94வது ஒஸ்கார் விருது விழா – அறிவிப்பாளரின் முகத்தில் பளாரென அறைந்த நடிகர் வில் ஸ்மித் – காரணம் என்ன..?

ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் நிகழ்ச்சி தொகுப்பாளரின் கிறிஸ் ரோக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹொவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறும் ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவானது, இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது.

ஒஸ்கார் விருது விழா கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக இந்த ஆண்டு ஒஸ்கார் விருதுக்கு வந்திருந்தார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார்.

அவர் நடிகர் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் பற்றி நகைச்சுவையாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நடிகையின் கணவரும் ஹொலிவுட் நடிகருமான வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

பின்னர் அவர் தனது இருக்கைக்குத் திரும்பி, “என் மனைவியின் பெயரை உன் வாயிலிருந்து விலக்கிவிடு” கூச்சலிட்டார். நடிகர் வில் ஸ்மித், கிறிஸ் ராக்கை தனது மனைவியை கேலி செய்ததற்காக மேடையில் அறைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சிறந்த நடிகருக்கான ஒஸ்கர் விருதை ஹொலிவுட் நடிகர் “வில் ஸ்மித்” தட்டி சென்றுள்ளார். “கிங் ரிச்சர்ட்“ திரைப்படத்திற்காக வில் ஸ்மித்துக்கு ஒஸ்கார் விருது வழங்கப்பட்டது. ஒஸ்கர் விருது கிடைத்ததும் அப்படி நடந்து கொண்டதற்கு மன்னிப்பையும் கேட்டுக்கொண்டார் ஸ்மித்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *