19

19

ஐ.நா. மனிதாபிமான விவகார பிரதிச் செயலர் ஹோம்ஸ் இன்று இலங்கை வருகை

UN_Logoஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் சேர். ஜோன்ஸ் ஹோம்ஸ் இன்று இலங்கை வருகிறார்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று வருகை தரும் இவர், இரண்டு நாட்கள் தங்கியிருப்பாரென அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் உட்பட பல முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார்.

இவரின் விஜயத்தின் போது வடக்கில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கை குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் அது குறித்து தான் பிரதி செயலாளருக்கு விளக்கமளிக்க உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

தான் நேற்று முன்தினம் (17) ஜோன் ஹோம்ஸ¤டன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியதாக வும் இரு தரப்பினரும் இணைந்து மேற்கொள்ளும் நட வடிக்கைகள் குறித்தும் அவரின் விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தற்போது புலிகளுக்கு வெள்ளையடிக்கிறார்கள் – கெஹலிய ரம்புக்வெல

kahaliya.jpgதமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அண்மைக்காலமாக வெளியிடும் கருத்துக்கள் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றனர் என்ற சந்தேகத்தை எமக்குத் தோற்றுவித்துள்ளது.  முற்றிலும் பொறுப்பற்ற வகையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கி, புலிகள் இயக்கத்துக்கு பக்கச்சார்பாக சம்பந்தன் செயற்படுகிறாரென பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். முல்லைத்தீவில் சிக்குண்டிருக்கும் பொதுமக்கள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றிக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருந்தும், அதனை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாகக் கூறுவது எந்த வகையிலும் நியாயமற்றதென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், அவர் தெரிவித்த கூற்றுகளையிட்டுத் தாம் கவலையடைவதாகத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, இதன் மூலம் சம்பந்தனின் செயற்பாடுகள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

சிவிலியன்கள் உதாசீனப்படுத்தப்படுகிறார்கள் என்பது முற்றிலும் பொறுப்பற்ற ஒரு கூற்றாகும். சிவிலியன்களைப் பாதுகாப்பாக மீட்டெடுக்கும் நடவடிக்கையிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு இல்லாவிட்டால், எஞ்சியிருக்கும் பகுதியை படையினர் எப்போதோ கைப்பற்றியிருப்பார்கள்.

பொதுமக்களுக்கான பாதுகாப்பு வலயமொன்றை முதலில் அரசாங்கமே ஏற்படுத்தியது. நிலப்பரப்பு குறுகக் குறுக கடற் பிரதேசத்தில் பாதுகாப்பு வலயம் ஏற்படுத்தப்பட்டது என்று தெரிவித்த அமைச்சர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தற்போது புலிகளுக்கு வெள்ளை யடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்றும் சம்பந்தன் புலிகளுக்காகக் குரல் எழுப்புகிறாரெனத் தயங்காமல் கூறமுடியும் என்றும் தெரிவித்தார்.

அரசாங்கம் போர் நிறுத்தமொனறை மேற்கொள்ளுமாக இருந்தால், புலிகளும் அதற்கு உடன்படுவார்கள் என்று சம்பந்தன் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. கடந்த காலங்களில் போர்நிறுத்தம் என்ற போர்வையில் புலிகள் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை முழு உலகுமே அறியும். ஆனால், சம்பந்தன் சிறுபிள்ளைத்தனமாகக் கருத்துக்களைத் தெரிவிக்கின்றார். உண்மையில் இது வெட்கத்துக்கும், வேதனைக்கும் உரிய விடயமாகும். சம்பந்தன் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக புலிகள் இயக்கத்துக்காகக் குரல்கொடுத்து வந்துள்ளார். தற்போதும் அதனைச் செய்கின்றார் என்ற அமைச்சர்

