கிழக்கு மாகாணசபையின் கடந்த மாதக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட உத்தேச உள்ளூராட்சித் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து அச்சட்டமூலத்தின் மீதான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் கிழக்கு மாகாணசபை நேற்று செவ்வாய்க்கிழமை காலை கூடியபோது இடம்பெறவில்லை.
உத்தேச சட்டமூலத்தினை திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் மீண்டும் சமர்ப்பிக்கவிருப்பதாக அரசாங்கம் அறிவித்ததையடுத்து கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தை வாபஸ் பெறுவதாக முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அறிவித்தார்.