2025

2025

மணல் ஊழலில் கைதான முன்னாள் எம்பி வியாழேந்திரன் பிணையில் விடுதலை !

மணல் ஊழலில் கைதான முன்னாள் எம்பி வியாழேந்திரன் பிணையில் விடுதலை !

ஏப்பிரல் 8 ஆன நேற்றைய தினம் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைதான முன்னாள் இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் 14 நாட்கள் கழித்து பிணையில் விடுதலை. மணல் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 1.5 மில்லியன் இலஞ்சம் பெற உதவிய குற்றச்சாட்டிலேயே வியாழேந்திரன் கைதாகியிருந்தார். இதே வழக்கில் வியாழேந்திரனின் தனிப்பட்ட செயலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர். எனினும் வழக்கு விசாரணைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான முன்னாள் பதுளை நாடாளுமன்ற எம்பி சாமர சம்பத் தசநாயக்க எம்பியும் இன்று பிணையில் விடுதலையாகியுள்ளார். இதேபோன்று தரமற்ற ஊசிமருந்துகளை ஊழல் செய்து இறக்குமதி செய்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்கெல தொடர்ந்து விளக்கமறியலில் உள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.

மலையக மக்களுக்கு கடல் கடந்த இந்தியப் பிரஜை அந்தஸ்தை மோடியிடம் கோரிய எம்பி மனோ கணேசன்!

மலையக மக்களுக்கு கடல் கடந்த இந்தியப் பிரஜை அந்தஸ்தை மோடியிடம் கோரிய எம்பி மனோ கணேசன்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் எம்பியுமான மனோ கணேசன் “மலையக மக்களுக்கு கடல் கடந்த இந்தியப் பிரஜை அந்தஸ்து“ வழங்க கோரியதாக ஹிரு செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. மனோ கணேசனின் அக் கோரிக்கையை மோடி பரிசீலப்பதாக கூறினார் என மனோ கணேசன் ஹிரு செய்திச் சேவைக்கு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது மலையக மக்களின் சமூக மற்றும் கல்வி அபிவிருத்தியை முன்னிறுத்திய கோரிக்கைகைகளை முன்வைத்ததாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

சந்திப்பு தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நாங்கள் அரசியல் கோரிக்கைகளை இந்தியாவிடம் திணிக்கமாட்டோம். இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்புச் செயல்முறையை ஆரம்பிக்கும் போது எங்கள் அரசியல் யோசனைகளை சமர்ப்பிப்போம்.

இந்தியப் பிரதமர் மோடியினுடனான சந்திப்பில் அறிவியல், கணிதம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் பாடப்பிரிவுகளில் ஆசிரியர்களை உருவாக்கும் சிறப்பு ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் பெண்களுக்கான தாதியர் பயிற்சி நிலையம் அமைக்க இந்திய உதவியை கோரியதாகவும் குறிப்பிட்டார். இந்திய உயர்கல்வி நிறுவனத்துடன் இணைந்துள்ள ஒரு வளாகத்தை உருவாக்கும் நோக்கத்தையும் பகிர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் மறுசீரமைப்பு விரைவில் ஆரம்பம் !

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் மறுசீரமைப்பு விரைவில் ஆரம்பம் !

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் உயர் அதிகாரிகளுடன் ஒரு முக்கிய கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை இலாபமுள்ளதாக மாற்றும் முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. ஏர்லைன்ஸின் கடன் மேலாண்மை தொடர்பாக குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்து தனிப்பட்ட கவனம் செலுத்தப்பட்டது.

புதிய முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நிர்வாக அமைப்புகளை கொண்டு வருவதன் அவசியம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும் தேசிய விமான சேவையாகவே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸைத் தொடர்ந்து செயல்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை இலாபம் தரும் நிறுவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தலைவரும் புலம்பெயர் தமிழர்களிடம் பிச்சை கேட்டார் – நானும் புலம்பெயர் தமிழர்களிடம் பிச்சை கேட்கின்றேன் – பா உ அர்ச்சுனா

தலைவரும் புலம்பெயர் தமிழர்களிடம் பிச்சை கேட்டார் – நானும் புலம்பெயர் தமிழர்களிடம் பிச்சை கேட்கின்றேன் – பா உ அர்ச்சுனா

பெண்களை கேவலப்படுத்தி அவமானப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக பாராளுமன்றத்தில் சிறப்புரிமை தடை செய்யப்பட்டதற்கு எதிரான முறைப்பாட்டை பாராளுமன்ற சபாநாயகரிடம் நேற்று கையளித்தார் பா உ இராமநாதன் அர்ச்சுனா. தன்னுடைய சிறப்புரிமை மீளளிக்கப்படாவிட்டால் அதற்கு எதிராக தான் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தன்னுடைய காணொலியில் சூளுரைத்துள்ளார் பா உ இராமநாதன் அர்ச்சுனா.

