தமிழ் – முஸ்லீம் உறவுக்கு சாவு மணி அடிக்கும் பா உ அர்ச்சுனா !
உளறுவாயனாகிய பா உ அர்ச்சுனா நுனிப்புல் மேய்ந்த கூகிள் அறிவாளியாக வெளியிட்ட கருத்துக்கள் தமிழ் – முஸ்லீம் உறவுநிலையை மிகக் கீழ் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. நேற்று முன் தினம் தன்னுடைய இஸ்லாமோபோபியா கருத்துக்களைத் தெரிவித்து விட்டு இறுதியில் முஸ்லீம்களை எங்களின் இரத்தம் என்று நீலிக் கண்ணீர் வடித்தார்.
நேற்று அதே அர்ச்சுனா முஸ்லீம் மக்களுக்கு எதிராக இனக் குரோதத்தை த் தூண்டும் வகையில் பாராளுமன்றத்தில் கூச்சலிட்டுள்ளார். பா உ அர்ச்சுனாவின் செயற்பாடுகள் சமூகத்தில் உள்ள மலினமான உணர்வுகளைத் தூண்டி மூன்றாம் தர அரசியல் செய்வதாகவே உள்ளது. அதன் உச்சகட்டம் நேற்று பாராளுமன்றத்தில் நடந்தேறியது.
பா உ அர்ச்சுனா ஒடுக்கப்பட்ட மக்களோடு இல்லை. அவர்களுக்கு எதிராகவே செயற்படுகின்றார். தன்னை யாழ் சைவ வேளாள ஆண் ஆதிக்கத்தின் பிரதிநிதியாகவே இன்று வரை வெளிப்படுத்தி வருகின்றார். சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிற்கவில்லை, கல்வி ரீதியில் பின் தங்கியவர்களை மதிப்பதில்லை, பிரதேச ரீதியில் யாழ் மீதான அதித மேலாதிக்க கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றார், பெண்களை இரண்டாம் தரப் பிரஜைகளாகவே கருதி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.