வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் நிலவும் தமிழ் தொழில் அலுவலர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தொழில் திணைக்களம் புதிதாக தமிழ் தொழில் அலுவலர்களை இணைத்துக்கொள்வதற்காக இந்த விண்ணப்பங்களை கோரியுள்ளது என தொழில் அமைச்சர் அதாவுத செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
இதற்கான போட்டிப் பரீட்சைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 20 தமிழ் தொழில் அலுவலர்களை சேர்த்துக்கொள்வதற் கான போட்டிப் பரீட்சைகள் தமிழ் மொழியில் மட்டுமே நடத்தப்படவுள்ளது.
போட்டிப் பரீட்சைகளில் தெரிவாகும் தொழில் அலுவ லர் வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள தொழில் திணைக்கள அலுவலகங்களிலும், நுவரெலியா, ஹட்டன், பதுளை, அப்பு த்தளை, கம்பளை, நாவலபிட்டி, கண்டி (வடக்கு) கண்டி (தெற்கு), மத்துகம, மாத்தளை, கேகாலை, அவிசாவளை, இரத்தினபுரி, பெல்மடுல்ல ஆகிய பகுதிகளில் ஆகக் குறைந்தது 10 வருடங்கள் கடமையாற்றவேண்டும். எக்காரணம் கொண்டும், இவர்களுக்கு உள்ளக மாற்றங்கள் பெற்றுக் கொடுக்கப்படமாட்டாது.
பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்படும் இப்போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டிய தகுதியுடை யோர் ஆகஸ்ட் 31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். மேற்படி போட்டிப் பரீட்சை தொடர்பான விபரங்கள் கடந்த ஜுலை 31ஆம் திகதிய அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் பார்க்கலாம்.