2025

2025

இனப்படுகொலைக்கு பூகோள அரசியல் போட்டிகளே காரணம் : எம். பி. கஜேந்திரகுமார் – கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் !

இனப்படுகொலைக்கு பூகோள அரசியல் போட்டிகளே காரணம் : எம். பி. கஜேந்திரகுமார் – கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் !

 

வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலால் ஈழத் தமிழர்கள் பாதிக்கப்படுவதாக நோர்வேயின் இரகசிய புலனாய்வாளர் என அதாவது சிலிப்பர் ஷெல் என்றும் குற்றம்சாட்டப்படும் நியூட்டன் மரியநாயகத்தின் புத்தக வெளியீட்டில் எம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புலம்பியுள்ளார்.

‘பூகோள அரசியலில் வல்லரசுகளின் போட்டி உச்ச நிலையிலிருந்த போதே ஈழத் தமிழர்கள் இனப் படுகொலையானவர்கள். இந்த வல்லரசுப் போட்டியால் தான் தமிழர்கள் உரிமைகளை பெறுவதிலும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். யுத்தம் முடிந்தும் வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலை கையாள திராணியில்லாத நிலையில் ஈழத் தமிழர்கள் இருப்பதாகவும்’ கஜேந்திரகுமார் விரக்தியாக உரையாற்றியுள்ளார்.

புலிகள் அமைப்பிலிருந்து கருணாவை பிரிக்கும் சதிக்கு பிள்ளையார் சுழி போட்டு தொடக்கி வைத்தவரே நியூட்டன் மரியநாயகம் எனக் கூறப்படுகிறது. அவர் எழுதிய “காட்டிக்கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்” நூல் வெளியீட்டு விழாவிற்குப் போய் கஜேந்திரகுமார் தன்னையறியாமலேயே வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலில் தாமும் இயங்குவதை தன்னையறியாமலே வெளிப்படுத்தியுள்ளார்.

2009 ஈழப்போரின் முடிவின் பின்னரான ஈழத்தமிழர்களின் அரசறிவியல் அறிஞர்களான மு. திருநாவுக்கரசு குழுவினரின் சீனபூச்சாண்டியை காட்டி இந்தியாவை வைத்து தமிழீழம் எடுக்கலாம் என்ற ஈழத் தமிழர்களின் வெளிவிவகார கொள்கையிலிருந்து சற்று விலகி, நோர்வையின் புதிய வெளிவிவகார கொள்கையை கஜேந்திரகுமார் விதந்துரைத்துள்ளார்.

அதாவது இந்தியாவின் உள்ளக தேசிய பாதுகாப்பிற்கு, இலங்கை அரசியலில் இந்தியாவின் நலனுக்கு முன்னுரிமையுள்ளது. அதேநேரம் இந்தியாவின் போட்டி நாடான சீனா ஈழத்தமிழர்களுக்கு பொருளாதார உதவி வழங்கும் போது தமிழர்கள் அதனை ஏற்க வேண்டும். நாங்கள் யாரையும் பகைக்க கூடாது. ஆனாலும் வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலால் தமிழர்கள் பாதிக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது எனவும் மீசையை முறுக்கியுள்ளார்.

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களால் இலங்கைத் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறும் கஜேந்திரகுமார், அதற்காக இந்தியாவை பகைக்க முடியாதென்றும் கூறுகிறார். அதேநேரம் சீனாவும் கடலட்டை பண்ணைகள் மூலம் இலங்கை கடற்பரப்பில் இந்தியாவுக்கு போட்டியாக செயற்படுகின்றது என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். சொல்லப் போனால் மரியநாயகம் நியூட்டன் மற்றும் மேட்டுக்குடி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோரும் அமெரிக்கா மற்றும் நோர்வே போன்ற வல்லரசுகளின் ஏஜன்ட்களே என்கின்றனர் இராணுவ மற்றும் அரசியல் புலனாய்வு ஆய்வாளர்கள்.

 

ஈஸ்டர் தாக்குதல் ஆட்சியைக் கைப்பற்ற என்றால், ஏன் கோட்டா கைது செய்யப்படவில்லை ! புலனாய்வு அறிக்கை நம்பகத்தன்மையானதா ? இந்தியாவின் பாத்திரம் என்ன ?

ஈஸ்டர் தாக்குதல் ஆட்சியைக் கைப்பற்ற என்றால், ஏன் கோட்டா கைது செய்யப்படவில்லை ! புலனாய்வு அறிக்கை நம்பகத்தன்மையானதா ? இந்தியாவின் பாத்திரம் என்ன ?

