இன்று கருப்புத் தினம்

court-tamilnadu.jpg
வழக்கறிஞர்களைத் தாக்கிய காவ‌ல்துறை அ‌திகா‌ரிகளை த‌ற்கா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌‌ம் செ‌ய்ய‌ வேண்டும் என்று வலியுறுத்தி 5-வது நாளாக வழக்கறிஞர்கள் இன்று உ‌ண்ணா‌விரத‌‌ப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் காவ‌ல்துறை‌யின‌ரி‌ன் தடியடியைக் கண்டித்து இன்றைய தினத்தை கருப்பு தினமாக வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் கடைபிடித்தனர். அகில இந்திய பார்கவுன்சில் தீர்மானத்தின்படி, கருப்புத் தினம் அனுசரிக்கப்பட்டது. அத‌ன்படி சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். செ‌ன்னை எழு‌ம்பூ‌ர் ‌நீ‌திம‌ன்ற வளாக‌ம் மு‌ன்பு‌ம் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் கரு‌ப்பு பே‌ட்‌ஜ் அ‌ணி‌ந்தபடி போரா‌ட்ட‌த்தில் ஈடுபட்டனர்.

சென்னை வழ‌க்க‌றிஞ‌ர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் இன்று வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் கரு‌ப்பு‌க் கொடி ஏ‌ந்‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்‌தியதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *