நாளை 27 பெப் 2009 – இலங்கைத் தூதராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்
Protest & Vigil Against slaughtering Tamil civilians and urging Sri Lankan government to:
1) Stop indiscriminate shelling on civilians, hospitals, make shift hospitals and safe zones;
2) Declare “nofire period” immediately;
3) Allow free access to the conflict zone for ICRC, UN, media, humanitarian agencies, and independent journalists;
4) Send food and medicine to those trapped in the war;
5) Bring all refugee camps and rehabilitation under the UN agencies and the ICRC and accept civil societies’ supportive role;
6) Close down internment centers and stop detaining refugees;
7) Create conducive climate for permanent ceasefire, negotiated political settlement and lasting peace;
Bring law and order in the government controlled areas. Political solution is the final answer; not war.
Date: Friday the 27th February 2009. Time: 3.00-6.00pm.
Venue: In front of Sri Lanka High commission,
No.13, Hyde Park Gardens, London, W2 2LU
Nearest Tube Station – Lancaster Gate – Central Line
“Sri Lankan forces are shelling hospitals and socalled safe zones and slaughtering the civilians there” – HRW Come and join hands to raise (y)our voice on behalf of these innocent civilians.
அரசியல் இலக்குகளை அடைவதற்கான புத்தி சாதுரியமற்ற ஆயுத வன்முறை அரசியலுக்கு நாங்கள் என்றுமே ஆதரவாளர்களாக இருந்ததில்லை. இது அழிவையும் இழப்புகளையுமே அன்றி ஆக்கபூர்வமான எதனையும் அறுவடை செய்யாது என்பது எமது அசைக்க முடியாத நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் ராணுவ வேலைமுறைகள் மூலம் மட்டுமே தமது அரசியல் இலக்குகளை அடைய முனைகின்றனர். இதே போல பேரினவாத இலங்கை அரசும் ராணுவ ஒடுக்குமுறைகள் மூலமே தமிழீழ விடுதலை புலிகளையும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் அழித்தொழிக்க முனைகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தனித் தமிழீழம் அமைப்பதற்கான அனைத்து வேலைமுறைகளும் தமிழ் மக்கள் அனைவரதும் அரசியற் குரல்களை அழித்தொழிக்கவே வழிசமைத்தது வரலாறு. அத்துடன், தமது பயங்கரவாத வேலை முறைகளால் சகல தேச நாடுகளின் ஆதரவையும் தமிழீழ விடுதலைப் புலிகள் இழந்தனர். இதன்போது, இனவாத இலங்கை அரசோ சிறுபான்மை மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் எவற்றையும் வழங்க மறுத்து காய்களை கவனமாக நகர்த்தி வருகிறது. இந்தக் கபடி ஆட்டத்தில் அனைத்தையும் இழந்து வருபவர்கள் எமது தமிழ் மக்களே.
யுத்த நிறுத்த மீறல்கள் ஏற்படத் தொடங்கியதிலிருந்தே நாம் யுத்தத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். பல புலம்பெயர் தமிழர் அமைப்புகள் போல புலிகள் பலமிழந்தபோது யுத்த நிறுத்தம் வேண்டி போராட நாம் வரவில்லை. புலிகள் பலமான ராணுவ பலத்துடன் இருக்கும்போதே NO MORE WAR என குரல் கொடுத்தவர்கள் நாங்கள்; இன்று வன்னியில் மக்கள் ஒரு சிக்கலான சூழ்நிலையில் அகப்பட்டுள்ளனர். அரசும் புலிகளும் மக்களை மையமாக வைத்தே ராணுவ உபாயங்களை செய்கின்றனர்.
புலிகள் மக்களை தங்கள் மத்தியில் வைத்திருந்து அரச ராணுவ முன்னேற்றங்களை தடுக்க முயல்கின்றனர். பொது மக்களுக்கு ஏற்படும் பாரிய உயிர் இழப்புகள், புலிகளின் நலன்களுக்கு பிரச்சாரமாகவே பயன்படுகிறது. அதேவேளை இலங்கை ராணுவமோ வைத்தியசாலை போன்ற பாதுகாப்பு வலையங்களுக்குள்ளும், மக்களின் வதிவிடங்களுக்குள்ளும் குண்டுகளை வீசி மக்களை கொன்று குவித்து தமது ராணுவ இலக்குகளை அடைய முனைகின்றனர். இரு பகுதியினரும் மக்களை பகடைக்காய்களாக பயன் படுத்துவதையே இது புலப்படுத்துகிறது. அதுமட்டுமன்றி, யுத்த பிரதேசங்களுக்கு ICRC, UN, மற்றும் சுயாதீன ஊடகங்களை அனுமதியாதது அரசின் ராணுவ அட்டூழியங்களை மறைக்க என்றே எண்ண இடமுண்டு.
புலம்பெயர் தமிழருள் ஒரு பகுதியினர் பொதுசன இழப்புகளில் எவ்வித கரிசனையுமின்றி புலிகளின் தலைமையை பாதுகாக்க போராட்டங்களை நடாத்துகின்றனர். இன்னொரு பகுதியினர் எவ்வளவு பொதுசன இழப்பினும் புலிகளின் தலைமையை அழிப்பதே அவசியம் என பொறுப்பற்று உள்ளனர்.
இந்தக் கோர யுத்தத்தில் சிக்குண்டுள்ள பொதுமக்களுக்காகவும், இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர சமாதானம் வேண்டியும் எவரும் குரல் கொடுக்க வராத தருணத்திலேயே யுத்தத்தை எப்பொழுதும் வெறுத்தவர்களாகிய நாங்கள் முன்வந்தோம்.
புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறும் மக்களுக்கு அரசும் மற்றும் சர்வதேச அமைப்புகளும் ஒரு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கவில்லை. இலங்கை அரசு, ஒரு 48 மணிநேர அவகாசம் மட்டுமே கொடுத்தபோது மக்கள் எப்படி – எந்த வழியால் – வெளியேறவேண்டுமென்று எந்த ஒரு அறிவித்தலையும் மேற்கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல, ICRC மூலம் அவர்கள் எவ்வாறு வெளியேற வேண்டும் என ஒரு நடைமுறை ஒழுங்கைச் செய்யவும் எவரும் முயலவில்லை. இதே நேரம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு சுயாதீன ஊடகங்களை அனுமதித்திருந்தால் மக்களின் உண்மை நிலைமைகளை அறிந்திருக்கலாம்.
இந்த நிலையில் நாங்கள் கோருவது வெளியேற விரும்பும் மக்களை விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டுமென்பதே !
இரு தரப்பும் அங்கு அகப்பட்டு இருக்கும் மக்களை மையமாக வைத்தே தமது ராணுவ இலக்குகளை அடைய முனைகின்றனர். எனவே யுத்தம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்பதும் எமது கோரிக்கையாகும். இது ஒரு நிரந்தர யுத்தநிறுத்தமாக மாறி நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமென்பதே எமது விருப்பம். BTF போன்ற மற்றய அமைப்புக்கள் கோருவது தற்காலிக யுத்த நிறுத்தம். இதுவே எங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு.
NO MORE WAR இதுவே எமது அடிப்படை கோசமாகும். நாங்கள் மக்களுக்கு தேவையானவைகளுக்காகவே குரல் கொடுக்கின்றோமே தவிர எந்த அரசியல் தலைமைகளுக்குமாக அல்ல !.
Forum for Peace, Democracy and Permanent Political Solution
Contact: permanentpeace@ hotmail.com
