2009

2009

வெள்ளிக்கிழமை வரை 16 தேர்தல் வன்முறைகள் – அரச வளங்கள் பயன்படுத்தப்படுவதாக விசனம்

ballot-box.jpgதேர்தல் தொடர்பாக இதுவரை 16 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளதுடன் மத்தியமாகாணத்தில் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் தமிழ் பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் சகலரையும் கருத்தரங்கென்ற பெயரில் அழைத்து தேர்தல் பிரசாரம் நடத்தியமை தேர்தல் சட்டவிதிகளுக்கு முரணானதாகும் என்றும் சாடியுள்ளது. இது தொடர்பாக அவ் இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் கருத்து தெரிவிக்கையில்;

வடமேல் மற்றும் மத்திய மாகாணசபை கலைக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யும் திகதி டிசம்பர் 11 இல் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வரை 16 தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பெருமளவானவை நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் அரசுடன் இணைந்து போட்டியிடும் மலையகமக்கள் முன்னணியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கும் போது சிறு சிறு மோதல்கள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் நெருங்கிவரும் போது தேர்தல் சூடுபிடிக்கும் போது வன்முறைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதேவேளை, அட்டனில் ஜனநாயக மக்கள் முன்னணி மீதும் கண்டியில் ஐ.தே.கட்சி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்திலேயே வன்முறைகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன.

இதற்கு காரணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அரசுடன் உள்ள முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் மோதல்கள் இடம்பெறுவதாகும். இது இவ்வாறிருக்க அரச சொத்துகள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. கண்டிமற்றும் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பாடசாலைகளை மூடி சகல அதிபர், ஆசிரியர்களை கருத்தரங்கு என்ற பெயரில் அழைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சட்ட விதிகளுக்கு முரணானதாகும் தேர்தலை நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்த சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டுமென கோரியுள்ளார்.

ஒபாமாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை அமெரிக்க உறவு குறித்து மறுபரிசீலனை செய்வோம்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பாகிஸ்தானிடம் சாதகமான அணுகுமுறையை கடைப்பிடிக்காவிட்டால், அமெரிக்க உறவு குறித்து மறுபரிசீலனை செய்வோம் என்று அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி எச்சரித்து இருக்கிறார்.
அமெரிக்காவின் நிதி உதவி வேண்டுமானால், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் இந்த ஒத்துழைப்பின் அடிப்படையில் தான் நிதி உதவி அளிக்கப்படும் என்றும் ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஒபாமா தன் வெளிநாட்டுக் கொள்கையில் அறிவித்தார். இது வெளியானதும் பாகிஸ்தான், ஒபாமா மீது பாயத்தொடங்கி உள்ளது.

ஒபாமா தேர்தல் பிரசாரத்தின்போதே அல்கொய்தாவின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும். பாகிஸ்தான் அரசு அல்கொய்தா இலக்குகளைத் தாக்கி அழிக்காவிட்டால் பாகிஸ்தானில் உள்ள அல்கொய்தா இலக்குகளை அமெரிக்கா தாக்கி அழிக்கும் என்றும் எச்சரித்து இருந்தார். இதனால் புஷ் மாதிரி ஒபாமா இருக்க மாட்டார் என்பது பாகிஸ்தானுக்கு புரிந்துபோனது. இதனால் தான் அவர் பதவி ஏற்றபோது போட்ட கையெழுத்தின் மை கூட காய்வதற்கு முன்பு அவர் மீது தன் கோபத்தை காட்ட பாகிஸ்தான் தொடங்கி உள்ளது.

அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி பாகிஸ்தானில் உள்ள ஜியோ டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: பாகிஸ்தான் தொடர்பான விஷயங்களில் ஒபாமா பொறுமையை கடைப்பிடிப்பார் என்று பாகிஸ்தான் நம்புகிறது.  பாகிஸ்தானுடன் சாதகமான அணுகுமுறையை அவர் கடைப்பிடிக்காவிட்டால், அமெரிக்காவுடனான உறவு குறித்து நாங்கள் மறுபரிசீலனை செய்போம். புஷ் பாகிஸ் தானுக்கு சாதகமாக இருந்தார். இந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற பிரச்சினைகள் குறித்தும் அவர் கவனம் செலுத்த வேண்டும் என்றார். நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை பாகிஸ்தான் முப்படைத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் தாரிக் மஜீத் கூறுகையில், இதுபோன்ற எதற்கும் உதவாத போக்குகளை ஒபாமா கைவிடவேண்டும். தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் தன் நேர்மையை அமெரிக்காவிடம் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை என்றும் குறிப்பிட்டார்.

சீனாவில் விஷம் கலந்த பால் உற்பத்தி 2 அதிகாரிகளுக்கு மரண தண்டனை

சீன பால் நிறுவனத் தலைவர் உட்பட 2 பேருக்கு தூக்குத் தண்டனையும் பெண் அதிகாரி உட்பட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும் ஏனையவர்களுக்கு 2 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது பீஜிங் நீதிமன்றம். அதன் விபரம் வருமாறு:- சீனாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு நிறுவனங்களில் தயாரான குழந்தை கள் பால் பவுடரில் நச்சுத்தன்மை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. விஷத் தன்மை உள்ள பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிட்ட குழந்தைகள் 6 பேர் பலியானார்கள்.

