12

12

யாழ் நூலக எரிப்பு – தமிழக ஹிந்தி மொழித் திணிப்புடன் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் காட்சியாகிறது !

யாழ் நூலக எரிப்பு – தமிழக ஹிந்தி மொழித் திணிப்புடன் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் காட்சியாகிறது !

 

தென்னிந்திய நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி இருவரும் இலங்கையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியாவில் தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்கள் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். மும்மொழிக் கொள்கையை மறைமுக இந்தித் திணிப்பாக கருதும் தமிழ்நாட்டு மக்கள் அதனை கடுமையாக எதிர்க்கின்றனர். அந்தவகையில் மொழித் திணிப்பை எதிர்க்கும் கதைக்களத்தைக் கொண்ட பராசக்தி படம் இலங்கையிலும் படமாக்கப்படவுள்ளது.

‘சூரரைப் போற்று’ என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய பெண் இயக்குநர் சுதா கொங்கரா ‘பராசக்தி’ திரைப் படத்தையும் இயக்குகிறார்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் இடம்பெறவுள்ளது. இதில் யாழ் நூலக எரிப்பை மையப்படுத்திய காட்சிகளும் படத்தில் இடம்பெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் தேசிய சட்டத்தரணிகள்: தமிழ்த்தேசியமா? யுரீயூப்பர் கிருஷ்ணாவின் பணமா !

தமிழ் தேசிய சட்டத்தரணிகள்: தமிழ்த்தேசியமா? யுரீயூப்பர் கிருஷ்ணாவின் பணமா !

 

கள்ள உறுதி எழுதும் 10 யாழ் சட்டத்தரணிகள் விஸ்வலிங்கம் திருக்குமரன் தலைமையில் எஸ். கே. கிருஷ்ணாவை பிணை எடுக்க மல்லாகம் நீதிமன்றில் மல்லுக்கட்டினர். பாலியல் துஷ்பிரயோக குற்றவாளி பிரேமானந்தாவின் சிஷ்யன் சி.வி. விக்னேஷ்வரன் கட்சி, விஸ்வலிங்கம் மணிவண்ணனின் சகோதரனே திருக்குமரன்.

மணிவண்ணன் முன்னாள் யாழ் மேயர். அவருடைய அரசியல் குருவான சி. வி. விக்னேஷ்வரன் பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக பார் லைசன்ஸ் கொடுத்த பெருந்தகை. எனவே மணிவண்ணனின் அண்ணாவிற்கு அபலை மக்களின் வறுமையை மலினமாக படம் பிடித்து வீடியோ போட்டு சம்பாதிக்கும் எஸ். கே. கிருஷ்ணா போன்றவர்கள் கதாநாயகனாக தெரிந்ததில் ஆச்சரியம் இல்லை என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

சமூக அக்கறையுடைய சட்டத்தரணிகள் பணத்திற்காக சமூகச் சீரழிவுகளுக்கு துணை போக மாட்டார்கள். எஸ். கே. கிருஷ்ணா விவகாரத்தில் பல பெண்கள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது. தனிநபர் அந்தரங்கங்களை பொதுவெளியில் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டி பணம் சம்பாதித்த ஒரு நபரை பணத்திற்காக காப்பற்ற நீதிமன்றம் வந்த சட்டத்தரணிகளை பொதுமக்கள் கண்டிக்கின்றனர்.

எஸ். கே. கிருஷ்ணா போன்றவர்களால் போடப்படும் ஹெல்ப்பிங் வீடியோக்கள் நவீன வகையான சுரண்டல். உதவி கோரும் காணொளிகள் தோன்றும் பெரும்பாலான அப்பாவிகளுக்கு தாங்கள் பயன்படுத்தப்படுகிறோம், சுரண்டப்படுகிறோம் மற்றும் அவமானப்படுத்தப்படுகிறோம் என்பதே தெரிவது இல்லை. எஸ். கே. கிருஷ்ணாவால் பதிவேற்றப்பட்ட அனைத்து காணொளிகளும் யுரீயூப் தளத்திலிருந்து நீக்கப்பட வேண்டும். நீதிமன்றம் அதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் இளவாலை பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிகின்றன. சிரேஷ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் தலைமையிலான 10 கள்ள உறுதி எழுதும் சட்டத்தரணிகளுக்கு ஈடுகொடுத்து மல்லாகம் நீதிமன்றில் பொலிஸ் உத்தியோகத்தர் ராகவன் திறமையாக வாதாடியிருந்தார்.

