15

15

சீனாவில் ஒரே நாளில் ஐயாயிரம் பேருக்கு கொரோனா – மீண்டும் தொடங்கும் கொரோனா !

உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்டது சீனாவில்தான். அங்குள்ள வுகான் நகரில் உருவான இந்த வைரஸ் உலகெங்கும் பரவி, ஒவ்வொரு அலையாக உலக நாடுகளை கதிகலங்க வைத்து வருகிறது.
கொரோனாவின் முதல் அலையின்போதே நாடு தழுவிய முழு ஊரடங்கு, பயணக் கட்டுப்பாடு, அதிகளவு பரிசோதனை உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சீன அரசு நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது.
இதற்கிடையே, புதிய வகை கொரோனாவான ஒமிக்ரோன் தாக்கத்தால் சீனாவில் கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இதனால் சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 3,393 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், சீனாவில் நேற்று புதிதாக 5,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
2 ஆண்டாக கொரோனா தாக்கம் இல்லாத நிலையில், கடந்த சில தினங்களாக நோய் பாதிப்பு அதிகரித்து வருவது அந்நாட்டினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

“ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம்.” – ஜோ பைடன் அறிவிப்பால் பரபரப்பு !

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

ரஷ்யப் படைக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம் என அவரது டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உக்ரைனிலிருந்து வெளியேறும் அகதிகள் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் உக்ரைனிலுள்ள மக்களுக்கு பணம், உணவு மற்றும் பிற மனிதாபிமான உதவிகளை அமெரிக்கா வழங்கும் எனவும் பைடன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான யுத்தம் 19 ஆவது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த யுத்தத்தை நிறுத்த வேண்டும் என பல நாடுகளும் வலியுறுத்தும் நிலையில்  இரு நாடுகளின் அதிபர்கள் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.

மேலும் ரஷ்யா போர் தொடர்பில் குறிப்பிடுகின்ற போது  மேற்குலக நாடுகளே ஆயுதங்களை வழங்கி போரின் நிலையை இன்னமும் தீவிரமாக்குவதாக குற்றஞ்சாட்டியிருந்ததது.  அத்துடன் ரஷ்யாவிற்கு எதிராக போரிடுவதற்கு ஐரோப்பிய நட்பு நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.