March

March

ஊழல் ஒழிப்பு அணி வன்னி’ பின்னாலுள்ளவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் ! பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நட்டஈடு வேண்டும் !

ஊழல் ஒழிப்பு அணி வன்னி’ பின்னாலுள்ளவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் ! பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நட்டஈடு வேண்டும் !

‘ஊழல் ஒழிப்பு அணி வன்னி’ முடக்கப்படக் கூடாது. பின்னாலுள்ளவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.

“ஊழல் ஒழிப்பு அணி வன்னி“ என்கின்ற பேஸ்புக் வலைத்தள கணக்கு தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஆரம்பத்தில் நியாயமான முறையில் மக்களின் பிரச்சினைகளை பேசியதிலும், ஊழல் குற்றவாளிகளையும் பகிரங்கப்படுத்தியதிலும், அரசியல்வாதிகளின் ஊழல்களை பகிரங்கப்படுத்தியதிலும் அதன் பங்களிப்பு பாராட்டும் விதத்திலிருந்தது. ஆனால் மிகக்குறுகிய காலத்தில் அத்தளம் யாழ் சைவ வேள்ளாள ஆண்களின் அபிலாசைகளை நிறுவுவதற்கான தளமாக மாறியது.

வம்பன் நெற் போல ஆபாச செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஊழலையும் – மக்கள் பிரச்சினைகளையும் பேசாமல் பகிரங்கப்படுத்தாமல் தனிநபர்களின் – தனிப்பட்ட வாழ்க்கை தவறுகளை பற்றி பேசுவதிலும், காலாதிகாலமாக தமிழர்களிடம் புதைந்து போயுள்ள ஆணாதிக்க மனோநிலையில் நின்றும் தனது பதிவுகளை பகிர ஆரம்பித்துள்ளமையானது பலரிடமும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தளத்தின் உண்மை முகத்தை தேசம்நெற் ஆம்பலப்படுத்தி இருந்தமையும் இவர்களை தமிழ் தலிபான்கள் என வர்ணித்து இருந்ததும் தெரிந்ததே.

இதேவேளை குறித்த முகநூல் பக்கத்தில் என்.பி.பி கட்சியினருக்கு ஆதரவான பல பதிவுகளும் அவ்வப்போது வெளியான நிலையில், இந்த முகநூல் பக்கமானது என்.பி.பியினரால் இயக்கப்படுவதாக பலரும் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், ஊழல் ஒழிப்பு அணி வன்னி – எனும் பெயரில் இயங்கும் முகநூல் லைக் பக்கத்துக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஊழல் ஒழிப்பு அணி வன்னி எனும் பெயரில் இயங்கும் முகநூல் லைக் பக்கத்துக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இப்பக்கத்தக்கு எதிராக நீங்களும் முறைப்பாடுகளை முன்வைக்கலாம். ஊழல், மோசடிகள், அநீதிகள் இடம்பெறுமாயின் அதனை துணிவுடனும், நேர்மையுடனும் சுட்டிக்காட்டும் தைரியம் எமது தேசிய மக்கள் சக்தியினருக்கு உள்ளது. எனவே, போலி முகநூல் ஊடாக உலாவ வேண்டிய எவ்வித தேவைப்பாடும் எமக்கு கிடையாது. போலிகளுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனினும், ஏதேனும் மோசடிகள் இடம்பெறக்கூடும் என்பதாலேயே இந்த முன்னெச்சரிக்கை பதிவு என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குமாரவடிவேல் குருபரன் முதல் கௌசல்யா நரேன் வரை: யாழின் குறைவிருத்தி சட்டத்தரணிகள் – யாழ் மக்களின் தலைவிதி !

