18

18

நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் திட்டத்தை நிறைவுசெய்ய முன்வாருங்கள்: உருத்திரகுமாரன் : உருத்திரகுமாரனை நாடு கடத்தக் கோரும் இலங்கை

rudrakumaaran_voo.jpgஈழத்து தமிழ் பேசும் மக்களின் அதிஉயர் அரசியல்பீடமாக – உலகத் தமிழர்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து – நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்தினை திடமாகவும் விரைவாகவும் முன்னெடுப்பதற்கு முன்வருமாறு அந்தத் திட்டத்தின் உருவாக்கச் செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் உலகத் தமிழ் அமைப்புகளுக்கு வேண்கோள் விடுத்துள்ளார்.  நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் திட்டச் செயற்குழுவின் சார்பாக அவர் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

“உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழர் அமைப்புக்கள் இந்தத் திட்டத்துக்கு தமது அதிகாரபூர்வ ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்கி வருவது இந்தத் திட்டத்துக்கு வலுச்சேர்த்து வருகிறது.

ஏற்கெனவே – பிரித்தானிய தமிழர் பேரவை, கனடியத் தமிழர் பேரவை, அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம், சுவிஸ் தமிழர் பேரவை, பிரான்ஸ் தமிழீழ மக்கள் அவை, தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம், தமிழ் நாடு திராவிடர் பேரவை உட்பட பல அமைப்புக்கள் இந்தத் திட்டத்தின் வெற்றிக்காக தமது அதிகாரபூர்வ ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த அமைப்புக்களுக்கு எமது நன்றியினைத் தெரிவிக்கும் அதேவேளை, உலகளாவிய ரீதியில் இயங்கும் ஏனைய தமிழர் அமைப்புக்கள் எல்லோரிடமும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவினை வழங்குமாறும் எம்முடன் சேர்ந்தியங்க முன்வருமாறும் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.” என்று தெரிவிக்கும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையை நசுக்கி விடுவதற்கு சிறிலங்கா அரசு பகீரத முயற்சி செய்து வருவதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். தாயகத்தில் நமது தேசத்தின் மீது தான் நிலைநிறுத்தியுள்ள இராணுவ மேலாதிக்க நிலையின் மூலம் தமிழர் தேசத்தை அடிமைப்படுத்திவிடலாம் என்ற இறுமாப்புடன் செயற்பட்டுவரும் சிங்கள அரசு, தற்போது தனது இராணுவக் கொடும் கரங்களை சிறிலங்காவின் எல்லை தாண்டியும் விரித்துள்ளது. இதன் மூலம் புலத்தில் தமிழர் உரிமைப் போராட்டச் செயற்பாடுகளை நசுக்கிவிடலாம் என சிங்கள அரசு எண்ணுகிறது.

சிறிலங்கா அரசின் இராணுவ மேலாதிக்க நிலையுடனான அடக்குமுறைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் தாயகத்திலோ புலத்திலோ ஈழத்தமிழர் தேசம் அடிபணியப் போவதில்லை. தாயகத்தில் நமது மக்கள் தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புக்களாலும் இதனை வெளிப்படுத்த முனைகின்றனர். அண்மையில் நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மூலமும் மக்கள் இதனைத் தம்மால் இயன்றவரை வெளிப்படுத்தியுள்ளனர்.

புலத்தில் மக்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து, ஈழத் தமிழர் தேசத்தின் அதிஉயர் அரசியல்பீடமாக அமையும் வண்ணம் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்துக்கான செயற்பாடுகளை நாம் மிகவும் திடமாகவும் விரைவாகவும் முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளோம். நாம் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்ட வகையில், தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக போராடும் நமது ஜனநாயக உரிமையில் எவரும் தலையீடு செய்ய நாம் அனுமதிக்க முடியாது.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டம் தொடர்பான விளக்கக் கோவை ஒன்றினை நாம் இம்மாத இறுதிக்குள் வெளியிடவுள்ளோம். இத்திட்டம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் உரிய விளக்கங்களை இக்கோவை கொண்டிருக்கும்.

