திருகோணமலை கும்புறுப்பிட்டியலில் உள்ள வாக்குச்சாவடியில் மட்டும் எதிர்வரும் 20ம் திகதி மீள் வாக்களிப்பு நடைபெற உள்ளதோடு வாக்கு எண்ணும் பணிகளும் அதே இடத்திலே நடத்தப்படும் என திருகோணமலை உதவித் தேர்தல் ஆணையாளர் எச்.எம்.என். தெனிபிரிய கூறினார். மோசடிகள் இடம்பெற்றதையடுத்து கும்புறுபிடியவிலுள்ள ஒருவாக்குச் சாவடியின் வாக்குகள் ரத்துச் செய்யப்பட்டு மீள வாக்களிப்பு நடைபெற உள்ளது.
இங்கு 977 பேரே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான வாக்களிப்பு ஒரே வாக்களிப்பு நிலையத்தில் நடைபெற்று அதே நிலையத்தில் வாக்குகளை எண்ணவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். வாக்களிப்பு நிலையத்திற்கும் வாக்குகள் எண்ணும் பணிகளுக்கும் 50ற்கும் குறைவான உத்தியோகத்தர்களே ஈடுபடுத்தப்படவுள்ளனர்.