யாழ்.மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்காக தேர்வு செய்யப்பட்ட 266 இளைஞர் யுவதிகள் நேற்று (May 30 2010) பொலிஸ் பயிற்சிக்காக களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இச்சேவைக்கு யாழ். மாவட்டத்திலிருந்து நேர்முகப்பரிட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த 18ஆம் திகதி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் களுத்துறை பயிற்சிக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லபட்டனர்.
இவர்கள் May 30 காலை 9.00 மணியளவில் வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வு ஒன்றின் பின்னர் 11 பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மரட்ண தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.