January

January

சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திக்க ஏற்பாடு

தேர்தல் ஆணையாளரின் அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள சர்வதேச கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் 21 ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்திக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட மட்டத்திலான முகவர்களையும் சந்திக்கவுள்ளனர்.

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், வேட்பாளர்களின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கவென சர்வதேச கண்காணிப்புக் குழுக்களுக்கு தேர்தல் ஆணையாளர் அழைப்பு விடுத்திருந்தார்.

ஐக்கிய நாடுகளின் அமைப்பு, பொது நலவாய நாடுகளின் சபை, ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகள் சங்கம் என்பவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இவற்றில் ஐக்கிய நாடுகளின் அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இலங்கைக்கு வரமுடியாது என்பதை காரணங்களுடன் தெரிவித்துள்ளன. இரண்டு சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும் தேர்தல் முடிவின் பின்னர் 28ம் திகதி தங்களது அறிக்கையை தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கும் என்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

பொதுநலவாய நாடுகளின் சபை மற்றும் ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகளின் சங்கம் என்பன இந்தத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.

பொதுநலவாய நாடுகளின் சபையின் கண்காணிப்புக் குழுக்கள், அந்த நிறுவனங்களினாலேயே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டமொன்றின் கீழ் காண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளன. ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகளின் ஒன்றியம் தேர்தல்கள் திணை க்களத்தின் அனுசரணையுடன் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும்.

இடம்பெயர்ந்தவர்கள் உட்பட சகலருக்கும் வாக்காளர் அட்டைகள் விநியோகிப்பு -தபால் மாஅதிபர் அறிவிப்பு

election_box.jpgஇடம் பெயர்ந்தவர்கள் உட்பட நாடு முழுவதிலும் உள்ள வாக்காளர்களுக்கு, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நேற்று (21) வரை 93% நிறைவு செய்யப்பட்டுள்ளதாகத் தபால் மாஅதிபர் எம். கே. பி. திசாநாயக்க தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின்படி சகல வாக்காளர்களுக்கும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு ள்ளதாகக் கூறிய தபால் மா அதிபர், முகவரி தவறின் காரணமாக வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், அருகிலுள்ள தபாலகங்களுக்குச் சென்று தமது வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்று தபால் மாஅதிபர் கூறினார்.

2008ஆம் ஆண்டில் வாக்காளர்களாகத் தம்மைப் பதிவு செய்து கொள்ளாதவர்களுக்கு வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறவில்லையாயின் அதற்கு தபால் திணைக்களம் பொறுப்பல்ல. அது வாக்காளர்களின் தவறாகும். வாக்காளர் பட்டியலில் உள்ளவாறு கிடைக்கப்பெற்ற அனைத்து வாக்காளர் அட்டைகளும் விநியோகிக்கப்படும் என்றும் தபால் மாஅதிபர் கூறினார்.

அதேவேளை வட மாகாணத்திற்கு வாக்காளர் அட்டைகள் தாமதமாகக் கிடைக்கப்பெற்றதால், அவற்றை விநியோகிக்கும் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்ததாக வட மாகாண பிரதித் தபால் மாஅதிபர் வி. குமரகுரு தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் 100% நிறைவடைந்துள்ளன. நிவாரணக் கிராமங்களில் தபாலகங்கள் அமைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு நேரடியாக வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டதாகவும் குமரகுரு தெரிவித்தார். அதேநேரம் மக்கள் மீளக்குடியேறியுள்ள பகுதிகளிலும் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

கிறிஸ்மஸ்தீவில் 11 இலங்கையர் கைது

அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகள் தடுப்பு முகாமான கிறிஸ்மஸ் தீவில் குழப்பம் விளைவித்ததாக 11 இலங்கை அகதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பேரில் மொத்தமாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் 21க்கும் 36க்கும் இடைப்பட்ட வயதை கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆயுத கையாளல், குழப்பம் விளைவித்தல் மற்றும் தாக்குதல்களை மேற்கொண்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு அகதிகள் பராமரிப்பு குழுமத்தின் உறுப்பினரான இயன் ரின்டோல் கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும் இந்த மோதலில் முகாமுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும்: 07- புன்னியாமீன்

sri-lanka-election-07.jpgதொடர்ச்சி…

தமிழீழ விடுதலைப் புலிகளின் முடிவைத் தேடித்தந்த  ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தல்

