2009

2009

புலிகளின் விமான எஞ்சின் மற்றும் உதிரிப்பாகங்கள் கண்டுபிடிப்பு!

புலிகளின் விமான எஞ்சின் மற்றும் உதிரிப்பாகங்கள் என்பவற்றை புதுக்குடியிருப்பு தெரவிக்குளம் பிரதேசத்திலிருந்து படையினர் இன்று காலை கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இராணுவத்தின் 57 ஆவது படையணியின் கீழ் இயங்கும் பீரங்கிப் படையினர் நடத்திய தேடுதலின்போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன. விமான இறக்கைகள், தகவல் பரிமாற்ற உபகரணங்கள, ஓடுபாதை விளக்குகள், மற்றும் விமான இயக்கம் தொடர்பான தஸ்தாவேஜுகள் என்பன கைப்பற்றபபட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

தெற்காசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி மாநாடு இன்று சீனாவில் ஆரம்பம்

anura_priyadarshana_yapa.jpgதெற்காசியப் பிராந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி மாநாடு இன்று சீனாவில் ஆரம்பமாகிறது. சார்க் பிராந்தியத்தில் வானொலி மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்தல் எனும் தொனிப் பொருளில் நடைபெறவுள்ள இம்மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதி முடிவடையும்.

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் இன்றைய முதல் நாள் அமர்வில் இலங்கை சார்பாகக் கலந்துகொள்ளும் தகல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா உரையாற்றவுள்ளார்.

சார்க் நாடுகளுடன் இணைந்து சீனா ஏற்பாடு செய்துள்ள இம்மாநாட்டில் இலங்கை சார்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் ஹட்சன் சமரசிங்கவும் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட வாக்குப்பதிவு: ஜனாதிபதி-பிரதமர் சந்திப்பு

india.jpgஜனாதிபதி பிரதீபா பட்டீலை பிரதமர் மன்மோகன்சிங் இன்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினார். இருவரும் 30 நிமிட நேரம் இந்தியா மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசியதாக ஜனாதிபதி மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஸ்பெயின் மற்றும் போலந்து நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். இந்த சுற்றுப்பயணம் பற்றியும் அவர்கள் விவாதித்ததாகவும், ஜனாதிபதி வெளிநாடு செல்லும்போது இப்படி சந்திப்பது வழக்கமான ஒன்றுதான் என்றும் அவர் கூறினார். இன்று நடைபெறும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவுடன் பாராளுமன்றத்துக்கான தேர்தல் முடிகிறது. இந்த நிலையில் ஜனாதிபதியும் பிரதமரும் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

இடம்பெயர்ந்தோர் நலன்பேண கொரியா 5 இலட்சம் டொலர் அன்பளிப்பு

vanni-manitharkal.jpgவடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு உதவும்முகமாக கொரிய அரசாங்கம் ஐந்து இலட்சம் டொலர்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது. உலக உணவுத் திட்டத்தினூடாக வழங்கப்படவுள்ள இந்த நிதி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா,  மன்னார் மற்றும் யாழ்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கையிலுள்ள கொரியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்நிதி வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தியோகப்பற்றற்ற முறையில் கூட ஆராயவில்லை தலைவரான ரஷ்ய தூதரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை

UN_Logoஐ.நா:  இலங்கை கடற்கரையானது வார இறுதியில் “இரத்தக் களரி’யை எதிர்கொண்டுள்ள போதிலும் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் பாதுகாப்பு சபையானது இலங்கை விவகாரத்தில் தன்னை அதிகளவுக்கு தூர விலத்திக் கொண்டுள்ளதாகவும் உத்தியோகப்பற்றற்ற முறையிலான பாதுகாப்புச் சபை அமர்வு கூட இலங்கை விடயம் தொடர்பாக இடம்பெறவில்லையென்றும் இந்த மாதத்திற்கான பாதுகாப்புச் சபையின் தலைவரான ஐ.நா.வுக்கான ரஷ்யத் தூதுவரோ, சீனப் பிரதிநிதியோ பங்குபற்றாமல் சில உறுப்பினர்கள் மட்டும் அறையொன்றில் சந்தித்ததாகவும் ஐ.நா.விலுள்ள இன்னர்சிற்றி பிரஸ் விமர்சித்திருக்கிறது. 

