2010

2010

தேசிய தலைவரொருவர் மூன்றிலிரண்டுக்கும் கூடுதலான பெரும்பான்மையைப் பெறுவது அரிதாகவே இடம்பெறும் – பான் கீ மூன்

mainpic1.jpgஇலங்கைக்கு எதிரான குற்றச் சாட்டுகளை விசாரணை செய்யும் சட்ட ரீதியான அதிகாரம் எதுவும் தமது நிபுணர் குழுவுக்குக் கிடையாதென்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மீண்டும் வலியுறுத்தித் தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் ஜனாதிபதியுடன் நடந்த சந்திப்பின்போதே பான் கீ மூன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையுடனான எதர்கால உறவு எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பற்றியே நிபுணர் குழு தமக்கு ஆலோசனை வழங்கு மென்றும், இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அதிகாரம் எதுவும் அதற்குக் கிடையாதென்றும் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் லுசியன் ராஜகருணாநாயக்க நியூயோர்க்கிலிருந்து தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியமர்த்துவதற்காக மேற்கொண்ட துரித நடவடிக்கைகளை ஐ. நா. செயலாளர் பாராட்டியதுடன், புலிகள் இயக்கத்தினரால் பல தசாப்தங்களாகப் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்குப் புனர்வாழ்வளிக்க மேற் கொண்ட நடவடிக்கைகளையும் பான் கீ மூன் பாராட்டியுள்ளார்.

புத்தாயிரமாம் ஆண்டின் அபிவிருத்தி இலக்கை அடைவதற்கான முன்னேற்றத்தையும் அதற்கான செயற்பாடுகளையும் அவர் பாராட்டியுள்ளார். அரசியல் தீர்வு, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறும் தன்மை ஆகிய விடயங்கள் குறித்தும் ஜனாதிபதிக்கும் ஐ. நா. செயலாளருக்குமிடையிலான சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நீண்ட நாளைய முரண்பாடுகளுக்கான காரணத்தையும் அவை மீண்டும் ஏற்படாதிருப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிவதற்காக பொறுப்புக் கூறும் தன்மையின் கொள்கைகளுக்கு அமைவாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டிய ஜனாதிபதி ராஜபக்ஷ அந்தக் குழு முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று ஆணைக்கு விசாரணை மேற்கொண்டமை குறித்தும் ஜனாதிபதி விபரித்துள்ளார். இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குமான தகவல்களை எந்தத் தனி நபரோ அல்லது அமைப்போ கொண்டிருந்தால் அதனைச் செவிமடுப்பதற்கு ஆணைக்குழு தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தோற்றுவிப்பதற்காக நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இக்குழு தனது இடைக்கால அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதையும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். புலிகள் தோற்கடிக்கப்பட்டு கடந்த 16 மாதங்களில் 90% மீள்குடியேற்றம் நிறைவடைந்துள்ளதுடன், யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்திப் பணிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் சமூக, பொருளாதார அபிவிருத்தியில் ஐ. நா. சபையும் அதன் முகவர் அமைப்புகளும் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, இரண்டு தேர்தல்களிலும் ஜனாதிபதிக்குக் கிடைத்துள்ள வெற்றி குறித்து ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த அரசியல் ஸ்திரத்தன்மையின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடு சிறந்த இலக்கை அடையுமென்று தெரிவித்துள்ளதுடன் தேசிய தலைவரொருவர் மூன்றிலிரண்டுக்கும் கூடுதலான பெரும்பான்மையைப் பெறுவது அரிதாகவே இடம்பெறும் எனவும் இதனை ஜனாதிபதி பெற்றிருப்பது அவரது தலைமைத்துவ தகைமைக்கு ஓர் எடுத்துக்காட்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘லயன்’களை இடித்து தரைமட்டமாக்கி கிராமங்களை உருவாக்கும் திட்டம்