இலங்கையில் 3வது ஜனாதிபதித் தேர்தல் 1994.11.09ஆந் திகதி நடைபெற்றது.  இத்தேர்தலில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரிக்கா குமாரதுங்கவின் பதவிக்காலம் 2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆந் திகதி முடிவடைவதற்கு இருந்தது.  இந்நிலையில்தான் 4வது ஜனாதிபதித் தேர்தலை 1999.12.21ஆந் திகதி தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக அரசியல் அமைப்பின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கிணங்க முன்கூட்டியே நடத்தினார். இத்தேர்தலிலும் வெற்றியீட்டிய சந்திரிக்கா குமாரதுங்க 199.12.22ஆந் திகதி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

2005ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் சந்திரிக்கா குமாரதுங்க 4வது ஜனாதிபதித் தேர்தலின்போது முன்கூட்டி தேர்தலை நடாத்தியதால் தமது எஞ்சிய பதவிக் காலத்துக்கும் ஜனாதிபதியாக இருக்க வேண்டுமென்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். இதன்படி சந்திரிக்கா குமாரதுங்கவின் முதலாவது பதவிக்காலம் 6 ஆண்டுகாலம் முடிவடையும் நேரத்திலும் (2000 நவம்பர்) அவர் மீளவும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். இந்நிலையில் 2006ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் இலங்கையில் ஒரு அரசியல் பிரளயத்தை ஏற்படுத்தியது. இதனடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலமாக வெளிக்கிளம்பிய ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தல் 2006 இல் தேர்தல் என்ற எதிர்பார்ப்பை முறியடித்துக் கொண்டு 2005 இலேயே இடம்பெற வேண்டியதாயிற்று. இதன்படி 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 02 ஆம் பிரிவின் கீழான கட்டளைத் தேர்தல்கள் ஆணையாளரால் 2005.09.19 ஆம் திகதிய 1411/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.

21.11.1999 இல் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் 21.11.2005 இல் முடிவடையவிருந்ததால் அரசியலமைப்பின் உறுப்புரை 31(3) இற்கு அமைய வேட்பு மனுக்களைக் கையேற்றல், 07.10.2005 இல் மேற்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு 17.11.2005 இல் நடத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.

சந்திரிக்கா குமாரதுங்க இரு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்ததினால் அரசியலமைப்பு விதிகளின்படி அவருக்கு இத்தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் பிரதான அரசாங்கக் கட்சியின் சார்பில் பிரதமராகவிருந்த மகிந்த ராஜபக்ஸ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பிலும் பிரதான எதிர்க்கட்சியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் களமிறங்கினர். இலங்கையில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தமான சுனாமிப் பேரலை ஏற்பட்ட பின் ஓராண்டுக்குள் நடைபெற்ற தேர்தலாக இது அமைந்திருந்தது. இத்தேர்தல் சூழ்நிலையில் 2002ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட சமதான ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டேயிருந்தன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பாதுகாப்பற்ற பகுதிகளின் வாக்கெடுப்பு மாவட்டங்கள் சார்பாக பாதுகாப்பான பகுதிகளில் நிறுவப்பட்ட 294 மொத்த வாக்கெடுப்பு நிலையங்களில் 102 வாக்கெடுப்பு நிலையங்கள் முகமாலையிலும் 88 வாக்கெடுப்பு நிலையங்கள் ஓமந்தையிலும் நிறுவப்பட்டன. அவ்வாக்கெடுப்பு நிலையங்களில் 1,89,918 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தபோதிலும் அவர்களில் ஒரு வாக்காளர் மாத்திரமே வாக்களித்தார் என்பது ஒரு வரலாற்றுத் தகவலாகும். இத்தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒருசதவீதமான வாக்காளர்கள் மாத்திரமே வாக்களித்திருந்தனர்.