இதற்காகவும் அர்ச்சுனா மீது அவரால் பாதிக்கப்பட்ட பலரும் போட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எதிராகவும் வழக்குகளை நடாத்துவதற்கும், தன்னுடைய காரைத் திருத்துவதற்கும், பண உதவி செய்யுங்கள் – ‘பிச்சை போடுங்கள்’ என்று, புலம்பெயர் தமிழர்களை நோக்கி கேட்டு, ஏப்ரல் 8இல் பா உ அர்ச்சுனா ஒரு பதிவை இட்டுள்ளார்.

தான் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் பணம் பெறுவதை நியாயப்படுத்துவதற்கு அர்ச்சுனா, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரைத் துணைக்கு அழைத்துள்ளார். வே பிரபாகரனும் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் பிச்சை எடுத்திருந்தார். நானும் அதனையே செய்கின்றேன் என அவர் அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்திருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது பல கடுமையான அரசியல் விமர்சனங்கள் உள்ளது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட “விடுதலைப் புலிகளின் தலைவர் தன்னுடைய சொந்த தேவைகளுக்கு பணம் கேட்டார். மோசடி செய்தார்” என்ற குற்றச்சாட்டுக்களை வைப்பதில்லை. ஆனால் வே பிரபாகரனையும் மாவீரர்களையும் வைத்துப் பணம் பறிக்கும் கும்பல்கள் பல உலகின் பல பாகங்கிலும் உருவாகியுள்ளது.

‘பா உ அர்ச்சுனா போல் தலைவரும் பிச்சை எடுத்தார் தானும் அந்த விழயில் பிச்சை எடுக்கின்றேன்’ என வழக்குகளை நடாத்த, காரைத் திருத்த, காசை அனுப்பி வைக்கும்படி கோருகின்றார். சுவிஸில் உள்ள அப்துல்லா என அறியப்பட்ட ரகுபதி ‘தலைவர் குடும்பத்துடன் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றார். அவருக்கு சிகிச்சையளிக்க பணம் வேண்டும்’ என்று கோருகின்றார். 1990க்களின் முற்பகுதியில் தளபதி கிட்டு லண்டனில் இருந்த போது சொன்னது, “எங்களுக்கு எதிரி ஒரு பிரச்சினையில்லை, அவர்களை எங்களுக்கு நன்கு தெரியும். ஆனால் எங்களோடு கூட இருப்பவர்கள் தான் மிக ஆபத்தானவர்கள்.” அது போல் புலிகளையும் மாவீரர்களையும் பயன்படுத்துபவர்கள் பற்றி மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

பா உ அர்ச்சுனா தொடர்பில் அவருடைய சுயேட்சைக்குழுவில் போட்டியிட தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மூவரை வழங்கிய பாதிக்கப்பட்ட பெண் அர்ச்சுனா மீது தங்கள் நவாலிப் பகுதி அண்ணன் ஒருவர் அர்ச்சுனாவுக்கு பணம் அனுப்பியதாகவும் ஆனால் இவர் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவே இல்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரிக்ரொக் சாளினியால் பாராளுமன்ற சிறப்புரிமையை இழந்த அர்ச்சுனா அதனை மீளக் கோருகின்றார் !

ரிக்ரொக் சாளினியால் பாராளுமன்ற சிறப்புரிமையை இழந்த அர்ச்சுனா அதனை மீளக் கோருகின்றார் !