sri-lanka.jpgமலையகப் பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் ‘லயன்’ வரிசைக் குடியிருப்புகளை இடித்தழித்துவிட்டுத் தனித் தனி வீடுகளைக் கொண்ட கிராமங்களை அமைப்பதற்கு விரைவில் அடித்தளமிடப் படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார். இந்தியா வழங்கும் ஆறாயிரம் வீடுகளைக் கொண்டு, ‘லயன்’ குடியிருப்புகளைத் தரைமட்ட மாக்கிவிட்டுத் தனித் தனி வீடுகளைக் கொண்ட கிராமம் உருவாக்கப்படுமென்று பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வருட இறுதிக்குள் இதற்கான அத்திவாரம் இடப்படுமென்றும் மூன்றாண்டுகளுக்குள் ஆறாயிரம் வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு விடுமென்றும் பிரதியமைச்சர் கூறினார். தோட்டங்களில் கிராமங்களை அமைப்பதற்காகத் தொழி லாளர்களின் ‘லயன்’ வரிசை குடியிருப்புகள் தொடர்பான மதிப்பீடொன்றை மேற்கொள்வதாகத் தெரிவித்த பிரதியமைச்சர், முதற் கட்டமாக எந்தத் தோட்டத்தில் எத்தனை வீடுகள் அமைக்கப்படும் என்பதைப் பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

‘தேயிலைத் தோட்டத் தொழிற்துறை படிப்படியாக நலிவடைந்து வருகிறது. இலங்கையிலும் இதே நிலைதான்.  இன்னும் பதினைந்து ஆண்டுகளில் தோட்டத் தொழில் அருகி விடக்கூடும். அதற்கு முகங் கொடுக்கும் வகையில் தொழிலாளர்களின் வாழ்க்கை முறை, வாழ்வாதாரம் என்பவற்றில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்றார்.

Tamil language disserves due recognition

Ven. Dr.Bellanwila Wimalaratana
A leading Buddhist monk has claimed that Tamils have had to face numerous difficulties as they have not been able to use their mother tongue as desired. The Ven. Dr.Bellanwila Wimalaratana Nayaka thera said that it is high time that the Tamil language be given due recognition.

The Venerable Dr Bellanwila Wimalaratana thera, the Viharadhipathi of the Bellanwila Raja MahaVihara who is also the Vice chancellor of the Sri Jayawardanapura University was giving evidence at the Commission on Lessons Learnt and Reconciliation.

Unjust

“We must sincerely admit that Tamils have been unjustly treated on language issue” said Dr Wimalaratna thera.

The prelate said that although Tamil is accepted as an official language even today many Tamils are deprived of using Tamil when conducting business. The Ven.Wimalaratna pointed out that fair language use would help promote the concept of Sri Lanka citizenship among Tamils.

Referring to the past, the prelate said that it is not correct to blame the Language policy of 1956 which promoted Sinhala, for the current lapse of giving due recognition to the Tamil Language. “Accepting Sinhala as the state language is not the issue, that was a necessity, but Tamil should have been given due recognition” said Venerable Dr Bellanwila Wimalaratana

http://www.bbc.co.uk/sinhala/news/story/2010/09/100924_bellanwila.shtml

”இரத்தினசபாபதி அவர்கள் சிறந்த ஒரு திசை வழி காட்டி!” டக்ளஸ் தேவானந்தா

Ratnasababathy_EROSதோழர் இரத்தினசபாபதி அவர்களின் அனுதாப பிரேரணையில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாராளுமன்றத்தில் இன்றைய தினம் (24) ஆற்றிய உரை.

._._._._._.

துப்பாக்கி வேட்டுக்களை விடவும் சொற்கள் ஒவ்வொன்றும் வலிமையானவை. வெடி குண்டுகளை விடவும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் வீரியம் நிறைந்தவைகள்.

அந்த வலிமையான சொற்களுக்கும் வீரியம் நிறைந்த கருத்துக்களுக்கும் சொந்தக்காரரான தோழர் இரத்தினசபாபதி அவர்களுக்கு இந்த நாடாளுமன்றம் மரியாதை செலுத்துவது குறித்து இந்த நாடாளுமன்றத்திற்கு நான் முதலில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.

எம்மைப் பொறுத்தவரையில் எமக்கு காலத்திற்கு காலம் வழி காட்டிகள் பலர் இருந்திருக்கிறார்கள். ஆனாலும் கௌரவ இரட்ணசபாபதி அவர்களின் வழி காட்டல் என்பது தவிர்க்க முடியாத ஒரு காலச்சூழலில் மிகவும் காத்திரமான வழி காட்டலை எமக்கு வழங்கியிருக்கின்றார்.

தமிழ் மக்களின் அரசியலுரிமை போராட்டமானது புதிய உத்வேகத்தை பெற வேண்டிய ஒரு காலச்சூழலில் அதன் கட்டாயத்தை உணர்ந்து கௌரவ இரட்ணசபாபதி அவர்கள் ஆற்றியிருந்த ஆற்றல் மிகு பங்களிப்பு என்பது எமது வரலாற்றில் அழியாத பதிவாக எழுதப்பட்டிருக்கின்றது

அது போலவே மாறி வந்திருந்த எமது மக்களின் மன நிலைகளைப் புரிந்து கொண்டவராக உலகத்தின் போக்கையும் அதற்கான நடைமுறை யதார்த்தங்களையும் புரிந்து கொண்டவராக தோழர் இரட்ணா அவர்கள் தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சனைக்கு ஜனநாயக வழிமுறை ரீதியாகவே தீர்வு காண வேண்டும் என்று எண்ணியிருந்ததும் எமக்கு அவர் மீதான பற்றுதலை மேலும் உருவாக்கியிருந்தது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்ததை அடுத்து எம்மை போல் ஜனநாயக வழிமுறைக்கு திரும்பியிருந்த தோழர் இரட்ணா அவர்கள் 40000 மக்களின் விருப்பு வாக்குகளை பெற்று இந்த நாடாளுமன்றத்திற்கான பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பதை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

கௌரவ இரட்ணசபாபதி அவர்கள் அன்றைய ஆளும் அரசுக்கு எதிராக உரிமைப்போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவராக இருந்த போதிலும் அவர் ஆயுதங்கள் மீது மோகம் கொண்டவராக ஒரு போதும் இருந்தவரல்ல.

தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் என்புது அன்றைய ஆளும் அரசுக்கு எதிராக இருக்க வேண்டுமே என்று நினைத்தவரே ஒழிய அப்பாவி சிங்கள மக்களுக்கு எதிராக இருக்க வேண்டும் என்று கருதியவர் அல்ல�

இலங்கைத்தீவிலும் சரி அதற்கு அப்பால் இருக்கும் அயலுலக அரசியல் சூழலிலும் சரி அதையும் கடந்து சர்வதேச அரங்கிலும் சரி எதிரிகள் யார்?… நண்பர்கள் யார்?… என்ற தெளிவான பார்வையை அவர் கொண்டிருந்தவர்.

அதன் காரணமாகவே அன்றைய ஆளும் அரசுகளால் ஒடுக்கப்படுகின்ற அனைத்து இன சமூக மக்களின் பக்கமும் அவர் தனது பார்வையை செலுத்தியிருந்தவர்.

மதத்தால் இந்து ஆனாலும், மாண்பில் முஸ்லிம் என்றாலும் வேதம் பயிலும் கிறிஸ்தவனும், தீரச்சைவன் ஆனாலும் ஈழத்தழிழர் ஈழவரே. அவர் எங்கிருந்தாலும் எம்மவரே.

இதுவே தோழர் இரட்ணா அவர்களின் கருத்தாகும். இதுவே பரந்து பட்ட மக்கள் நலன் சார்ந்து அவர் சிந்தித்திருந்த அவரது உண்மையுள்ள தத்துவமாகும்.

