2010

2010

ஜூனில் போலந்து ஜனாதிபதி தேர்தல்

போலந்து நாட்டு ஜனாதிபதி லெக் கக்சியான்ஸ்கி விமான விபத்தில் ரஷியாவில் பலியானதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் வருகிற ஜூன் மாதம் நடக்கிறது.

வருகிற ஜூன் மாதம் 13 அல்லது 20ந் திகதி இந்த தேர்தல் நடக்கும் என்று தெரிகிறது. இந்த 2 திகதிகளில் எந்த திகதி என்பதை இடைக்கால அதிபர் கொமோரோவ்ஸ்கி முடிவு செய்வார். இதற்காக அவர் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சர்வதேச கல்விப் பிரசார வாரம் எதிர்வரும் 20 முதல் 27ஆந் திகதி வரை

sri-lankas.jpgதரமான பொதுக் கல்விக்கு நிதி ஒதுக்குங்கள்; அது அனைவரினதும் உரிமை’ என்னும் கோரிக்கையை முன்வைத்து இவ்வருடத்துக்கான சர்வதேச கல்விப் பிரசார வாரம் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இவ்வாரத்தின் போது மலையக கல்வி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு அவசியம் என்ற விடயம் குறித்து பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வலியுறுத்தப்படவுள்ளதாக பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் தெரிவித்தார் .

புதுக்குடியிருப்பில் புலிகளின் பாரிய டீசல் களஞ்சியம் கண்டுபிடிப்பு; 25,000 லீட்டர் மீட்பு

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாரிய டீசல் களஞ்சியம் ஒன்றை இராணுவம் மற்றும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இந்தக் களஞ்சிய தொகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 20 ஆயிரத்துக்கும் 25 ஆயிரத்தும் இடையிலான லீற்றர் டீசல்களை படையினர் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றையடுத்து பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து கூட்டு தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற் கொண்டுள்ளனர். இதன் போதே பெருந் தொகையான டீசலை கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை, 12.7 மி.மீ. ரக 2250 ரவைகள் மற்றும் மோட்டார் குண்டுகளையும் படையினர் இந்தப் பிரதேசத்திலிருந்து மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். டீசல் மீட்டெடுக்கப்பட்ட பிரதேசத்தில் இராணு வமும், பொலிஸாரும் தொடர்ந்து பாரிய தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பண்டிகை காலப்பகுதியில் கைகலப்பு, வாகன விபத்து, பட்டாசு வெடி; 750 பேர் காயம்; மூவர் உயிரிழப்பு

சிங்கள – தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற சண்டை சச்சரவுகள், வாகன மற்றும் பட்டாசுவெடி விபத்துக்கள் என்பவை காரணமாக 750 பேர் காயமடைந்துள்ளதுடன், மூவர் உயிரிழந்துள்ளனர் என்று கொழும்பு, களுபோவில ஆஸ்பத்திரிகளின் அதிகாரிகள் நேற்றுத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துச் சேவைப் பிரிவு பணிப்பாளர் டாக்டர் பிரசாத் ஆரியவன்ச கூறுகையில், சிங்கள, தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற சண்டை சச்சரவுகள், வாகன மற்றும் பட்டாசு வெடி விபத்துக்கள் என்பன காரணமாக காயமடைந்து 486 பேர் சிகிச்சை பெற வருகை தந்தனர். இவர்களில் 196 பேர் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாகன விபத்துக்களுக்கு உள்ளாகிய 160 பேரும், கத்தி குத்துக்கு இலக்காகிய 58 பேரும், விளையாட்டின்போது காயமடைந்த 29 பேரும் கிசிச்சை பெற வந்தனர். பட்டாசு வெடி விபத்து காரணமாக ஒருவரே சிகிச்சை பெற வந்தார்.

புத்தாண்டு காலப் பகுதியில் சிகிச்சை பெற வந்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தைவிடவும் இவ்வருடம் 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. கைகலப்பு காரணமாக மூவர் உயிரிழந்துள்ளனர் என்று அவர் கூறினார். இதேவேளை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கூறுகையில், புத்தாண்டு காலப்பகுதியில் 264 பேர் சிகிச்சை பெற வந்தனர். இவர்களில் 61 பேர் தங்கி இருந்து சிகிச்சை பெறுகின்றனர். வீதி விபத்து காரணமாக 43 பேரும், கைகலப்பு காரணமாக 21 பேரும், வீட்டு வன்முறை காரணமாக 37 பேரும், பட்டாசு வெடி விபத்து காரணமாக 3 பேரும் சிகிச்சை பெற வந்ததாக அவர் கூறினார்.

