05

05

ரியாத்தில் இலங்கை பிரஜை மரணம்

ஐக்கிய அரபு இராஜ்ஜியத் தில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ரியாத்தில் காலமானார்.

மபாஸ் மொஹமட் சலீம் (31) என்பவரே அவரது விடுதியில் வைத்து உயிரிழந்துள்ளார். அவரை சோதனைக்குட்படுத்திய வைத்தியர்கள் மாரடைப்பின் காரணமாகவே அவர் மரணித்திருப்பதனை உறுதி செய்திருப்பதாக அந்நாட்டின் இலங்கைத் தூதரகத்தின் விவகாரங்களுக்குப் பொறுப்பான சபருல்லாகான் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரது உறவினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மரணச் சடங்குகளை ரியாத்திலேயே மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கைத் தூதரகம் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுடன் நடத்தி வருவதாகவும் கான் கூறினார்.

துபாயிலிருந்து கொழும்பு வந்துள்ள உயிரிழந்தவருடைய மனைவி சாஸ்னா, அவரது இறுதிக் கிரியைகளை ரியாத்திலேயே நடத்துவதற்கு கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் சம்மதம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரும் அவரது மனைவியும், கொழும்பு 10 ஐச் சேர்ந்தவர்கள், சலீம், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் துணை நிறுவனமான அல் ஹொக் எயர் குறூப் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். உயிரிழந்தவர் சில காலங்களாக தொடர்ச்சியான இருமல் மற்றும் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாக அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.

மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு இன்று திருநிலைப்படுத்தல் திருப்பலி

m-r1111.jpgகொழும்பு மறை மாவட்ட புதிய பேராயராக பேரருட் திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் திருநிலைப்படுத்தல் திருப்பலி கொழும்பில் இன்று நடைபெறுகிறது. கொழும்பு கொட்டாஞ்சேனை சென்லூசியாஸ் பேராலயத்தில் இது தொடர்பான நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு இடம்பெறும்.

1947ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதி பொல்கஹவெலவில் பிறந்தவ ராவார்uஎன்பது குறிப்பிடத்தக்கது.

புனரமைக்கப்பட்ட இரு வைத்தியசாலைகள் திறப்பு

sri-lankan-doctors.jpgமட்டக் களப்பில் கடற்கோள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பெரியகல்லாறு, பழுகாமம் ஆகிய வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
பல இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இவ்விரு வைத்தியசாலைகளின் திறப்பு விழா நிகழ்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, கிழக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம். தேவராஜன், யுனிசெப் அதிகாரி, வைத்திய அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தேக்கம்காடு மைதான சோதனைச் சாவடி மூடப்பட்டது

police-traffic-stop00.jpgவவுனியா தேக்கம்காடு பொது விளையாட்டு மைதானத்திலிருந்த வாகனச் சோதனை நிலையம் அகற்றப்பட்டுள்ளது. இதேநேரம், வவுனியாவிலிருந்து மதவாச்சி செல்லும் வாகனங்கள் ஈரற்பெரியகுளத்திலுள்ள சோதனைச் சாவடியில் வழமையான சோதனை நடவடிக்கையின் பின்னர் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுமென பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் ஒரு வருட காலம் இந்த வாகனச் சோதனை நிலையம் செயல்பட்டது. கொழும்பிற்கு வாகனங்கள் மூலம் வெடிபொருட்கள் கடத்திச் செல்லப்படுவதாகக் கூறியே வாகனங்களைச் சோதனையிடுவதற்காக பிரத்தியேக வாகனச் சோதனை நிலையம் அமைக்கப்பட்டது.

யுத்தம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இந்தச் சோதனை நிலையம் அகற்றப்பட்டுள்ளது.

தமிழ் தொழில் அலுவலர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் நிலவும் தமிழ் தொழில் அலுவலர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தொழில் திணைக்களம் புதிதாக தமிழ் தொழில் அலுவலர்களை இணைத்துக்கொள்வதற்காக இந்த விண்ணப்பங்களை கோரியுள்ளது என தொழில் அமைச்சர் அதாவுத செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இதற்கான போட்டிப் பரீட்சைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 20 தமிழ் தொழில் அலுவலர்களை சேர்த்துக்கொள்வதற் கான போட்டிப் பரீட்சைகள் தமிழ் மொழியில் மட்டுமே நடத்தப்படவுள்ளது.

போட்டிப் பரீட்சைகளில் தெரிவாகும் தொழில் அலுவ லர் வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள தொழில் திணைக்கள அலுவலகங்களிலும், நுவரெலியா, ஹட்டன், பதுளை, அப்பு த்தளை, கம்பளை, நாவலபிட்டி, கண்டி (வடக்கு) கண்டி (தெற்கு), மத்துகம, மாத்தளை, கேகாலை, அவிசாவளை, இரத்தினபுரி, பெல்மடுல்ல ஆகிய பகுதிகளில் ஆகக் குறைந்தது 10 வருடங்கள் கடமையாற்றவேண்டும். எக்காரணம் கொண்டும், இவர்களுக்கு உள்ளக மாற்றங்கள் பெற்றுக் கொடுக்கப்படமாட்டாது.

பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்படும் இப்போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டிய தகுதியுடை யோர் ஆகஸ்ட் 31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். மேற்படி போட்டிப் பரீட்சை தொடர்பான விபரங்கள் கடந்த ஜுலை 31ஆம் திகதிய அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் பார்க்கலாம்.