2 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளின் கிட்னி, ஈரல் பழுதடைந்தது. சில குழந்தைகளுக்கு கை, கால் முடங்கியது. சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும் பால் பொருள்களுக்கு உலக நாடுகள் தடை விதித்தன.

இந்த விவகாரம் தொடர்பாக பால் நிறுவன அதிகாரிகள், விற்பனை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது பீஜிங் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதி மன்றம் பால் நிறுவனத் தலைவர் உட்பட 2 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது. பெண் அதிகாரி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மீதி உள்ளவர்களுக்கு 2 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை கடற் பகுதியில் 22 இந்திய மீனவர்கள் படகுகள் சகிதம் கைது

handcuff.jpgபருத் தித்துறை கடற் பகுதியில் இந்திய மீனவர்கள் 22 பேர் படகுகள் சகிதம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர நேற்று முன்தினம் தெரிவித்தார். இவர்கள் (22) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறி னார்.

ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரே இவர்களை கைது செய் துள்ளனர். இவர்கள் மேலதிக விசாரணைக் காக பருத்தித்துறை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறி பிரவேசித்ததன் காரணமாகவே இவர்கள் கைதாகியுள்ளனர். இவர்களின் கைது குறித்து இந்திய தூதரகத்துக்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிரதமர்கள் இருக்க அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை : காங்கிரஸ்

pm-india.jpgபிரதமர் மன்மோகன் சிங் இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் வகித்துவரும் பதவிக்கு வேறு ஒருவர் அமர்த்தப்படுவாரா என்ற கேள்விக்கு எந்த அவசியமும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இருதய அறுவை சிகிச்சை இன்று வெற்றிகரமாக நடந்தேறியுள்ள நிலையில், டெல்லியில் இன்று நடந்த செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் வீரப்ப மொய்லி, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவர் பொறுப்புகளைக் கவனிக்க பிரணாப் முகர்ஜி செயல் பிரதமராக நியமிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த மொய்லி ,இரண்டு பிரதமர்கள் இருக்க அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்றார்.

பிரதமர் நாட்டில் இல்லாதபோது அவருடைய பொறுப்புகளை மூத்த அமைச்சர் கவனிப்பதுதான் மரபாக உள்ளது.பிரதமர் முழு உடல் நலம் பெற்று இரண்டு வாரத்தில் பணிக்குத் திரும்புவார் என்று மொய்லி மேலும் தெரிவித்தார். 

புலிகள் ஏற்படத்திய மினி சுனாமி! கல்மடு குளக்கட்டு குண்டு வைத்து தகர்ப்பு! இழப்புகள் வெளிவரவில்லை!!!

vanni-kalmadu.jpgதற்போதைய யுத்தத்தின் முன்னரங்க நிலையாக இருந்த விஸ்வமடு பகுதியில் உள்ள கல்மடு குளக்கட்டு இன்று (ஜனவரி 24) காலை குண்டு வைத்து தகர்க்ப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலால் குளக்கட்டு உடைக்கப்பட்டு விஸ்வமடு, தர்மபுரம், இராமநாதபுரம் பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்து உள்ளது. ஏ35 பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் கல்மடு நெத்தலியாறு பகுதிகளில் நேற்று முதல் (ஜனவரி 23) விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் பாரிய மோதல் நடைபெற்று வந்தது. அதன் ஒரு கட்டமாக இராணுவ முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் விடுதலைப் புலிகள் கல்மடுக் குளக்கட்டை குண்டு வைத்து தகர்த்து உள்ளனர்.

பாரிய குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட கட்டுடைத்து பாய்ந்த வெள்ளத்தால் பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இப்பகுதிகளில் உள்ள மக்கள் பெரும்பாலும் ஏற்கனவே இடம்பெயர்ந்து விட்டதாகவும் இராணுவத்தினருக்கெ இந்த உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மினி சுனாமியில் இடம்பெயராத தமிழ் மக்களும் அகப்பட்டுக் கொண்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

யுத்தத்தில் பின்னடையும் விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ள மனிதாபிமானமற்ற செயல் இதுவென்றும் அவர்கள் உயிர்களுக்கு குறைந்தபட்ச மரியாதையையும் வழங்கவில்லை என்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளது.

