உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்பட்ட யாழ். குருநகர் ரெக்லமேஷன் கிழக்கு, மேற்கு பகுதிகள் பொதுமக்களின் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டதையடுத்து புதிய கடற்கரை வீதியும் திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி ஆகியோர் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைப்பதைப் படத்தில் காண்க
August
August
பிரதமர் கிலானியுடன் ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்பு பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ இலங்கை முன்வந்துள்ளது.பாகிஸ்தான் பிரதமர் யூசுவ் ரஸா கிலானியுடன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ மருத்துவக் குழுவையும் மருந்துவகைகளையும் அனுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெள்ளத்தால் உயிர், உடைமைகளை இழந்தோருக்கு தனது அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி அனுதாபமும் ஆறுதலும் தெரிவித்திருப்பதாக ஏ.பி.பி.செய்திச் சேவை தெரிவித்தது.பாகிஸ்தான் அரசுக்கும் மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்தினதும்மக்களினதும் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ள ஜனாதிபதி ராஜபக்ஷ வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் மத்தியில் தொற்று நோய்கள் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி முன்வந்துள்ளார்.
அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்குத் தேயிலையையும் இலங்கை அனுப்பவுள்ளது. இலங்கையின் நல்லெண்ண நடவடிக்கைகளுக்காகப் பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவித்திருக்கிறார்.
யூன் நடுப்பகுதியில் இலங்கை சென்று குமரன் பத்மநாதனை சந்தித்துத் திரும்பியுள்ள புலம்பெயர் கே பி ஆதரவுக்குழு தங்கள் தங்கள் செயற்பாடுகளை வேகப்படுத்தி வருவதாகத் தெரியவருகின்றது. தங்கள் பயணத்திற்குப் பின் தங்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பியவர்கள் தொடர்ந்தும் தங்கள் ஆதரவுத் தளத்தை உசார்ப்படுத்தி வருகின்றனர்.
அண்மையில் இணையத்தளம் ஒன்றை உருவாக்கி அதனை அறிமுகம் செய்துள்ள இவர்கள் தங்கள் பயணத்தின் போது எடுக்கப்பட்ட விடியோப் பதிவுகளை அதில் பதிவிட்டுள்ளனர். இவ்விணையத்தளம் தொடர்பாக சிறிபதி சிவனடியார் வெளியிட்டுள்ள அறிக்கையை கீழே காணலாம்.
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விடயங்களை கே பி கவனித்துக் கொண்டிருந்த போது அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவரும் நிதிசேகரிப்பில் முன்னின்றவருமான சிறிபதி சிவனடியார் அந்நிதியுடன் தொடர்புடையவர்களை அணுகுவதாக உறுதிப்படுத்தப்பட முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கேபி க்கு ஆதரவான புலம்பெயர் குழு லண்டனில் அவர்களுக்கான அலுவலகம் ஒன்றை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர். அல்லது ஆரம்பிக்கும் முயற்சிகளில் இறங்கி உள்ளனர் எனத் தேசம்நெற் க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை புலம்பெயர்ந்த குழுவில் பயணித்த சார்ள்ஸ் அன்ரனிதாஸ் மறுத்திருந்தார். இன்னமும் புலம்பெயர்ந்த நாடுகளில் கேபி க்கு எதிரான அணி பலமாக இருப்பதால் கேபி க்கு ஆதரவானவர்கள் அலுவலகம் ஒன்றை ஆரம்பிப்பது ஆபத்தானதாக அமையும் என அவர்களிடையே அச்சம் உள்ளது.
கேபி யைச் சந்திக்கச் சென்ற சிறிபதி சிவனடியார் தீபம் தொலைக்காட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக அங்கு தெரிவித்ததை அடுத்து உடனடியாகவே தீபம் தொலைக்காட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். தீபம் தொலைக்காட்சியின் முக்கிய பங்குதாரரான துரை பத்மநாதனே இந்த முடிவை எடுத்ததாகத் தேசம்நெற்க்குத் தெரியவருகின்றது. சிறிபதி சிவனடியார் தற்போது முழுமையாக கேபி இன் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.
._._._._._.
