மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று 19 ஆம் திகதி ஆரம்பமாவதுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி நன்பகல் 12.00 மணியுடன் பூர்த்தி அடையும் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மாகாண சபைக்கான 102 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி கொழும்பு மாவட்டத்திலிருந்து 43 உறுப்பினர்களும் கம்பஹா மாவட்டத்திலிருந்து 39 உறுப்பினர்களும் களுத்துறை மாவட்டத்திலிருந்து 20 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இத்தேர்தலில் வாக்களிக்க கொழும்பு மாவட்டத்தில் 15இலட்சத்து 60 ஆயிரத்து 593 பேர். கம்பஹா மாவட்டத்தில் 14 இலட்சத்து 58 ஆயிரத்து 295 பேர், களுத்துறை மாவட்டத்தில் 8 இலட்சத்து 1326 பேர் என்ற அடிப்படையில் தகுதி பெற்றுள்ளனர்.