ஜனாதிபதி பிரதீபா பட்டீலை பிரதமர் மன்மோகன்சிங் இன்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினார். இருவரும் 30 நிமிட நேரம் இந்தியா மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசியதாக ஜனாதிபதி மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஸ்பெயின் மற்றும் போலந்து நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். இந்த சுற்றுப்பயணம் பற்றியும் அவர்கள் விவாதித்ததாகவும், ஜனாதிபதி வெளிநாடு செல்லும்போது இப்படி சந்திப்பது வழக்கமான ஒன்றுதான் என்றும் அவர் கூறினார். இன்று நடைபெறும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவுடன் பாராளுமன்றத்துக்கான தேர்தல் முடிகிறது. இந்த நிலையில் ஜனாதிபதியும் பிரதமரும் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.