‘நெர்டோ’ இணையத்தளத்தை அறிமுகப்படுத்தி சிறிபதி சிவனடியார் வெளியிட்டுள்ள அறிக்கை:
அன்பான நண்பர்களே, உறவுகளே, வணக்கம், வாழ்த்துக்கள்,
புதியதொரு இணையதளம் இப்பொழுது உருவாகியிருக்கிறது. அறிவியல் கண்கொண்டு பார்த்தால் இது இணையதளம், மனித நேயத்தோடு பார்த்தால் எங்களின் இதயதளம். முகாமில் இருக்கும் எமது மக்களின் மறுவாழ்வுப் பணியை நோக்கமாகக் கொண்டு இந்த www.nerdo.lk இணையதளத்தை உங்கள் முன் அர்ப்பணிக்கின்றோம்.
இதில், நாங்கள் எடுத்து வரும் முயற்சிகள் அவ்வப்போது நடைபெறும் மக்கள் நலத்திட்டங்கள், ஆதரவுக்கரம் நீட்டுவோரின் ஆலோசனைகள் இப்படி பல்வேறு விடயங்களைத் தொடர்ந்து வெளியிடவுள்ளோம்.
இனத்தின் புனர்வாழ்வுக்கு, நிதி தேடுவது மட்டும் தான் இதன் நோக்கமல்ல, எங்களின் முயற்சிகளையும் நடைபெறவுள்ள திட்டப்பணிகளையும் அவ்வப்போது உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கும் தான். எங்களின் செயல்பாடுகள் மீது நல்லெண்ணமும் நம்பிக்கையும் ஏற்பட்டு இந்தப் புனர்வாழ்வுப் புனிதப் பயணத்தில் நீங்களும் பங்கேற்க வந்தால் மகிழ்ச்சியோடு அரவணைத்துக் கொள்வோம், அதே சமயம் யாரையும் நிர்ப்பந்தம் செய்வதோ அல்லது விளக்கம் கொடுக்காமல் வரவழைப்பதோ நமது விருப்பமல்ல.
ஒரு நல்ல அமைப்புக்கு அது வழிமுறையுமல்ல, இதயத்திலிருந்து இயல்பாக வருகிற உணர்வுகளால் மட்டுமே இது போன்ற பொதுப்பணியில் நல்ல பயனுள்ள விளைவுகளை ஸ்திரமாக ஏற்படுத்தமுடியம்.
உதவும் உள்ளங்களுக்கு உபதேசங்கள் அவசியமில்லை. எங்களின் நோக்கம் நல்லதாக இருக்கிறது. அதைச் செயல் படுத்தும் திட்டங்களும் தெளிவாகவிருக்கிறது. இதை எல்லாம் விட மனிதநேய சிந்தனை கொண்டோரின் ஆலோசனைகளும் ஆதரவுகளும் எங்களை வழி நடத்துகிறது. எனவே திறந்த மனதோடும் பரந்து கிடக்கும் தமிழ் மக்களின் ஆதரவோடும் மறுவாழ்வுப் பணிகளைத் தொடங்கிவிட்டோம்.
ஓடி ஓடி ஓய்ந்து போன உடல்கள் மீது ஏறியிருந்து காரணங்கள் தேடுவது எமது நோக்கமல்ல, அதற்கான காலமும் இதுவல்ல. புனர்வாழ்வுக் காரியங்கள் செய்ய நிறைய இருக்கிறது. ஒவ்வொரு இரவையும் ஒரு யுகமாக கடந்து கொண்டிருக்கும் எமது மக்களின் துயர் துடைக்க தூய உள்ளத்தோடு தொடர்ந்து செல்கின்றோம். உலகெங்கும் பரந்து வாழும் நமது உறவுகள், குறுகிய சிந்தனைகளுக்கும், திட்டமற்ற செயல்களுக்கும் எக்காரணம் கொண்டும் செவி கொடுக்கமாட்டார்கள் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
இதயத்தில் ஈரமுள்ளவர்களை, இயல்பான கருணை கொண்டவர்களை, எவராலும் திசை மாற்றவே இயலாது, என்பது எங்களின் திடமான நம்பிக்கை. நான், நீ என்கின்ற பாகு பாடுகள் எமக்கு இல்லை. நொந்து, இடிந்து, வீரியமற்று, முகாம்களில் வீழ்ந்து கிடக்கும் உறவுகளின் விடியலுக்காக இங்கு தவம் இருக்கிறோம்.