ஈஸ்ட்ர் குண்டுத் தாக்குதலின் மையப் புள்ளியை விசாரணைகள் ஏன் நெருங்கவில்லை என்ற கேள்வியை தேசம்நெற் எழுப்பியுள்ளது. ஈஸ்ரர் குண்டுத்தாக்குதல் நடப்பதற்கு முன்னரேயே இத்தாக்குதல் திட்மிடப்பட்டுள்ளது பற்றியும் தாகுதல் எங்கு, எப்போது நடத்தப்படும் என்பது குறித்தும் தெளிவான புலனாய்வுத் தகவல்களை இந்திய உளவுத்துறை இலங்கை உளவுத்துறைக்கு வழங்கியிருந்தது. இது இந்தியத் தூதரகத்திற்குத் தெரியுமா ? அதுதொடர்பில் இந்தியத் தூதரகம் இலங்கை அரசியல் தலைமைகளுக்கு ஆழத்தங்களை வழங்கியதா ? போன்ற விடயங்கள் இதுவரை பேசாப்பொருளாகவே உள்ளது.

தாக்குதலாளிகள் தாக்குதலுக்கான அத்தனை வேலைகளையும் தென்னிந்திய மண்ணிலிருந்தே மேற்கொண்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டாலென்ன, இலங்கைக்கு கேரளக் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் வந்தாலென்ன தற்போது ஈஸ்ரர் குண்டுத் தாக்குதலாளிகளும் கூட தென்னிந்தியாவிலிருந்தே பயிற்சி பெற்று வந்தள்ளனர். இது தொடர்பில் இது வரை எந்த அரசியல் தலைமைகளும் ஜேவிபி உட்பட மௌனமாகவே உள்ளனர்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் இலங்கை இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகார நிலையில் இல்லை. அதனால் இந்தியா தானாக முன்வந்து அதன் மீதுள்ள சந்தேகங்களைக் களைவதற்கு இவ்விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இத்தாக்தல் தொடர்பில்இ தாக்குதலுக்குப் பயன்படுத்திய வெடிமருந்துகள், தற்கொலை அங்கிகள், அதற்குப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை இந்தியா வெளியிட வேண்டும். தாக்குதலாளிகளை ஏன் கைது செய்யவில்லை. ஏன் அவர்களைப் பின்தொடரவில்லை. போன்ற விடயங்களும் வெளியிடப்பட வேண்டும்.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர திசாநாயக்கவின் உத்தரவின் பேரில், ஜனாதிபதியின் செயலாளரால் இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

ஏப்ரல் 21, 2019 அன்று இலங்கையில் பல இடங்களில் 260 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புகள் குறித்து ஆழமான விசாரணைகளைத் தொடர புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அறிக்கை தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை வெளியிடுவதுடன் பல கேள்விகளையும் எழுப்புகின்றார், கொழும்பு அரசியல் வட்டாரத்தில் நன்கு அறியப்பட்ட அரசியல் சமூக செயற்பாட்டாளர் அனஸ்லி ரட்ணசிங்கம். அவர் நேற்று தேசம்நெற்றுக்கு வழங்கிய நேர்காணலில் தேசிய மக்கள் சக்தி அரசு அவர் சொன்னார், இவர் சொன்னார் என்ற கதைகளை வைத்துக்கொண்டு இந்த விசாரணைகளை நடத்த முடியாது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர்கள் குற்றப்புலனாய்வு அறிக்கைகளை கிரிக்கட் கொமன்ரிபோல் வெளியிட்டுக் கொண்டிருப்பது ஒரு சரியான விசாரணைமுறையில்லை எனவும் தெரிவித்தார்.

இலங்கைப் புலனாய்வுத்துறையினருக்குக் கூட பயிற்சி அளித்தவர்கள் இந்தியப் புலனாய்வுத்துறையினரே. இவர்களிடையேயும் ஒரு உறவு உண்டு. வன்னி யுத்தம் முடிவுக்கு வந்த பிற்பாடு புலிகளை கைது செய்தது நான்காம் மாடியில் வைத்து விசாரித்ததில் எல்லாம் இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேரடியாக ஈடுபட்டதாக நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டு தற்போது லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றனர்.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மேம்போக்காக அதனைச் சொல்லிவிட்டு அரசாங்கம் இதனை கடந்து செல்ல முடியாது. ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கியுள்ள இந்த அறிக்கைக்கு அப்பாலும் இப்பாலும் சென்று பூரண சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். சர்வதேச புலனாய்வு நிறுவனங்களின் கைகள் இதில் உள்ளதா என்பதும் இங்கு முக்கியமாக ஆராயப்பட வேண்டும்.

தற்போது இந்தியாவில் உள்ள இந்துமத அடிப்படைவாத பிஜேபி அரசு, அண்மைய ஆண்டுகளில் இலங்கையைச் சேர்ந்த சில முஸ்லீம்களை பயங்கரவாதிகள் எனக் குற்றம்சாட்டி கைதுசெய்துள்ளது. இவை எல்லாம் எழுந்தமான விடயங்களா ? இதற்கிடையேயான புள்ளிகள் இணைக்கபட வேண்டுமா என்பதை காலம் தான் வெளிப்படுத்த வேண்டும்.

பிள்ளையானின் சாரதி CID யால் அதிரடியாக கைது !

பிள்ளையானின் சாரதி CID யால் அதிரடியாக கைது !

முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதி இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.

பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியான ஜயந்தன் என்பவரே இவ்வாறு நேற்றைய தினம் ஏப்ரல் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே அவரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காதலில் தகராறு ஏற்பட்டதில் இளம் பெண் கழுத்து அறுத்து கொலை!

காதலில் தகராறு ஏற்பட்டதில் இளம் பெண் கழுத்து அறுத்து கொலை!

ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி மத்துகம, தொலஹேன பகுதியில் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர், 33 வயதுடைய மர்வின் சமரநாயக்க மாவத்தை, அங்கலவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றன. காதல் உறவு தொடர்பான தகராறு காரணமாக இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி, சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். சந்தேக நபரை கைது செய்ய மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

எலிக்காய்சல் பரவும் அபாயம்

எலிக்காய்சல் பரவும் அபாயம் !

நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். விசேடமாகப் புத்தாண்டு காலப் பகுதியில் வயல்வெளிகளுக்கு அருகில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல், தலைவலி, தசை உளைவு, மூட்டுகளில் வலி, சரும எரிச்சல் போன்றவற்றுடன் வாந்திபேதி, தசை வீக்கம் என்பனவும் எலிக்காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

கனடாவில் துப்பாக்கிச் சூட்டில் பலியான இந்திய மாணவி !

கனடாவில் துப்பாக்கிச் சூட்டில் பலியான இந்திய மாணவி !

கனடாவில் உள்ள ஒண்டாரியோ மாகாணத்தில் ஹாமில்டன் எனும் பிரதேசத்தில் ஏப்ரல் 18 அன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இந்தியப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொஹாவ்க் கல்லூரியில் படித்து வந்த ஹர்சிம்ராத் ரான்தவா எனப்படும் மாணவியே உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சம்பவத்தன்று மாணவி சவுத் பெண்ட் சாலையில் பேருந்துக்காக காத்திருந்த போது இரண்டு கார்களில் வந்த நபர்களிடையே ஏற்பட்ட மோதலில் உருவான துப்பாக்கி சண்டையில் ஒருவரை ஒருவர் தாக்கிய போது மாணவி மீது தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயம் அடைந்துள்ளார்.
மேலும் அவரை அங்குள்ளவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல்கள் குறித்து கனடாவின் காவல்துறையினர் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு இந்திய துணை தூதரகம் மிகவும் ஆழ்ந்த இரக்கம் தெரிவித்ததோடு தாம் மாணவியின் குடும்பத்துடன் தொடர்பிலிருந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவோம் என தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து தெரிவிக்கையில் கனடாவில் கடந்த சில நான்கு மாதங்களாக நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றனர். அதில் பஞ்சாபை சேர்ந்த 22 வயதை உடைய மாணவர்கள் 2024 டிசம்பர் 1 ஆம் திகதி இறந்துள்ளார்கள் , அதில் குறாஸ் சிங் எனும் முதுகலை மாணவன் கத்தியால் குத்தபட்டும் , மற்றொரு மாணவி ராஜ்புத் மரம் விழுந்தும் உயிரிழந்துள்ளார் எனவும் , டிசம்பர் 6 ஆம் திகதி ஹார்ஷன் தீப் சிங் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தோடு இந்த மாணவியும் இறந்த சம்பவம் கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு பெருமச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இனவாதத்திற்கு இடமளிக்கமாட்டோம் – ஜனாதிபதி அநுரகுமார !

