16

16

இலங்கை கிரிக்கெட் வீரர் தாக்குதலில் தொடர்பா? பத்மநாதனை விசாரிக்கை பாகிஸ்தான் முடிவு

pathmanathan.jpgஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்குதலுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக தங்கள் நாட்டு அரசு சந்தேகிப்பதால் செல்வராசா பத்மநாதனை விசாரிக்க பாகிஸ்தான் பொலிஸாரை அனுப்ப பாகிஸ்தான் அரசு தீர்மானித்தள்ளது. அதன் விபரம் வருமாறு:-

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் செல்வராசா பத்மநாதனை மலேசியாவில் இருந்து இலங்கை இராணுவம் கைது செய்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக இவரிடம் விசாரணை நடத்த இந்தியாவின் மத்திய புலனாய்வுத்துறை அனுமதி கேட்டுள்ளது. இதற்காக இந்திய குழு இந்த மாத இறுதியில் கொழும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவரிடம் விசாரணை நடத்த பாகிஸ்தானும் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதல் பின்னணியில் விடுதலைப்புலிகளின் தொடர்புகள் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது என்று அந்நாட்டின் பிரதமர் இலானி தெரிவித்து இருந்தார்.

அதைத்தொடர்ந்தே பத்மநாதனிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் அரசு ஆர்வம் காட்டுகிறது. இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் நிதி உதவி அளித்திருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக அவரிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் தனது புலனாய்வுக் குழு ஒன்றை விரைவில் கொழும்புக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மதகுரு கொலை – சந்தேக நபர் கைது

_arrested.jpgயக்கல குருவிட்டிய விகாரையில் வைத்து பௌத்த மதகுரு ஒருவர், 2009.03.02 அன்று மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

மேற்படிக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வண. கமருதே பியசிறி ஆமு என்ற பௌத்த மதகுருவே இவ்வாறு வெட்டி கொலைசெய்யப்பட்டவராவார்.

நோர்வேயில் ஆளும் கூட்டணி சிறிய வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது

நோர்வேயில் நடந்தது முடிந்த தேர்தலில் தொழிலாளர்கட்சி (AP – 35.5% votes – 64 Seats) சோசலிச இடதுசாரி (SV – 6.1% votes – 11 seats) மற்றும் மைய கட்சி (SP – 6.2% votes – 11 seats) ஆகிய கட்சிகளின் கூட்டு ( 86  ஆசனங்கள்) மூன்றே மூன்று ஆசனங்களால்  மட்டுமே பெரும்பான்மையை  பெற்றுள்ளது. இக்கூட்டரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகள் அதிகாரத்தைக் கொண்டிருந்தது. இக்கூட்டமைப்பு Red – green Coalition  என அழைக்கப்படுகிறது.  இடதுசாரிகள் அல்லாத கட்சிகள் 83 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

தொழிலாளர்கட்சி அதிகளவு ஆசனங்களைப் பெற்றுள்ளது, அதேவேளை சோசலிச இடதுசாரி தனது ஆசனங்கள் சிலவற்றை இழந்து சென்ற தேர்தலை விட குறைந்த பிரதிநிதிகளை பெற்றுள்ளது.

வலதுசாரி (17.2% votes – 30 seats), மற்றும் முன்னேற்றக்கட்சி (22.9% votes – 41 seats) ஆகிய இரு கட்சிகளும் சென்ற தேர்தலை விட அதிக  ஆசனங்களைப் பெற்றிருந்தன. கிறிஸ்ரியன் டெமொகிரட்டிக் கட்சி 5.5 வித வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களை வென்றுள்ளது.

லிபிரல் லெப்ற் கட்சி 3.8 வீத வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களை மட்டும் வென்றுள்ளது. செப் 14 நடைபெற்ற தேர்தலில் மிக மோசமான தோல்வியை இக்கட்சி சந்தித்து உள்ளது.

தனது வாழ்க்கை காலத்தில் முன்னெப்போதும்  இல்லாதவாறு பாராளுமன்றத்தில் கட்சிகள் தெளிவான பிரிவுத் தொகுதிகளாக பிரிந்து நிற்பதான தோற்றம் ஏற்பட்டுள்ளது எனவும், தற்போதுள்ள பாராளுமன்றம் பிரித்தானிய பாராளுமன்றத்தையொத்த அரசியல் கொள்கைகள் தொடர்பாக பாரிய இடைவெளி கொண்ட ஒரு செஞ்தொகுதி மற்றும் ஒரு நீல தொகுதியை ஒத்ததாக காணப்படுவதாக பேர்கன் பல்கலைக்கழக பேராசியர் Frank Aarebrot தெரிவித்துள்ளார்.

நோர்வே பாராளுமன்றத்தில் 39 வீதமான பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பல்லின சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பிளரும் அங்கு தெரிவு செய்யப்பட்டு உள்ளார்.

73.8 வீதமான மக்கள் வாக்களித்துள்ள இத்தேர்தலே 1927க்குப் பின் குறைந்த அளவு மக்கள் வாக்களித்த தேர்தலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்வி உட்பட்ட பொதுத்துறைக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் நேர்வெயின் வட மேற்குக் கரையோரப் பகுதிகளில் பெற்றோலிய மற்றும் எரிவாயு ஆகியவற்றின் அகழ்வு பற்றிய விடயங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தது. முன்னெற்றக் கட்சி குடிவரவு விதிகளை இறுக்கமாக்கும்படி கேட்டிருந்தது.

தொழிலாளருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யமாட்டோம்

080909teawomen.jpg“நாம் எமது தொழிலாளர்களின் நிலையை நன்கு அறிந்தவர்கள். அதனால் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யமாட்டோம். எமது சமூகத்தைப் பற்றி நன்கு சிந்தித்துத்தான் கூட்டு ஒப்பந்தத்தை செய்யவிருக்கிறோம்.

அடிப்படைச் சம்பளமாக 285/= ரூபாவையும், மேலதிகக் கொழுந்து கிலோவிற்கு 9/= ரூபாவிலிருந்து 12/= ரூபாவாகவும் உயர்த்தியுள்ளோம். அதே நேரத்தில் வரவு நாட்களுக்கு 75% சதவீதம் என்ற நிலையை மாற்றி வேலை நாளுக்கு 405/= ரூபாய் என்ற நிலையில்தான் ஒப்பந்தம் செய்யவிருக்கி ன்றோம்”. இவ்வாறு இ.தொ.க பொதுச் செயலரும் இளைஞர் வலுவூட்டல் சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

டிக்கோயா தரவறைத் தோட்டத்தில் நட ந்த கூட்டத்தில் ஆறுமுகன் தொண்டமான் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

ஏப்ரல் மாதம் தொடங்கி புதிய முறை யில் சம்பளம் கணக்கிடப்படும். பாக்கிச் சம்பளத்தை தீபாவளிக்கும், கிறிஸ்மஸ் திருநாளுக்கும், தைப் பொங்கலுக்குமாக பிரித்து கொடுக்கப்படும். அரை நாள் சம்ப ளம் என்று இனிமேல் கணக்கிடப்படமாட்டாது. நாம் மக்களுக்கு தெளிவுப்படுத்தவே இந்த கூட்டங்களை ஏற்பாடு செய்து, தொழிலாளர்களை சந்தித்து வருகிறோம்.

வேலை நாட்களில் குறிப்பிட்ட 75% சத வீதம் என்று சம்பளம் கணக்கிடப்படமாட் டாது. அதேநேரத்தில் வைத்தியத்திற்கு மருத்துவமனையில் மூன்று நாட்களிருந்தால், அதனையும் வேலை நாளாக கணிக்கப்படும். குறிப்பாக முன்னர் வழங்கிய தேயிலை கொழுந்துக்கு மூன்று ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆறு மாதம் சரியாக வேலை செய்தால் 7வது மாதம் சுகவீனம் என்றதால் அதனையும் வேலை நாட்களாக கணிக்கப்பட வேண்டும். இதேநேத்தில் எமது மக்களின் நன்மைக்காக,  இந்தியா இன்னும் 30 பஸ் வண்டிகளை அனுப்பி வருகின்றது. அத்தோடு எமது தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினை களுக்கு தீர்வுகாண வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு இந்திய அரசை கோரியுள்ளோம். ஆகவே, எந்தவித வேலை நிறுத்தமுமின்றி 405/= சம்பள உயர்வை பெற்றுள்ளோம்.

இன்றைய நிலையில் தற்போது இ.தொ.கா ஒப்பந்தத்தை செய்யவிருக்கின்றது. உற்பத் தித் துறையிலும் நாம் அநுசரித்தாக வேண் டும். இந்த ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி 405/= ரூபாயாக அமுலுக்கு வரும் பாக்கிச் சம்பளத்தில் 50% வீதம் திரு நாட்களில் மூன்று தவணையாகப் பிரித்து கொடுக்கப்படும். எமது மக்கள் தீபாவளி, கிறிஸ்மஸ், தைப்பொங்கல் என்ற வகையில் அந்த பாக்கிச் சம்பளம் வழங்கப்படுமென்றார்.

யாழ் நீர் நிலைகளில் கடல் நீர் கலப்பதைத் தடுக்கத் திட்டம்!

basil.jpgயாழ் குடாநாட்டிலுள்ள நீர் நிலைகளில் கடல் நீர்  கலப்பதைத் தடுப்பதற்கான திட்டம் 170 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இத்திட்டம் வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவரும் ஜனாதிபியின் சிரேஷ்ட ஆலேசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. இன் நேரடி வழிகாட்டலில் முன்னெடுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் ஆரம்பத்தில் ஆரியாலை அணைக்கட்டு திருத்தப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான செலவு மதிப்பீடு 170 மில்லியன் ரூபாவாகும். அரச அபிவிருத்திக்கான பொறியில் கூட்டுத்தாபணம் இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
 
யாழ் தொன்டமானாறு அணைக்கட்டு நிர்மானப்பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. அமைச்சர் ராஜித சேனாரத்தன மற்றும் யாழ் அரசாங்க அதிபர் கே. கனேஸ் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர்  பார்வையிட்டனர். இதற்கு அடுத்ததாக ஆணையிறவு அணைக்கட்டு மீள் கட்டுமாணப்பணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஒரு பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. 

வாஸின் மனைவி, மகனுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் – நால்வர் நேற்று விடுதலை

தகவல் தொழில்நுட்ப கல்லூரி மாணவனின் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த வாஸ் குணவர்தனவின் மனைவி, மகன் ஆகியோருடன் மேலும் எட்டுப் பேரையும் எதிர்வரும் 29ம் திகதிவரை மீண்டும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மேலும் நால்வர் நேற்று சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப் பட்டுள்ளனர். கடுவலை நீதிமன்றத்தினால் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே மேற்படி தீர்ப்புகள் வழங்கப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் மெத்திவக்க தெரிவித்தார்.

கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தனவின் மகன், தகவல் தொழில்நுட்ப கல்லூரியில் தன்னுடன் கல்வி கற்கும் சக மாணவனை தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வாஸ் குணவர்தனவின் மகன் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் நால்வரே நேற்று சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் நேற்றைய வழக்கின்போது, ஒரு சமயம் காணாமற் போனதாக கூறப்படும் தகவல் தொழில்நுட்ப கல்லூரி மாணவன் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தனவின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பது ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

180 தினார்களைத் திருடிய இலங்கையருக்கு 3 ஆண்டு சிறை

_jail_.jpgபஹ்ரெ யினில் 180 தினார்களைத் திருடி இலங்கையில் உள்ள தனது குடும்பத்தினருக்கு அனுப்பியதாகக் கூறப்பட்ட ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறைவாசம் விதித்ததுடன் அவரை நாடு கடத்தவும் பஹ்ரெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தம்முடன் அறையைப் பகிந்து கொண்டவரின் ஏ. டீ. எம். அட்டை மூலம் இவர் இந்த பணத்தொகையைத் திருடியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் இவர் மீதான வழக்கு நேற்று முன்தினம் பஹ்ரெயினின் முஹாராக் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவருக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவரை 3 ஆண்டுகள் சிறைவாசம் விதித்ததுடன், அதன் பின்னர் இலங்கைக்கு நாடுகடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

முஸ்லிம் அரச ஊழியர்க்கு 17 இல் சம்பளம்

புனித நோன்புப் பெரு நாளை முன்னிட்டு முஸ்லிம் அரச சேவையாளர்களுக்கு இம்மாதச் சம்பளத்தை 17 ஆம் திகதி வழங்குமாறு திறைசேரியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாயகம் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் மாகாண சபைகளின் பிரதம செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.

தகவல் ஊடகத் துறை அமைச்சின் புதிய செயலாளர்

1509ganegalass.jpgதகவல் ஊடகத் துறை அமைச்சின் புதிய செயலாளராக டப்ளியு.பீ.கனேகல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கபட்டுள்ளார்.

இந்த அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றிய ஏ.திஸாநாயக்க கலாசார அலுவல்கள் மற்றும் தேசிய மரபுரிமைகள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கனேகல ஏற்கனவே தகவல் ஊடகத் துறை அமைச்சின் செயலாராக கடமையாற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன்னர் பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றினார்

19 அதிபர்கள் இ. அ. சேவை தரம்-1க்கு நியமனம்

கல்முனைக்குடி, சாய்ந்த மருது, மாளிகைக்காடு, மருதமுனை, நற்பிட்டி முனை ஆகிய பாடசாலை களில் அதிபர்களாக கடமை யாற்றிக் கொண்டிருப்பவர் களில் 19 பேர் இ. அ. சேவை தரம் 1 க்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கல்வி அமைச்சு இவர்களுக்கான நியமனக் கடிதங்களை சமீபத்தில் வழங்கியது. ஏ.ஏ. றஸ¤ல், எம்.ஐ.ஏ. கரீம்,  ஏ.கே.எம். நியாஸ்,  எச்.ஏ. லத்தீப், எம்.வை. உதுமான் அலி,  என்.எம். சலீம்,  எம்.எப். இஸ்மாயில்,  எஸ்.ஏ. லியாக்கத் அலி, ஆர்.எம். ஹுசைன், எம்.எச்.எம். நவாஸ், எம்.ஏ. அkஸ், ஏ. குமையின், ஏ.ஆர்.எம். தெளபீக், ஏ.ஆர்.ஏ. றாkக், ஏ.எம். பாறுக், ரி.எல். அமீனுல்டீன், ஏ. கலீல்டீன், ஏ.ஆர்.ஏ. றஸ¤ல் எஸ்.எம்.ஏ. ஜஃபர் ஆகியோரே நியமனம் செய்யப்பட்டவர்களாவர்.