீன அரசு நிதியுதவியாக வழங்கி யுள்ளது என்றார். 2010ம் ஆண்டு டிசம்பரில் பணிகளை பூர்த்தி செய்து விட்டு நீரை உள்வாங்கும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை அணியுடனான டெஸ்ட்; நியூசிலாந்து அணி 281/8

murali.jpgஇலங் கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்சிற்காக நியூசிலாந்து அணி 281ஓட்டங்களுக்கு 8விக்கெட்டுகளை இழந்து இருந்தது. மூன்றாவது நாள் ஆட்டமும் மழை காரணமாக தாமதமாகவே ஆரம்பமானது.

Sri Lanka                        

1st innings: 452
(T. Dilshan 92, M. Jayawardene 114, T. Samaraweera 159, D. Vettori 4-78, C. Martin 4-77)

NEW ZEALAND               

1st innings               (overnight 87-2)
T. McIntosh lbw b Muralitharan   69
M. Guptill b Thushara    24
D. Flynn b Mendis    14
J. Patel lbw b Muralitharan   26
R. Taylor c P. Jayawardene b Thushara  35
J. Ryder b Kulasekara    42
B. McCullum b Thushara     1
J. Oram c sub (Warnapura) b Muralitharan  12
D. Vettori not out    33
I. O’Brien not out     3
Extras: (b6, lb5, nb11)   22
TOTAL (for 8 wkts, 105 overs)   281
To bat: Chris Martin.
Fall of wickets: 1-45 (Guptill), 2-80 (Flynn), 3-129 (Patel), 4-180 (Taylor),
5-188 (McIntosh), 6-195 (McCullum), 7-223 (Oram), 8-259 (Ryder).
Bowling: Kulasekara 10-2-41-1 (nb1), Thushara 22-2-80-3 (nb6), Mendis 34-8-75-1 (nb4), Muralitharan 37-9-66-3, Paranavitana 2-0-8-0.

அரசிற்கு எதிரான பிரசுரங்களை ஒட்டிய ஜேவிபி உறுப்பினர்கள் கைது.

jvp-poster.jpgநாட்டில் நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை ஒழியுங்கள் எனும் வாசகம் அடங்கிய பிரசுரங்களை ஒட்டிய ஜேவிபி யை சேர்ந்த கொழும்பு நகரசபை உறுப்பினரான சுமித் ஹேவாபாசப்பெருமகே யுடன் மேலும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.