ஒவ்வாரு நாட்டிலும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில் அமைக்கப்படும் செயற்குழு விபரங்களையும் நாம் விரைவில் வெளிப்படுத்தவுள்ளோம். இக்குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் மத்தியிலும் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்துக்கு ஆதரவு திரட்டி திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக உழைக்கும்.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்தின் வெற்றிக்கு நம் ஒவ்வொருவரினதும் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானதாகும். இத்திட்டத்துடன் இணைந்து செயற்பட ஆர்வமுள்ளவர்களை எம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கிறோம்.

எம்முடனான தொடர்புகளுக்குரிய மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருத்திரகுமாரனை நாடு கடத்தக் கோரும் இலங்கை

gothabaya.jpgநாடு கடந்த தமிழீழ அரசை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் பிரபல வழக்கறிஞர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் உள்ளிட்ட மூன்று முக்கிய நபர்களை நாடு கடத்தக் கோரப் போவதாக இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.  இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் லக்பிம நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக ஜெயந்த ஞானக்கோன் செயல்பட்டு வந்துள்ளார். இவரது சகோதரரான சார்ள்ஸ் ஞானக்கோன் என்பவர் சிங்கப்பூரில் இருந்தபடி புலிகளுக்காக செயல்பட்டு வந்துள்ளார். இந்தத் தகவல்களை கைது செய்யப்பட்டுள்ள கே.பி. விசாரணையில் தெரிவித்துள்ளார். இவர்கள் தவிர விஸ்வநாதன் உருத்திரகுமாரன். இவர்கள் மூவரையும் நாடு கடத்துமாறு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கோரிக்கை விட இலங்கை அரசு தீர்மானித்துள்ளது என்றார்.

ஞானக்கோன் சகோதரர்களில் மூத்தவர் சார்ள்ஸ். இவரைத்தான் சில காலத்திற்கு முன்பு ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூரில் இரகசியமாக சந்தித்து புலிகளுடன் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள முயன்றதாக ராஜபக்ச கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது.  ஜெயந்தா ஞானக்கோன் ஏர் சிலோனில் விமானியாக பணியாற்றியவர். மறைந்த ஜெயவர்த்தனவின் நண்பர் ஆவார். 1983ம் ஆண்டு இனக் கலவரம் வெடித்த பின்னர் இவர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் ஜெயந்தா.

சார்ள்ஸ் ஞானக்கோன் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர். கடந்த 2005ம் ஆண்டு லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவர். பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்.

விடுதலைப் புலிகளுக்காக பெருமளவில் துப்பாக்கிகளை விநியோகம் செய்து வந்தவர். இவர்கள் தவிர உருத்திரகுமாரன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர். சிறந்த சட்ட நிபுணர்.

இவர்கள் மூன்று பேரையும் இலங்கைக்கு நாடு கடத்தி கொண்டு வந்து விசாரிக்க இலங்கை அரசு தற்போது நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஆனால் அது எளிதாக இருக்குமா என்பது சந்தேகம் என்ற பேச்சு புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது.

சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் – 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக மின் அஞ்சல்

sarathfonseka.jpgதமிழீழ விடுதலைப் புலிகளை கால அட்டவணை போட்டு தோற்கடித்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அரசியல் பிரவேசத்திற்கான முதலாவது மின் அஞ்சலை இணையத்தில் பரவவிட்டு உள்ளார். மகாவம்சத்தை மீண்டும் சென்று புரட்டியுள்ள அவர் துட்டகைமுனு இலங்கைத் தாய்நாட்டை ஒற்றுமைப்படுத்தியது போன்ற உணர்வு தற்போது ஏற்பட்டு உள்ளதாகக் கூறும் மின் அஞ்சலைப் பரவவிட்டுள்ளார்.

அதில் இராணுவ வீரர்கள் ஈட்டிய வெற்றியை அரசியல்வாதிகள் இந்தியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் பணிந்து நாட்டை வேறுமுறையில் பிரிக்க முற்படுவதாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது பிரிவினைக்கு இட்டுச்செல்லும் என்றும் அவர் தெரிவித்திதுள்ளார்.

13வது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவது அவசியமானது என்று வாதிட்ட ஐ நா பிரிதிநிதி தயான் ஜெயதிலக்க அவரது பதவியில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டார். அவர் திருப்பி அழைக்கப்பட்டதற்கு இஸ்ரேலிய அரசின் அழுத்தங்கள் காரணமாக இருந்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

எது எப்படியானாலும் இலங்கை அரசின் பக்கத்தில் இருந்து வரும் சமிஞ்சைகள் பெரும்பாலும் அரசியல் தீர்வொன்றுக்கு எதிராகவே உள்ளது.

முன்னாள் இராணுவத்தளபதி பரவிவிட்டுள்ள மின் அஞ்சல் லங்கா ஈ நியுஸ் இணையத்தில் வெளியிடப்பட்டு இருந்தது.

._._._._._.

Dear Fellow citizens,

Let me first salute the fallen heroes of Sri Lanka who made a supreme sacrifice to defend the motherland from the clutches of terrorism. We are indebted to them for generation to come for rescuing the nation
from the grip of terrorism and protecting the territory and integrity of Sri Lanka. For those who made the noble sacrifice for this supreme cause we will never be able to pay their debt. They shall not grow old,
as we that are left grow old age shall not weary them, nor the years condemn at the going dawn of the sun, and in the morning we will remember them lest we forget.

When I was a young kid in school, I learnt the Great king of Dutu Gemunu who united Mother Lanka! Today we taste the same freedom & joy in our father’s land. My best fear is that we will no more enjoy this freedom. The separatism comes in a different form. Now we have a daunting task to protect our motherland from India and the western world. We defeated separatism and strengthened the political mainstream in the country.

I am sadden to understand that our politicians are conniving with India and western world to separate the country in a different way. The proposed political solution through the 13th Amendment would foil the
military victory and create a division in the country. If the present Sri Lankan leaders are going to sing the same old song which was solely composed by India in 1987 for their own benefit, then the recent
military victory would be a total loss and in vain.

The saddest thing for Sri Lanka is its worst neighborhood. India never helped Sri Lanka genuinely but always had its profitable motivation behind every move or planted problems in Sri Lanka for a short term or long term. Can somebody forget what happened when Sri Lanka requested Indian help to fight terrorism? They always bowed to Tamilnadu pressure and twisted the hands of Sri Lankan governments. Thankful to Pakistan, China, Middle East and few other countries Sri Lanka could wipe-out the
terrorism completely.

The government is planning to provide a political solution to the national problem through the 13th Amendment. India and several western countries are attempting to thrust upon us a proposed political
solution against the wishes of all communities in Sri Lanka. If the Thirteenth Amendment is to going to be implemented, then it is like the Ealam the terrorists were fighting for is granted and presented and
that will be a most traitorous act of all time!

This is against my wish and wish of all the citizens of the country. I will make a supreme sacrifice to defend my land against the politicos who ever they may be joining hands with India and western world. I
salute the valiant soldiers of the Army of Sri Lanka, emerging victoriously from their determined struggle against international terrorism. Please give me your full cooperation to protect our motherland.

Yours Sincerely,
Sgd. General Sarath Fonseka RWP, RSP, VSV, USP
sarath.fonseka.2010@gmail.com

நாலாயிரம் குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு

flood1111.jpgநாட்டின் பல பிரதேசங்களில் நேற்று முன்தினம் முதல் பரவலாகப் பெய்துவரும் மழை காரணமாக சுமார் நாலாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இம்மழை காரணமாக இரத்தினபுரி, களுத்துறை, காலி, கேகாலை, கம்பஹா மாவட்டங்களின் வெவ்வேறு பிரதேசங்களில் தாழ்நிலங்கள் நீரில் மூழ்கி வெள்ள நிலைமையை ஏற்பட்டுள்ளன. சில பிரதேசங்களில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதால் பயணிகள் பஸ் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருப்பதுடன் அவ்வப் பிரதேச மக்களின் இயல்பு வாழ்வும் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் நேற்றுத் தெரிவித்தனர்.

இம்மழை காரணமாக ஏற்பட்டிருக்கும் வெள்ள நிலைமையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவென உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். இதேவேளை இம்மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கேகாலை மாவட்டத்தின் ஓரிரு இடங்களிலும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இம்மண்சரிவுகள் காரணமாக உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை. என்றாலும் சில இடங்களில் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்ததாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இரத்தினபுரி மாவட்ட இணைப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் எஸ். எம். பி. பி. அபேரட்ன குறிப்பிட்டார்.

வளிமண்டலத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாகவே நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்து வருகின்றது. இது தென்மேல் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி அல்ல என்று வானிலை அவதான நிலைய வானிலையாளர் பி. டி. ஆனந்த பெரேரா கூறினார்.

நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி பொலட்டகமவிலேயே அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்றும் அவர் கூறினார். மழை வீழ்ச்சி தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பொலட்டகம 200.5 மி.மீ, குக்குலேகங்கை 182 மி. மீ, கெனியன் 143 மி.மீ, கினிதும 101.5 மி.மீ, இரத்தினபுரி 127 மி.மீ, நேபொட 127 மி.மீ. நோட்டன் 90 மி.மீ, லக்ஷபான 84 மி.மீ என்றபடி மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதே காலநிலை அடுத்துவரும் ஓரிரு தினங்களுக்குத் தொடர முடியும். இம்மழைக் காலநிலை காரணமாக மேல், தென், தென்மேற்கு, தென் கிழக்கு, வடக்கு, கிழக்கு கடற்பரப்புக்களிலும் மழை பெய்ய முடியும். இச்சந்தர்ப்பங்களில் கடலில் கொந்தளிப்பு நிலை ஏற்படலாம். அதனால் வடபகுதி கடலில் இந்த நாட்களில் முன்னெச்சரிக்கையோடு மீன்பிடித்தலில் ஈடுபடுவது அவசியம் என்றார்.

இதேநேரம் இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் மேலும் கூறுகையில், இரத்தினபுரி கலவான வீதியின் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெகோ இயந்திரங்களைக் கொண்டு வாகனப் போக்குவரத்துக்கென மண்மேடுகள் அப்புறப்படுத்தப்பட்டன. கலவான பொத்துபிட்டிய வீதியிலும் வடக்கு கினிமலே, கனேகல்லையிலும் மண்சரிவு ஏற்பட்டது.

குருவிட்ட பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கரங்கொட கிராம சேவகர் பிரிவில் கரங்கொட குடியேற்றத்தில் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு மண்சரிவு ஏற்பட்டது. இம்மண் சரிவு 75 அடிகள் வரை கீழ் நோக்கி ஏற்பட்டிருக்கிறது. இம்மண்சரிவு காரணமாக உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை. ஆனால் வீடொன்று மூடுண்டுள்ளது. இப்பிரதேசத்தில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இம்மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலையால் கலவான பிரதேச செயலகப் பிரிவில் 259 குடும்பங்களும் அயகம பிரதேச செயலகப் பிரிவில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களும் குருவிட்ட பிரதேச செயலகப் பிரிவில் 1636 குடும்பங்களும் எலபாத்த பிரதேச செயலகப் பிரிவில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வெள்ள நிலையினால் கலவான பிரதேச செயலகப் பிரிவில் சுமார் 30 வீடுகள் சிறுசேதங்களுக்கு உள்ளாகியுள்ளன என்றார். இதேவேளை அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் கே. பி. ஏ. தர்மரட்ன குறிப்பிடுகையில், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவரப் பிரதேச செயலகப் பிரிவில் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகள் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர மற்றும் புளத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவுகளிலும், காலி மாவட்டத்தின் நெலுவ, தவளம எல்பிட்டிய, பத்தேகம பிரதேசங்களிலும் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பல பிரதேசங்களுக்கான வழமையான பயணிகள் வாகனப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.  கம்பஹா மாவட்டத்திலும் அதிக மழை பெய்து வருவதால் களனி கங்கை பியகமவிலும் அத்தகலு ஓயா கம்பஹா பிரதேசத்திலும் பெருக்கக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இம்மாதம் 23ஆம் திகதி 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை

examination_departmentsss.jpgஇவ் வருடத்தின்  5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் சனிக்கிழமை நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக  பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகளுக்கு பெற்றோர் சாதகமான சுழலை ஏற்படுத்திக்கொடுக்குமாறும்,  பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தாது வினாப்பத்திரத்திற்கு அவர்கள் சுயமாக விடையளிப்பதற்கு தயார் செய்யுமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வருடம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3 லட்சம்  மாணர்கள் தோற்றவுள்ளனர் எனவும்  ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். 

டெக் 115 கண்காடசியில் தொழிற் சந்தை!

piyasena_gamage.jpgகொழும்பு மருதானை தொழில் நுட்பக் கல்லூரியில் நாளை 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள டெக் 115 கண்காட்சி ஊடாக தொழில் சந்தை ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் மற்றும் தொழில் நுட்ப பயிற்சி அமைச்சர் பியசேன கமகே 19 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2;30 க்கு இந்தக் கண்காட்சியை வைபவ ரீதியாக திறந்து வைக்க உள்ளார்.

இந்தக் கண்காட்சியும் தொழில் சந்தையும் தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை நடைபெற உள்ளது.

மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு நாளை

இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களை துரிதமாக சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவது தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு நாளை (19) மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெறும்.

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்தும் இங்கு ஆராயப்படவுள்ளதோடு வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்தும் இங்கு கவனிக்கப்பட உள்ளதாக பிரதி மாவட்ட செயலாளர் திருஞானசம்பந்தர் கூறினார்.

இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் சுமார் 2,52,000 பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை 180 நாட்களுக்குள் மீள்குடியேற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்திய அணியில் மீண்டும் ட்ராவிட் – முதல் போட்டி இலங்கையில்

dravide-2222.jpgபிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ராகுல் ட்ராவிட் இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். ராகுல் டிராவிட். இலங்கையில் நடக்க உள்ள முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மற்றும் சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளார். காயம் காரணமாக முன்னணி வீரர் செவாக், அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இரண்டு மாத ஓய்வுக்குப் பின்,  இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் செப். 8 ஆம் திகதி இலங்கையில் நடக்க உள்ள முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. அதற்குப் பின் செப். 22 ஆம் திகதி தென் ஆப்ரிக்காவில் ஆரம்பிக்க உள்ள சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.  இந்த இரு தொடர்களுக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி,  நேற்று தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் சென்னையில் தேர்வு செய்யப் பட்டது. இந்திய கேப்டன் தோனி மற்றும் பலர் தேர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அணியின் அதிரடி துவக்க வீரர் செவாக்,  தோள்பட்டை காயத்தால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வருகிறார். தற்போது இதற்கு சிகிச்சை பெற்று வரும் செவாக்,  முழு உடற்தகுதி பெறவில்லை. இதனால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். செவாக் இல்லாத நிலையில்,  இந்திய அணியின் துடுப்பாட்டத்தை  பலப்படுத்தும் நோக்கில்,  முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டு உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இந்திய ஒரு நாள் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார் டிராவிட். இவர் கடைசியாக கடந்த 2007 ம் ஆண்டு இந்தியாவில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடியிருந்தார். அதற்குப் பின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வந்த டிராவிட்,  தற்போது மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் காலடி வைக்க உள்ளார். 

படுக்கையில் இணங்க மறுக்கும் மனைவியை பட்டினிபோட கணவனுக்கு அனுமதி – ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம்

ஆப்கானிஸ்தானில், கணவன் உடலுறவுக்கு அழைக்கும்போது மறுக்கும் மனைவியை அக்கணவன் பட்டினிபோடுவதற்கு அனுமதிக்கின்ற ஒரு புதிய சட்டம் அரசிதழில் (வர்த்தமானி) பிரசுரமாகியுள்ளதன் மூலம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலே சிறுபான்மை இனமாக உள்ள ஷியா மக்களின் குடும்ப வாழ்க்கை சம்பந்தமானது இந்த புதிய சட்டம்.

இந்த ஆண்டில் முன்னதாக இதற்கான மசோதா விவாதத்துக்கு வந்தபோது சர்வதேச அளவில் எதிர்ப்பு உணர்வலைகள் தோன்றியிருந்தன. அதனால் மசோதாவை அதிபர் கர்சாய் விலக்கிக்கொள்ள வேண்டி வந்திருந்தது.

ஆனால் தற்போது அமலுக்கு வந்துள்ள இம்மசோதாவின் மாற்று வடிவமும் பெண்களை பெருமளவில் ஒடுக்குவதாகவே அமைந்திருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சில நாட்களில் ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பழமைவாத ஷியா மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காக ஆப்கானியப் பெண்களை விலைகொடுத்துவிட்டார் அதிபர் ஹமீத் கர்சாய் என்று விமர்சகர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம் மழை-வெள்ளப் பாதிப்பு தொடர்பில் ஐ.நா. கவலை

flood.jpgவட இலங்கை போரினால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள வவுனியா மனிக் ஃபாம் முகாமில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள 1925 வரையிலான கூடாரங்கள் சேதமடைந்தும் நிர்மூலமாகியும் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் கூறியுள்ளது.

இது குறித்து அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கடந்த வார இறுதியில் பெய்த கடுமையான மழை காரணமாக மனிக் ஃபாம் முகாமின் 4ஆம் வட்டகை மற்றும் 2ஆம் வட்டகை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பிரிவுகளிலும் சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நடந்துகொண்டிருப்பதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிக்கூடங்களில் தஞ்சமடைவது சிரமாக இருப்பதாகவும், அதனால், தற்காலிக பயிற்சி நிலையங்களில் சிலர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ஒருங்கிணைப்பு அலுவலக அறிக்கை கூறுகிறது.

இலங்கை நீதிபதிகளை பணிக்கமர்த்தும் பிஜி

court222.jpgஇலங்கை யிலிருந்து நீதிபதிகளை பிஜி அரசாங்கம் பணிக்கு அமர்த்தி வருகிறது.  பிஜியின் பிரதம நீதியரசர் அன்டனி கேட்ஸ் தற்போது கொழும்பிலிருந்து நீதிபதிகளை ஆட்சேர்ப்பு செய்து வருகிறார்.

பொதுநலவாய உறுப்பு நாடுகளிடமிருந்து தகுதிவாய்ந்த நீதிபதிகளை நியமிக்க பிஜி எதிர்பார்த்திருப்பதாக அந்நாட்டின் சட்டமா அதிபர் ஐ ஆர்ஸ் செய்யத் கயூம் பிஜி லைவ் ஊடகத்திற்குத் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த வரும் ஏப்ரல் மாதம் நீதித்துறையில் மாற்றங்களை மேற்கொள்ள பிஜி அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் இலங்கையும் பிஜியும் ஒரே மாதிரியான நீதிமுறைகளைக் கொண்டவை என்றும் அதனால் இலங்கையிலிருந்து நீதித்துறை அதிகாரிகளை ஆட்சேர்ப்புச் செய்ய விருப்பியதாகவும் பிஜியின் பிரதம நீதியரசர் கேட்ஸ் கூறியுள்ளார். கடந்த வாரம் இலங்கையின் பிரதம நீதியரசர் அசோகா டி சில்வா, சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் ஆகியோரைச் சந்தித்து தனது ஆட்சேர்ப்பு பணி தொடர்பாக கேட்ஸ் கலந்துரையாடி உள்ளார். நேர்முகப் பரீட்சைகள் கடந்த புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றதாக கேட்ஸ் கூறியுள்ளார். 2 வருட பணிக்காக விடுமுறை வழங்குவதில் நீதித் சேவைகள் ஆணைக்குழுவிற்குப் பிரச்சினைகள் இல்லையென்று நீதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

விடுமுறை விவகாரம் தொடர்பாக பிரதம நீதியரசர் மற்றும் நீதியமைச்சரின் செயலாளர் ஆகியோருடன் கேட்ஸ் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.  இலங்கையானது சுயாதீனமான நீதித்துறையைக் கொண்டிருப்பதாகவும் அதிக உயர்மட்டக் கொள்கைக் கருத்தை இலங்கை கொண்டிருப்பதாகவும் இதன் மூலம் பிஜி அரசாங்கம் நன்மைகள் பெறமுடியும் என்றும் கேட்ஸ் கூறியுள்ளார். புத்திக்கூர்மை, நேர்மை உடைய உள்ளூர் சட்ட அதிகாரிகளின் சேவைகளைப் பெறுவதன் மூலம் பிஜிக்குப் பயன்கிடைக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

நீதிபதிகள் நீதிபதிகளாகவே செயற்பட வேண்டுமென்பது மிகவும் முக்கியமான விடயமாகும். அவர்களுக்கு ஏனைய கட்டளைகள் அவசியமில்லை. அவர்கள் சரியான விடயத்தையே செய்வது அவசியமாகும். உலகளாவிய ரீதியில் சில நீதிபதிகள் எப்போதும் இருதலைக்கொல்லி எறும்பின் நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. புத்திஜீவித்தனமான நேர்மை, திறமை என்பனவற்றுடன் இருப்பதற்கு அவர்கள் நெருக்கடியான நிலைமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் கேட்ஸ் கூறியுள்ளார்.