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, கிளிநொச்சி ரிக் ரொக் சாளினியை விபச்சாரி என்று பாராளுமன்றத்தில் கூறியது தெரிந்ததே. ஒரு பெண்ணை விபச்சாரி என்று கூறியது பாராளுமன்ற விதிமுறைகளுக்கு முரணானது என்றும், இது பெண்களை அவமானப்படுத்தும் செயல் என்றும் பெண்ணியவாதியும் மனித உரிமைவாதியுமான அருளலிங்கம் சுவாஸ்திகா கண்டித்திருந்தார். அத்தோடு இதனை பாராளுமன்ற பதிவுகளிலிருந்து நீக்க வேண்டும் என்றும் சுவாஸ்திகா சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பான விசாரணைகளை பலரும் கோரியிருந்தானர். இந்தப் பின்னணியில் பா உ அர்ச்சுனாவின் பாராளுமன்ற சிறப்புரிமை சிறிதுகாலம் பறிக்கப்பட்டது. அதன்படி அவருடைய பாராளுமன்ற உரைகள் வெளியிடப்படாது. அவரும் அதனை தன்னுடைய காணொலிகளில் பதிவிட முடியாது. இந்தத் தடையை நீக்குமாறு அர்ச்சுனா பாராளுமன்றத்தில் நேற்று எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பா உ அர்ச்சுனாவின் பெண்களுக்கு எதிரான மோசமான கருத்துக்களுக்கு அர்ச்சுனா மட்டும் பொறுப்பல்ல அவருக்கு நிதியை வாரி வழங்கும் புலம்பெயர்ந்த மக்களும் வாக்களித்தவர்களும் கூட, பெண்கள் தொடர்பான ஆணாதிக்க மனநிலையோடு இருப்பதாக சுவஸ்திகா அருளலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

ரிக்ரொக் சாளினியை அவமானப்படுத்த முயன்று தற்போது அவமானப்பட்டுள்ள பா உ அர்ச்சுனா, தன்னுடைய சிறப்புரிமையை மீள வழங்காவிடில் அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் சிந்தித்து வருவதாகத் தெரிவித்தள்ளார்.

பா உ அர்ச்சுனாவிற்கு எதிரான குற்றச்சாட்டை பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர் பிரதம கொரடாவான விமல் ரத்நாயக்கா. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விமல் ரத்நாயக்கா உரையாற்றி இருந்தார். அவர் சுவாஸ்திகா சுட்டிக்காட்டியதை தவறாக சுவாஸ்திகாவை பாராளுமன்றத்தில் அரச்சுனா விபச்சாரி என்று சொன்னதாகக் குறிப்பிட்டார். அதாவது கிளிநொச்சிப் பெண் ரிக்ரொக் சாளினியையே பா உ அர்ச்சுனா பாராளுமன்றத்தில் விபச்சாரி என்று விபரித்தார். அர்ச்சுனா அருளலிங்கம் சுவாஸ்திகாவை பாராளுமன்றத்துக்கு வெளியே விபச்சாரி என்று விபரித்திருந்தார். ஆனால் விமல் ரத்நாயக்கா சாளினி என்று குறிப்பிடாமல் சுவாஸ்திகாவைச் சுட்டிக்காட்டி அர்ச்சுனாவின் சிறப்புரிமையை குறகியகாலம் தடை செய்ய வைத்தார். இதுதொடர்பில் அருளலிங்கம் சுவாஸ்திகா கபிடல் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல்:

இந்த அடிப்படையை வைத்துக்கொண்டு பெயரை மாறிச் சாளினி என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக சுவாஸ்திகா என்று சொன்னதை வைத்துக்கொண்டு தன்மீதான ஒழுங்காற்று நடவடிக்கை தவறு என்றும், தான் தமிழர் என்பதால் திட்டமிட்டமுறையில் தனது குரல் ஒடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டு தனது குற்றச்சாட்டை சபாநாயகரிடம் பா உ அர்ச்சுனா இன்று கையளித்தார். அர்ச்சுனா தன்மீது விமர்சனங்கள் குற்றச்சாட்டுக்கள் வருகின்ற போது தான் ஒரு ஒடுக்கப்படுகின்ற இனம், தமிழீழ விடுதலைப் புலிகளை நேசிப்பவர், தேசியத் தலைவரை நேசிப்பவர் என்ற துருப்புச்சீட்டுக்களை வீசி விளையாடுவதில் கைதேர்ந்தவர். இது அவருடைய கபிடல் ரிவி நேர்காணலில் அம்பலமாகி இருந்தது.

பிரபாகரனே தமிழர்களை துப்பாக்கி முனையிலேயே ஒற்றுமைப்படுத்தினார் ! தமிழ் தேசியத் தலைவர்கள் ஒற்றுமைப்படுவார்களா ?

பிரபாகரனே தமிழர்களை துப்பாக்கி முனையிலேயே ஒற்றுமைப்படுத்தினார் ! தமிழ் தேசியத் தலைவர்கள் ஒற்றுமைப்படுவார்களா ?