தமிழ் முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் என்று அனைத்து மக்கள் சமூகத்தையும் நேசித்திருந்த கௌரவ இரத்தினசபாபதி அவர்கள் அதற்கான தெளிவான கொள்கையினையும் வகுத்து அதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருந்தவர்.

எமது உரிமைப்போராட்டம் என்பது தனிநபர் பயங்கரவாதமாக அன்றி ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்டதான ஸ்தாபன வடிவமாக உருவாக வேண்டும் என

207,761.81 மில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன்

sri-lankan-parliament.jpg2009ஆம் ஆண்டில் அரசாங்கம் 207,761.81 மில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன் பெற்றுள்ளது.

2009ல் 93,389.86 மில்லியன் ரூபா கடன் மீள்கொடுப்பனவு செய்யப்பட்டுள்ளது என நேற்று சபையில் அறிவிக்கப்பட்டது.

ஜே. வி. பி. எம்.பி. எழுப்பிய வாய் மூல விடைக்கான கேள்விக்கான பதில் நேற்று சபையில் சமர்ப்பிக்கப் பட்டது.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்தக் கடன்கள் தொடர்பில் நிபந்தனை எதுவும் முன்வைக்கப்படவில்லை.

முஸ்லிம்களுக்கும் ஆயுதக் குழுக்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை – ஆளுநர் அலவி மெளலானா

alevi.jpgஇலங் கையில் வாழும் 20 இலட்சம் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும். இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் மத்தியில் எந்த பயங்கரவாத இயக்கமோ அல்லது ஆயுதக் குழுக்களோ இங்கில்லை. முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக சில ஊடகங்கள் தவறான செய்திகளை பிரசுரிக்கின்றன.

ஊடகங்கள் செய்திகளில் உண்மைத் தன்மையை எழுத வேண்டும். இவ்வாறு மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்தார். உலமாக்கள், புத்திஜீவிகள், ஊடகவியலா ளர்கள் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடலில் ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம்களை இயக்க ரீதியாக பிரித்து காட்டுவதற்கு ஒரு சில தீய சக்திகள் முயற்சிக்கின்றன. இதற்கெதிராக முஸ்லிம் சகோதரர்கள் துணைபோகக் கூடாது. முஸ்லிம்கள் கலிமாவின் அடிப்படையில் ஒற்றுமையின் கயிற்றைப் பற்றிப் பிடித்து ஒன்றுபடல் வேண்டும். இயக்கங்கள் கூறுகளாக பிரியக்கூடாது.

இதற்கு பின்னால் இஸ்லாத்துக்கு எதிரான சக்திகள் உள்ளன. நாம் விழிப்புடன் செயற்படல் வேண்டும். அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ கூட இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கும் ஆயுதக் குழுக்களுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லையென தெரிவித்துள்ளார் என அலவி மெளலானா கூறினார்.

இனங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தீர்க்க நிறுவன ரீதியான ஏற்பாடு அவசியமானது – முன்னாள் அமைச்சர் பேரியல்

