2010

2010

முல்லை அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட பசில் இன்று விஜயம் – விவசாய திணைக்கள கட்டடத்துக்கும் அடிக்கல்

bazil.jpgமுல் லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டு அதனை துரிதப்படுத்தும் பொருட்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் இன்று அங்கு விஜயம் செய்யவுள்ளனர்.

வட மாகாண அபிவிருத்திக்கான விசேட செயலணியின் தலைவர் என்ற வகையில் நெடுங்கேணி, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்களின் நிலைமையை பார்வையிடும் அவர் முதற் தடவையாக முல்லைத்தீவுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் பாரிய வேலைத் திட்டங்கள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இன்று விரிவாக ஆராயப்படவுள்ளதுடன் அதனை துரிதப்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கவுள்ளார். வடக்கிற்கான அவசர மீட்புத் திட்டத்தின் கீழ் நெடுங்கேணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை பார்வையிடவுள்ளார். வேலைத் திட்டத்திற்கான பணம் என்ற அமைப்பில் கிராம அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட திட்டங்களை ஆரம்பிக்கவுள்ள துடன் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கவுள்ளார்.

ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு விஜயம் செய்யும் அமைச்சர் விவசாயத்துறை அமைச்சினால் நிர்மாணிக்கப்படவுள்ள விவசாய அபிவிருத்தி திணைக்கள கட்டடத்திற்கான அடிக்கல்லையும் நாட்டவுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், திருமதி இமெல்டா சுகுமார் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

வடக்கு குடிநீர் விநியோக திட்டத்துக்கு நிதியுதவி வழங்க உலக வங்கி இணக்கம்

வட பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கவென அமைக்கப்படவிருக்கும் பாரிய உத்தேச கால்வாய் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் உலக வங்கியின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி கலாநிதி நெவ்கோ இஷிக்குமிடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

வட பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர்த் தேவையை நிவர்த்திக்கவென வடக்குக்கான பாரிய கால்வாய் அபிவிருத்தி திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் வவுனிக்குளம் நீர்த்தேக்கத்திற்கு இக் கால்வாய் ஊடாக நீர்கொண்டு செல்லப்பட விருக்கின்றது. இந்த அபிவிருத்தி திட்டம் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படவிருக்கின்றது.

இந்தடிப்படையில் இந்த கால்வாயை அமைப்பதற்கு தேவையான நிதியுதவியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள உலக வங்கி இக்கால்வாய் அமைப்புக்கான சாத்தியக் கூற்று அறிக்கையைத் தயாரிக்கத் தேவையான நிதியுதவி வழங்கவும் உலக வங்கி இணக்கம் தெரிவித்திருக்கின்றது.

இஸ்ரேல் மீது சர்வதேச கண்டனம்

ship.jpgகாசாவை நோக்கிச் சென்ற உதவி நிவாரணக் கப்பல்களின் மீது இஸ்ரேலிய கமாண்டோக்கள் நடத்திய தாக்குதல் குறித்து பக்கசார்பற்ற விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டுமென்று ஐநாவின் பாதுகாப்புச் சபை விடுத்துள்ள அறிக்கை ஒன்று கூறியுள்ளது. அந்த விசாரணை உடனடியாகவும், பக்கசார்பற்றதாகவும், நம்பகத்தன்மை மிக்கதாகவும், வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்று பாதுகாப்புச் சபையின் அறிக்கை கூறுகிறது.

இந்தத் தாக்குதல் குறித்து கடுமையான சர்வதேச கண்டனம் எழுந்துள்ள அதேவேளை காசா மீதான தடைகளை இஸ்ரேல் நீக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தியுள்ளன.  இரவு முழுவதும் பாதுகாப்புச் சபையின் கூட்டம் பல மணி நேரம் விவாதித்ததை அடுத்தே இந்த தீர்மானம் வெளியாகியுள்ளது.

பாதுகாப்புச் சபையின் தற்போதைய தலைவரான மெக்சிகோ நாட்டுத் தூதுவர் கிளவுட் ஹெல்லர் இது குறித்துக் கூறுகையில். ”காசாவை நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல்களின் தொடரணி மீது சர்வதேச கடற்பரப்பில் வைத்து இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பலவந்தம் காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்தும், காயமடைந்தவர்கள் குறித்தும் பாதுகாப்புச் சபை தனது ஆழமான கவலைகளை வெளியிடுகின்றது” என்று கூறினார்.