அரசியல் சமூக செயற்பாட்டாளர் முல்லைமதியுடன் நேர்காணல்

வடக்கில் இருந்து கனடா செல்ல, சனத்தொகை குறைந்த மாகாணமாகியது வடக்கு !

இலங்கையில் கொழும்பு மாவட்டத்தில் ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 3 ஆயிரத்து 549 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சதுர கிலோ மீற்றருக்கு வெறுமனே 50 நபர்கள் வசிக்கின்றமை குடித் தொகை மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பு கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆக பதிவாகியுள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024″ அறிக்கை நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாகிய 15 ஆவது தேசிய சனத்தொகை கணக்கெடுப்பு 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் நிறைவு செய்யப்பட்டது. இறுதியாக 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் சனத்தொகை 14 இலட்சம் அதிகரித்துக் காணப்படுகின்றது. சனத்தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் சனத்தொகை வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுகின்றது.

28.1 சதவீதத்துடன் மேல் மாகாணம் அதிக சனத் தொகை கொண்ட மாகாணமாக 5.3 சதவீதம் பேருடன் வடக்கு மாகாணம் குறைந்தளவான 11 இலட்சத்து 50 ஆயிரம் சனத்தொகையைக் கொண்ட மாகாணமாக பதிவாகியுள்ளது. 24 இலட்சத்து 34 ஆயிரம் பேருடன் கம்பஹா மாவட்டம் சனத்தொகையில் முதலிடம் பிடித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு (ஒரு இலட்சத்து 23 ஆயிரம் ), மன்னார் (ஒரு இலட்சத்து 24 ஆயிரம் ), கிளிநொச்சி (ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ) மற்றும் வவுனியா (ஒரு இலட்சத்து 72 ஆயிரம் ) ஆகிய மாவட்டங்கள் மிகக் குறைந்தளவான சனத்தொகை கொண்ட மாவட்டங்களாகத் தொடர்ந்து காணப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்டம் 2.23 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது, அதேவேளை வவுனியா 0.01 சதவீதத்துடன் மிகக் குறைந்த இடத்தைப் பிடித்துள்ளது.

கிழக்கு மாகாணம் 17 இலட்சத்து 82 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டமாக உள்ளது. மட்டக்களப்பு 6 இலட்சம் மக்களையும் அம்பாறை 7 இலட்சத்து 44 ஆயிரம் மக்களையும் திருகோணமலை 4 இலட்சத்து 44 ஆயிரம் மக்கள் தொகையையும் கொண்ட மாவட்டங்களாக உள்ளது.

கனடாவில் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களின் சனத்தொகையைக் காட்டிலும் இரட்டிப்பானது. கனடாவில் தமிழர்களின் எண்ணிக்கை 240,000 முதல் 300,000 ஆக இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. 1983க்களில் வெறும் 150 பெயரளவில் மட்டும் இருந்த கனடாவில் 2021இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 140,000 கனடாவில் பிறந்துள்ளனர். கனடாவை அடுத்து பிரித்தானியாவில் அதிகளவான இலங்கைத் தமிர்கள் வாழ்கின்றனர். 2,00,000 தமிழர்கள் பிரித்தானியாவில் வாழ்வதாக மதிப்பிடப்படுகின்றது. இதைவிடவும் அவுஸ்திரேலியா, ஐரோப்பா, ஸ்கன்டிநேவியன் நாடுகளிலும் மொத்தமாக 2,00,000 இலங்கையர்கள் பரந்து வாழ்கின்றனர். அயல்நாடான இந்தியாவில் 1,50,000 தமிழர்கள் உள்ளனர்.

உலகின் மொத்த இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியினரே தமிழர்களின் தாயகப் பிரதேசமாகக் கொள்ளப்படும் வடக்கு கிழக்கில் வாழ்கின்றனர். இன்னுமொரு மூன்றில் ஒரு பகுதியினர் இலங்கைக்கு உள்ளேயே வடக்கு கிழக்கிற்கு வெளியே தென்பகுதியெங்கும் சிதறி வாழ்கின்றனர். இன்னுமொரு மூன்றில் ஒரு பகுதியினர் இலங்கைக்கு வெளியே பெரும்பாலும் மேற்குநாடுகளில் வாழ்கின்றனர்.