கும்புறுப்பிட்டிய வாக்குச் சாவடியிலே எண்ணும் பணி

திருகோணமலை கும்புறுப்பிட்டியலில் உள்ள வாக்குச்சாவடியில் மட்டும் எதிர்வரும் 20ம் திகதி மீள் வாக்களிப்பு நடைபெற உள்ளதோடு வாக்கு எண்ணும் பணிகளும் அதே இடத்திலே நடத்தப்படும் என திருகோணமலை உதவித் தேர்தல் ஆணையாளர் எச்.எம்.என். தெனிபிரிய கூறினார். மோசடிகள் இடம்பெற்றதையடுத்து கும்புறுபிடியவிலுள்ள ஒருவாக்குச் சாவடியின் வாக்குகள் ரத்துச் செய்யப்பட்டு மீள வாக்களிப்பு நடைபெற உள்ளது.

இங்கு 977 பேரே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான வாக்களிப்பு ஒரே வாக்களிப்பு நிலையத்தில் நடைபெற்று அதே நிலையத்தில் வாக்குகளை எண்ணவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். வாக்களிப்பு நிலையத்திற்கும் வாக்குகள் எண்ணும் பணிகளுக்கும் 50ற்கும் குறைவான உத்தியோகத்தர்களே ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பண்டிகைக்கு வீடு சென்றோர் வேலைக்கு திரும்ப நேற்று முதல் விசேட ரயில், பஸ் சேவைகள்

train.jpgபுத்தாண்டுப் பண்டிகையை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் வேலைக்கு திரும்புவதற்காக நேற்று (15) முதல் விசேட ரயில் மற்றும் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனையொட்டி 26 மேலதிக ரயில்களும் 400 இ. போ. ச. பஸ்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு கூடுதலான தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

வழமையாக சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில்களுக்கு மேலதிகமாக பண்டாரவளை நுவரெலியா, ரம்புக்கன, மாகோ, காலி ஆகிய இடங்களில் இருந்து கொழும்புக்கு மேலதிக ரயில்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியது.

இதேவேளை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படும் இ. போ. ச. பஸ்கள் குறித்த டிப்போக்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் 19ம் திகதி வரை அவை சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் இ. போ. ச. கூறியது.

இந்திய கிழக்கு மாநிலங்களில் கடும் சூறாவளி: 76 பேர் பலி

இந்தியாவின் கிழக்கு மாநிலங் களில் கடுமையான புயல் வீசிய தால் பெங்கால், பீஹார் ஆகிய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட் டன.

கடந்த புதன்கிழமை இப்புயல் வீசியது. நாற்பது நிமிடங்கள் வரை இப்புயல் வீசியது, இதனால் இவ் விரு மாநிலங்களிலும் சுமார் 116 பேர் உயிரிழந்தனர் எனவும் 76 பேரின் சடலங்களே கண்டெடுக்கப் பட்டன. ஐம்பதாயிரம் வீடுகள் சேத மடைந்தன.

மரங்கள், வீட்டுக் கூரைகள், மின் கம்பங்கள் என்பன வீதியில் இடிந்து விழுந்து கிடந்தன. மின் சாரம் துண்டிக்கப்பட்டதுடன் தொலை பேசிகளும் செயலிழந்தன. இப்பிர தேசமெங்கும் மக்கள் பதறியடித்துக் கொண்டோடினர். போக்குவரத்து கள் யாவும் தடைப்பட்டதாக அங்கு ள்ளோர் தெரிவித்தனர். கால் நடைகள், பயிர்கள் என்பனவும் இந்தச் சூறாவளியால் நாசமடைந்தன. இடம் பெயர்ந்தோரை வேறு இடங்களில் தங்கவைப்பதற்கான அவசர ஏற்பாடு களை அரச அதிகாரிகள் மேற் கொண்டனர்.

ஹெம்டாபத், இஸ்லாம்பூர், கலிங் காஞ்சி, கராண்டிங்கி, றைகலின் ஆகிய நகரங்கள் இந்தச் சூறாவளியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.

சீனாவில் பாரிய பூகம்பம் 617 பேர் பலி: 10 ஆயிரம் பேர் காயம்

சீனாவில் நேற்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதில் 617 பேர் பலி ஆனார்கள். மேலும் 10 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ளது கின்காய் மாகாணம். மலைப் பகுதிகள் நிறைந்த இந்த மாகாணம் சீனாவில் மிகப் பெரிய மாகாணம் ஆகும்.

இந்த மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7.49 மணிக்கு சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. திபெத்தையும் கின்காய் மாகாணத்தையும் பிரிக்கும் மலைப் பகுதியில் பூமிக்கு அடியில் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இந்த பூகம்பத்தால் கின்காய் மாகாணமும் திபெத்திய பகுதியும் குலுங்கின. பூகம்பம் ஏற்பட்டதும் வீடுகள் மற்றும் கட்டடங்கள் அதிர்ந்ததால் உள்ளே இருந்தவர்கள் பீதியில் வெளியே ஓடி வந்தனர். ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.

பூகம்பத்தால் கின்காய் மாகாணத்தில் ஜீகு நகரில் உள்ள 85 சதவீத கட்டடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து நாசமாயின. கியேகு நகரிலும் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. யூசு பகுதியும் பூகம்பத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. யூசு, கியேகு பகுதிகளில் உள்ள பல பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு அலுவலக கட்டடங்கள் இடிந்து நாசமாயின. கட்டட இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த பலர் ரத்தம் சொட்டச் சொட்ட வெளியே ஓடிவந்தனர்.

மலைப்பாங்கான பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகள் மண்ணால் கட்டப்பட்டவை என்பதால் அவை நொறுங்கி விழுந்தன.

எதிர்கால சுபீட்சத்துக்கு இட்டுச் செல்லும் முதலாவது புதுவருடம் – ஜனாதிபதி வாழ்த்து

president.jpgதாய்நாடு ஐக்கியப்படுத்தப்பட்ட பின்னர் இணக்கமான மற்றும் திருப்தியான நிலையில் கொண்டாடப்படும் முதலாவது புதுவருடம் எதிர்கால சுபீட்சத்துக்கு இட்டுச் செல்லும் என நம்புகிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இது போன்ற புதுவருட பண்டிகைகள் எமது மக்களை இதயத்தாலும் மனதாலும் மேலும் ஐக்கியப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்பது எனது நம்பிக்கையாகும். சிங்களவர்களாலும் தமிழர்களாலும் ஒரே வகையில் கொண்டாடப்படும் புதுவருட கொண்டாட்டங்கள் எமக்கிடையிலான உறவுகளை அங்கீகரிப்பதற்கு மிகவும் பொருத்தமானவையாகும்.
எமது நாட்டு மக்களிடம் உள்ள பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் பலமான கலாசார பாரம்பரியங்களின் தொடர்ச்சியாகவே இதனைக் காணமுடிகின்றது. மக்களிடம் புதுவருடத்தின் மகிழ்ச்சியையும் அர்த்தத்தையும் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் செய்துள்ளது. விவசாய அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை நெறிமுறை கள் மூலம் நாட்டுக்கு சுபீட்சத்தை கொண்டுவர நாம் ஆவன செய்துள்ளோம்.

எதிர்கால பரம்பரையான எமது பிள்ளைகளே புதுவருடத்தின் உண்மையான தார்ப்பரியத்தைப் பெரிதும் உணர்ந்து கொள்ள வேண்டியவர்களாவர். ஆயிரக்கணக்கான வருடங்களாகப் பாதுகாக்கப்பட்டுவரும் சிறந்த விழுமியங்கள் மற்றும் பாரம்பரியங்களை அவர்களுக்குப் போதிக்க வேண்டியது ஒருதேசம் என்ற வகையில் எமது பொறுப்பாகும்.

அத்துடன் எமது நாட்டை வளப்படுத்தியுள்ள கலாசார மரபுரிமைகளையும் அவர்களிடம் கையளிக்க வேண்டும். ஒவ்வொரு குடியிருப்பும் புதுவருட பாரம்பரியங்களை எதிர்காலத்தின் சுபமான ஆரம்பத்துக்கான நம்பிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.

எமது நாட்டின் ஒற்றுமையையும் பெருமையையும் பிரதிபலிக்கும் இந்த சிங்கள – தமிழ் புதுவருடம் மகிழ்ச்சி, சமாதானம், பகிர்ந்து கொள்ளல் மற்றும் திருப்தியுறுதல் போன்ற உணர்வுடன் அனைவராலும் கொண்டாடப்பட்டு எம்மை எதிர்கால சுபீட்சத்துக்கு இட்டுச் செல்லும் என நம்புகிறேன். அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான புதுவருட வாழ்த்துக்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

ஹிலாரி கிளிண்டன் இலங்கைக்கு புதுவருட வாழ்த்து தெரிவிப்பு

hillaryclinton.jpgவிடு தலைப்புலிகள் அழிக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்து ஒரு வருடமாகும் இந்த நிலையில், நாட்டின் அனைத்து மக்களுக்கு ஒரே நாளில் சமாதானமாக பிறக்கும்  புதுவருடத்தை கொண்டாட வேண்டும் என தாம் விரும்புவதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இலங்கைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
.
தற்போது அபிவிருத்திக்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ள வேளையில், அனைத்து பாகங்களின் மக்களும் சிறப்பான மனநிலையை கொள்ள, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது.