உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
ரஷ்யப் படைக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம் என அவரது டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உக்ரைனிலிருந்து வெளியேறும் அகதிகள் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் உக்ரைனிலுள்ள மக்களுக்கு பணம், உணவு மற்றும் பிற மனிதாபிமான உதவிகளை அமெரிக்கா வழங்கும் எனவும் பைடன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான யுத்தம் 19 ஆவது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த யுத்தத்தை நிறுத்த வேண்டும் என பல நாடுகளும் வலியுறுத்தும் நிலையில் இரு நாடுகளின் அதிபர்கள் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.
மேலும் ரஷ்யா போர் தொடர்பில் குறிப்பிடுகின்ற போது மேற்குலக நாடுகளே ஆயுதங்களை வழங்கி போரின் நிலையை இன்னமும் தீவிரமாக்குவதாக குற்றஞ்சாட்டியிருந்ததது. அத்துடன் ரஷ்யாவிற்கு எதிராக போரிடுவதற்கு ஐரோப்பிய நட்பு நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.