இத்தேர்தலின்போது வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகமாகக் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வடக்கு, கிழக்கு மாகாண வாக்காளர்கள் குறிப்பாக வட மாகாண வாக்காளர் இத்தேர்தலில் வாக்களிக்காத நிலையானது மஹிந்தவின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. மொத்தமாக நாடெங்கிலும் அமைக்கப் பெற்றிருந்த 10,486 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்கெடுப்பின்போது 98,26,908 பேர் வாக்களித்திருந்தனர். 10,9,869 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 73.77% வீதமானோர் வாக்குகளைப் பிரயோகித்திருந்தனர். இதன்படி செல்லுபடியான தொண்ணூற்றி ஏழு இலட்சத்து பதினேழாயிரத்து முப்பத்தொன்பது வாக்குகளும் மகிந்த ராஜபக்ஸ  பெற்றுக்கொண்ட வாக்குகள் 48,87,152. அதற்கிணங்க மொத்த செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்கு மேலதிகமாக 28,632 வாக்குகளைப் பெற்ற மகிந்த ராஜபக்ஸ அவர்கள் இலங்கை ஜனநாயக சோஸலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக 1419/11 ஆம் இலக்க 2005.11.18 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரமானது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆந் திகதி பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதுடன் இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முற்றுப்பெற்றது. பலவிதமான சர்வதேச நெருக்கடிகள் ஏற்பட்டபோதிலும்கூட, மஹிந்த ராஜபக்ஸ விடாப்பிடியாக யுத்தத்தை இடைநிறுத்தாது வெற்றிகொண்டு இந்த யுத்தத்தின் வெற்றி நாயகனாக வரலாற்றில் பதிவானார். சிலநேரங்களில் 2005 ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்களின் வாக்குரிமை உரிய முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பின் தற்போதைய நிலைமையில் பல மாற்றங்கள் உருவாகியிருக்கலாம். இந்த அடிப்படையில் விடுதலைப் புலிகளின் முடிவைத் தேடித்தந்த ஒரு தேர்தலாகவே இத்தேர்தல் அமைகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் 2005 –

மாவட்டத் தேர்தல் முடிவுகள்

மேல்மாகாணம்

கொழும்பு மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
534,431     (47.96%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)   569,627(54.12%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2,624  (0.21%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  2,057  (0.18 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  E.L.P.P.  2,174  (0.20 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 775  (0.07%)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  519  (0.05%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 422 (0.04%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   601  (0.05%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.)  398  (0.14%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி S.E.P   410 (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி S.P.F    131     (0.01%)
திரு. எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி U.N.A.F  74    (0.01%)

செல்லுபடியான வாக்குகள்  1,114,250 (96.86 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  12,879  (1.14 %)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 1,127,129 (76.75%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 1,468,537

கம்பஹா மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  596,698   (51.78%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 481,764  (44.23%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P)  2,790 (0.26%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)   2,371  (0.22 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  E.L.P.P.   1,983  (0.18 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 856 (0.08 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)   631  (0.06%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  570 (0.05%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   609 (0.06 %)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A). 418   (0.04%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   343  (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)  157    (0.01 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )   8 (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  1,089,277  (98.94%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  11,724  (1.06%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 1,101,001  (80.71%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 1,364,180

களுத்துறை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  341,693 (55.48%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 266,013 (43.00 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2,623  (0.43%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)   1,921  (0.31 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  E.L.P.P.          865  (0.14 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 614  (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  468 (0.08%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  422  (0.07%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   424  (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  D.U.A.  339  (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  215  (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  165   (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  68    (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  615,860  (98.95%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  6,517   (1.05%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 622,377  (81.43%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 764,305 

