2025

2025

நானும் உள்ளேன் ஐயா முன்னாள் எம்பி எம். ஏ. சுமந்திரன் !

நானும் உள்ளேன் ஐயா முன்னாள் எம்பி எம். ஏ. சுமந்திரன் !

 

இலங்கையில் நடைபெற்ற கடந்த கால மனித உரிமை மீறல்களை கண்டுங்காணாதது போல் கடந்து செல்கிறது என்.பி.பி அரசாங்கம். சுமந்திரன் குற்றச்சாட்டு. ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை நிராகரிப்பதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இந்நிலையில் கடந்தகால மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மைகளை அறியவேண்டிய அவசியம் தமக்கு இல்லை அல்லது அவை மூடிமறைக்கப்படவேண்டும் என்ற தோரணையில் என்பிபி செயற்படுவதையே காண்பிப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.

இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய மூன்று கட்டமைப்புக்களையும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதன் ஊடாக நாட்டில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அவை இலங்கையில் மனித உரிமைககள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதை இலக்காகக்கொண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்குத் தடையேற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன என்றும் எம். ஏ. சுமந்திரன் குற்றம் சாட்டினார்.

இந்த செயற்பாடுகளுக்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் அவர்கள் கூறுவதை உண்மையிலேயே நடைமுறைப்படுத்தப்போகிறார்களா என்பது தெரியவரும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமக்கு ஆணை அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் தற்போதைய அரசாங்கம் அம்மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கையை இவ்வாறு நிராகரிப்பது ஏற்புடையதன்று என்றார். மைத்திரியின் நல்லாட்சி அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்த தமிழரசுக் கட்சியில் அங்கம் வகித்த சுமந்திரன் அப்போது இவ்விடையம் குறித்து காத்திரமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என விமர்சனத்திற்குள்ளாகிறார்.

யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடிப் புத்தியை காட்டும் எம்பி அர்ச்சுனாவின் நாத்தடிப்பு !

யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடிப் புத்தியை காட்டும் எம்பி அர்ச்சுனாவின் நாத்தடிப்பு !

 

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை கைநாட்டு; எழுத வாசிக்க தெரியாதவர் என எம்.பி இராமநாதன் அர்ச்சுனா அவமாரியாதையாக நேற்றைய நாடாளுமன்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றியிருந்தார்.

சமீபத்தில் அமைச்சர் கப்பலில் தோட்டத் தொழிலாளராக வந்த வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் நாங்கள் அதாவது அர்ச்சுனாவின் யாழ்ப்பாண வம்சாவளியினர் கப்பல் கட்டி விட்ட மேட்டுக்குடியினர் என மட்டம் தட்டி வலைத்தளத்தில் பேசி இருந்தார். அர்ச்சுனா கடற்தொழில் அமைச்சர் மீது காட்டும் வன்மம் தான் வெள்ளாள யாழ்ப்பாண மேட்டுக்குடியைச் சேர்ந்தவன் என்ற மேலாதிக்க மனோபாவத்தின் காழ்ப்புணர்வின் வெளிப்பாடு எனவே கருதப்படுகிறது. இராமலிங்கம் சந்திரசேகர் கடற்தொழில் அமைச்சாராக வந்ததை அர்ச்சுனாவைப் போன்று குறுந் தமிழ்த்தேசிய வெள்ளாள மேட்டுக்குடியினரும் விரும்பவில்லை. ஒரு மலையகத் தமிழன் அதுவும் ஒரு தோட்டத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் யாழ்ப்பாணத்தானை ஆளவா? என்ற காழ்ப்புணர்வை பலர் மனதில் வைத்துள்ளார்கள். எம்பி அர்ச்சுனா சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் காட்டுகிறார்.

கடந்த புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் பா உ ரஜீவனின் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் பிரேரணை விவாதத்தில்; “சில நாய்கள் வாந்தி எடுத்துவிட்டு அதனையே திருப்பி உண்ணும். இவ்வாறான நாய்களுக்கு இதுவொரு வருத்தம்” என்று பா உ அர்ச்சுனா மீதான தனது அதிருப்தியை அமைச்சர் சந்திரசேகர் வெளிப்படுத்தியிருந்த நிலையில் இது தொடர்பில் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் தனது பங்கிற்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை நாய் என குறிப்பிட்டுள்ளார் எம்.பி. இராமநாதன் அர்ச்சுனா.

