28

28

94வது ஒஸ்கார் விருது விழா – அறிவிப்பாளரின் முகத்தில் பளாரென அறைந்த நடிகர் வில் ஸ்மித் – காரணம் என்ன..?

ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் நிகழ்ச்சி தொகுப்பாளரின் கிறிஸ் ரோக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹொவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறும் ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவானது, இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது.

ஒஸ்கார் விருது விழா கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக இந்த ஆண்டு ஒஸ்கார் விருதுக்கு வந்திருந்தார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார்.

அவர் நடிகர் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் பற்றி நகைச்சுவையாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நடிகையின் கணவரும் ஹொலிவுட் நடிகருமான வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

பின்னர் அவர் தனது இருக்கைக்குத் திரும்பி, “என் மனைவியின் பெயரை உன் வாயிலிருந்து விலக்கிவிடு” கூச்சலிட்டார். நடிகர் வில் ஸ்மித், கிறிஸ் ராக்கை தனது மனைவியை கேலி செய்ததற்காக மேடையில் அறைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சிறந்த நடிகருக்கான ஒஸ்கர் விருதை ஹொலிவுட் நடிகர் “வில் ஸ்மித்” தட்டி சென்றுள்ளார். “கிங் ரிச்சர்ட்“ திரைப்படத்திற்காக வில் ஸ்மித்துக்கு ஒஸ்கார் விருது வழங்கப்பட்டது. ஒஸ்கர் விருது கிடைத்ததும் அப்படி நடந்து கொண்டதற்கு மன்னிப்பையும் கேட்டுக்கொண்டார் ஸ்மித்.

94 வது ஆஸ்கர் விருது விபரங்கள் – சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர்  வில் ஸ்மித்திற்கு !

நடப்பாண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர்  வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றுள்ளார்.
அமெரிக்க திரைப்படம் "டியூன்"  6 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது
சிறந்த நடிகைக்கான விருது ஜெசிகா சாஸ்டைனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
The Eyes of Tammy Faye திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது.
‘தி பவர் ஆஃப் தி டாக்’ திரைப்படத்தை இயக்கியதற்காக ஜேன் கேம்பியன் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதை வென்றார். கோடா சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றுள்ளது.
சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை ஜென்னி பீவன் வென்றுள்ளார்.
இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ் , ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர். ஆஸ்கர் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை.
டெனிஸ் வில்லெனு இயக்கிய அமெரிக்க திரைப்படமான “டியூன்”  திரைப்படம், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது என்கான்டோ திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.
ஜப்பானிய திரைப்படமான “டிரைவ் மை கார்” சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது.
சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை ‘தி குயின் ஆப் பேஸ்கட்பால்’ திரைப்படம் வென்றது.
கோடா திரைப்படத்தில் நடித்த  ட்ராய் கோட்சூர் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.
வெஸ்ட் சைடு ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த அரியானா டிபோஸ் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்றுள்ளார்.

மீண்டும் முடங்கும் சீனா !

சீனாவில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து உள்ளது. தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க சினாவில் மீண்டும் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதிக்கத்தொடங்கி உள்ளது. ஏற்கனவே பல இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஷாங்காய் உள்பட பல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதையொட்டி கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அங்குள்ள கேளிக்கை விடுதிகள் மூடப்பட்டு உள்ளன.

ஏற்கனவே அங்குள்ள டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா மூடப்பட்டு உள்ளது குறிபிடத்தக்கது. பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்தியாவிடமிருந்து மேலுமொரு பெரிய தொகையை கடனாக கோரியுள்ள இலங்கை !

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை கோரியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது அயல்நாட்டின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள வேளையில் இந்த தகவலை இரண்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனவரி 2020 முதல் அந்நியசெலாவணி கையிருப்பு 70 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதால் நாணயபெறுமதியை இறக்கத்தை மேற்கொண்டுள்ள இலங்கை அத்தியாவசிய உணவுகள் மற்றும் எரிபொருளிற்கு தேவையான டொலரை பெற்றுக்கொள்வதில் பெரும்நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன் சர்வதேச நிதி வழங்குநர்களிடம் உதவிகளை கோருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

அரிசி கோதுமைமா தானியங்கள் சீனி மருந்துபோன்றவற்றை இறக்குமதி செய்வதற்கான புதிய கடனுக்கான வேண்டுகோளை பூர்த்திசெய்ய தயார் என இந்தியா தெரிவித்துள்ளது என இந்த விடயத்தை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை இந்தியாவிடமிருந்து மேலதிகமாக ஒரு பில்லியன் டொலரை கோரியுள்ளது என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே இந்தியா உறுதியளித்துள்ள ஒரு பில்லியன் டொலர் கடனுதவிக்கு மேலதிகமாக இந்த உதவி கோரப்பட்டுள்ளது என அவை தெரிவித்துள்ளன. பேச்சுவார்த்தைகள் இரகசியமாக இடம்பெறுவதால் தகவலை தெரிவித்தவர்கள் தங்களை அடையாளம் காட்டமுன்வரவில்லை. இலங்கையின் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களும் இந்திய வெளிவிவகார அமைச்சும் இது குறித்த கேள்விகளிற்கு பதிலளிக்கவில்லை.

முக்கிய இறக்குமதிகளிற்கு செலுத்துவதற்காக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் டொலரை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்த மாதம் புதுடில்லியில் கைச்சாத்திட்டார். ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையின் நிதியமைச்சரை திங்கள்கிழமை சந்தித்தார்.
பொருளாதார நிலைமைகுறித்தும் இந்தியாவின் ஆதரவும் குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன் என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.