திங்களன்று நடந்த, குறைந்தது 10 சிவிலியன்கள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்த இந்தத் தாக்குதல் குறித்து பாதுகாப்புச் சபை தனது கடுமையான கண்டனத்தை வெளியிடுவதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளது.  இஸ்ரேலால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிவிலியன்களும், கப்பல்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் பாதுகாப்புச் சபை கேட்கிறது.

இந்தத் தாக்குதல் குறித்து துருக்கிய நாடாளுமன்றதத்தில் உரையாற்றிய அந்த நாட்டு பிரதமர் றெசப் தைப் எர்டோகன் ”இது ஒரு இரத்தக்களரியுடன் கூடிய படுகொலை” என்று கண்டித்துள்ளார். ஐநாவின் அறிக்கை கொஞ்சம் தணிவானதாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா விரும்புகின்ற அதேவேளை விமர்சனத்தின் தொனி தணிக்கப்படுவதை துருக்கி விரும்பவில்லை. இருந்த போதிலும், இறுதி அறிக்கையில் இருந்த வாசகங்கள் மென்மையாக்கப்பட்டதாக ஐநாவில் உள்ள பாலத்தீன பார்வையாளரான றியாட் மன்சூர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

ஐநா விவாதத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையான நாடுகள் தங்களுடைய சிரமமான நிலைமையை புரிந்துகொண்டிருப்பார்கள் என்று தாங்கள் நம்புவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எகுட் பராக் கூறியுள்ளார். அந்தப் பகுதியில் இருக்கும் ஹமாஸ் காரணமாகத்தான் தாம் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்துள்ளார். அப்பாவி சிவிலியன்களை இலக்கு வைப்பது தமது நோக்கமல்ல என்றும் அவர் கூறியுள்ளார்

கப்பலில் இருந்த பாலத்தீன ஆதரவு செயற்பாட்டாளர்கள் தம்மை தாக்க முற்பட்ட போது இஸ்ரேலிய படையினர் தற்காப்புக்காகவே தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புச் சபையில் கூறியுள்ளது. ஆனால், சிப்பாய்கள் எந்தவித தூண்டுதலும் இல்லாமல் தம்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

இந்தச் சம்பவம் இஸ்ரேலுக்கு சர்வதேச சட்டங்கள் தொடர்பாக எந்தவிதமான மரியாதையும் கிடையாது என்பதையே காட்டுவதாக அரபு லீக்கின் தலைமைச் செயலாளரான அமர் மௌசா கூறுகிறார். தாக்குதலுக்கு உள்ளான இந்தக் கப்பல்கள் இஸ்ரேலிய துறைமுகமான ஆஸ்டொட்டுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து இஸ்ரேலின் பல இடங்களிலும், சுமார் 600 பாலத்தீன ஆதரவுச் செயற்பாட்டாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தாம் ஆயுதங்களை வைத்திருந்ததாக இஸ்ரேலால் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை அவர்களில் சில செயற்பாட்டாளர்கள் மறுத்திருக்கிறார்கள். இந்த இராணுவத் தாக்குதல் முழுமையான வெற்றியைப் பெறவில்லை என்று லண்டனுக்கான இஸ்ரேலிய தூதுவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியமும் கூறியுள்ளது.

நன்றி: BBC

வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் – சுங்க வரிகளிலும் தளர்வுகள்

car.jpgவாகனங் களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தாலும் மின்சார உபகரணங்களின் மேலதிக வரி 15 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு நேற்று முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. வரிக் கட்டமைப்பை இலகுபடுத்தவும் பரந்துபட்டதுமாக்கும் நடவடிக்கையாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுங்க வரியின் மீதான 15 சதவீத மேலதிக வரியை நீக்கியுள்ளார்.