மத்திய மாகாணம்

கண்டி மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
315,672 (44.30%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  387,150  (54.33%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2,775  (0.39%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 2,589  (0.36 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).  1091 (0.15 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)  717  (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  487 (0.07%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  584 (0.08%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   529 (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A.)  372  (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   307  (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )   219  (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி U. N.A.F   228   (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  712,620  (98.64%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  9,817  (1.36%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 722,437  (79.65%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 907,038  

மாத்தளை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
120,533 (48.09%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 125,937 (50.25%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1212 (0.48%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 1217 (0.49 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.) .     342  (0.14%)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 360  (0.14 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  224  (0.09%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  228 (0.09%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   208  (0.08%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.)  141  (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   95  (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  76   (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   51  (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  250,620 (98.51%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  3,785  (1.49%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 254,405  (79.04%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 311,876 

நுவரெலியா மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
99,550 (27.97%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)   250,428  (70.37%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2,622  (0.74%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1,465  (0.41 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)  376  (0.11 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 287 (0.08 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  202  (0.06%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  199 (0.06%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   215  (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A.)  164  (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி S.E.P   146  (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி S.P.F   137     (0.04 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி U. N.A.F   84   (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  355,825  (98.50%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  5,410   (1.50%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 361,285  (80.78%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 447,225

தென்மாகாணம்

காலி மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  317,233  (58.11%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 239,320 (40.26%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2244  (0.38%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  173  (0.37 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)  892 (0.15 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 524  (0.09 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 517  (0.09%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 469(0.08%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   388 (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A.)  305  (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P  ) 221  (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  136   (0.02 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  65   (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  594,468  (99.08%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  5,540    (0.92%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 600,008  (81.94%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 732,289

மாத்தறை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)   279,411   (61.85%)
ரணில் விக்கிரமசிங்க  – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 165,837  (36.71 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1687 (0.37%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1877 (0.42 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   554  (0.12 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 524 (0.12 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  451  (0.10%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)   451  (0.10%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   207  (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A).    320  (0.07%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  140  (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   119     (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   74   (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  451,722  (99.11%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  4,077  (0.89%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 455,799  (80.96%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 562,987

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  202,918 (63.43%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 112,712  (35.23%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1066  (0.33%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1217  (0.38 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).  430  (0.13 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 370 (0.12 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  352  (0.11%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  290  (0.09%)
அநுர டி சில்வா ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   162  (0.05%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  D.U.A.  196  (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   84  (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  100   (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   28   (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  319,925  (99.09%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  2,928   (0.91%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 322,853  (81.41%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 396,595

வடமாகாணம்

யாழ்ப்பாண மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
1967  (25.00%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  5523  (70.20 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 72  (0.92%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  34  (0.43 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).   120  (1.53 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 24  (0.31 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  12  (0.15%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)   15  (0.19%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   21  (0.27%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A). 
31  (0.39%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   29  (0.37%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  16    (0.20 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   4   (0.05 %)

செல்லுபடியான வாக்குகள்  7,868   (92.30%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  656   (7.70%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 8,524  (1.21%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 701,968

வன்னி மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
17,197  (20.36%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)   65,798   (77.89%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 520  (0.62%)
அசோகா சுரவீர –  தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  286  (0.34 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).          115  (0.14 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)
133  (0.16 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  71  (0.08%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)   68  (0.08%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி  (U.L.F)   62  (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A. ) 107  (0.13%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   69  (0.08%)
திரு. நெல்சன் பெரேரா –  இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  27     (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  23    (0.03 %)

செல்லுபடியான வாக்குகள்  84,476   (98.37%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  1,388   (1.63%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 85,874  (34.30%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 250,386

கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
28,836  (18.87%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)   121,514  (79.51%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 892  (0.58%)
அசோகா சுரவீர –  தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 578  (0.38 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).   225  (0.15 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 149  (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  124  (0.08%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  43  (0.03%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   142  (0.09%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A.)  153  (0.10%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  104  (0.07%)
நெல்சன் பெரேரா –  இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  59  (0.04 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  18   (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  152,837  (98.85%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  1,778   (1.15%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 145,615  (48.51%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 348,728 

