தெற்காசியப் பிராந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி மாநாடு இன்று சீனாவில் ஆரம்பமாகிறது. சார்க் பிராந்தியத்தில் வானொலி மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்தல் எனும் தொனிப் பொருளில் நடைபெறவுள்ள இம்மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதி முடிவடையும்.
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் இன்றைய முதல் நாள் அமர்வில் இலங்கை சார்பாகக் கலந்துகொள்ளும் தகல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா உரையாற்றவுள்ளார்.
சார்க் நாடுகளுடன் இணைந்து சீனா ஏற்பாடு செய்துள்ள இம்மாநாட்டில் இலங்கை சார்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் ஹட்சன் சமரசிங்கவும் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.