 குமாரவடிவேல் குருபரன் முதல் கௌசல்யா நரேன் வரை: யாழின் குறைவிருத்தி சட்டத்தரணிகள் – யாழ் மக்களின் தலைவிதி !
யாழின் சட்டத்தரணிகள் குருபரன் முதல் கௌசல்யா வரை சமூத்தைச் சீரழிப்பவர்களாக மாறியுள்ளனர். குறைவிருத்தியுடைய சமூகப் பிரஞையற்ற இவர்கள் யாழ் மக்களின் பிரதிநிதிகளாக மாறுவது யாழ் மக்களை வெட்கித் தலைகுனிய வைக்கின்றது. கள்ளக் காணி எழுதுவது முதல் பெண்களுக்கு விபச்சாரப் பட்டம் வழங்குவது வரை அத்தனை சமூகப் பொறுக்கித் தனங்களையும் இவர்கள் மேற்கொள்கின்றனர். சமூகம் சார்ந்த அடிப்படை அறிவற்ற இச்சட்டத்தரணிகள் தற்போது சமூகம் சார்ந்து கருத்துத் தெரிவிக்குமளவுக்கு தமிழ் சமூகத்தின் நிலை தரம் தாழ்ந்துவிட்டது.
யாழ் மாவட்டத்திலிருந்து தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக்கொள்ளும் சட்டத்தரணிகளின் குறைவிருத்தி நிலை மிகக் கீழ்நிலைக்குச் செல்கின்றது. இவர்களிடையே சமூகம் சார்ந்த எந்தச் சிந்தனையும் இல்லையென்பதை அவர்களின் செயற்பாடுகள் வெட்ட வெளிச்சமாக்கி வருகின்றது. கடந்த காலங்களில் கள்ளக்காணி எழுதுவதோடு தங்களை மட்டுப்படுத்திக்கொண்டிருந்த இந்தச் சட்டத்தரணிகள் தற்போது அரசியலிலும் சமூக விடயங்களிலும் தலையீடு செய்து தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தை தங்கள் சுயவருமானங்களுக்காக சுயபுகழ்ச்சிக்காக பேரம் பேசி வருகின்றனர்.
குருபரன் தலைமையிலான கள்ள உறுதி எழுதும் சட்டத்தரணிகள் யாழ் நூலக எரிப்புடன் தொடர்புடைய, பட்டலந்த சித்திரவதைமுகாமுடன் சிக்குண்ட ரணில் விக்கிரமசிங்கவை தனியாகச் சந்தித்தது பற்றிய செய்தியை கடந்த ஆண்டு தேசம்நெற் வெளிக்கொண்டு வந்திருந்தது. ரணிலைச் சந்தித்த இச்சட்டத்தரணிகள் தங்கள் மீது பொலிஸார் கள்ளக் காணி தொடர்பில் பிரச்சினை எடுக்கக்கூடாது எனக் கேட்டுக்கொண்டிருந்ததை தேசம்நெற் அன்றே தெரியப்படுத்தி இருந்தது.
தற்போது தமிழ் மக்களின் வறுமையை கேவலப்படுத்தி விடியோக்கள் போட்டு விழிப்பு நிலையில் உள்ள பெண்களை அவர்களின் வீடுகளுக்குள் நுழைந்து கேவலப்படுத்தும் காணொலிகளை வெளியிட்ட எஸ் கே கிருஷ்ணாவுக்கு ஆதரவாக சட்டத்தரணி குரபரனும் களமிறங்கி இருந்தார். ஆனால் இவர்களுக்கு சளைக்காமல் ஈடுகொடுத்த பொலிஸ் அதிகாரி ராகவன் எஸ் கெ கிருஷ்ணாவை இரு வாரங்கள் தடுத்து வைக்க போராடி ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். இந்த தமிழ் தேசியவாதச் சட்டத்தரணிகள் அம்பலமாகி உள்ளனர்.
இந்தக் கள்ள உறுதி எழுதும் சட்டத்தரணிகளில் கிருஷ்ணவேனி பெரும் கில்லாடி. மற்றும் மணிவண்ணன் போன்றவர்களும் சளைத்தவர்களல்ல.
தையிட்டி விகாரையை சட்டவிரோதம்மானது என்று கூவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிச் சட்டத்தரணிகள் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், அதேசட்சியைச் சேர்ந்த சுகாஸ் போன்றோர் தையிட்டி விகாரை கட்டப்படுவதற்கு எதிராகவோ கட்டப்பட்டதற்கு எதிராகவோ எந்தவொரு வழங்கையும் இற்றைவரை பதிவு செய்யவில்லை.
ஆனால் யாழில் உள்ள போதைப்பொருள், ஆவா கும்பல்கள் மற்றும் வட்டுக்கோட்டை சாதிய வன்முறைக் கும்பல்களுக்காக வாதாடி அவர்களை வெளியே எடுத்து, தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
காலம்சென்ற மாவை சேனாதிராஜாவின் இறுதிநிகழ்வில் இவர்களதும் சிறிதரனதும் அடியாட்குழுக்களே மரணச்சடங்கிற்கு வருபவர்களை மிரட்டி இறுதிநிகழ்வை தங்கள் அரசியல் பிரச்சார மேடையாகப் பயன்படுத்தினர்.
இவர்களுக்கு சளைக்காமல் அண்மையில் வன்முறையில் ஈடுபட்டு பட்டப்பகலில் கை விரலை வெட்டி எடுத்த வன்முறையாளனை தன்னுடைய காரில் அழைத்துச் சென்று பொலிசாரிடம் ஒப்படைத்து அவரைக் காப்பாற்றி வெளியே எடுத்துவிட்டவர் சட்டத்தரணி சர்மினி.