மேலும் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் வடக்கின் சுகாதார நிலை தொடர்பில் பேசிய எம்.பி இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாணத்தின் மொத்த சுகாதார அமைச்சின் செலவுக்கு 0.019 வீதம் பிச்சை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அத்தோடு, முதுகெலும்பு இருந்தால் நான் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என சுகாதார அமைச்சருக்கு சவால் விடுத்துள்ள எம்.பி இராமநாதன் அர்ச்சுனா, யாழ்ப்பாணத்திலும், வடக்கு, கிழக்கிலும் சுகாதாரத்துறை ஒழுங்கற்று காணப்படுகின்றது எனவும் கூறியுள்ளார்.

பா உ அர்ச்சுனா போல் கஜேந்திரகுமார், செல்வம், சிறிதரன் எல்லோரும் உதிரிகள் ! இவர்கள் யாழில் சில ஊர்களின் பிரதிநிதிகள் ! வடக்கு – கிழக்கு பிரதிநிதிகள் அல்ல ! ஆய்வாளர் வி சிவலிங்கம்

பா உ அர்ச்சுனா போல் கஜேந்திரகுமார், செல்வம், சிறிதரன் எல்லோரும் உதிரிகள் ! இவர்கள் யாழில் சில ஊர்களின் பிரதிநிதிகள் ! வடக்கு – கிழக்கு பிரதிநிதிகள் அல்ல !

ஆய்வாளர் வி சிவலிங்கம் அவர்களோடு ஒரு உரையாடல்

 

இலங்கையில் ஆறு பேரில் ஒருவர் ஏழை – நாடாளுமன்றத்தில் அமைச்சர் உபாலி !

இலங்கையில் ஆறு பேரில் ஒருவர் ஏழை – நாடாளுமன்றத்தில் அமைச்சர் உபாலி !

இலங்கையில் ஆறு பேரில் ஒருவர் வறுமையில் உள்ளதாகக் கிராமிய அபிவிருத்தி , சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சர் உபாலி பன்னிலகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவித்தபோது, கிராமிய வறுமை இந்த நாட்டிற்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. நம் நாட்டில் ஆறு பேரில் ஒருவர் வறுமையில் இருக்கிறார் . அவர்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானோர் கிராமப்புற மற்றும் தோட்டப் பகுதிகளில் வசிக்கின்றனர் . கிராமப்புற வறுமையை ஒழிப்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் முக்கியமாகக் கவனம் செலுத்தியுள்ளது. கிராமப்புற, அரை நகர்ப்புறம், மலையகம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையான வறுமையால் பாதிக்கப்படுகின்றனர். மேலிருந்து கீழாகப் பாய்ந்து செல்லும் அபிவிருத்திக்குப் பதிலாக, கிராம மக்களின் தேவைகளை ஆராய்ந்து, கிராமப்புற அபிவிருத்தி திட்டங்களைத் தயாரித்துச் செயல்படுத்த மக்களுக்கு வசதிகளை வழங்குவோம் என்று அமைச்சர் கூறினார் .

உண்மையான கள்ளன் – பொலிஸ் விளையாட்டு !

உண்மையான கள்ளன் – பொலிஸ் விளையாட்டு !
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்தையும், செவ்வந்தியையும் காடு மேடெல்லாம் தேடியும் இலங்கை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை வெலிகமவில் உள்ள பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்பாக தேசபந்து தென்னக்கோன் தேடப்பட்டு வருகின்றார். தலைமறைவாகியுள்ள தென்னக்கோனுக்கு நீதிமன்றம் பயணத் தடை விதித்திருக்கின்றது. மேலும் இதுவரை ஐந்து வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இருந்தும் தேசபந்து தென்னகோனை  பொலாஸார் இன்னுமும் தேடி வருகின்றனர்.
நீதிமன்ற வளாகத்தில் கனேமுல்ல சஞ்சீவ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியை சுட்டுக் கொன்ற கொலையாளிக்கு உதவிய சந்தேக நபரான பெண் இஷாரா செவ்வந்தியையும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாகியும்  பொலிஸார்  தேடிக் கொண்டிருக்கின்றனர்.
செவ்வந்தியின் இருப்பிடம் பற்றிய தகவல் வழங்குவோருக்கு பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து 12 இலட்சம் ரூபா பரிசாக வழங்க பதில் பொலிஸ் மா அதிபர் திரு.பிரியந்த வீரசூரிய தீர்மானித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சி.வி.கே.சிவஞானம் – மார்ச்சில் ஏப்பிரல் பூல் (April Fool) ‘எமது கட்சிக்குள் எந்த பிரிவுகளும் இல்லை !

சி.வி.கே.சிவஞானம் – மார்ச்சில் ஏப்பிரல் பூல் (April Fool) ‘எமது கட்சிக்குள் எந்த பிரிவுகளும் இல்லை !’

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி அமைக்கப்பட்டது தமக்கு எந்த ஏமாற்றத்தை தரவில்லையெனவும் தமிழரசுக் கட்சியை கீழ்நிலைக்கு கொண்டுச் செல்ல எவராலும் முடியாது எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அனுப்பிய பதில் கடிதம் தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதைக் குறிப்பிட்டார்.

தமிழரசுக் கட்சியின் நலன் குறித்து சிந்திக்க வேண்டுமென தாம் ஏற்கனவே தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வெளியில் கூறப்படுவது போல தமது கட்சிக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லையெனவும் தாம் ஒற்றுமையாகவே உள்ளதாகவும் சி.வி.கே.சிவஞானம் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யாதது மட்டும் தான் குறை என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

இலங்கைக்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் ! பா உ ரவிகரன் – அமைச்சர் பீமல் ரத்நாயக்கா

இலங்கைக்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் ! பா உ ரவிகரன் – அமைச்சர் பீமல் ரத்நாயக்கா

 

வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்தவில்லை எனில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் எச்சரித்துள்ளார்.

அண்மையில் அத்துமீறி இலங்கைக் கடல் எல்லைக்குள் போதைப் பொருட்களையும் கொண்டுவரும் இந்திய மீனவர்களை தமிழரசுக் கட்சியின் பா உ எஸ் சிறிதரன் யாழ் சிறையில் கென்று சந்தித்து வந்தார். வவுனியாவில் உள்ள சிறைக்கும் சென்று இ;ந்திய மீனவர்களைப் பார்வையிட உள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் பாதிக்கப்படும் வடக்கு மீனவர்கள் விடயத்தில் பா உ சிறிதரனோ தமிழ் தேசிய பா உ க்களோ பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

மாறாக தற்போது தமிழரசுக் கட்சியின் வன்னிப் பா உ தேசிய மக்கள் சக்தியின் வழியில் மீனவர்களுக்காக குரல் கொடுத்து வருகின்றார். அத்துமீறும் இந்திய மீனவர்கள் கட்டுப்படுத்தப்படா விட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். பாராளுமன்ற சபைத் தலைவர் பீமல் ரத்நாயக்காவும் இதே கருத்தை நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்திய நடுவன் அரசும் தமிழக அரசும் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைவதைத்தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த வாரம் போராட்டத்தில் குதித் வடக்கு மீனவர்கள் இதே கோரிக்கையை யாழில் உள்ள இந்திய துணைத்தூதுரகத்திடம் கையளித்தள்ளனர். இந்திய தூதரக அதிகாரிகள் வடக்கு மீனவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். அப்போதும் இதே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் துரைராசா ரவிகரன் மேலும் கூறுகையில், “இந்திய கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் நுழைவதை இந்திய அரசும், இந்திய கடற்படையும் தடுக்கவேண்டும்.அதேபோல், இலங்கைக் கடற்படையினரும் இந்த இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறி எமது கடற்பரப்பிற்குள் நுழையும் விடயத்தில் பொறுப்பற்று செயற்படுகின்றனர். கடற்றொழிலாளர்களைக் காப்பாற்றுங்கள். இல்லையேல் வடக்கில் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி நான்கு மாவட்டங்களிலும் கடற்றொழிலாளர்கள் வீதியில் இறங்கிப்போராடுவார்கள். அந்த நிலையை ஏற்படுத்தாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடக்கு தமிழ் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் சபையில் உரையாற்றிய பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடந்த கால அரசாங்கத்தை போலே நீங்களும் இலங்கை கடற்றொழிலாளர்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள வேண்டாம். வடக்கு, கிழக்கை பொறுத்த வரையில் கடற்றொழில் என்பது பொருளாதாரத்தின் மையம். அதனை திட்டமிட்டு அழிப்பதற்கு முன்னைய அரசாங்கம் செயற்பட்டது என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைக்கின்றோம். எனவே, தற்போதைய கடற்றொழில் அமைச்சர் அதைக்கருத்திற் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் உள்ள இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் தங்கள் நாட்டு கடற்றொழிலாளர்கள் மீது இந்திய மத்திய அரசும், தமிழக மாநில அரசும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்போது பதிலளித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வருகை தரும் போது, இலங்கை அரசு இந்த விடயத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