யுத்தம் 2009 இல் முடிவுக்கு வராமல் தொடர்திருந்தால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் சனத்தொகையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கும். 2020 வரை யுத்தம் தொடர்ந்திருந்தால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இல்லாத பிரதேசங்களாக மாறியிருக்கும். யுத்தம் காரணமாக மக்கள் முற்றாக வெளியேறுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகமாக இருந்திருக்கும். இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை சமாதானத்தை வலியுறுத்தி 2004இல் தேசம் சஞ்சிகையில் வெளியானது.

பா உ அர்ச்சனா கையில்: ஆசிரியை கல்யாணியின் மோசடிக் குற்றச்சாட்டை மறுக்கின்றார் வடமாகாண பிரதம செயலாளர் இளங்கோவன் !

பா உ அர்ச்சனா கையில்: ஆசிரியை கல்யாணியின் மோசடிக் குற்றச்சாட்டை மறுக்கின்றார் வடமாகாண பிரதம செயலாளர் இளங்கோவன் !

ஆசிரியை கல்யாணி திருநாவுக்கரசு பா உ அர்ச்சுனாவோடு தன்னுடைய ஓய்வூதியத்தை மோசடி செய்துவிட்டார் என்று முன்வைத்த குற்றச்சாட்டை வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன் மறுத்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே திரு இளங்கோவன் இந்த மறுப்பினை வெளியிட்டார். வடமாகாணசபை மீதும் தன்மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் வடமாகாண ஆளநரின் அனுமதியோடு இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து தன்மீது தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு மறுப்புத் தெரிவிப்பதாக அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“என்னுடைய பென்சன் 27 இலட்சத்தை பிரதம செயலாளர் இளங்கோவன் கள்ளக்கையெழுத்திட்டு சூறையாடிவிட்டார் “ ஆசிரியை கல்யாணி நேரடியாகத் தன்னுடைய குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

பா உ இராமநாதன் அர்ச்சுனாவின் முன்நிலையில் இக்குற்றச்சாட்டு யூரியூப்பர்ஸினால் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தேசம்நெற் உம் அக்காணொலியை வெளிட்டதுடன் பிரதம செயலாளர் இது தொடர்பபில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தது. இது தொடர்பிலேயே பிரதம செயலாளர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பில் விளக்கமளித்த பிரதம செயலாளர் இளங்கோவன் திருநாவுக்கரசு கல்யாணி அவர்களை தாங்கள் நன்கு அறிவோம் என்றும் அவருடைய கோரிக்கைகள் நீண்ட வரலாற்றைக் கொண்டது என்றும் குறிப்பிட்டு தங்களுடைய ஆவணங்களின் படி அவருடைய நிதி நிலுவைகள் அனைத்தும் வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் விளக்கமளித்த பிரதம செயலாளர் இளங்கோவன் திருநாவுக்கரசு கல்யாணி அவர்களை தாங்கள் நன்கு அறிவோம் எனக்குறிப்பிட்டார். அவருடைய கோரிக்கைகள் நீண்ட வரலாற்றைக் கொண்டது என்றும் குறிப்பிட்டு தங்களுடைய ஆவணங்களின் படி அவருடைய நிதி நிலுவைகள் அனைத்தும் வழங்கப்பட்டு விட்டதாகவும் இளங்கோவன் சுட்டிக்காட்டினார். இதற்கு தான் தன்னுடைய வெளிப்படையான பதிலை ஓய்வு பெற்ற பின்னரேயே தெரிவிக்க முடியும் என்றும் அவர் அங்கு சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆசிரியை கல்யாணி திருநாவுக்கரசுவின் குற்றச்சாட்டை ஆராய 18 ஆண்டுகள் கடந்த நிலையில் மேலுமொரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பா உ இராமநாதன் அர்ச்சுனா இது தொடர்பில் தான் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன் என்றும் உறுதி அளித்து இருந்தார். அரச சேவைகளில் முடிவெடுப்பதில் உள்ள தாமதங்களைக் கருத்தில் கொண்டு இவ்வாறான சிக்கலான விடயங்களை சில மாதங்களுக்கு உள்ளாகத் தீர்தது வைக்க அரசு முயற்சிக்க வேண்டும் 18 ஆண்டுகள் என்பது மிக அநியாயமான நீண்ட காலம்

ஆசிரியை கல்யாணி திருநாவுக்கரசுடைய இப்பிரச்சினை நேரடியான விடயமல்ல. அதில் நிறையச் சிக்கல்கல் உள்ளது. அதனால் நிர்வாகத் தடைகளும் அதிகம் உள்ளது. ஆனாலும் இதனை ஆராய்ந்து ஆசிரியை கல்யாணி குறிப்பிடுகின்ற விடயங்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை விரைவில் பெற்று அவருடைய கோரிக்கையை மனிதாபிமானத்தோடு நோக்க வேண்டும். அதேசமயம் பிழையான முன்ணுதாரணங்களை ஏற்படுத்தாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இக் காணொலியில் பயன்படுத்தப்பட்டுள்ள காட்சிகள் ஸ்ரிற் ஒப் ஈழம் என்ற காணெலித் தளத்தில் இருந்து பெறப்பட்டது. அவர்களுக்கு நன்றி.

வடக்கில் 16,000 வேலை வாய்ப்புகள் மூன்று முதலீட்டு வலயங்கள் !

வடக்கில் 16,000 வேலை வாய்ப்புகள் மூன்று முதலீட்டு வலயங்கள் !

வடக்கு மாகாண அபிவிருத்தியை நோக்கி, அரசாங்கம் முன்மொழிந்துள்ள காங்கேசன்துறை, பரந்தன் மற்றும் மாங்குளம் ஆகிய மூன்று முதலீட்டு வலயங்கள் 2025ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் செயல்படத் தொடங்கும் என இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன் ஹேரத் தெரிவித்துள்ளார். இத்திட்டங்கள் முழுமையாக செயல்பட்டால், குறைந்தது 16,000 பேருக்கு தொழில் வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு ஆளுநர் நா. வேதநாயகனின் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலில், முதலீட்டுத் தளங்களில் போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் நில உரிமைச் சிக்கல்கள் உள்ளிட்ட சவால்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன.

இந்த மூன்று வலயங்களையும் சுற்றுச்சூழல் நேயமான வகையில் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக முதலீட்டுச் சபை தெரிவித்தது. குறிப்பாக, காங்கேசன்துறையில் புகையிரத பாதையை துறைமுகம் வரை விரிவுபடுத்துவது, மாங்குளத்தில் காணி விடுவிப்பு நடவடிக்கைகள், மற்றும் பரந்தனில் உள்ள சொந்தமாகும் இடங்களின் சிக்கல்கள் பற்றியும் தீர்வுகள் வகுக்கப்பட்டுள்ளன. வலயங்களை விரைவில் வேலியிட்டு அடையாளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ள நிலையில், கடந்த கால அனுபவங்களைவிட இம்முறை திட்டங்கள் நடைமுறைக்கு வரும் என முதலீட்டாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் உறுதியளிக்கப்பட்டது.

பட்டதாரிகள் தனியே அரசாங்க வேலைகளில் மட்டும் தங்கியிருக்காமல் தனியார்த்துறைகளிலும் தொழில் முயற்சிகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம. ரதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறையைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அரச சேவைகள் பற்றி அறிந்துகொள்ள மாவட்ட செயலகத்திற்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தனர். அதன் போதே அரசாங்க அதிபர் மேற்கொண்ட கருத்தை வெளியிட்டு இருந்தார்.

பிரதமர் மோடியும், அனுரவின் மொழியில் தமிழ் மக்களுக்குத் தீர்வு: ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், கௌரவம் மற்றும் நீதியுடனான வாழ்க்கை !

பிரதமர் மோடியும், அனுரவின் மொழியில் தமிழ் மக்களுக்குத் தீர்வு: ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், கௌரவம் மற்றும் நீதியுடனான வாழ்க்கை !

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களையும் மலையகத் தமிழ் பிரதிநிதிகளையும் சந்தித்து முக்கியக் கலந்துரையாடல்கள் நடத்தினார்.

வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, “இலங்கையின் தமிழ் சமூக தலைவர்களை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சியான தருணம். தமிழ் தலைவர்களான இரா. சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவித்தேன். அவர்கள் இருவருமே எனக்குத் தனிப்பட்ட முறையில் நன்கு தெரிந்தவர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி எனும் மூன்று முக்கியத்துவமிக்க அம்சங்களுடனான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மீண்டும் வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். தமது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் தமிழர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும் எனவும் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மலைய தமிழ் பிரதிநிதிகளுடனான சந்திப்பில், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மலையகத் தமிழர்களுக்காக 10,000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித சீதை அம்மன் ஆலய நிர்மாணம், மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற பல முக்கிய முயற்சிகளுக்காக இந்திய அரசு இலங்கை அரசுடன் இணைந்து செயல்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.