திகாமடுல்லை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
122,329 (42.88%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  159,198  (55.81 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1,091  (0.38%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 1,072  (0.38 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).   331  (0.38 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 188  (0.07 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)   297  (0.07%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  134  (0.05%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)  203  (0.03%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A).  215  (0.08%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   82  (0.03%)
நெல்சன் பெரேரா –  இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   89      (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   38    (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  285,267  (98.98%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  2,941   (1.02%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 288,208  (72.70%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 396453

திருகோணமலை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
55,680  (37.04%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  92,197  (61.33 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 792  (0.53%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  588  (0.37 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   276  (0.18 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 157  (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  157 (0.10%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  71 (0.05%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   132  (0.09%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A).  165  (0.11%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   67  (0.04%)
நெல்சன் பெரேரா –  இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)    56      (0.04 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F  ) 26    (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  150,334  (98.63%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  2,094   (1.37%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 152,428  (63.84%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 238,755

வடமேல் மாகாணம்

குருநாகல் மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  468,597  (52.26%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 418,809 (46.72 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2357  (0.26%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 2369  (0.26 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   1142  (0.13 %)
சமில் ஜெயநெத்தி புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 695  (0.08 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  613  (0.07%)
திரு. விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)   566(0.06%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)    524 (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A).  363  (0.04%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   255  (0.03%)
நெல்சன் பெரேரா –  இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   187      (0.02 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)  110    (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  896,497   (99.07%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  8,458    (1.94%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 904,955  (80.41%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 1,124,076

புத்தளம் மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
160,686 (48.14%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 169,264 (50.71 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1063  (0.32%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 811  (0.02 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   502  (0.15 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 287  (0.09 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)   292  (0.09%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  203 (0.06%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   214  (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A).  183  (0.05%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  175  (0.01%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)    72    (0.02 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   31    (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  333,883  (98.94%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  3,536  (1.05%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 337,319  (71.68%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 470,604

வடமத்திய மாகாணம்

அநுராதபுரம் மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  231,040 (55.08%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 182,956 (43.62 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1,378  (0.33%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1,448  (0.35 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).  478  (0.11 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 569  (0.14 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 128  (0.10%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  367 (0.09%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   261 (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A. )207  (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   115  (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   115   (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   72    (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  419,434  (98.92%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  4,563  (1.08%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 423,997  (78.98%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 536,808

பொலநறுவை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  110,499 (52.61%)
ரணில் விக்கிரமசிங்க  – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  97,142  (46.25 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P)  589  (0.28%) அசோகா சுரவீர –  தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  683  (0.33 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   226  (0.11 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)  226 (0.11 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  221 (0.11%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)   119  (0.06%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   141 (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.)  81  (0.04%)   
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   31  (0.01%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )   48    (0.02 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  24   (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  210,030  (99.06%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  2,002  (0.94%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 21,232  (80.43%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 263,609

ஊவா மாகாணம்

பதுளை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
192,734  (45.18%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)   226,582  (53.11%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P)
2,327  (0.55%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1,990  (0.47 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.) 614  (0.14 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 468 (0.11 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  101 (0.09%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  322  (0.08%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   363  (0.09%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A).  239 (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  224  (0.05%)
நெல்சன் பெரேரா இலங்கை முன்னேற்ற முன்னணி  (S.P.F )  217     (0.05 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  118   (0.03 %)

செல்லுபடியான வாக்குகள்  426,599  (98.43%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  6,825   (1.57%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 433,424  981.29%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 533,163

மொனராகலை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  126,094 (56.94%)
ரணில் விக்கிரமசிங்க  – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  92,244  (41.65 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 673  (0.30%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  943  (0.43 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   239  (0.11 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 295  (0.13 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  286 (0.13%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  200 (0.09%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   133 (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.)  124  (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   102  (0.05%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   73   (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  44   (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  241,450  (98.82%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  2,636  (1.18%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 224,086  (81.46%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 276,109 

சப்ரகமுவ மாகாணம்

இரத்தினபுரி மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  294,260 (53.01%)
ரணில் விக்கிரமசிங்க  – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 252,838 (45.55 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P)  2220  (0.10%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)   2122  (0.38 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)  795  (0.14 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)  645  (0.12 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  557 (0.10%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  496 (0.09%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   393 (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.) 
330  (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   334  (0.02%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)    206 (0.01 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   78  (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  555,074  (99.02%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  5,510   (0.98%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 560,584  (83.89%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 668,217

கேகாலை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  293,184 (51.02%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 223,483 (47.62 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P)  1804  (0.38%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1457  (0.31 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)  707  (0.15 %)
சமில் ஜெயநெத்தி புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)  437 (0.09 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  375 (0.08%)
விமல் கீகனகே ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  400 (0.09%)
அநுர டி சில்வா ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   355  (0.08%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.) 231   (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   152     (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)    117  (0.07 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   71    (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  468,773  (98.99%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  4,795   (1.01%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 473,564  (81.19%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 583,282

ஜனாதிபதித் தேர்தல் 2005

இறுதித் தேர்தல் முடிவுகள்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  4,887,152     (50.29%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 4,706,366 (48.43 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 35,425   (0.36%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  31,238    (0.32 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.) 14,458   (0.15 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)  9,296   (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  7,685   (0.08%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 6,639    (0.07%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   6,357   (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A.)  5,082  (0.05%) விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  3,500   (0.04%)
நெல்சன் பெரேரா இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   2,525 (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி U. N.A.F   1,316    (0.01%)

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 13,327,160 
அளிக்கப்பட்ட வாக்குகள் 9,826,778
செல்லுபடியான வாக்குகள் 9,717,039
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 109,739

இம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)
   4,858,520

குறைந்தபட்ச வாக்குகளை விட மஹிந்த ராஜபக்ஸ  அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்    
28,632

இரண்டாம் இடத்தைப் பெற்ற ரணில் விக்கிரமசிங்க அவர்களை விட மஹிந்த ராஜபக்ஸ  அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்
180,786

மஸ்ஜிதுகளை வாக்கு கேட்கும் மேடைகளாக்க வேண்டாம் – நியாஸ் மெளலவி

niyas.jpg‘மஸ்ஜி துகளை தேர்தல் வாக்குக் கேட்கும் மேடைகளாக ஆக்க வேண்டாம்’ என  நியாஸ் மெளலவி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-

மஸ்ஜிதுகள் புனிதமானவை. அது இறை இல்லம். தேர்தல் காலங்களில் தான் விரும்பிய கட்சிகளை தெரிவு செய்து வாக்களிப்பது ஜனநாயக உரிமை. விரும்பிய அபேட்சகர் ஒருவருக்கு எமது ஒத்துழைப்பை வழங்குவதும் ஜனநாயக உரிமை மாத்திரமல்ல அது மனித உரிமையும் கூட. ‘மஸ்ஜிதுகளை தேர்தல் வாக்குக் கேட்கும் மேடைகளாக ஆக்க வேண்டாம்’ என ஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் நியாஸ் மெளலவி தெரிவித்தார்.

2010 ஜனவரி 27ல் இலங்கையின் 6வது ஜனாதிபதி ஜெனரல் சரத் பொன்சேகாவா? : த ஜெயபாலன்

MR_Postersஜனவரி 26ல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இரு பிரதான வேட்பாளர்களில் எவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என்பது பல லட்ச ரூபாய்களுக்கான கேள்வியாக உள்ளது. இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவது தற்போது ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.  2005 நவம்பர் தேர்தலுக்குப் பின்னான சில மாதங்களுக்கு உள்ளாகவே மாவிலாறு அணையைத் தடுத்து வலிந்த யுத்தத்திற்கு அழைப்பு விட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் 2009 நடுப்பகுதியில் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் 2010 தேர்தல் இடம்பெறுகின்றது. 1982 முதல் 2005 வரை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் மக்கள் வாக்களித்த முறையைப் பார்க்கும் போது பின்வரும் விடயங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

