
March
March

உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் கடந்த 6 நாட்களாக போர்தொடுத்து வருகிறது. உக்ரைனை கைப்பற்றும் முயற்சிகளில் ரஷ்யா ஈடுபட்டு உள்ளது. இதற்கு உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
உக்ரைன் நகருக்குள் உள்ள ரஷ்ய இராணுவத்தினர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் உக்ரைனை சேர்ந்த விவசாயி ஒருவர் கியுவ் எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் பீரங்கி வாகனத்தை தனது டிராக்டரில் கட்டி இணைத்து இழுத்து திருடி சென்றார்.
இந்த வீடியோவை இங்கிலாந்தின் பிளைமவுத் நாடாளுமன்ற எம்.பி. ஜானி மெர்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
#BREAKING Meanwhile fighting in most major cities right now, a tractor driver steals Russian military equipment in Ukraine. Things are so unorganized on the Russian side. #Ukraine #UkraineWar #UkraineInvasion #UkraineUnderAttack pic.twitter.com/wLYlrrHVuV
— Nick OSI (@OSICnick) February 27, 2022
அந்த வீடியோவில் விவசாயி ஒருவர் தனது டிராக்டரில் பீரங்கியை கட்டி இழுத்து செல்ல அதன் பின்னால் இராணுவ வீரர் ஒருவர் ஓடும் காட்சி இடம் பெற்று உள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டு ஜானி மெர்சர் கூறுகையில், “இந்த வீடியோவின் மூலம் ரஷ்யா சிறந்த நிபுணத்துவம் பெற்ற நாடு இல்லை என்பது தெரிகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு சிறப்பாக நடப்பதாக தெரியவில்லை. உக்ரைன் நாட்டு டிராக்டர், ரஷ்யாவின் பீரங்கி வாகனத்தை திருடி உள்ளது” என்றார்.
இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை இதுவரை 46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்து உள்ளனர்.
இந்த வீடியோவை ஆஸ்திரியாவுக்கான உக்ரைன் நாட்டு தூதர் அலெக்சாண்டர் ஷெர்பாவும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார். அவர் கூறுகையில், “உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் மிகவும் பலசாலிகள்” என்றார்.
இலங்கையின் கிராமப்புறங்களில் வாழும் 100 பெண்களில் 60 பேர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என வடமத்திய மாகாணத்தில் சிறுவர் உரிமைகள் மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான பயிற்சி ஆலோசகர் கங்கானி திசாநாயக்க தெரிவித்தார்.
அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு ஆண்கள் பலியாகி வருவதே இதற்கு முக்கிய காரணம் என்கிறார்.
மகளிர் பணியகம் நடத்திய கணக்கெடுப்பின்படி, திம்புலாகலை பிரதேச செயலர் பிரிவில் மாத்திரம் சுமார் 500 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளன.
தேசிய சமாதானப் பேரவையில் செயற்படும் பொலன்னறுவை மாவட்ட சர்வமதக் குழுவிலுள்ள சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவில் உரையாற்றும் போதே திருமதி கங்கானி திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிலைமையைக் குறைக்கும் வகையில் பொலிஸில் நிறுவப்பட்டுள்ள சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் உத்தியோகத்தர்கள் அறிவைப் பெருக்கிக் கொள்வதுடன் தற்போதுள்ள போதைப்பொருள் விதிகளைக் கடுமையாக்கி குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