வயோதிபர்களின் 61 சடலங்களும் பூந்தோட்டத்தில் அடக்கம்

வவுனியா அரசினர் பொது வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 61 சடலங்களும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு பூந்தோட்டம் பொதுமயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்தும் சவச்சாலையில் சடலங்களை வைத்திருக்க கூடிய இடவசதியின்மையால் சடலங்கள் பழுதடைந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.

இதனால் மாவட்ட நீதிவானின் அனுமதியுடன் அனைத்து சடலங்களும் ஒரே குழியில் போடப்பட்டு அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது. நலன்புரிநிலையங்களில் இயற்கை மரணமடைந்த முதியவர்களின் சடலங்களே இவற்றில் பெரும்பாலானவையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

வட்டுக்கோட்டை பிரகடனம் மீதான வாக்கெடுப்பு புலிகளின் அரசியல் வங்குரோத்தின் அப்பட்டமான பதிவு : ரி கொன்ஸ்ரன்ரைன்

Vaddu_Resolution_in_Norwayசின்னஞ்சிறு வயதில் மண்வீடு கட்டி விளையாடிய அனுபவம் எம்மில் பலருக்கு உண்டு. மனதில் எழுகின்ற பெரிய ஆசைகளை, நிறைவேறாத ஆதங்கங்களை ஏதோ எங்களுடைய இயலுமைக்கேற்ப சிறிய அளவில் செய்து மகிழும் ஒரு கற்பனை திருப்தி தான் இது. ஏன் ஒரு சிற்றின்பம் என்று கூட சொல்லி விடலாம். தற்போது ஐரோப்பிய, ஸ்கன்டிநேவிய நாடுகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் நடாத்தப்படும் இந்த வட்டுக்கோட்டை பிரகடனம் மீதான வாக்கெடுப்பும் இச் சிறுபிள்ளைத்தன விளையாட்டிற்கு ஒப்பானதே.

கடந்த 30 வருட காலத்திற்கு மேலாக தமிழ் தேசியத்தை வலிந்து தலைமை தாங்கிய தலைவர் பிரபாகரன் எந்தவொரு காலகட்டத்திலும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பற்றியோ அல்லது அத்தீர்மானத்திற்கு அத்திவாரமாக இருந்த தமிழ் அரசியல் தலைவர்களைப் பற்றியோ பெரிதாக ஏதும் கூறிவிடவில்லை. அங்கீகரிக்கக் கூட இல்லை. அதற்கு மாறாக………. அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் போன்றவர்களை வரிசையாக சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுடத் தவறவில்லை. ஏன் அவ்வாறு சந்தர்ப்பம் கிடைத்தால் தொண்டமான் என்ன தந்தை செல்வா உட்பட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடித்தளங்களை கூட சுட்டுத்தள்ள ஒரு கணம் கூட யோசித்திருக்க மாட்டார்கள். அடிப்படை அரசியலுக்கும் குறைந்த பட்ச ஜனநாயகத்திற்கும் கூட எந்தவித இடமும் கொடுக்காத விடுதலைப் புலிகளும் அதன் ஆதரவுகளும் இன்று காலாவதியாகிப் போன வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தூக்கிவைத்து தாண்டவம் ஆடுவது கண்கெட்ட பின் நடத்துகின்ற சூரியநமஸ்காரத்திற்கு ஒப்பானது.

தனித்தமிழ் ஈழம் ஏதோ மூன்றடி தூரத்தில் இருப்பதாக இதுவரை காலமும் கதையளந்து மாவீரர் தினத்திற்கு வரிசையாக போய் விசிலடித்து வந்த இந்த புலம்பெயர்வுகள் இன்று வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று கூறி வரிசையாக நிற்பதைப் பார்க்கும் போது அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை. ஆக மொத்தமாக பார்க்கும் போது 98.95% நோர்வே மக்கள் தமிழீழத்தை ஆதரிக்கின்றனர் என்று வெளியாகிய செய்தி சதாம் உசைன் மறைவதற்கு சில மாதங்களுக்கு முன் ஈராக்கில் இடம்பெற்ற தேர்தலில் சதாம் உசைன் ஈட்டிய மாபெரும் வெற்றிக்கு ஒப்பானது. 16 ஒக்ரோபர் 2002 ல் ஈராக்கில் இடம்பெற்ற வாக்களிப்பில் சதாம் உசைன் 99.96% வாக்குகளைப் பெற்று மேலும் 7 ஆண்டுகள் ஈராக்கை ஆள மக்களின் ஆதரவை பெற்றுக் கொண்டார். இன்று மே மாதம் 10ம் திகதி 2009ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு 98.95% ஆதரவு கிடைத்துள்ளது.

சாதாரண மக்களை ஒரு புறம் விடுவோம். இந்த வாக்கெடுப்பைப் பற்றி ஐரோப்பாவில் பரவலாகச் செயற்படும் தீபம் தொலைக்காட்சி, GTV தொலைக்காட்சி, IBC வானொலி போன்ற நிலையங்கள் நிகழ்த்தும் அரசியல் பதிவேடுகள் மிகவும் கோமாளித்தனமானது. நாளுக்கு நாள் ஏதோ புதிய புதுமையான அரசியல் பரிணாமத்தை விபரிப்பதைப் போல் இவ்வாறான அரசியல் கோமாளித்தனங்களை ஒலிபரப்பி ஒரு மனிதனின் அடிப்படை அறிவுத்திறனை சோதிக்கின்றனர். ஐரோப்பிய சமூகம் இந்த தேர்தல் முடிவுகளை மிகவும் உன்னிப்பாக அவதானிக்கிறதாக கூறுகிறது லண்டனில் இருந்து ஒளிபரப்பப்படும் தீபம் தொலைக்காட்சி.

அமையவிருக்கும் தமிழ் ஈழத்தில் தன்னுடைய பெயர் மட்டும் முதன்மை வகிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் அதனை மையப்படுத்தி இடம்பெற்ற 1977ம் ஆண்டு தேர்தலையும் அத்தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டிய தலைவர்களையும் சுட்டு வீழ்த்திய இயக்கம் இன்று அழிவின் விளிம்பில் நின்று கொண்டு வரலாற்றுத் தவறுகளை திருத்த எத்தணிப்பது காலம் கடந்து வந்த ஞானம். இன்று இடம்பெறுகின்ற அரசியல் முனைப்புகள் எப்போதோ நடந்திருக்க வேண்டும். தொடர்ச்சியாக இடம்பெற்றிருக்க வேண்டும். எங்கோ இருந்து வருகின்ற கைகளுக்கும், கை மாற்றுக்களையும் அடிப்படையாக வைத்து நேச நாடுகளின் தலைவர்களைக் கூட மண்டையில் போடத் துணிந்தவர்கள் இன்று 24 மணி நேரத்தில் 3 கிலோ மீற்றரில் முடங்கிக் கிடக்கும் போது நடாத்துகின்ற இந்த அரசியல் முனைப்புக்கள் எந்தவித மாற்றத்தையும் கொண்டுவரப்போவதில்லை.

Vaddu_Resolution_UTROPஊதறுப் பத்திரிகை (UTROP):

இன்று நோர்வேயை மையப்படுத்தி இடம்பெற்ற இத்தேர்தலின் பின்னணியில் ஊதறுப் பத்திரிகை இருந்துள்ளது. இப்பத்திரிகை நோர்வேயின் பல்லின மக்களால் பல்லின மக்களின் தேவை கருதி 2001ம் ஆண்டில் இருந்து நடாத்தப்படுகின்ற பத்திரிகை. இப்பத்திரிகை இணையத்தளத்தை மையப்படுத்தி நடாத்தப்படுகின்ற ஒரு சமுதாயப் பத்திரிகை. இது நோர்வே மக்களினால் வாசிக்கப்படுகின்ற பத்திரிகை அல்ல. இது தினசரி பத்திரிகையும் அல்ல. இப்பத்திரிகை Europeans Minorities On Line (Eminol.com) என்ற ஸ்தாபனம் ஒன்றுடன் கூட்டாக ஐரோப்பிய ஒன்றிய கூட்டு பண உதவியுடன் நடாத்தப்படுகின்ற ஒரு இணையப் பத்திரிகை. இத்தாபனங்களின் முக்கிய பொறுப்பில் மஜோரன் விவேகானந்தன் என்ற இலங்கைத் தமிழர் ஒருவர் பதவி வகிக்கிறார். மஜோரன் விவேகானந்தன் நோர்வேயில் இருந்து அந்நாட்டின் அமைப்புகளுடன் இணைந்து புலிகளுக்கு சார்பான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக இந்திய கொழும்புப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.

இன்று வெளிநாடுகளில் முக்கிய ஸ்தாபனத்தில் அல்லது ஏதோ ஒரு வித்தத்தில் தனிப்பட்ட பலம் உள்ளவர்கள் அமைப்புகள் தமது பலத்தை அல்லது அழுத்தத்தை கொழும்பு அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் கொடுத்து ஏதாவது தீர்விற்கு உந்துதலைக் கொடுக்க வேண்டுமே தவிர காலாவதியாகிப் போன வெத்து அரசியல் கோசங்களுக்கு பலம்கொடுத்து பல நூற்றுக் கணக்கான மக்களைக் கொல்லவும் பல லட்சக் கணக்கான மக்களின் எதிர்காலத்தை இருட்டடிக்கவும் துணை போகக் கூடாது.

யுத்தத்தினால் வன்னிச் சிறுவர்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர் : ராதிகா குமாரசுவாமி

radhika-kumaraswamy.jpg
படையினருக்கும், புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுவரும் யுத்தம் காரணமாக வன்னிச் சிறுவர்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் சிறுவர் மற்றும் ஆயுத போராட்டங்களுக்கான விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யுத்தம் காரணமாக அப்பாவிச் சிறுவர்கள் சொல்லொணா துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை.சிறுவர்களைப் பணயமாக வைக்கவோ அல்லது ஆயுத போராட்டத்தில் அவர்களை ஈடுபடுத்தவோ எவருக்கும் அதிகாரமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்து வைத்துள்ள சிறுவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தமது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுடன் இணைக்கப்பட வேண்டும்.

அரசாங்க அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களும் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர். சர்வதேச தர நியமங்களுக்கு அமைவான வசதிகள் அகதி முகாம்களில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் எறிகணைத் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்” என்றார்.

மலேசியாவில் விடுதலையாகியுள்ள ஹிந்த்ராஃப் தலைவர் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்

_protestors_ap.jpgமலேசியத் தமிழர்கள் சம உரிமை கோரி போராட்டம் செய்துவருகின்றனர் மலேசியாவில் சிறையில் இருந்து சனிக்கிழமை விடுவிக்கப்பட்ட இந்திய சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கான போராடும் அமைப்பைச் சேர்ந்த பி.உதயகுமார், சிறுபான்மை மக்களின் உரிமைக்கான தனது போராட்டதை தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாக அமெரிக்க செயதி நிறுவனமான அசோசியோடட் பிரஸ்சுக்கு கூறியுள்ளார்.

இந்தப் போராட்டமானது தெருக்களில் நடைபெறாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் மத சுதந்திரம், வேலைவாய்பின்மை மற்றும் கல்வி வாய்ப்புக்கள் போன்ற பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்க்க தான் முயலப் போவதாக உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற தேர்தலுக்கு முன்பாக 2007 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட உதயகுமாரும் இந்து உரிமை அமைப்பான ஹிண்டாராப்பின் மற்ற நான்கு உறுப்பினர்களும், இரண்டு ஆண்டுகள் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டடிருந்தனர்.

கைது செய்யப்பட்ட இரானிய அமெரிக்க செய்தியாளர் விடுதலை

rokchana.jpgஇரானில் சிறையிடப்பட்டிருந்த இரானிய அமெரிக்க பத்திரிகையாளரான ரோக்ஸானா சபேரியின் தண்டனைக் காலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால், எட்டு ஆண்டுகளிலிருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டதை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விடுவிக்கப்பட்டதும் இரானை விட்டு வெளியேற அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறுகிறார் அவரது வழக்கறிஞர். மேலும் ஐந்து வருடங்களுக்கு அவர் இரானில் பத்திரிகையாளராக பணியாற்றக் கூடாது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரானிய அமெரிக்க உறவுகளை சீராக்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முனைந்திருந்த நேரத்தில், இந்த வழக்கு இரு நாடுகளுக்கும் இடையில், பதற்ற நிலையை அதிகரித்தது என்று நிருபர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.