இனி இதயம் திறந்து இணையத்தளத்திற்கு வாருங்கள். அதோ மணி ஒலிக்கும் சத்தம், இனி மனித நேயக் காதுகளில் மட்டும் இந்த மடல் திறந்து ஒலிக்கட்டும்.
உலகம் தொடங்கிய காலம் தொட்டு நல்ல காரியங்கள் எதுவுமே தடையில்லாமல் நடந்ததாக வரலாறு இல்லை. இப்போதும் கூட அதுதான் நடக்கிறது. வாழ்வா சாவா எனத் துடித்துக் கொண்டிருக்கும் உறவுகளுக்கு கரம் கொடுக்க மனமில்லாதவர்கள் விலகி இருக்கட்டும் தவறில்லை. அவர்கள் அப்படியே சாகட்டும் என்பது அவர்கள் நல்ணெணமாக இருக்கலாம். ஆனால் நாமும் அப்படி விட்டுவிட இயலாது.
அது நமது இனம். களத்தில் இறந்தவர்களுக்காக எப்படித் துக்கப்படுகிறோமோ, அதே சமயம் கண் முன்னே துடிக்கின்ற உறவுகளுக்கும் கரம் கொடுக்க முனைகின்றோம். உலகமெங்கும் எத்தனையோ தமிழ்மக்கள் வசதியாக, நிம்மதியாக, ஆரோக்கியமாக, வாழ்ந்து கொண்டு, ஊரில் உறவுகள் அநாதைகளாக செத்து மடிவதை மனச்சாட்சியுள்ள எந்த மனிதராலும் ஏற்றுக்கொள்ள இயலாது.
எங்கள் மனித நேய தூய செயல்பாடுகளை, ஒருசிலர், அர்த்தமற்ற அறிக்கைகள், சொல்பிரயோகங்கள், இணையத்தளங்கள், மின்அஞ்சல்கள் மூலம் அழிக்க நினைப்பது எந்த வகையில் நியாயம்?
எல்லோருமே இவர்கள் போல் கைகட்டி வேடிக்கை பார்த்தால் நம் இனத்தின் அடையாளமே இந்தப் பூமியில் இல்லாது போகும். அறிவு பூர்வமான இந்த விடயங்களை எல்லாம் மனச்சாட்சி உள்ளவர்களும், நடுநிலமையடன் சிந்திக்கக்கூடியவர்களும், புரியாத அந்த ஒரு சில பேருக்கு புத்தியாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
விபத்தில் சிக்கியவருக்கு, மருத்தவர் சிகிச்சை செய்யப்போனால் மனிதநேயம் உள்ள எவரும் தடுக்கவே மாட்டார்கள். அந்த “ஒரு சில பேர்” இதை தயவு செய்து நினைவில் கொள்ள வேண்டும்.
என்றும் அன்புடன்,
ஸ்ரீபதி
மேலதிக வாசிப்பிற்கு:
கேபி உடன் virtual interview : ஈழமாறன்
புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயத்தை அடுத்து கே பி எதிர் அன்ரி கே பி பனிப்போர். : த ஜெயபாலன்
கே பி யின் சிபார்சில் சு.ப. தமிழ்ச் செல்வனின் சகோதரர் உட்பட முன்னாள் போராளிகள் 26 பேர் விடுதலை!
‘போர்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் சாட்சியாக கே.பி!’ கெஹலிய ரம்புக்வெல
வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?
கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய
காத்தான்குடி பள்ளிவாசல்களில் கடந்த 1990ம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைச்சம்பவத்தின் 20 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.