போதைப்பொருள் பாவனையில் இருந்து எம் மக்களை காப்பாற்றுங்கள் – சபையில் பா.உ ரவிகரன் !

போதைப்பொருள் பாவனையில் இருந்து எம் மக்களை காப்பாற்றுங்கள் – சபையில் பா.உ ரவிகரன் !

 

வடபகுதியில் அதிகரிந்துள்ள போதைப்பொருள் ஊடுருவல்களாலும், போதைப்பொருள் பாவனைகளாலும் ஒருதொகுதி எதிர்கால சந்ததியினர் அழிவடைத் தொடங்கியுள்ளதாகவும் எனவே சட்டம் ஒழுங்கைச் சீர்ப்படுத்தி எதிர்கால தலைமுறையினரையும், பொதுமக்களையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மார்ச் 4 பாராளுமன்ற அமர்வின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் மாவட்ட தேசிய மக்கள் சக்தி பா உ ரஜீவன் வடக்கில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் தனிநபர் பிரேரணையை நேற்று கொண்டு வருவதை முன்மொழிவது போன்று தமிழரசுக் கட்சியின் வன்னிப் பா உ துரைராசா ரவிகரனின் உரை அமைந்தது.

அங்கு மேலும் பேசிய பா.உ ரவிகரன், போதையால் நாடுமட்டுமல்ல எங்களுடைய மாவட்டங்களும் தள்ளாடிக்கொண்டுதான் இருக்கின்றது. இதுதொடர்பில் ஏற்கனவே நான் பாதுகாப்பு அமைச்சின் குழுநிலை விவாதத்தில்கூட போதைப்பொருட்களின் ஊடுருவல்கள் தொடர்பிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் பேசியிருந்தேன். இந்த விடயத்தில் கூடிய கரிசனைசெலுத்தி போதைப் பொருட்களிடமிருந்து எமது மக்களைக் காப்பாற்றுங்கள். அதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் என்றார் பா உ துரைராசா ரவிகரன்.

இதற்கிடையே முல்லைத்தீவில் பள்ளி மாணவி கொண்டு சென்ற நீரை அருந்திய பள்ளி மாணவிகள் வாந்தி எடுத்து நோய்வாய்ப்பட்ட சம்பவம் மார்ச் 4ம் திகதி நடைபெற்றுள்ளது. இதனை விசாரிப்பதை விடுத்து மாணவி கசிப்பு கொண்டுவந்துவிட்டார் என்று எண்ணி ஆசிரியர் பள்ளி மாணவியைத் அடித்துள்ளார். தன்னுடைய மகளைத் தாக்கிய ஆசிரியரை அம்மாணவியின் தந்தை போய்த் தாக்கியுள்ளார். இப்பொதுழுது இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

: ‘கட்டிப் போடுங்கள்’, ‘தன் வாந்தியை உண்ணும் நாய்கள்’ பா உ அர்ச்சுனா மீது அமைச்சர் சந்திரசேகர் பாய்ச்சல் ! 