யாழ்ப்பாண சட்டத்தரணிகள் வாள்வெட்டுக்குழு, போதைப் பொருள் மாபியா, மண் மற்றும் மரக் கொள்ளை மாபியா மற்றும் மருத்துவ மாபியா என அனைத்து மாபியாக்களின் பின்னாலும் நிற்கின்றார்கள். இதிலும் தமிழ்த் தேசியம் பேசி அரசியலில் ஈடுபடும் சட்டத்தரணிகள், தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காகவும் பணத்திற்காகவும் குற்றவாளிகளை காப்பாற்றுகின்றனர். சட்டத்தரணி சையிக்கிள் கட்சி சுகாஷ் வட்டுக்கோட்டை குருவி வாள்வெட்டுக்குழுவை காப்பாற்றி வருகிறார். குருவி குழு வெள்ளாள சாதியின் பெயரால் வட்டுக்கோட்டையில் நிகழ்த்தும் வன்முறைகளின் பின்னால் அவர்களுக்கு பாதுகாப்பளிப்பது சுகாஷ் சட்டத்தரணியே என்பது ஊரறிந்த ரகசியம்.

யாழ்ப்பாணத்தில் கிளீன் செய்யப்பட வேண்டிய முக்கிய பிரச்சினை வாள்வெட்டு மற்றும் வன்முறைக் கும்பல்களுக்கு முடிவு கட்டுவது தான். என்பிபி அரசாங்கத்தின் கவனத்திற்கு.

தமிழ் – முஸ்லீம் உறவுக்கு சாவு மணி அடிக்கும் பா உ அர்ச்சுனா !

தமிழ் – முஸ்லீம் உறவுக்கு சாவு மணி அடிக்கும் பா உ அர்ச்சுனா !

உளறுவாயனாகிய பா உ அர்ச்சுனா நுனிப்புல் மேய்ந்த கூகிள் அறிவாளியாக வெளியிட்ட கருத்துக்கள் தமிழ் – முஸ்லீம் உறவுநிலையை மிகக் கீழ் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. நேற்று முன் தினம் தன்னுடைய இஸ்லாமோபோபியா கருத்துக்களைத் தெரிவித்து விட்டு இறுதியில் முஸ்லீம்களை எங்களின் இரத்தம் என்று நீலிக் கண்ணீர் வடித்தார்.

நேற்று அதே அர்ச்சுனா முஸ்லீம் மக்களுக்கு எதிராக இனக் குரோதத்தை த் தூண்டும் வகையில் பாராளுமன்றத்தில் கூச்சலிட்டுள்ளார். பா உ அர்ச்சுனாவின் செயற்பாடுகள் சமூகத்தில் உள்ள மலினமான உணர்வுகளைத் தூண்டி மூன்றாம் தர அரசியல் செய்வதாகவே உள்ளது. அதன் உச்சகட்டம் நேற்று பாராளுமன்றத்தில் நடந்தேறியது.

பா உ அர்ச்சுனா ஒடுக்கப்பட்ட மக்களோடு இல்லை. அவர்களுக்கு எதிராகவே செயற்படுகின்றார். தன்னை யாழ் சைவ வேளாள ஆண் ஆதிக்கத்தின் பிரதிநிதியாகவே இன்று வரை வெளிப்படுத்தி வருகின்றார். சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிற்கவில்லை, கல்வி ரீதியில் பின் தங்கியவர்களை மதிப்பதில்லை, பிரதேச ரீதியில் யாழ் மீதான அதித மேலாதிக்க கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றார், பெண்களை இரண்டாம் தரப் பிரஜைகளாகவே கருதி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

கிருஷ்ணபுரம் கிராம சேவகரைத் தாக்கிய பாலியல் தொழிலாளி !