1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி காத்தான்குடியிலுள்ள மீரா ஜும்மா பள்ளிவாசல், குஸைனியா பள்ளிவாசல் ஆகியவற்றில் புனித இஸாத்தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் 325பேர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவத்தின் 20 ஆவது நினைவு தினமான இன்று காத்தான்குடி பிரதேசத்தில் முழுமையான துக்கதினம் அனுஸ்டிக்கப்படுவதுடன், கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டு பள்ளிவாசல்களில் விசேட பிரார்த்தனை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வடக்கில் பத்தாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்தி ஒரு இலட்சம் படையினரை குடியமர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் குடித்தொகைப் பரம்பலை தலைகீழாக மாற்றும் திட்டத்தை அரசு மேற்கொண்டு வருவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தளபதி அண்மையில் கண்டி மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்த போது கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட வடபகுதியில் ஒரு இலட்சம் படைவீரர்களைக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்காக 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை பொறுப்பேற்றிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த ஒரு இலட்சம் இராணுவ வீரர்கள் இங்கு குடியமர்த்தப்படும் போது அவர்களது குடும்பத்தினர்களின் எண்ணிக்கையுடன் பார்க்கும் போது சுமார் 4 இலட்சமாக காணப்படலாம்.
இத்திட்டம் வடக்கில் தமிழ் மக்களின் விகிதாசாரத்தைத் திட்டமிட்டு வீழ்த்தும் ஒரு சதியாகவே கொள்ள வேண்டியுள்ளது. ஜனாதிபதி ஒரு விதமாகவும் பசில் ராஜபக்ஷ இன்னொரு விதமாகவும் எம்மை தாஜா பண்ணிக் கொண்டிருக்க மறுபுறத்தில் ஊடக அமைச்சரும் இராணுவத் தளபதியும் திட்டமிட்ட வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசாங்கம் இந்த மறைமுக சதிமுயற்சியை உடன் கைவிட வேண்டும். இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவரும் தமது சொந்த இடங்களில் குடியேறுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும். அரசாங்கத்தின் இந்த கபட நாடகத்தை நாம் இந்தியா உட்பட சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லி இருக்கின்றோம்.
அரசின் இந்த நடவடிக்கையால் அங்குள்ள சனத்தொகை விகிதாசாரம் 30 வீதத்தால் மாற்றமடையலாம். இது திட்டமிட்ட துரோகச் செயலாகும். இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுவதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்திக் கூறியுள்ளது.
வதிரி தோல்பொருட்கள் மத்திய சேவை நிலையம் சாவகச்சேரி அல்லாரை தும்புத் தொழில் மத்திய நிலையம் ஆகியவற்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் 14, 15ம் திகதி களில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.
இதன் மூலம் கரவெட்டி வதிரி கிராமப்புற தோல்பொருட்கள், உற்பத்தி யாளர்கள், சாவகச்சேரி அல்லாரை பிரதேச தும்புத் தொழில் உற்பத்தியாளர்கள் பெரிதும் பயன்பெறாவரெனவும் மேற்படி நிலையங்களுக்கான சகல உபகரணங்க ளையும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சு பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் சிவஞான சோதி தெரிவித்தார்.
இந்த நிலையங்கள் இரண்டையும் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவற்றை சம்பந்தப்பட்ட கூட்டுறவுச் சங்க சமாஜத்திற்குக் கையளிக்கவுள்ளதாகவும் இந் நிலையங்களில் செயற்பாடுகள் அதற்கூடாக மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்தார். கரவெட்டி வதிரி கிராமம் தோல்பொருட்கள் உற்பத்தியில் பிரசித்திபெற்ற கிராமமாகும். தற்போது வீழ்ச்சியடைந்துள்ள இத் தொழில்துறையை மேம்படுத்தவும் உற்பத்தியாளர்களுக்கு சேவைகளை வழங்கவும் மேற்படி தோல்பொருட்கள் மத்திய நிலையம் உறுதுணையாக அமையும். சாவகச்சேரி அல்லாரைத் தும்புத் தொழில் நிலையம் தும்புத் தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்டவர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் டுபாய்க்கு செல்ல ஆயுத்தமான நிலையிலிருந்த விமானத்தின் ஆசனம் ஒன்றின் கீழ் மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெளிநாட்டு நாணயங்கள் சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட இந்த வெளிநாட்டு நாணயங்கள் 12 கோடி ரூபா பெறுமதியென தெரிவிக்கப்படுகிறது.
