27

27

புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பீரங்கிகளால் அவர்கள் மீதே தாக்குதல்!

wanni-operations.jpgபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட புலிகளின் கனரக பீரங்கிகள் நேற்று முதல் புலிகளுக்கெதிரான தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாக படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பிரிகேடியர் கமல் குணரத்ன தலைமையிலான இராணுவத்தின் 53ஆம் படையணியினர் சில தினங்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 130 மி.மி. கனரக பீரங்கி இரண்டைக் கண்டுபிடித்திருந்தனர். 27 கிலோ மீற்றர் சுடுதூரத்தைக் கொண்ட இந்த பீரங்கிகள் நேற்று முதல் புலிகளுக்கு எதிராக வன்னியில் குண்டுகளை ஏவி வருகின்றன.

இது தொடர்பாக களமுனையில் உள்ள படை வீரர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், வன்னிப் பிரதேசம் முழுவதையும் கைப்பற்றும் நோக்குடன் நாம் மேற்கொண்டுவரும் இந்நடவடிக்கையில் பல வெற்றிகளை ஈட்டியுள்ளோம். புலிகளின் இந்த கனரக பீரங்கிகள் கைப்பற்றப்பட்டமை வியக்கத்தக்க வெற்றியாகும். இந்தப் பீரங்கிகளினூடாக நாம் இன்று எமது எதிரியை தாக்கி வருகின்றோம் எனக்கூறினார். 

இராணுவ தலைமை அதிகாரியாக ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி – பிரிகேடியர் உதய நாணயக்கார தகவல்

uthaya_nanayakara_.jpgஇராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி நியமிக்கப்படவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தற்போது இராணுவ தலைமை அதிகாரியாகக் கடமையாற்றி வரும் மேஜர் ஜெனரல் நிசங்க விஜேசிங்க நாளையுடன் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளார். இவரது வெற்றிடத்துக்கே மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி நியமிக்கப்படவுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புப் படைப் பிரிவுக் கட்டளைத் தளபதியாக கடந்த 3 வருடங்கள் பணியாற்றிய இவர் அண்மையில் இராணுவத்தின் தலைமையகத்துடன் இணைக்கப்பட்டார் எனவும் பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இன்று கருப்புத் தினம்

court-tamilnadu.jpg
வழக்கறிஞர்களைத் தாக்கிய காவ‌ல்துறை அ‌திகா‌ரிகளை த‌ற்கா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌‌ம் செ‌ய்ய‌ வேண்டும் என்று வலியுறுத்தி 5-வது நாளாக வழக்கறிஞர்கள் இன்று உ‌ண்ணா‌விரத‌‌ப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் காவ‌ல்துறை‌யின‌ரி‌ன் தடியடியைக் கண்டித்து இன்றைய தினத்தை கருப்பு தினமாக வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் கடைபிடித்தனர். அகில இந்திய பார்கவுன்சில் தீர்மானத்தின்படி, கருப்புத் தினம் அனுசரிக்கப்பட்டது. அத‌ன்படி சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். செ‌ன்னை எழு‌ம்பூ‌ர் ‌நீ‌திம‌ன்ற வளாக‌ம் மு‌ன்பு‌ம் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் கரு‌ப்பு பே‌ட்‌ஜ் அ‌ணி‌ந்தபடி போரா‌ட்ட‌த்தில் ஈடுபட்டனர்.

சென்னை வழ‌க்க‌றிஞ‌ர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் இன்று வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் கரு‌ப்பு‌க் கொடி ஏ‌ந்‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்‌தியதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

கிழக்குப் பல்கலைக்கழக மாணவி தற்கொலை

eastern-university.jpgகிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைப்பீட மாணவி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவத்தையடுத்து கலைப் பீடத்தின் விரிவுரைகள் மற்றும் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேற்படி மாணவியின் தற்கொலை, ஏனைய மாணவர்களிடையே பதட்ட நிலையை ஏற்படுத்தியிருப்பதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.விடுதியில் தங்கியிருந்த ஏனைய மாணவர்கள் சிலர் தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலை செய்து கொண்ட மாணவியான தனபாலசிங்கம் நிரூஜா(வயது 23)வின் மரண விசாரணை இன்று மாலை மட்டக்களப்பு மஜிஸ்திரேட் முன்னிலையில் நடைபெற்றது. பிரேத பரிசோதனை நடத்திய செங்கலடி வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.சுகுமார், கழுத்தில் சுருக்கிட்டதால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.மேலும் மாணவியின் சடலம் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் பொறுப்பேற்கப்பட்டு வவுனியாவிலுள்ள உறவினர்களிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுடர் ஒளி ஆசிரியர் கைதான செய்தியை ஊடகங்கள் தவறாக வெளியிட்டு விட்டன : லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

vithyatharan.jpgநேற்று சுடர் ஒளி பத்திரிகையின் ஆசிரியர் என்.வித்தியாதரன் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பப்பட்டமை தொடர்பில் ஊடகங்கள் பலவாறு செய்திகள் வெளியிட்டிருந்தன என ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது :

” நேற்றுக் காலை 10.00 மணியளவில் சீருடையில் வந்த பொலிஸாரே சுடர் ஒளி ஆசிரியர் வித்தியாதரனை கைது செய்தனர் . இது தொடர்பில் நாம் பொலிஸ் ஊடக பேச்சாளரிடம் வினவிய போது, அவர் கடத்தப்படவில்லை விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டதாக அவர் உறுதிப்படுத்தினார். சில ஊடகங்களில் அவர் கடத்தப்பட்டு தெமட்டகொட பகுதியில், அவரை விட்டுச்சென்றதாகச் செய்தி குறிப்பிட்டிருந்தது தவறானது. கடந்த 20 ஆம் திகதி விடுதலைப்புலிகள் தலை நகரில் நடத்திய விமானத்தாக்குதல் தொடர்பிலான தொலைபேசி இலக்கங்கள் குறித்தே அவரைப் பொலிசார் கைது செய்தனர்.