அப்பாவி மக்களை எல். ரி. ரி. ஈயினர் சுடுகிறார்கள் என்பதை ஏற்க முடியாது என்கிறார். என்ன நடக்கிறது என்பது உலகறிந்த விடயமாக இருந்தாலும், சம்பந்தன் புலிகளின் பயங்கரவாதத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றார். இதிலிருந்து அவர் புலிகளுக்காக ஆஜராகின்றார் என்பதில் சந்தேகமில்லை என்று கூறினார். சிவிலியன்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு புலிகளுக்கும் கோரிக்கை விடுக்கும் தார்மீக கடமையும், பொறுப்பும் கூட்டமைப்பினருக்கு இருக்கின்றது. எனினும், அதனைச் செய்கிறார்கள் இல்லை. பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதென்ற ஒரு கொள்கையின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுகின்றது. அதற்கு நடந்துமுடிந்த மாகாண சபைத் தேர்தலிலும் மக்கள் மீளவும் அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள்.

வரலாற்றில் முதன் முறையாக 70% மக்கள் தேர்தலில் வாக்களித்து அரசாங்கத்தின் செயற்பாடுகளை மீள உறுதிப்படுத்தியுள்ளார்கள் என்று தெரிவித்த அமைச்சர், சிவிலியன்களுக்காக 40 மெட்ரிக் தொன் உணவுப் பொருள்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை விநியோகிக்கும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளார்க ளென்றும் தெரிவித்தார்.

வன்னியில் 3,50,000 சிவிலியன்கள் இருப்பதாக சம்பந்தன் கூறுகிறார். வேறு சிலர் 250,000 என்கிறார்கள். 1,30,000 என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். என்றாலும் சம்பந்தனின் கூற்று முற்றிலும் புலிகளுக்குப் பக்கச் சார்பானதாகும் என்றும் அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.

சிவிலியன்களின் வருகை மந்தமாகவில்லை. வேகமடைந்துள்ளது. என்றாலும் படையினர் தமது இலக்கை நோக்கி மிகவும் தந்திரோபாயமான முறையில் முன்னேறி வருகின்றனர். இது மிகவும் கடினமானது. சிவிலியன்களைப் புலிகள் விடுவித்தால் பிரச்சினை தீர்ந்துவிடும். புலிகளுடன் நேரடியாகப் பார்த்துக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் கூறினார்.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ரம்புக்வெல்லவுடன் ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார, கடற்படைப் பேச்சாளர் கப்டன் டி. கே. பி. தசநாயக்க, விமானப்படையின் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ். எஸ். பீ. ரஞ்சித் குணசேகர உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்றில் விடுமுறை பெற்று நாட்டுக்கு எதிரான நடவடிக்கை
அரசு கவலை தெரிவிக்கிறதென்கிறார் அமைச்சர் தினேஷ்

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத் திலிருந்து விடுமுறை பெற்றுக் கொண்டு நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதையிட்டு அரசாங்கம் கவலை தெரிவிக்கின்றது என ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கே. சிவாஜிலிங்கத்தின் விடுமுறை தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்ட போதே அமைச்சர் தினேஷ் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டாரவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம். பி. சொலமன் சிறில், சிவாஜிலிங்கம் எம். பிக்கான மூன்று மாத விடுமுறை கோரி பிரேணையை சமர்ப்பித்தார். அத்துடன் அதற்கான அனுமதியைச் சபையில் கோரினார்.

அவ்வேளையில், குறுக்கிட்ட அமைச்சர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுமுறை வழங்குவது பற்றி எமக்கு எந்த ஆட்சேபனையுமில்லை. எனினும் இத்தகைய விடுமுறையைப்பயன்படுத்தி நாட்டிற்கும் நாட்டின் இறைமைக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதே கவலைக்குரிய விடயம் எனவும் தெரிவித்தார்.

மேல் மாகாண சபைக்கான வேட்பு மனுக்கள் இன்று முதல் ஏற்பு

election_.jpgமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று 19 ஆம் திகதி ஆரம்பமாவதுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி நன்பகல் 12.00 மணியுடன் பூர்த்தி அடையும் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மாகாண சபைக்கான 102 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி கொழும்பு மாவட்டத்திலிருந்து 43 உறுப்பினர்களும் கம்பஹா மாவட்டத்திலிருந்து 39 உறுப்பினர்களும் களுத்துறை மாவட்டத்திலிருந்து 20 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இத்தேர்தலில் வாக்களிக்க கொழும்பு மாவட்டத்தில் 15இலட்சத்து 60 ஆயிரத்து 593 பேர். கம்பஹா மாவட்டத்தில் 14 இலட்சத்து 58 ஆயிரத்து 295 பேர், களுத்துறை மாவட்டத்தில் 8 இலட்சத்து 1326 பேர் என்ற அடிப்படையில் தகுதி பெற்றுள்ளனர்.

மத்திய மாகாண சபை தேர்தல் முடிவு ஐ.தே.க. வழக்குத் தொடரத் திட்டம்

justice.jpgமத்திய மாகாண சபைத் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி வழக்குத் தொடரத்திட்டமிட்டுள்ளது. குறிப்பாக மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட உறுப்பினர்கள் பல்வேறு தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணசபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரச சொத்துகள் மிகவும் மோசமான வகையில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக கட்சி குற்றஞ் சுமத்தியுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து தேர்தல் சட்ட விதிகளுக்கு புறம்பான வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு இடையில் நேற்று விசேட சந்திப்பொன்றும் நடைபெற்றுள்ளது.

வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு 1500 தாதியர்களை அவசரமாக அனுப்புவதற்கு அரசு தீர்மானம்

sri-lanka-nurses.jpgவவுனியா வில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்க ளுக்கு ஆரோக்கிய சேவை வழங்கவென 1500 மருத்துவத் தாதியரை உடனடியாக வவுனியாவுக்கு அனுப்பி வைப்பதற்கு சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு முடிவு செய்துள்ளது.இந்தத் தாதியர் வவுனியாப் பகுதியில் அடுத்துவரும் ஆறு மாதங்களுக்கு தொடராகக் கடமையாற்ற வேண்டும் எனவும் அமைச்சு தீர்மானித்திருக்கிறது.

இதேநேரம், கொழும்பிலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளில் கடமை புரியும் எட்டு முன்னணி மருத்துவ நிபுணர்கள் அடங்கிய மருத்துவ குழுவொன்றையும் அடுத்துவரும் இரு தினங்களுக்குள் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கவும் அமைச்சு முடிவு செய்திருக்கிறது.

புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து இற்றை வரையும் 35 ஆயிரத்து 756 பொதுமக்கள் தப்பி வந்துள்ளனர். இவர்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் 1 நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதே நேரம், முல்லைத்தீவில் சிக்குண்டிருந்த 1150 நோயாளர்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கடல் மார்க்கமாக அழைத்து வந்துள்ளது. இவர்கள் திருமலை, வவுனியா, பொலன்னறுவை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மக்களுக்கான ஆரோக்கிய சேவை தொடர்பாக சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று கொழும்பில் அவசரக் கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத் தின் போதே மேற்படி முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதேவேளை, மன்னார், மதவாச்சி ஆஸ்பத்திரிகளின் ஆரோக்கிய சேவையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மருத்துவ நிபுணர்களையும் தாதியரையும் உடனடியாக அவ்வாஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக் கூட்டத்தின் போது முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் டாக்டர்கள், தாதியர் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களின் தங்குமிட மற்றும் உணவுவசதிகளைக் கவனிக்கவென மூன்று அதிகாரிகளை சுகாதாரப் பராமரிப்பு அமைச்சு இணைப்பாளராகவும் நியமித்திருக்கிறது.