இந்தச் சட்டத்தரணிகள் குற்றவாளிகளுக்கு எப்படி சட்டத்துக்குள் மாட்டாமல் வன்முறையில் ஈடுபடுவது போன்றவற்றை கற்றுக்கொடுப்பதாகக் குற்றம்சாட்டுகின்றார். காலம்சென்ற முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் சகோதரர்.
இவர்களோடு தற்போது சமூகத்துக்கு கருத்துச்சொல்ல சில சமூகம் பற்றிய அரிவரிப் புரிதலும் இல்லாத சில சட்டத்தரணிகள் களமிறங்கியுள்ளனர். உலகத்தின் அனைத்துத் தரப்பினராலும் ஒரு பாஸிஸ்ட் என்று அடையாளம் காணப்பட்ட கொலைவெறியனான, இனவெறியனான ஹிட்லரை சட்டத்தரணி வைஷ்ணவி, ஹிட்லர் ஜேர்மன் மக்களுக்காகப் போராடினார் என்று ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கினார். ஆனால் பெரியார் தமிழ் விரோதியாம். அந்தப்புரம் நடத்தும் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் படித்து கலைப்பீடாதிக்கு வக்காளத்து வாங்கும் இந்த வங்குரோத்து சட்டத்தரணியிடம் அறிவை எதிர்பார்ப்பது மிகக் கஸ்டம்.
பாலியல் குற்றவாளியை கும்பிடும் பிரேமானந்தாவின் சீடன் சி வி விக்கினேஸ்வரனின் கட்சியில் உள்ள இன்னுமொரு சட்டத்தரணி இராசையா உமாகரன் என்ற சாதிமான். சாதியத்துக்கு எதிராகப் போராடிய பெரியரை கேவலப்படுத்தி, பாலியல் துஸ்பிரயோகம் செய்து ஒரு பெண்ணை 7 தடவை கருக்கலைப்புச் செய்வித்த சீமானுக்கு இவர் யாழ்ப்பாணத்தவர்களின் பெயரில் முண்டுகொடுக்கின்றார்.
இந்த குறைவிருத்திச் சட்டத்தரணிகளின் வரிசையில் நேற்று சட்டத்தரணி கௌசல்யா நரேன் தன் பெயரையும் இணைத்துக் கொண்டுள்ளார். பன்றியோடு சேர்ந்த பசுவும் பவ்வி உண்ணும் என்பது போல் அண்ணன் என்ற பெயரில் சுற்றும் பா உ அர்ச்சுனாவோடு சேர்ந்த கௌசல்யாவின் நிலையும் இது தான்.
ஆயிரம் பேரைக் காதலித்த நான் என்று பெருமை கொள்ளும் அர்ச்சுனா வயது குறைவாக இருந்தால் கௌசல்யாவையே திருமணம் செய்வேன் என்று, வாய்கூசாமல் சொல்கின்றார்.
இதன் தொடர்ச்சியாகவே தம்பி தம்பிராஜா போன்ற சமூகப் பிரஞை அற்றவர்கள், கௌசல்யாவை ‘தேவடியாள்’ என்றும் இன்னும் கேவலமாகவும் பல பதிவுகளை இட்டு வருகின்றார். தம்பி தம்பிராஜா இவ்வாறு எழுதுவது மிகக் கீழ்த்தரமான செயல். இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.
ஆனால் பாதிக்கப்பட்ட கௌசல்யா நரேன், இந்த ஆண் தமிழ் தலிபான்களான பா உ அர்ச்சுனா, ஊழல் ஒழிப்பு அணி வன்னி, வம்பன்டொட்கொம், எஸ் கெ கிருஷ்ணா போன்றவர்களோடு சேர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களான சாளினிக்கும், ஊடகவியலாளரான சங்கவிக்கும் விபச்சாரப் பட்டம் கட்டுகின்றார்.
ஒரு சட்டத்தரணியாக இருந்து சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தை அணுகும்படி சொல்லாமல் சட்டத்தை தங்கள் கையில் எடுப்பதை ஆதரிக்கின்றார். தம்பி தம்பிராஜா கௌசல்யாவை ‘தேவடியாள்’ எனக்கு குறிப்பிடுவது எவ்வளவு மோசமானதோ அதேயளவு மோசமானது, அண்ணாவும் தங்காவும் – அர்ச்சுனாவும் கௌசல்யாவும் சேர்ந்து சாளினியையும் சங்கவியையும் விபச்சாரிகள் என்று முத்திரை குத்துவது.
இந்தக் குறைவிருத்திச் சட்டத்தரணிகள் எந்த முதலீடும் இல்லாமல் மக்களைச் சுரண்டிப் பணம் பார்ப்பதை பொறுத்தக்கொள்ளலாம் ஆனால் அடிப்படைச் சமூக அக்கறையற்ற சமூக விழுமியங்களைப் புரிந்துகொள்ளாத இந்தக் கூட்டம் சமூகத்துக்கு கருத்துச் சொல்ல முற்படுவதை அனுமதிக்க முடியாது. இவர்கள் அடுத்த தலைமுறையையும் தங்களைப் போன்ற குறைவிருத்தி உடையவர்களாக்கி விடுவார்கள். ஆனால் தமிழ் மக்கள் மிக விழிப்பானவர்கள். இந்தக் குறைவிருத்தியாளர்களை விரைவிலேயே அடையாளம் கண்டு கொள்கின்றனர்.

முஸ்லீம் விவாக – விவாகரத்துச் சட்டத்தை சீர்திருத்தாதது முஸ்லீம் சமூகத்தின் பலவீனம் !

முஸ்லீம் விவாக – விவாகரத்துச் சட்டத்தை சீர்திருத்தாதது முஸ்லீம் சமூகத்தின் பலவீனம் ! நுனிப்புல் மேய்வதும் வாக்கு வங்கிக்காக அரசியல் செய்வதும் பா உ அர்ச்சுனாவினதும் ஹிஸ்புல்லாவினதும் பலவீனம் !

ஓய்வுபெற்ற சட்டத்தரணி அரசியல் செயற்பாட்டாளர் மொகமட் நிஸ்தாருடன் முஸ்லீம் சட்டம் தொடர்பான உரையாடல்

இருபது இராணுவ வீரர்கள் கைது !

இருபது இராணுவ வீரர்கள் கைது !

 

இராணுவ முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இராணுவ வீரர்கள் கண்டி பிரதேசத்தில் பல்வேறு தொழில்களில் பணிபுரிந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அண்மையில் அனுராதபுரத்தில் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான நபரும் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை சிறுமிகளுக்கு ஆபத்தாக உருவெடுக்கும் AI ! 

இலங்கை சிறுமிகளுக்கு ஆபத்தாக உருவெடுக்கும் AI !

 

இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி பகிரப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் இந்த பொருத்தமற்ற செயலை 13 தொடக்கம் 17 வயதுடைய சிறுவர்கள் செய்கிறார்கள் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமலாக்க இயக்குநர் வழக்கறிஞர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளின் பெற்றோர் முறைப்பாடு செய்வதாகவும் இவை அந்த சிறுமிகளுக்கு தெரியாமல் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யும் மோசமான செயல் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை AI தொழில்நுட்பத்தைப் பற்றிய விடயங்களும் – விளக்கங்களும் புதிய கல்வி சீர்திருத்தங்களில் கொண்டு வரப்படும் என கல்வி அமைச்சர் தெரவித்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.

 “சுமந்திரன் பகற்கனவு காண்கிறார் – நாங்கள் வலுவாக இருக்கிறோம்” – அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற விக்கினேஸ்வரன் !

“சுமந்திரன் பகற்கனவு காண்கிறார் – நாங்கள் வலுவாக இருக்கிறோம்” – அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற விக்கினேஸ்வரன் !