: ‘கட்டிப் போடுங்கள்’, ‘தன் வாந்தியை உண்ணும் நாய்கள்’ பா உ அர்ச்சுனா மீது அமைச்சர் சந்திரசேகர் பாய்ச்சல் !

பா உ ரஜீவனின் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் பிரேரணை விவாதத்தில்; “சில நாய்கள் வாந்தி எடுத்துவிட்டு அதனையே திருப்பி உண்ணும். இவ்வாறான நாய்களுக்கு இதுவொரு வருத்தம்” என்று பா உ அர்ச்சுனா மீது பாய்ந்தார் அமைச்சர் சந்திரசேகர். யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் நேற்று மார்ச் 5இல் வடக்கில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த கொண்டுவந்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின் போதே அமைச்சர் சந்திரசேகர் பொறுமையை இழந்து மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் சந்திரசேகருக்கு வழங்கப்பட்ட நேரத்தில் பா உ அர்ச்சுனா எழுந்து குறுக்கிட்டு குறுக்கிட்டு கத்தியதைத் தொடர்ந்தே அமைச்சர் சந்திரசேகர் கொதித்தெழுந்தார்.

வடக்கில் போதைப்பொருட்கள் மிக முக்கியமான பிரச்சினையாகி பல்வேறு சமூகப் பிறள்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. பல்வேறு சமூகக் கலாச்சாரச் சீரழிவுகளுக்கும் இட்டுச்செல்கின்றது. இது பற்றி இதுவரை மௌனமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியின் தனிநபர் பிரேரணை விவாதத்திற்கு வந்ததும் அது பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். தன்னுடைய தனிநபர் பிரேரணையில் பா உ ரஜீவன் போதைப் பொருட்களே வன்முறைகளுக்கும் வாள் வெட்டுகளுக்கும் இட்டுச்செல்வதைச் சுட்டிக்காட்டினார். சமூகப் பிலதிநிதிககள் அடங்கிய குழக்களை அமைத்து முப்படையினரும் சேர்ந்து இதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த விவாதத்தில் உரையாற்றிய பா உ அர்ச்சுனா ஐந்து மாதத்திற்கு முன்னர் ஆட்சியைப் பிடித்த தேசிய மக்கள் சக்தியே வடக்கில் உள்ள போதைப் பொருட் பாவனைக்கு பொறுப்பு என்ற வகையில் எழுந்தமானமாக குற்றச்சாட்டுக்களை கத்திக் கத்தி முன்வைத்தார். அதன்போது யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பிரச்சினையில் குறிப்பிட்ட மருதுவர் கேதீஸ்வரன் மருந்தகம் ஊடாக போதைப்பொருள் விற்பனை செய்ததாகவும், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் அவரின் மகன் ஊழலில் ஈடுபட்டதாகவும் வல்வெட்டித்துறையில் வன்முறையில் ஈடுபட்டவர் தேசிய மக்கள் சக்தியில் உள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சொல்லி அதற்கு தேசிய மக்கள் சக்தியே பொறுப்பு என்றும் குற்றம்சாட்டினார். மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி இளம்செழியனை அவர் ஒரு தமிழன் என்பதால் அவருக்கு பொறுப்பான பதவிகள் அளிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

யாழ் மாவட்டத்தையும் வடக்கு கிழக்கையும் பாதிக்கின்ற முக்கியமான விவாதத்தில் பா உ அர்ச்சுனா ஆரோக்கியமாக விவாதத்தை நகர்த்தாமல் காழ்ப்புணர்வைக் கொட்டி தன்னுடைய சமூக வலைப்பதிளை கிளு கிளுப்பாக வைத்திருக்கும் வகையில் நடந்து கொண்டமை பலரையும் எரிச்சலடையச் செய்துள்ளது. மேலும் பாராளுமன்றத்தில் கிணற்றுத் தவளைபோல் தொடர்ந்தும் ஓரெ விடயத்தை கத்திக் கத்தி வருகின்றாரேயொழிய ஒரு ஆரோக்கியமான விவாதத்தை மேற்கொள்கின்றார் இல்லை என பாராளுமன்ற விவாதங்களை உன்னிப்பாக பார்ப்பவர்கள் கருதுகின்றனர். மேலும் விவாதங்கள் நடக்கின்ற போது கத்திக் குளறுவது பாராளுமன்ற நேரத்தை வீணடிக்கின்றது. மக்களுடைய பிரச்சினைகளைப் பேசுகின்ற போது ஆரோக்கியமான விவாதங்களுடாக தீர்வுகளை நோக்கிச் செல்ல வேண்டும் தெருப்பொறுக்கி போல் பாராளுமன்றத்தில் அர்ச்சுனா நடந்துகொள்கின்றார் என்ற அபிப்பிராயம் ஏனை சமூக பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் ஏற்பட்டுள்ளது.