இனவாதத்திற்கு இடமளிக்கமாட்டோம் – ஜனாதிபதி அநுரகுமார !

மக்களின் உரிமைகளும் கருத்துச் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல் முன்னெடுக்கப்படுவது அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். தலவாக்கலையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இனவாதத்துக்கு இடமளிக்கும் எந்த முயற்சியையும் அரசாங்கம் பொறுக்காது என்றும், சட்டத் திருத்தங்கள் தேவையாக இருந்தாலும் அதை மேற்கொண்டு இனவாதத்தை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மலையக மக்கள் இலங்கையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுபவர்கள் என தெரிவித்த ஜனாதிபதி, “200 வருடங்களாக இங்கு வாழும் மக்களை எங்கிருந்து வந்தவர்கள் எனத் தேடுவதில் அர்த்தமில்லை” என்றார். சமநீதி மற்றும் இணக்கம் கொண்ட நாடொன்றை கட்டியெழுப்புவதே இன்றைய அரசாங்கத்தின் இலக்காக உள்ளதாகவும், இனங்களுக்கிடையே மீண்டும் மோதல்கள் ஏற்படாத ஒரு நிலையை உருவாக்குவதே அவசர தேவையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

வன்னி அபிவிருத்தி மற்றும் காணி விவகாரங்கள் குறித்து வடக்கு ஆளுநருடன் ரவிகரன் சந்திப்பு !

வன்னி அபிவிருத்தி மற்றும் காணி விவகாரங்கள் குறித்து வடக்கு ஆளுநருடன் ரவிகரன் சந்திப்பு !

வன்னிப் பகுதிகளில் காணப்படும் காணி விவாதங்கள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்களை, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதனாயகனிடம் எடுத்துரைத்துள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று சனிக்கிழமை (19) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட ரவிகரன், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் நிலவும் சிக்கல்கள் குறித்து ஆளுநருடன் விரிவாக கலந்துரையாடியதாக தெரிவித்தார். குறிப்பாக, காணிவிவாதங்கள் மற்றும் வன்னி அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் ஆளுநர் கவனம் செலுத்துவதாக உறுதியளித்தார் எனவும், இந்தச் சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி அனுர பேசியது தவறா ? தமிழ் கட்சிகளின் விமர்சனத்திற்கு அமைச்சர் பதிலடி!

ஜனாதிபதி அனுர பேசியது தவறா ? தமிழ் கட்சிகளின் விமர்சனத்திற்கு அமைச்சர் பதிலடி!

ஜனாதிபதி அனுரவின் அரசியல் நிலைபாடு குறித்து விமர்சனம் தெரிவிக்க தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ் கட்சிகளுக்கு உரிமை இல்லை எனஅமைச்சர் பிமல் ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘அனுர மற்றும் அவரது தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சியினர் எப்போதும் இனவாதம் அல்லது மதவாத அரசியலை ஆதரிக்கவில்லை’ என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மேலும் வடக்கு மற்றும் கிழக்கில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அனுர ஆற்றிய உரைகள் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக தமிழ் கட்சிகள் தெரிவித்திருந்தன. இதைத் தொடர்ந்து சில தமிழ் தலைவர்கள் மற்றும் அமைப்புகள் விமர்சனங்களையும் எழுப்பினர். இதற்கிடையே அமைச்சர் பிமல், “தமிழ் மக்களை உண்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தத் தவறும் தமிழ் கட்சிகள் திசாநாயக்காவின் உரையை விமர்சிப்பது தவறானது” என தெரிவித்தார்.

அவரது உரையின் நோக்கம் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதேயாக இருந்ததாகவும், இனவாதத்திலிருந்து விலகி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான அரசியல் யோசனைகளை வழங்கும் கட்சி தான் தேசிய மக்கள் சக்தி எனவும் அவர் வலியுறுத்தினார்.

 

ஜேவிபி – என்பிபி உள்ளுராட்சியோடு நிறுத்திக் கொள்ளுமா ?

ஜேவிபி – என்பிபி உள்ளுராட்சியோடு நிறுத்திக் கொள்ளுமா ? அல்லது மாகாணசபை ஊடாக தமிழ் மக்களோடு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளுமா ?

வடமாகாண அளுநரின் ஆலோசணைக் குழு உறுப்பினர், அரசியல் மற்று சமூக செயற்பாட்டாளர் மயில்வாகனம் சூரியசேகரம் அவர்களுடனான கலந்துரையாடல்