இலங்கையின் கிராமப்புறங்களில் வாழும் 100 பெண்களில் 60 பேர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என வடமத்திய மாகாணத்தில் சிறுவர் உரிமைகள் மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான பயிற்சி ஆலோசகர் கங்கானி திசாநாயக்க தெரிவித்தார்.
அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு ஆண்கள் பலியாகி வருவதே இதற்கு முக்கிய காரணம் என்கிறார்.
மகளிர் பணியகம் நடத்திய கணக்கெடுப்பின்படி, திம்புலாகலை பிரதேச செயலர் பிரிவில் மாத்திரம் சுமார் 500 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளன.
தேசிய சமாதானப் பேரவையில் செயற்படும் பொலன்னறுவை மாவட்ட சர்வமதக் குழுவிலுள்ள சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவில் உரையாற்றும் போதே திருமதி கங்கானி திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிலைமையைக் குறைக்கும் வகையில் பொலிஸில் நிறுவப்பட்டுள்ள சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் உத்தியோகத்தர்கள் அறிவைப் பெருக்கிக் கொள்வதுடன் தற்போதுள்ள போதைப்பொருள் விதிகளைக் கடுமையாக்கி குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.