 

வடக்கு இலங்கையில் கூட்டணி அறிவிப்புக்கள்இ கட்சித்தாவல்கள்இ புதிய அறிவிப்புகள் என உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் களைகட்ட ஆரம்பித்துள்ளது. இதே நேரம் அனுர அலை இன்னமும் ஓய்ந்தபாடில்லை; இது பெரிய சவாலாக தமிழ்தேசிய கட்சிகளுக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இருக்கும் எனவும் ஆனாலும் தமிழரசு வெற்றி பெறும் எனவும் அண்மையில் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சுமந்திரன் பகற்கனவு காண்கிறார் என கடந்த தேர்தலில் மண் கவ்விய தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) தங்களுடைய தனித்துவத்தை முன்வைத்து செல்ல வேண்டும் என்ற நோக்கில் தங்களுடைய சங்கு சின்னத்தையும் முக்கியத்துவப்படுத்தி முன்வைத்தமையால் எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாத படியால் நாங்கள் வெளியேறினோம். ஆகவே நாங்கள் தனித்து போட்டியிடுவதாக இப்பொழுது அறிவித்துள்ளோம். தேர்தலின் பின்னர் யார் யாருடன் சேரந்து அந்த நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது யாழ் மாவட்டத்திலுள்ள 17 சபைகளையும் கைப்பற்றுவோம் என தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் பகற்கனவு காண்பதாக தெரிவித்துள்ள விக்கினேஸ்வரன்இ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் சிங்கள ஆதிகத்திலிருந்து விடுபட்டுத் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வினை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

“மௌனத்தைக் கலைப்போம்” – யாழில் நடைபவணி பேரணி !

“மௌனத்தைக் கலைப்போம்” – யாழில் நடைபவணி பேரணி !

 

வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தின் பௌர்ணமி நாள் செயற்பாட்டுத் தொடர்ச்சியில், பெண்களுக்கு எதிரான அனைத்துச் சுரண்டல்களையும் முடிவுக்கு கொண்டுவர “மௌனத்தைக் கலைப்போம்” எனும் தொனிப்பொருளில் நேற்றையதினம் வியாழக்கிழமை (13) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்ட பேரணியானது தந்தை செல்வா கலையரங்கு வரை சென்று நிறைவடைந்தது.

“எமது நிலம் எமக்கு வேண்டும்“ – மீண்டும் தையிட்டி !

“எமது நிலம் எமக்கு வேண்டும்“ – மீண்டும் தையிட்டி !

 

யாழ் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக போராட்டம் பௌர்ணமி நாளான நேற்றையதினம் இடம்பெற்றது. காணி உரிமையாளர்கள், பொது மக்கள், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இப்போராட்டத்தில்இ கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு ”வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்”, “எமது நிலம் எமக்கு வேண்டும்“, ”சட்டவிரோத விகாரையை உடனே அகற்று”, “சட்டவிரோத விகாரைக்கு காவல்துறை பாதுகாப்பு”, “காவல்துறை அராஜகம் ஒழிக“ போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பில் நேரில் சென்று ஆராயவுள்ளதாகவும் இதுவிடயத்தில் நியாயமான முறையில் தலையிட முடியும் என தான் நம்புவதாகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.

யாழ் 17 உள்ளூராட்சி சபைகளிலும் நாம் தான் – நாடு மட்டுமல்ல கிராமங்களும் அனுரவோடு தான் ! அமைச்சர் சந்திரசேகர் 

யாழ் 17 உள்ளூராட்சி சபைகளிலும் நாம் தான் – நாடு மட்டுமல்ல கிராமங்களும் அனுரவோடு தான் ! அமைச்சர் சந்திரசேகர்

 

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு அவர் வருகை தந்தபோது இந்தக் கருத்தை தெரிவித்தார். அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தையும் இன்றைய தினம் என்.பி.பி செலுத்தியுள்ளது.

 5 வருடங்களில் போதைப்பொருள் பாவனை 250 சதவீதம் அதிகரிப்பு !

5 வருடங்களில் போதைப்பொருள் பாவனை 250 சதவீதம் அதிகரிப்பு !

 

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்தள்ளது. இவர்களில் குறிப்பாக 15 முதல் 17 வயதுடையவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அதிகம் அடிமையாகின்றனர். இத்தகவல்களை இலங்கை தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை வெளியிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 162,000 நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீட்டில் நாட்டில் 92,000 முதல் 100,000 பேர் வரை போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் சுமார் 350,000 பேர் ஹெரோயினுக்கும் 350,000 பேர் கஞ்சாவுக்கும் அடிமையாகி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை இலங்கையின் பல பகுதிகளிலும் பரவலாக பொலிஸ் அதிகாரிகளும் போதைப்பொருள் பாவனை தொடர்பிலும் விற்பனை தொடர்பிலும் கைதாகி வருகின்றனர். அரசாங்கம் இது தொடர்பில் இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்றையதினமும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகிய நாள் முதல் தற்போதுவரை ஹெரோயின், ஐஸ், குஷ் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களை எடுத்துச் சென்ற 393 பேர் கைதாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.