fer.jpgஇனங் களுக்கிடையே அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கு நிறுவனமய ரீதியான ஏற்பாடொன்று அவசியமானதென்று முன்னாள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரப் தெரிவித்தார். இனங்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்த்து அமைதியை நிலைநாட்டும் பொருட்டு இந்த அமைப்பை தேசிய ரீதியில் ஏற்படுத்த வேண்டுமென்றும் திருமதி அஷ்ரப் குறிப்பிட்டார்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழு முன்னிலையில் அவர் நேற்று (24) பிற்பகல் சாட்சியமளித்தார்.கொழும்பு 7, ஹோட்டன் பிளேசில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தலைமையில் இடம்பெற்ற விசாரணையில் சாட்சியமளித்த திருமதி பேரியல் அஷ்ரப், “முஸ்லிம்கள் ஏனைய இனத்தவர்களோடு சகவாழ்வுடன் வாழ தயாராக இருக்கிறார்கள். முஸ்லிம் மதத் தலைவர்களும் மெளலவிமார்களும் இதனையே வலியுறுத்துகிறார்கள்” என்று தெரிவித்ததுடன், கிழக்கில் காணாமற்போன முஸ்லிம் இளைஞர்களைக் கண்டறிந்துகொள்வதற்கு நல்லிணக்க ஆணைக் குழு உதவ வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். கிழக்கில் கலவரத்தால் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் புலிகள் இல்லாதுபோனதன் பின்னர் திரும்பி வந்து தமது காணிகளைக் கோருகிறார்கள். எனினும் அவர்களின் காணிகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன. இவை நிவர்த்திக்கப்பட வேண்டும் என்றும் திருமதி அஷ்ரப் குறிப்பிட்டார். மேலும், அம்பாறை மாவட்டத்தில் தாம் வீடமைப்புத் திட்டமொன்றை ஆரம்பித்தபோது முஸ்லிம் என்பதால் தடுக்கப்பட்டதாகவும் ஆணைக்குழு முன்னிலையில் அளித்த சாட்சியத்தில் அவர் தெரிவித்தார்.

பேலியாகொடையில் 7 கோடி ரூபா கொள்ளை

கொழும்பு, பகுதிகளிலுள்ள தனியார் வங்கியொன்றில் டெலர் இயந்திரங்களுக்கு வைப்பு செய்வதற்காகக் கொண்டுசென்ற ஏழு கோடி ரூபா ஆயுதமுனையில் நேற்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நெஷனல் லொஜிஸ்டிக் செலிவிஷன் லங்கா தனியார் நிறுவனத்தினர் ஏழுகோடி ரூபாவை வாகனமொன்றில் எடுத்துச் செல்கையிலேயே இனந்தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கி முனையில் இக்கொள்ளையை நடத்தியுள்ளனர். பாதுகாப்பு உத்தியோத்தர்களின் துப்பாக்கிகளையும் பறித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று அதிகாலை 12.30க்கும் 1.30க்கும் இடையே நடைபெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். பேலியாகொடை பொலிஸ் பிரிவிலுள்ள அலுவாகேல்ல, தெகலபொத்த பகுதியில் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்பட வில்லை. கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல தனியார் வங்கியொன்றின் டெலர் இயந்திரத்திற்கு பணத்தை வைப்புச் செய்யும் மேற்படி நிறுவனத்தின் வாகனத்தில் ஏழு கோடி ரூபாவையும் ஏற்றிக் கொண்டுவரும் போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் துப்பாக்கி முனையில் இந்த கொள்ளையை நடத்தியதாக பேலியா கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் அச்சுறுத்திய கொள்ளையர்கள் வாகனத்தினுள் பெட்டிகளில் அடுக்கி வைத்திருந்த பண நோட்டுக் கட்டுகளை பொதிகளில் அடைத்து எடுத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு ள்ளதுடன், பேலியாகொடை குற்றப் புலனாய்வுப் பிரிவும், கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இதேவேளை குறித்த தனியார் வங்கி நாட்டிலுள்ள அனைத்து வங்கிகள் மற்றும் பொதுமக்களிடம் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளது. கொள்ளையிடப்பட்ட பணத்தை வைப்பிலிட வரும் நபர்கள் தொடர்பாக விழிப்பாக இருக்குமாறும், இவ்வாறு சந்தேகத்துக்கிடமான முறையில் எவரேனும் தென்பட்டால் உடனடியாக கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அறிவுக்கு மாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

கிளிநொச்சியில் நடைபெற இருக்கும் முத்தமிழ் விழாவை ரத்து செய்யுமாறு தவிகூ வி ஆனந்தசங்கரி கோரிக்கை