தலைவர் பிரபாகரனை கிட்லருக்கு நிகராக உவமித்த சட்டத்தரணி வைஷ்ணவியின் முட்டாள்தனம் !

தலைவர் பிரபாகரனை கிட்லருக்கு நிகராக உவமித்த சட்டத்தரணி வைஷ்ணவியின் முட்டாள்தனம் !
தமிழர்களுடைய தலைவர் பெரியாரா? பிரபாகரனா? என்ற வாதமே குதர்க்கமானது. இருவருமே வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்த தலைவர்கள். பெரியார் தமிழ்நாட்டில்  சமூகத்தில் நிலவிய மூடத்தனங்களை கண்டித்து சமூக நீதிக்காக போராடிய தலைவர். மற்றையவர் இலங்கையில் தமிழ் மக்கள் தமது மரபுவழித் தாயகத்தில் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய தலைவர்.
உலகமெங்கும் அகதியாக புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களும் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களும் தமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என ஏற்றுக் கொள்ளட்டும். இதற்கிடையில் பெரியார் எங்கே வந்தார். பெரியார் ஒரு சமூக நீதிப்போராளி. பிரபாகரன் ஒரு அரசியல்ப் போராளி. சீமான் போன்ற வங்குரோத்து, இனத் தூய்மை பேசும் வலதுசாரி பாசிச அரசியலை முன்னெடுக்கும் ஒரு போலியை அடையாளம் காண முடியாதளவிற்கு இலங்கையிலும் சரி புலத்திலும் சர் ஈழத்தமிழர்கள் அறிவிலிகளாக உள்ளனர் என்பது தான் வேதனை.
சட்டத்தரணி என்று கூறிக் கொள்ளும் வைஷ்ணவி சமீபத்தில் மெய்வெளி எனும் யுரீயூப் தளத்திற்கு கொடுத்த நேர்காணலில் அவர் உளறிய கருத்துக்கள் அபத்தம். “சட்டத்தின் முன் சகலரும் சமம்’’ என்ற அடிப்படையை கூட விளங்கிக் கொள்ளாத சட்டத்தரணியாக உள்ளார் என்பதே கவலைக்குரியதே.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறோ, உலக வரலாறோ சரியாகத் தெரியாத ஒரு சட்டத்தரணியாக வைஷ்ணவி விளங்குகிறார். ஈழத்து அரசியல் மற்றும் தமிழ்நாட்டு அரசியல் பற்றி உளறியதை விட ஜேர்மனியையும் கிட்லரையும் பற்றி உதிர்த்த கருத்துக்கள் மூடத்தனத்தின் உச்சம். கிட்லர் கொலகோஸ்ட் என்றழைக்கப்படும் 11 இலட்சம் யுதர்களை இனப்படுகொலை செய்த கொலையாளி. அவர்களை மட்டுமல்ல ஆயிரக்கணக்கான  ரோமா மற்றும் சிந்தி (ஜிப்ஸிக்கள்) என அழைக்கப்படும் நாடோடி மக்கள், தன்னுடைய சொந்த இனமான ஜேர்மனிய இனத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், ஆயிரக்கணக்கான போர்க்கைதிகள் என பலரையும் படுகொலை செய்த ஒரு சர்வாதிகாரி. கிட்லரை இன விடுதலைப் போராளி என தலைவர் பிரபாகரனுடன் ஒப்பிட்டு பேசும் சட்டத்தரணி வைஷ்ணவி தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் புறந்தள்ளப்பட வேண்டிய நபர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக கருத்துரைக்கும் மற்றும் வக்காலத்து வாங்கும் உரிமையை அந்த அமைப்பு யாரிடமும் கையளிக்க வில்லை. பாலியல் துஸ்பிரயோகி சீமானின் வளத்தளத்தை பின்பற்றும்
