வவுனியா அரசினர் பொது வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 61 சடலங்களும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு பூந்தோட்டம் பொதுமயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்தும் சவச்சாலையில் சடலங்களை வைத்திருக்க கூடிய இடவசதியின்மையால் சடலங்கள் பழுதடைந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.
இதனால் மாவட்ட நீதிவானின் அனுமதியுடன் அனைத்து சடலங்களும் ஒரே குழியில் போடப்பட்டு அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது. நலன்புரிநிலையங்களில் இயற்கை மரணமடைந்த முதியவர்களின் சடலங்களே இவற்றில் பெரும்பாலானவையெனவும் தெரிவிக்கப்படுகிறது.