ஜனாதிபதி அனுர பேசியது தவறா ? தமிழ் கட்சிகளின் விமர்சனத்திற்கு அமைச்சர் பதிலடி!

ஜனாதிபதி அனுர பேசியது தவறா ? தமிழ் கட்சிகளின் விமர்சனத்திற்கு அமைச்சர் பதிலடி!

ஜனாதிபதி அனுரவின் அரசியல் நிலைபாடு குறித்து விமர்சனம் தெரிவிக்க தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ் கட்சிகளுக்கு உரிமை இல்லை எனஅமைச்சர் பிமல் ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘அனுர மற்றும் அவரது தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சியினர் எப்போதும் இனவாதம் அல்லது மதவாத அரசியலை ஆதரிக்கவில்லை’ என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மேலும் வடக்கு மற்றும் கிழக்கில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அனுர ஆற்றிய உரைகள் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக தமிழ் கட்சிகள் தெரிவித்திருந்தன. இதைத் தொடர்ந்து சில தமிழ் தலைவர்கள் மற்றும் அமைப்புகள் விமர்சனங்களையும் எழுப்பினர். இதற்கிடையே அமைச்சர் பிமல், “தமிழ் மக்களை உண்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தத் தவறும் தமிழ் கட்சிகள் திசாநாயக்காவின் உரையை விமர்சிப்பது தவறானது” என தெரிவித்தார்.

அவரது உரையின் நோக்கம் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதேயாக இருந்ததாகவும், இனவாதத்திலிருந்து விலகி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான அரசியல் யோசனைகளை வழங்கும் கட்சி தான் தேசிய மக்கள் சக்தி எனவும் அவர் வலியுறுத்தினார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *