ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் மறுசீரமைப்பு விரைவில் ஆரம்பம் !
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் உயர் அதிகாரிகளுடன் ஒரு முக்கிய கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை இலாபமுள்ளதாக மாற்றும் முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. ஏர்லைன்ஸின் கடன் மேலாண்மை தொடர்பாக குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்து தனிப்பட்ட கவனம் செலுத்தப்பட்டது.
புதிய முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நிர்வாக அமைப்புகளை கொண்டு வருவதன் அவசியம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும் தேசிய விமான சேவையாகவே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸைத் தொடர்ந்து செயல்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை இலாபம் தரும் நிறுவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.