அத்துடன் பெரும்பாலான மூலப் பொருட்கள் மற்றும் இயந்திர வகைகள் மீதான 2.5 சதவீத இறக்குமதி வரியும் நீக்கப்பட்டுள்ளது. மோதலுக்கு பின்னரான காலகட்டத்தில் பொருளாதாரம் வளர்ச்சி பெறுவதை ஊக்குவிப்பதாக இந்த நடவடிக்கை அமையும். அதேவேளை சுங்கவரி, 0, 6, 15, 30 என்ற நான்கு கட்ட வரிக் கட்டமைப்பில் இலகுபடுத்தப்பட்டுள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் அறிக்கையொன்று கூறுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதனால் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் ஒரு நடவடிக்கையாக இது அமைவதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் வாகனங்கள் மீதான இறக்குமதி வரி 50 சத வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச பிரபல்யம் பெற்ற விற்பனை பெயர்களை தாங்கியுள்ள பொருட்களுக்கு இலங்கையை கவர்ச்சிகரமான விற்பனை மையமாக உருவாக்கும் நோக்கில் தொலைபேசிகள், கைக்கடிகாரங்கள், கமராக்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்களின் ஒட்டுமொத்த வரி 10 சத வீதத்துக்கும் குறைவாக கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தகைய பொருட்களுக்கு துறைமுக வரி மற்றும் நாட்டை நிர்மாணிக்கும் வரி ஆகியவை மட்டுமே விதிக்கப்படும். பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் மேலதிக வரி ஆகியவை இந்த பொருட் களுக்கு விதிக்கப்படமாட்டா.

உள்ளூர் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் திரிபு வரி குறைக்கப்பட்டுள்ளது. முறையற்ற இறக்குமதி போட்டித் தன்மையில் இருந்து பாதுகாப்பு தேவைகளை உள்ளூர் நடவடிக்கைகளை குறிப்பிட்ட இறக்குமதி பாதித்தால் மட்டுமே இந்த வரி தொடர்ந்து செலுத்த ப்பட வேண்டியிருக்கும். மூலப் பொருட்கள் மற்றும் இயந்திர வகைகள் இறக்குமதியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இவற்றின் மீதான வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொருட் குவிப்புக்கு எதிரான சட்டம், லேபல் இடுதல் தொடர்பான சட்டம், தரமான பொருட்களை இறக்குமதி செய்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் சூழல் மாசடைவதை குறைப்பதற்கும் உள் ளூரில் மேற்கொள்ளப்படும் கைத்தொழில் களை பாதுகாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசாங்கமானது இலகுவான வரிக் கட்டமைப்பை நோக்கிச் செல்லும் நிலையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கு இறக்குமதி நிலையில் விசேட பொருட்கள் வரிக்கு மட்டுமே உரித்தாகும். இது சிறிய வர்த்தகர்களுக்கான நிர்வாக நடைமுறைகளை பெரிதும் குறைக்கும்.

முள்ளிக்குளத்தில் ஐந்து படகு இயந்திரங்கள் மீட்பு

முள்ளிக் குளம் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து படகு இயந்திரங்களை கடற்படையினர் மீட்டெ டுத்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அதுல செனரத் தெரிவித்தார். 15 குதிரை வலுவைக் கொண்ட இயந்திரங்கள்-2, 9.9 குதிரை வலுக்களைக் கொண்ட இயந்திரங்கள் 3 றையுமே கண்டெடுத்துள்ளனர்.

நவநீதம்பிள்ளையின் கூற்றினை அரசாங்கம் மீண்டும் நிராகரிப்பு

nawaneethapillai.jpgஇலங் கையின் மனித உரிமை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டுமென்று ஐ. நா. மனித உரிமை தொடர்பான ஆணையாளர் நவநீதம் பிள்ளையால் விடுக்கப்பட்டுள்ள கூற்றினை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே நிராகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அண்மையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டனை சந்தித்தபின் இடம்பெற்ற இணைந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கையினால் அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக் குழு இலங்கையின் நிரந்தர சமாதானத்துக்கு அடித்தளமாக அமையும் என்று கூறியிருந்தார்.

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட சடலங்கள் பெண்களுடையவை? யுத்தகாலத்தில் கொல்லப்பட்டவர்களுடையவை?

கிளிநொச்சி நகரை அண்டியுள்ள கணேசபுரம் பகுதி மலக்குழியிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் பெண்களுடையவை என தெரியவருகின்றது. ஆனால் இத் தகவல் சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை. நேற்று முன்தினம் (29-05-2010) மீள் குடியேற்றப்பட்ட கணேசபுரம் பகுதி வீடொன்றின் மலசலக்கூடக் குழியிலிருந்து கறுப்பு நிறப் பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட நிலையில் ஐந்து சடலங்கள் காணப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொலிஸாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து நேற்றுவரை ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் பல சடலங்கள் அப்பகுதியில் இருக்கலாம் என்கிற அச்சம் அப்பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. கிளிநொச்சியிலிருந்து எமக்கு கிடைத்துள்ள பொது மக்களின் தகவலின்படி போர் நடவடிக்கைகளின் போது கொல்லப்பட்டவர்களின் சடலங்களாக இவை இருக்கலாம் எனவும், மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதன் பின் நடைபெற்ற சம்பவமாக இது இருக்க சாத்தியமில்லை எனவும் தெரிய வருகின்றது.

எது எவ்வாறிருப்பினும், வன்னிப் பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் இச்சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளமை மக்கள் மனங்களில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

யாழ் பொலிஸ் சேவைக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு களுத்துறையில் பயிற்சி!

யாழ்.மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்காக தேர்வு செய்யப்பட்ட 266 இளைஞர் யுவதிகள் நேற்று (May 30 2010) பொலிஸ் பயிற்சிக்காக களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு  அழைத்துச் செல்லப்பட்டனர். இச்சேவைக்கு யாழ். மாவட்டத்திலிருந்து நேர்முகப்பரிட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த 18ஆம் திகதி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள்  களுத்துறை பயிற்சிக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லபட்டனர்.

இவர்கள் May 30 காலை 9.00 மணியளவில் வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வு ஒன்றின் பின்னர் 11 பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மரட்ண தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

சர்வதேச விசாரணை நடத்துவதற்கான அவசரம் எதுவும் இல்லை: கெஹலிய

kahiliya.jpgஇலங் கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதால் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கான அவசரம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
யுத்தத்தின் பின்னரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ள நிலையில், நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உமைகள் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியதை அடுத்தே ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

போர் குறித்த விடயங்களை ஆராய்வதற்கு சுயாதீனமான சர்வதேச மட்டத்திலான ஒரு விசாரணையே தேவை- நவநீதம்பிள்ளை

nawaneethapillai.jpgஇலங்கையில் நடந்து முடிந்த போர் குறித்த விடயங்களை ஆராய்வதற்கு சுயாதீனமான சர்வதேச மட்டத்திலான ஒரு விசாரணையே தேவை. அதுவே தகுந்த, சிறப்பான பலனைத்தரும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். அப்படியான ஒரு விசாரணையின் மூலமே நீதியும், நீண்டகால நல்லிணக்கமும் ஏற்பட வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் குறிப்பட்டுள்ளார்.

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் 14வது அமர்வில் திங்களன்று உரையாற்றிய நவநீதம்பிள்ளை  உலகளவில் மனித உரிமைகள் நிலைவரங்கள் குறித்த அறிக்கை ஒன்றையும் அங்கு சமர்ப்பித்தார்.

இலங்கையில், போர்க்காலத்தில் நிகழ்ந்த சில விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள,  படிப்பினைகள் மற்றும் நல்லிணக் கத்துக்கான ஆணைக் குழு குறித்தும் குறிப்பிட்ட நவநீதம்பிள்ளை  இருந்த போதிலும், முந்தைய அனுபவங்கள் மற்றும் புதிய தகவல்கள் ஆகியவற்றைக் கொண்டு பார்க்கின்ற போது, இந்த விடயம் குறித்து விசாரிக்க ஒரு சர்வதேச சுயாதீன ஏற்பாடே சிறப்பானது என்றும் அத்தகைய சர்வதேச ஏற்பாட்டுக்கே, இலங்கையிலும் மற்றும் ஏனைய நாடுகளிலும் மக்களின் நம்பக்கை கிடைக்கும் என்றும்  அவர் தெரிவித்தார். மனித உரிமை நிலைவரங்களை பொறுத்தவரை சர்வதேச மட்டத்திலான சில நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிய நவநீதம்பிள்ளை அதில் முதலாவதாக இலங்கை நிலைவரம் குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டார்.