விடுதலைப் புலிகள் இத்தாக்குதல் பற்றி உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் வேறு, புலித் தலைமையின் பிரச்சினை வேறு – டக்ளஸ் தேவானந்தா

epdp.jpgபுலித் தலைமையைக் காரணம் காட்டித் தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமை தொடர்பில் அக்கறை செலுத்தாமல் இருந்து விட வேண்டாம் எனச் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும், வட மாகாணத்திற்கான விஷேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவசங்கர் மேனனிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.  அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா பல்வேறு பங்களிப்புகளை வழங்கி வந்துள்ளதாகவும், நெருக்கமான நட்புறவு கொண்ட நாடாகவே தமிழ் பேசும் மக்கள் இந்தியாவை எண்ணியிருந்த போதிலும், தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளாகத் தம்மைக் காட்டிக் கொண்டவர்கள் இந்தியாவின் உறவுகளையும், வாய்ப்புகளையும் சரிவரப் பயன்படுத்தவில்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெளிவுற எடுத்துக் கூறினார். இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனனை நேரில் சந்தித்துக் கலந்துரையாட இலங்கைக்கான இந்தியத் தூதரகம் விடுத்திருந்த வேண்டுகோளைத் தன்னால் நிறைவேற்ற இயலாமற் போனமை தொடர்பாகத் தமது கவலையைத் தெரிவித்துக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.குடா நாட்டு மக்களின் ஏகோபித்த வேண்டுகோளின் பேரில் தான் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருப்பதாகவும், மக்களுக்குரிய தேவைகள் மிக அதிகமாக இருப்பதால் அங்கிருந்து உடனடியாகக் கொழும்பு வர இயலாமல் இருப்பதை உணர்த்திய அவர்,  தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் வேறு, புலித் தலைமையின் பிரச்சினை வேறு என்பதைத் தான் ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்துள்ளதாகவும், இந்தக் கருத்து தற்போது தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் நன்கு உணரப்பட்டுள்ளதாகவும், இதனைக் கருத்திற் கொண்டு புலித் தலைமை பலமிழந்து வரும் இத்தருணத்தில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமை தொடர்பாக இந்தியா அக்கறை செலுத்தாது இருந்து விடக் கூடாது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13வது அரசியலமைப்புச் சீர்திருத்தச் சட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இதற்கு இந்திய அரசாங்கம் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதேவேளை, தமிழ் பேசும் மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளுக்கும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் இந்தியா உதவ முன்வர வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஊழல், மோசடி நிறைந்த இடமாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை – அர்ஜுன ரணதுங்க குற்றச்சாட்டு

arjuna-ranatunga.jpgஇலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மிக மோசமான ஊழல், மோசடிகள் நிறைந்த இடமாக மாறிவிட்டதாக அரச தரப்பு எம்.பி. அர்ஜுன ரணதுங்க சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க, விளையாட்டு அமைச்சர் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அர்ஜுன ரணதுங்க மேலும் கூறியதாவது;

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை நான் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளேன். இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மிக மோசமான ஊழல் மோசடிகள் நிறைந்த இடமாக மாறிவிட்டது. நல்லவர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். மோசடிக்காரர்கள் தான் தற்போது அங்குள்ளனர். இதனால், விளையாட்டுத்துறை சீரழிக்கப்படுகின்றது. எனவே தான் நான் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியேற்பட்டது. எனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைப்பதற்கு நீதிமன்றத்தையே நான் நாட வேண்டியிருந்தது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கையும் அமெரிக்காவும் பொது நிலைப்பாடு

president.jpgபரந்துபட்ட அரசியல் விவகாரங்களில் குறிப்பாக பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவும் இலங்கையும் பொதுவான ஜனநாயக விழுமியங்களையும் கொள்கைகளையும் கொண்டிருப்பதாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் இறைமை, ஒருமைப்பாடானது பேச்சுவார்த்தைக்கு இடமற்றது என்ற அமெரிக்க அரசின் தலையாய நிலைப்பாட்டை இலங்கை மக்களும் அரசாங்கமும் மிகவும் பாராட்டுகின்றன.

ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலமும் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதன் ஊடாகவும் இலங்கையில் சமாதானத்தை வென்றெடுக்க அமெரிக்கா ஆற்றிவரும் பங்களிப்பானது எம்மை கவர்ந்துள்ளதுடன் நன்றிக்கும் உரிய தோன்றாகும்.

ஜனாதிபதி பதவிக் காலத்தை வெற்றியுடன் நிறைவேற்ற எனது வாழ்த்துகளை தெரிவிப்பதுடன் தங்களுடைய தனிப்பட்ட நலன்களுக்காகவும் வாழ்த்துகிறேன். அத்துடன் தங்கள் பதவிக்காலத்தில் இருநாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் நெருக்கமடையுமென்பது எனது உறுதியான நம்பிக்கையாகும். உலக சமாதானத்துக்காகவும் சுபிட்சத்துக்காகவும் தங்களுடன் நெருக்கமாகப் பணிபுரிவது மகிழ்ச்சியானதாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

ஐ. நா. சபைக்கான தூதராக ரைஸ் நியமனம்: செனட் ஒப்புதல்

ஐ. நா. சபைக்கான அமெரிக்க தூதராக சூசன் ரைஸ் நியமிக்கப்பட்டிருப்பதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னாள் அமெரிக்க கிளின்டன் நிர்வாகத்தில் வெளியுறவுத்துறையில் அமெரிக்க விவகாரங்களுக்கான துணை அமைச்சராக இருந்தவர் சூசன் ரைஸ். இவரை ஐ.நா.வுக்கான தூதராக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நியமித்துள்ளார்.

இந்த நியமனத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பதவியில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். போக்குவரத்து அமைச் சராக ரே லாகுத் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராக ஷான் டோனோவன் ஆகியோரது நியமனத்திற்கும் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.