ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் சேர். ஜோன்ஸ் ஹோம்ஸ் இன்று இலங்கை வருகிறார்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று வருகை தரும் இவர், இரண்டு நாட்கள் தங்கியிருப்பாரென அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.
இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் உட்பட பல முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார்.
இவரின் விஜயத்தின் போது வடக்கில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கை குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் அது குறித்து தான் பிரதி செயலாளருக்கு விளக்கமளிக்க உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.
தான் நேற்று முன்தினம் (17) ஜோன் ஹோம்ஸ¤டன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியதாக வும் இரு தரப்பினரும் இணைந்து மேற்கொள்ளும் நட வடிக்கைகள் குறித்தும் அவரின் விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.