புலிகளின் விமான எஞ்சின் மற்றும் உதிரிப்பாகங்கள் கண்டுபிடிப்பு!

புலிகளின் விமான எஞ்சின் மற்றும் உதிரிப்பாகங்கள் என்பவற்றை புதுக்குடியிருப்பு தெரவிக்குளம் பிரதேசத்திலிருந்து படையினர் இன்று காலை கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இராணுவத்தின் 57 ஆவது படையணியின் கீழ் இயங்கும் பீரங்கிப் படையினர் நடத்திய தேடுதலின்போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன. விமான இறக்கைகள், தகவல் பரிமாற்ற உபகரணங்கள, ஓடுபாதை விளக்குகள், மற்றும் விமான இயக்கம் தொடர்பான தஸ்தாவேஜுகள் என்பன கைப்பற்றபபட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *