27

27

“புடின் ஒரு கசாப்புக் கடைக்காரர்.”- ஜோ பைடன் கடுமையான விமர்சனம் !

உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷ்ய அதிபர் புடினை கடுமையாக விமர்சித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்து வருகிறார்.

உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு ஜோ பைடன் சென்று உள்ளார். போலந்து தலைநகர் வார்சாவில் ஜோ பைடன் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

உக்ரைனில் ரஷியாவுக்கு வெற்றி கிடைக்காது. இந்த போரில் சில நாட்களிலோ, சில மாதங்களிலோ வெற்றி பெற முடியாது. நீண்ட காலத்துக்கு தொடரக்கூடும். ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக பெரும் பொருளாதார நாடுகள் ஒன்றுபட வேண்டும். கடவுள் அருளால் இந்த மனிதர் (புடின்) ஆட்சியில் நீடிக்க கூடாது. அவர் அதிகாரத்தில் இருக்க முடியாது.

புடின் ஒரு கசாப்புக் கடைக்காரர். உக்ரைன் மீதான ரஷியாவின் ஊடுருவலை சுதந்திர உலகம் எதிர்க்கிறது என்றார்.

புடின் ஆட்சியில் நீடிக்க கூடாது என்ற ஜோ பைடன் கருத்துக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷிய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும் போது, ரஷியாவின் அதிபர், ரஷிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அதை ஜோ பைடன் முடிவு செய்யக்கூடாது என்றார்.

இந்த நிலையில் ஜோ பைடன் தெரிவித்த கருத்து தொடர்பாக வெள்ளை மாளிகை விளக்கம் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறும் போது, புதின் குறித்த அதிபர் ஜோ பைடன் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அவர் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. அதிபர் ஜோ பைடனின் கருத்தின் அர்த்தம் என்னவென்றால் புதின் தனது அண்டை நாடுகள் மீது அதிகாரத்தை செலுத்த அனுமதிக்க முடியாது. ரஷியாவில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. புதினின் அதிகாரம் குறித்தோ அல்லது ஆட்சி மாற்றம் பற்றியோ அவர் விவாதிக்கவில்லை என்றார்.

“இந்த இம்ரான் கான் ஒருபோதும் தலைவணங்க மாட்டான்.” – பாக்.பிரதமர்

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு மீது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், இம்ரான் கானுக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அக்கட்சியை சேர்ந்த 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது இம்ரான் கானுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்று அரசு கவிழும் நிலை உள்ளது. எனவே, வாக்கெடுப்பு முன்பாகவே இம்ரான் கான் பதவி விலகலாம் என்ற தகவல் பரவியது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், இம்ரான் கானின் பலத்தை காட்டும் வகையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆளும் கட்சியின் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இம்ரான் கான் பேசுகையில்,
தனது ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட பணிகளை குறிப்பிட்டார். பாகிஸ்தான் வரலாற்றில் தனது அரசாங்கம் மூன்றரை ஆண்டுகளில் செய்யாத பணிகளை, வேறு எந்த அரசாங்கமும் செய்யவில்லை என்று கூறினார்.
“ஒயிட் காலர் குற்றவாளிகளால் பாகிஸ்தான் ஏழை நாடாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் நாட்டை மூன்று எலிகள் சூறையாடி வருகின்றன.
இந்த இம்ரான் கான் ஒருபோதும் தலைவணங்க மாட்டான், தனது நாட்டை யாருக்கும் பணிய விடமாட்டான். நமது வெளியுறவுக் கொள்கை வெளியில் இருந்து கையாளப்படுகிறது. அரசாங்கத்தையும் வாழ்க்கையையும் தியாகம் செய்ய முடியும், ஆனால் குற்றவாளிகளை மன்னிக்க முடியாது’ என்றும் இம்ரான் கான் பேசினார்.

ருமேனியாவின் எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற 16 இலங்கையர்கள் கைது !

வாகனங்களுக்குள் மறைந்திருந்தவாறு ருமேனியாவின் எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற 16 இலங்கையர்கள் உட்பட 38 குடியேற்றவாசிகளை கைதுசெய்துள்ளதாக ருமேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சிறிய பேருந்துகள் டிரக் ரக வாகனங்களிற்குள் மறைந்திருந்தவாறு நட்லாக் 11 எல்லையை கடக்க முயன்றவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் இந்த வாகனங்களின் சாரதிகள் ருமேனியாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

ருமேனியாவில் பதியப்பட்ட மினிபஸ்களின் சாரதிகளாக 32 மற்றும் 42 வயதுடைய இருவர் செயற்பட்டனர். அந்த வாகனங்களை எல்லையில் சோதனையிட்டவேளை பொருட்களை வைப்பதற்காக விசேடமாக உருவாக்கப்பட்ட பகுதியிலும்,பயணிகள் அமரும் பகுதியிலும் பலர் மறைந்திருந்தது தெரியவந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களில் 16 இலங்கையர்கள் காணப்பட்டனர், இவர்கள் 22 முதல் 51 வயதுடையவர்கள் அவர்கள் தனிப்பட்ட ஆவணங்கள் மூலம் நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் எல்லைக்கு வந்த காரில் ருமேனியாவை சேர்ந்த ஒருவரும் இலங்கையை சேர்ந்தவரும் காணப்பட்டனர்,ருமேனிய பிரஜை அந்த காரை ஓட்டினார், அந்த கார் இத்தாலியில் பதிவு செய்யப்பட்டிருந்தது,அந்த காரை சோதனை செய்தவேளை முன்னர் பேருந்தில் மறைந்திருந்தவர்களின் பயணபொதிகளும் ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன என அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பின்னர் அந்த பகுதியில் டிரக்ஒன்றில் மறைந்திருந்தவாறு எல்லையை கடக்க முற்பட்ட துருக்கி சிரியா ஈராக்கை சேர்ந்த 22 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.