காற்றாடி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் இரு நிலையங்கள் புத்தளம் மாவட்டத்தில் நிறுவப்படவுள்ளன. இலங்கை முதலீட்டுச் சபையின் அனுமதிக்காக இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் உதவி முகாமையாளர் டட்லி பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கையில் அமைக்கப்படும் காற்றாடி மூலமான முதலாவது மின் உற்பத்திததிட்டம் இதுவாகும். இத்திட்டத்திற்கு 4255 மில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 மெகாவொட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இதன் நிர்மானப்பணிகள் இரு உள்நாட்டு நிறுவனங்கள மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்குத் தேவையான இயந்திர உபகரணங்கள் மற்றும் கருவிகள் ஸ்பைன் நாட்டில் இருந்து தருவிக்கப்படவுள்ளது. காற்றாடி மூலம் மின் உற்பத்தி செய்யும் 25 டேபைன்கள் இங்கு பொருத்தப்படவுள்ளன.
சர்வதேச தரமுடையதாக இத்திட்டம் அமுல்படுத்தப்படுமென இலங்கை முதலீட்டுச் சபையின் உதவி முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.