சேலை கட்டி, பூவும் பொட்டும் வைத்தால் தான் தமிழ் அடையாளத்தை பேணுவதாக வைஷ்ணவி காட்டிக் கொள்ள முற்பாடுகிறார். ஆடை மற்றும் ஆபரணம் அவரது தனிப்பட்ட உரிமை. ஆனால் பொதுவெளியில் ஈழத்தமிழர்களின் தேசியத் தலைவராக ஏற்றுக் கொண்ட வேலுப்பிள்ளை பிரபாகரனை கிட்லருக்கு நிகராக ஒப்பிட்டு சட்டத்தரணி பிரச்சாரம் செய்வதை ஈழத்தமிழர்கள் வன்மையாக கண்டிக்கின்றார்கள்.
ஜேர்மனியர்கள் கிட்லர் என்ற ஒரு சர்வாதிகாரியால் உலக சமுதாயத்தில் தலைகுனிந்து நின்றார்கள். கிட்லரின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு கோடிக்காண இழப்பீடுகள் கட்டினார்கள். தங்களுடைய சந்ததியினருக்கு கிட்லரின் காலத்தில் ஜேர்மனியில் நடந்த கொடூரங்களை பாடசாலைகளில் வரலாறாக சொல்லிக் கொடுக்கிறார்கள். ஜேர்மனியில் பிறக்கும் குழந்தைகளுக்கு அடேல்ப்ஸ் கிட்லர் என்ற பெயரை வைப்பதே தடைசெய்யப்பட்டுள்ளது.
வைஷ்ணவிக்கு கிட்லர் தலைவராக இருக்கும் பெரியாரோ அல்லது பிரபாகரனோ தலைவராக இருக்க முடியாது. வைஷ்ணவி என்ற பெண்மணி ஒரு தொழில் முறை சட்டத்தரணி. ஈழத்தமிழர்களின் பிரதிநிதி இல்லை. அவர் தன்னுடைய தனிப்பட்ட விருப்புக்களை பொதுவெளியில் வெளியிடுவதற்கு உரிமை உண்டு. அதேசமயம் மக்களால் தெரிந்தெடுக்கப்படாத ஒரு நபர் ஒட்டுமொத்த இனம் சார்பில் தன்னைத்தானே பிரதிநிதியாக நினைத்துக் கொண்டு கருத்துக்களை முன்வைக்க முடியாது.
விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டு பெரியார் மற்றும் திராவிடம் குறித்த சொன்ன கருத்துக்களே இறுதியானவை. ஈழத்திற்கு சீமான் அழைக்கப்பட்ட போது பெரியார் பேரனாக வந்து சென்றார். சீமான் என்ற இயக்குநர் நாம் தமிழர் கட்சியாக பரிணமிக்கும் வரை கறுப்புச் சட்டை பெரியார் பேரனாகவே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தெரியும். சீமான் முப்பாட்டன் முருக பக்தனாக அவதாரம் எடுத்த போது தேசியத் தலைவரும் விடுதலைப் புலிகள் அமைப்பும் இல்லை. ஆகவே வைஷ்ணவி சீமானை கூட தனது ஆதர்ஸ கதாநாயகனாக தலைவராக வரித்துக் கொள்ளட்டும்.
பெரியார் தலைவரா இல்லையா என சீமானுக்கு தேர்தலில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் புரிய வைப்பார்கள். இறுதியாக நடந்த ஈரோடு தேர்தலில் சீமான் கட்டுப்பணம் கூட திருப்ப எடுக்கவில்லை . குறைந்தபட்சம் வைஷ்ணவிக்கு தேர்தல் புரிந்தால் நல்லது.