TULF Leader V Anandasangareeஅரசாங்க அதிபர் அவர்கட்கு            
கிளிநெச்சி

கிளிநெச்சி முத்தமிழ் விழா

அன்புடையீர்

தங்களின் அனுசரணையுடன் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து முன்று நாட்களுக்கு கிளிநெச்சியில் முத்தமிழ் விழா நடைபெறவுள்ள செய்தி கிடைத்து திகைப்படைந்தேன். இந்நிகழ்ச்சியை உங்களுடன் தொடர்பு கொண்டு இரத்து செய்யுமாறு என்னிடம் பல மக்கள் கேட்டுள்ளனர். கிளிநெச்சி பொதுமக்களில் கணிசமானவர்கள், இது மகிழ்ச்சி கொண்டாட்டங்களுக்கு உகந்த நேரம் அல்ல எனக் கூறி இவ்விழாவை இரத்துச் செய்யுமாறு கோருகின்றனர். கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது விசாரணைகளை கிளிநெச்சியிலும் முல்லைத்தீவிலும் நடத்திய போது அவர்கள் முன் கூடி நின்ற பெரும் தொகை மக்கள் எனது கூற்றுக்கு சான்று பகர்வார்கள்.

மக்கள் தமது தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளைகளைப்பற்றியும், காணாமல் போய் உள்ள உறவினர்களைப் பற்றியும் சொல்லண்ணாத் துயரில் இருக்கும் போது அவர்கள் எதுவித கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளும் மன நிலையில் இல்லை. மேலும் மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் எனக் கூறப்படும் இவர்கள் சொல்லெணா கஸ்டங்களை அனுபவித்துக் கொண்டு இன்றும் இருக்கின்றனர். அவர்களின் அனேகமான வீடுகள் கூரை அற்ற நிலையிலும், மனித சஞ்சாரத்துக்கு தகுதியற்றவைகளாகவே இன்றும் இருக்கின்றன். பிள்ளைகள் உள்ள குடும்பங்கள்  அதிகளவான  கஸ்டங்களை அனுபவிக்கின்றனர். தொடர்ந்து முகாம்களில் உள்ள அவர்களுக்களுடைய உறவுகள் படும் கஸ்டமோ மிக மோசம்.

தயவு செய்து இந்நிகழ்ச்சியை நடத்துவதில் உங்களுக்குள்ள கஸ்டங்களை அதிகரிகளுக்கு எடுத்துக் கூறி  இந் நிகழ்ச்சியை இரத்துச் செய்யவும். யாழ் மத்திய கல்லூரி அதிகரிகளுக்கும், திருமறை கலாமன்றத்தினருக்கும் எனது வேண்டுகோளை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி!
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
வீ.ஆனந்தசங்கரி
தலைவர் – தமிழர் விடுதலைக் கூட்டணி 

“புலிகளின் உறுப்பினர்கள் எவரும் இரகசியமான முறையில் தடுத்து வைக்கப்படவில்லை” – இராணுவப் பேச்சாளர் உபயமெதவல

புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் எழிலன் உட்பட புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எவரும் தடுத்து வைக்கப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.

 எழிலனும் மற்றும் புலிகளின் ஏழு சிரேஸ்ட உறுப்பினர்களும் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும்  அவர்களை படையினர் மறைமுகமான இடத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரான எழிலனின் மனைவி ஆனந்தி சசிகரனின் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதெனவும் அவை படையினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.

எழிலன் உள்ளிட்ட குழுவினர் படையினரிடம் சரணடையவில்லை எனவும், படையினர் இரகசிய தடுப்பு முகாம்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும்  வைத்திருக்கவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தவர்கள் படையினரால் அச்சுறுத்தல், துன்பறுத்தல்களுக்கு ஆளாவதாகவும்,  நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த பொதுமக்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பாராளுமன்றில், அவசரகாலச்சட்டதை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.