தேசிய பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலான செயல்களிலிருந்து அரசு என்ற வகையில் நாட்டைக் காப்பாற்றும் பொருட்டு பல நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள நேரிடுகிறது. அந்த வகையில் வித்தியாதரன் இருக்கும் இடத்தில் பல விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. விசாரணைகளின் பின்னர்தான் அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்துவதா அல்லது இச்சம்பவத்தில் அவருக்குத் தொடர்பில்லை எனில் அதற்கேற்ற நடவடிக்கைகளை தொடர்வதா என்பதைத் தீர்மானிக்க முடியும்.

விமானப்படையினரின் விமானம் தாக்குதலிற்கு இலக்காகவில்லை- விமானப் படை பேச்சாளர்

jet-1301.jpgஇலங்கை விமானப்ப்டையினரின் எவ் விமானங்களும் இன்று விடுதலை புலிகளின் தாக்குதலிற்கு இலக்காகவில்லை என விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை விமானபடையினருக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து அவ்வாறு எவ்விதமான சம்பவங்களும் இடம்பெறவில்லை, அத்துடன் விமானப்படையினர் இன்று வான் தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை இது பொய்யான தகவல்” என அவர் தெரிவித்தார் 

வேலூர் தேமுதிக தொண்டர் தீக்குளிப்பு

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி வேலூர் மாவட்டம் வானியம்பாடியில், தேமுதிக செயலாளர் தீக்குளித்தார். படுகாயத்துடன் வேலூர் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். வாணிம்பாடி அருகே உள்ளது வள்ளிப்பட்டி கிராமம். இந்த கிராமத்தின் தேமுதிக கிளை செயலாளாராக இருப்பவர் சீனிவாசன் .இவருக்கு அம்மு என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை சம்பவத்தால் மிகவும் மனம் உடைந்து போன சீனிவாசன் இது குறித்து அடிக்கடி தனது நண்பர்களுடன் உணர்ச்சி பிளம்பாக பேசுவாராம். இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வீட்டில் இருந்த அவர் மண்ணெண்ணையை திடீரென உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் உடல் பாதி எறிந்தது. இருப்பினும் அவரை காப்பாற்றி வாணிம்பாடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு சீனிவாசன் மாற்றப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் வாணிம்பாடி சீனிவாசனிடம் தீக்குளிப்புக்கான காரணத்தை வாக்குமூலமாக பெற்றுள்ளனர்.

பொட்டம்மானும் களத்தில்! பாதுகாப்பு தரப்பினர்

pottu.jpgஎல்.ரீ.ரீ.ஈ.  அமைப்பின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் போர்க் களமுனைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புலிகளின் புலனாய்வு பிரிவின் பொறுப்பாளர் பொட்டம்மான் நேற்று முன்தினம் இரவு முதல் 58 வது படைப்பிரிவினருக்கு எதிரான போரை வழி நடத்த ஆரம்பித்துள்ளதாக புலிகளின் தொலைத் தொடர்புகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப் படையினரின் முன்நகர்வுகளைத் தடுத்து நிறுத்த புலித் தலைமைத்துவத்தினால் முடியாமல் போயுள்ள நிலையில் பொட்டம்மான் முதல் தடவையாக களத்தில் போரிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக படையினர் நம்புகின்றனர்.

கடந்த 19 வருடங்களாக நடைபெற்று வரும் யுத்த நடவடிக்கைகளில் எந்த ஒரு களமுனைக்கும் சென்றிராத பொட்டம்மான் தற்போது களமிறக்கப்பட்டுள்ளமை புலிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளமைக்கு தெளிவான சான்றாகுமென  இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எமது அமைப்பில் சிறுவர் எவரும் இல்லை

tmvp2.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் தற்போதைக்கு சிறுவர் போராளிகள் எவரும் இல்லை என அதன் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்டர்) தெரிவித்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலுள்ள சிறுவர் போராளிகளை விடுவிப்பது தொடர்பாக யுனிசெப், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டு அதற்கான வேலைத் திட்டமொன்றும் தற்போது அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் இந்த வேலைத் திட்டத்திற்குப் பொறுப்பான கிருஸ்ணானந்தராஜா இது பற்றி தெரிவிக்கையில், “எமது அமைப்பிலிருந்த சிறுவர் போராளிகள் சகலரும் விடுவிக்கப்பட்டு விட்டனர். இதனை அவர்களுடைய பெற்றோருடன் தொடர்பு கொள்வதன் மூலம் உறுதிப்படுத்த முடியும்” என்றார்.

அதே வேளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது அமைப்பிலுள்ள ஆயுதங்களைக் கையளிப்பதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதன் ஊடகப் பேச்சாளரான ஆசாத் மௌலானா தெரிவித்தார்.

தமது அமைப்பிலுள்ள உறுப்பினர்களைத் தொழிற் பயிற்சி வழங்கி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மற்றும் இராணுவ சேவைகளில் இணைய விரும்புவோர் அவர்களது தகுதிக்கேற்ப சேர்த்துக் கொள்ளப்படுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக ஊடக வள நிலையத்தில் கலைக்கூடம் திறந்து வைப்பு.

jaffna-univarsity.jpgயாழ். பல்கலைக்கழக ஊடக வள நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நன்மை கருதி தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கான ஒலிப்பதிவு கலைக்கூடம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது. ஊடகவள நிலைய பணிப்பாளர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தலைமையில் திறப்பு விழா இடம்பெற்றது.