வன்முறைகளுக்கு நடுவே ஆப்கான் தேர்தல்கள் முடிவடைந்துள்ளன

vote000.jpgஆப்கானிஸ் தானில் கிளர்ச்சிக்காரர்களின் அச்சுறுத்தல்களையும் மீறி அதிபர் தேர்தலில் மக்கள் வாக்களித்ததிருப்பதை அந்நாட்டின் அததிபர் ஹமீத் கர்சாய் பாராட்டியுள்ளார். வாக்குபதிவு தினமான வியாழனன்று மட்டும் எழுபது தாக்குதல்கள் நடந்ததுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கர்சாய் அவர்களின் முக்கியப் போட்டியாளர்களின் ஒருவரான அஷ்ரஃப் கனி, நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் வாக்குப்பதிவின்போது பரவலாக முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒரு சில புகார்கள் மட்டுமே வந்திருப்பதாக ஆப்கானிய தேர்தல் ஆணையம் கூறுகிறது. சில வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகளில் வாக்காளர்கள் காத்திருந்தபடியால், வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு கடைசியாக நடந்த அதிபர் தேர்தலை விட இம்முறை வாக்குப்பதிவு குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது என காபூலில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *