மட்டக் களப்பில் கடற்கோள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பெரியகல்லாறு, பழுகாமம் ஆகிய வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
பல இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இவ்விரு வைத்தியசாலைகளின் திறப்பு விழா நிகழ்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, கிழக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம். தேவராஜன், யுனிசெப் அதிகாரி, வைத்திய அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.