நிவாரணக் கிராமங்களில் வாந்தி, வயிற்றோட்டம், வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் தோற்றம் பெறாதிருப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளை யும் மேற்கொள்ளுமாறு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

சிறுவர் துஷ்பிரயோகம்; இவ்வருடம் மாத்திரம் 97 முறைப்பாடுகள்; கடந்த வருடம் 1265

children-srilanka-01.jpgசிறுவர் துஷ்பிரயோகங்களை முறையிடும் ‘1929’ எனும் தொலைபேசி தொடர்பிலக்கத்தினூடாக இவ் வருடத்தில் மாத்திரம் 97 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. கடந்த வருடம் ஜனவரி மாதம் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரையில் 1,265 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைச் சிறார்களின் நலனைக் கருத்திற் கொண்டு 2008 ஆம் ஆண்டு ஜனவரி 29ம் திகதி அமைச்சினால் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறான சேவைகள் வெளிநாடுகளில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. சிறுவர்களை கடத்தல் மற்றும் கடத்த முயற்சித்தலுடன் தொடர்புடைய 21 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

சிறுவர் திருமணங்கள் தொடர்பாக ஆறு முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. அமைச்சினால் வழங்கப்பட்ட தரவுகளுக் கேற்ப ஆசிரியர்கள் மாணவர்களை அடித்தமைக்காக 36 முறைப்பாடுகளும் பெற்றோர், உறவினர்கள் மற்றும் வேறு சிலர் அடித்து துன்புறுத்தியமைக்காக 85 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. பாடசாலைக்கு செல்லாத சிறுவர்கள் குறித்து 114 முறைப்பாடுகளும் குடும்ப பிணக்குகள் காரணமாக தனித்து விடப்பட்ட சிறுவர்கள் தொடர்பாக 119 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
பாரபட்சம் காட்டுதல் மற்றும் பிள்ளைகளை கவனியாமை தொடர்பான சம்பவங்கள் குறித்து 120 முறைப்பாடுகளும் வந்துள்ளன.

சிறுவர்களே நேரடியாக முறைப்பாடு செய்ய வேண்டுமென்பதற்காகவே இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் பெறறோர்கள், ஆசிரியர்கள், அயலவர்கள் மற்றும் ஏனைய பெரியோர்களாலேயே பெரும்பாலான முறைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

‘முல்லைத்தீவுக்கு உணவுப் பொருட்கள் சென்றடைந்தன’

red-cross-srilanka.jpgஇலங்கை அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட உணவுப்பொருட்கள் இன்று முல்லைத்தீவை வந்தடைந்ததாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன் பல நோயாளர்கள் நேற்று (18) கப்பல் மூலம் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை இன்னமும் அங்கு உணவுப்பற்றாக்குறையும், குடிநீருக்கான தட்டுப்பாடும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றும் எறிகணை வீச்சுக்கள் நடந்து, அங்கு பலர் கொல்லப்பட்டதாகவும், 12 பேரது சடலங்கள் நேற்று புதுமாத்தளனில் உள்ள தற்காலிக மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் டாக்டர் சத்திய மூர்த்தி கூறினார்.

கடுமையான வெயில் காரணமாகவும், தூய்மையற்ற சூழ்நிலை காரணமாகவும் பல தொற்று நோய்கள் அங்கு பரவிவருவதாகவும், அவற்றை எதிர்கொள்வதற்கான மருத்துப் பொருட்களோ அல்லது ஏனைய மருத்துவ வசதிகளோ தம்மிடம் கிடையாது என்றும் அவர் கூறினார்.

வவுனியா நலன்புரி நிலையங்களில் இருப்போருக்கு உணவு விநியோக நடைமுறையில் மாற்றம்

children-srilanka-02.jpgவன்னியி லிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா நலன்புரிநிலையங்களில் உணவு விநியோகத்தில் மாற்றங்களைச் செய்ய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

30 ஆயிரம் மக்களுக்கு சமைத்த உணவே இதுவரை வழங்கப்பட்டு வந்தது. உணவு பழுதடைந்த நிலையிலும் தரமற்றதாகவும் காணப்படுவதாக கிடைத்த புகாரைத் தொடர்ந்து நலன்புரி நிலையங்களில் தலா 100 பேரைக் கொண்ட குழுக்களை அமைத்து அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டு உணவு தயாரிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. உடனடியாக இதனை நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

உலக உணவு தாபனம் உலர் உணவுப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளது. மாவட்ட செயலகம் சமையலுக்குத் தேவைப்படும் உப உணவுப் பொருட்களை வழங்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் சமையல் பாத்திரங்களையும் சமையலுக்குரிய கொட்டகைகளை அமைத்துக் கொடுக்கவும் முன்வந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் தரமானதும் சுவைமிக்க உணவுகளை பரிமாற்றம் செய்யக்கூடியதாயிருக்குமென நிவாரணப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக வழங்கப்பட்ட உணவுகள் பழுதடைந்து காணப்பட்டதாக செயலகத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

இதற்கிடையில் வவுனியா நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள மக்களுடைய விபரங்கள் அடுத்த சில தினங்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கும் வவுனியா செயலக சிரேஷ்ட உயர் அதிகாரி ஒருவர் அது தொடர்பான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

வடமாகாணத்தையும் முழுமையாக மீட்ட பின்னர் முழு நாட்டையும் அபிவிருத்தி செய்யத் திட்டம்- அமைச்சர் பந்துல குணவர்தன

பயங்கரவாதிகளிடமிருந்து வட மாகாணத்தை முழுமையாக மீட்கப்பட்ட பின்னர் முழு நாட்டையும் உரிய முறையில் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார். அண்மையில் கலேவள நகரில் நடைபெற்று கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

எமது தாய் நாடான இலங்கையில் சில பிரதேசங்களை புலிப்பயங்கரவாதிகள் பல வருடங்களாக ஆக்கிரமித்து வந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிறந்த வழிகாட்டலில் முப்படையினர் பயங்கரவாதிகளுக்கெதிராக கடுமையாக போராடி அப்பிரதேசங்களை மீட்டுள்ளன. மீட்கப்பட்ட பிரதேசங்கள் உட்பட நாடு முழுவதையும் அபிவிருத்தி செய்வதில் அரசாங்கத்திற்கு பாரிய பொறுப்புண்டு.

விவசாய உற்பத்திக்கு தம்புள்ள பிரதேசம் சிறந்ததாக விளங்கி வருகின்றது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் ஊடாக நாடு முழுவதும் விவசாய உற்பத்திப் பொருட்கள் சென்றடைகின்றன. விவசாயிகளுக்கான பல சலுகைகளை இன்றைய அரசு வழங்கியுள்ளது.

விவசாயத்துறையை மேம்படுத்தும் நோக்கிலேயே குருநாகலிருந்து தம்புள்ள ஊடாக ஹபரணவரைக்குமான ரயில் பாதையொன்றும் அமைக்கப்படவுள்ளது. பெரும்போக நெற்செய்கை இம்முறை கிழக்கு, வடமேல் மாகாணங்களில் கூடிய விளைச்சலைத் தரக்கூடியதாக உள்ளது. இதன் காரணமாக அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என்றார்.

மன்னாரில் கடற்படையின் தரைப்படைப் பிரிவொன்று பாதுகாப்பு நடவடிக்கையில்!

sri-lanka-navy.jpgமன்னார் –  முருங்கன் வீதியில் கடற்படையின் தரைப்படைப் பிரிவொன்று பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படைக்கான ஊடகப் பேச்சாளர் கெப்டன் டீ.கே.பி. தஸநாயக்க தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு கெப்டன்  மேலும் கூறியதாவது,

முல்லைத்தீவில் 7 கடல் மைல்களுக்கான பிரதேசம் யுத்த சூனிய பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில்  படகுகள் மூலம் புலிகள் தாக்குதல்களை நடத்த முடியாதளவில் கடற்படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் கிறீன் ஓஷன் கப்பல் மூலம் காயமடைந்த பொது மக்கள் மூன்று முறை திருகோணமலைத் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நேற்று 40 தொன் உணவுப் பொருட்கள் இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான வள்ளங்கள் மூலம் முல்லைத்தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. புலிகளிடமிருந்து தப்பி கடல் மார்க்கமாக வரும் பொது மக்களைக் காப்பாற்றிக் கரைசேர்க்க சிறு படகுகள் கொண்ட கற்படை உறுப்பினர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 72 மணி நேரத்தில் 77 பொது மக்கள் கடல்வழியாகத் தப்பி வந்துள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.