கிருஷ்ணபுரம் கிராம சேவகரைத் தாக்கிய பாலியல் தொழிலாளி !

 

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிருஷ்ணபுரம் கிராம சேவகர் மீது பெண்ணொருவர் படுமோசமாக கெட்டவார்த்ததைகளால் பேசித் தாக்கிய சம்பவம் மகளீர் தினமான மார்ச் 8இல் நடைபெற்றுள்ளது. தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட பெண் விநாயகபுரம் பகுதியில் நன்கு அறியப்பட்ட வசந்தா என்றும் இவர் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுபவர் என்றும் தெரியவருகின்றது. அண்மையில் கிளிநொச்சியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 15 வயதுச் சிறுமியையும் இவரே இத்தொழிலில் ஈடுபடுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கிருஷ்ணபுரம் கிராம சேவகர் அண்மையிலேயே பணிக்கு பொறுப்பேற்று வந்துள்ளார். அன்றைய தினம் வசந்தாவின் மகள் கிராம சேவகரிடம் நற்சான்றிதழ் பத்திரம் பெற வந்துள்ளார். ஆனால் காலை முதல் பலமணி நேரம்வரை கிராம சேவகர் அப்பெண் பற்றிய தகவல்களைக் கேட்டதாகவும் அதனால் ஆத்திரமடைந்த வசந்தா பாலியல் வார்த்தைப் பிரயோகங்களை அள்ளி எறிந்து கிராம சேவகரை தாக்கினார்.

தாயுடைய தொழிலை வைத்து மகளுக்கு நற்சான்றிதழ் கொடுக்க மறுத்ததையடுத்தே இப்பிரச்சினை இந்நிலைக்குச் சென்றது. நற்சான்றிதழ் பெறவந்த பெண் கொழும்பில் ஒரு கூட்டத்திற்குச் செல்வதற்கே மாலை மூன்று மணிக்கு முன் நற்சான்றிதழ் பெற வேண்டி வந்துள்ளார். அதனை வழங்க மறுத்தாலும் பரவாயில்லை ஆனால் தாயின் தொழிலை வைத்து அவருக்கு நற்சான்றிதழ் குறித்த நேரத்தில் வழங்க மறுக்கப்பட்டதே பிரச்சினையானது.

பாலியல் தொழிலில் பயன்பெறும் ஆண்கள் பொதுவாக எவ்வித பிரச்சினைக்கும் உள்ளாவதில்லை. ஆனால் அத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் அனைத்துப் பழியையும் சுமக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட ஆண்களைப் பாதுகாக்கும் சமூகம் பெண்களை போட்டு மிதிக்கின்ற நிலையே தொடர்கின்றது. இந்தப் பெண்கள் இத்தொழிலில் ஈடுபடாவிட்டால் நாட்டில் பாலியல் வன்முறைகள் மிக மோசமாகிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதற்கிடையே பா உ அர்ச்சுனா தன்னுடைய அதிகப் பிரசங்கித் தனத்தால் ரிக்ரொக்கில் பொழுதுபோக்காக இரட்டை அர்த்தத்தில் பதிவுகளையிடும் கிளிநொச்சிப் பெண்ணை பாலியல் தொழிலாளி என்று முத்திரைகுத்தி அவருடைய பெயரையும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார். பா உ அர்சுனாவே பாலியல் வக்கிரம் கொண்ட பதிவுகளை வெளியிட்டுள்ளார். தன்னுடைய தங்கை என்று சொல்லும் பெண் தொடர்பிலும் இவர் முறையாகப் பேசவில்லை. அர்ச்சுனாவின் ரிக்ரொக் நண்பர்கள் பலரும் கூட மிக மோசமான பாலியல் வக்கிரம் கொண்ட சொல்லாடல்களை பயன்படுத்துகின்றனர். அது பற்றி எந்தவொரு ஆணும் பாராளுமன்றத்தில் அல்ல வெளியேயும் வாய் திறப்பதில்லை. குரலற்ற பெண்கள் என்றதும் தூக்கித் தூக்கி அடிக்கிறார்கள்.