1982_P_Election_SL , 1988_P_Election_SL , 1994_P_Election_SL , 1999_P_Election_SL , 2005_P_Election_SL

1. யாழ்ப்பாண மக்கள் பெரும்பாலும் ஜனாதிபதித் தேர்தலில் மிகக்குறைந்த வீதமாகவே வாக்களித்து உள்ளனர். 1982 தேர்தலிலேயே ஆகக் கூடுதலாக 50 வீதத்திற்கும் சற்றுக் குறைவாக வாக்களித்து உள்ளனர். அதன் பின்னர் இடம்பெற்ற தேர்தல்களில் 1988, 1999 தேர்தல்களில் 20 வீதமானவர்களே வாக்களித்து உள்ளனர். 1994ல் இடம்பெற்ற தேர்தலில் 3 வீதமும் 2005 தேர்தலில் ஒரு வீதமானவர்களுமே வாக்களித்துள்ளனர்.

1982  தேர்தல் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றை நிர்ணயித்த மிக முக்கியமான காலத்தில் நடந்த மிக முக்கியமான ஜனாதிபதித் தேர்தல். மிக மோசமான இனவாதத்தை கக்கிக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அளிக்கப்பட்ட வாக்குகளில் 20 வீதத்தை தக்க வைத்துக் கொண்டது. 35 வீதமான வாக்குகள் சிறிலங்கா சுதத்திரக் கட்சிக்கும் 40 வீதமான வாக்குகள் தமிழ் கொங்கிரஸிற்கும் கிடைத்தது.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இலங்கையில் திட்டமிட்ட முறையில் இன ஒடுக்குமுறையை ஸ்தாபனமயப்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சி. சிங்களவனின் முதுகுத் தோலில் செருப்புத் தைப்போம் போன்ற வீர வசனங்களைக் கக்கிக் கொண்டிருந்த தமிழீழக் கோரிக்கையை முன் வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணி அன்றும் ஐக்கிய தேசியக் கட்சியை நிராகரிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்ளவில்லை. மாறாகத் தேர்தல் முடிவுவரை மௌனமாக இருந்துவிட்டு தேர்தலுக்கு அண்மையாக விடுமுறையில் வெளிநாடு சென்றனர். தேர்தலுக்கு முதல் நாள் வெளியான பத்திரிகைச் செய்தி தமிழர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதாக தெரிவித்தது. தேர்தலுக்குப் பின் நாடு திரும்பியவர்கள் அத்தவறான செய்திக்கு எதிராக சட்டநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எடுக்கவும் முடியவில்லை. ஏனென்றால் அதுவொரு திட்டமிட்ட தவறு.

2. தமிழ் பகுதிகளில் வாக்களிக்கப்பட்ட முறையைப் பார்க்கையில் யாழ்ப்பாணத்தில் வாக்களிக்கப்பட்ட முறை வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளில் வாக்களிக்கப்பட்ட முறையுடன் ஒத்திருக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தல்களில் யாழ்ப்பாண மக்கள் கூடுதலாக ஆதரவு தெரிவித்த வேட்பாளருக்கு அல்லாமல் அடுத்த வேட்பாளருக்கே வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளில் வாக்களிக்கப்பட்டு உள்ளது.

1991 வரை யாழ்ப்பாணம், வன்னி தேர்தல் தொகுதிகள் சிறுதொகையான முஸ்லீம் மக்களைக் கொண்டிருந்தாலும் அவற்றை ஒற்றையினச் சமூகமாகவே பார்க்க முடியும். மட்டக்களப்பு தமிழ் – முஸ்லீம் சமூகங்களைக் கொண்ட ஒரு தேர்தல் தொகுதியாக உள்ளது. திருகோணமலை பெரும்பாலும் தமிழ் – முஸ்லீம் – சிங்கள இனங்கள் வாழுகின்ற மூவினங்களின் தேர்தல் தொகுதியாக உள்ளது. திகாமடுல்ல சிங்கள – முஸ்லீம் சமூகங்களைக் கொண்ட தேர்தல் தொகுதியாக உள்ளது. இவ்வகையான இனப்பரம்பலின் பின்னணியிலேயே ஜனாதிபதித் தேர்தல் நோக்கப்படும்.

யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கு, கிழக்கின் ஏனைய பகுதிகளில் மக்கள் வேறுபட்ட முறையில் வாக்களித்து இருப்பது ஓரளவு அப்பகுதிகளின் இனப்பரம்பலுடன் தொடர்புபட்டு இருந்தாலும் குறிப்பாக வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்கள் யாழ்ப்பாணத்தைப் போன்ற தமிழ் மக்கள் செல்வாக்குள்ள தேர்தல் தொகுதிகள். அப்படி இருந்தும் யாழ்ப்பாணத்தில் வாக்களிக்கப்பட்ட முறையில் இருந்து வன்னி மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் வாக்களிக்கப்பட்ட முறை வேறுபட்டு இருப்பது மாறுபட்ட அரசியல் பார்வையை வெளிப்படுத்தி உள்ளது.

1982, 1988, 1999 ஆகிய மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் 20 வீதத்திற்கும் அதிகமாக தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் 1999ல் 19.18 வீதமான மக்களே வாக்களித்து இருந்தனர். 1994, 2005 ஜனாதிபதித் தேர்தல்களின் போது யாழ்ப்பாணத்தில் முறையே 2.97 வீதமும் 1.21 வீதமும் ஆனவர்களே வாக்களித்து இருந்ததால் அத்தரவுகளை ஒப்பீட்டுக்கு பயன்படுத்துவதைத் தவிர்த்து உள்ளேன்.

1982, 1988 ஜனாதிபதித் தேர்தல்களின் போது யாழ்ப்பாணத்தில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியைவிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கூடுதலான வாக்குகளைச் செலுத்தி இருந்தனர்.

1982ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியைவிட யாழ்ப்பாணத்தில் 15 வீதமான வாக்குகளை அதிகம் பெற்றிருந்தது. ஆனால் வடக்கு கிழக்கின் ஏனைய தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட 15 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தது.

1988ல் இந்த முரண்பாடு இன்னும் அதிகமானதாகக் காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியைவிட 8 வீதமான வாக்குகளை அதிகம் பெற்றுக் கொள்ள வன்னி, மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட 30 வீதமான வாக்குகளை அதிகம் பெற்றுக்கொண்டது.

1999ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியைவிட 3 வீதம் அதிக வாக்குகளை யாழ்ப்பாணத்தில் பெற்றுக் கொண்டது. ஆனால் வன்னி மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட முறையே 45 வீதமும் 25 வீதமும் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுதந்திரமாக இடம்பெற்ற இத்தேர்தல்கள் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தெரிவில் இருந்த வேற்றுமையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

3. யாழ்ப்பாண வாக்காளர்களுக்கும் தென்னிலங்கை வாக்காளர்களுக்கும் இடையேயும் ஒரு முரண்நகையான உறவுள்ளது. யாழ்பாண வாக்காளர்களின் தெரிவுக்கு மாறாகவே இலங்கையின் அரசுத் தலைவர் தெரிவு செய்யப்பட்டு உள்ளார். 1982, 1988 ஜனாதிபதித் தேர்தலின் போது யாழ்ப்பாண வாக்காளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரை ஆதரித்த போது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால் 1994இல் யாழ்ப்பாணத்தில் குறைந்தளவு வீதத்தினரே வாக்களித்திருந்த போதும் சமாதானத்தின் பெயரில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளருக்கு 95 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சந்திரிகா குமாரதுங்க யாழ் வாக்காளர்களாலும் தென்னிலங்கை வாக்காளர்களாலும் சமாதானப் புறாவாகத் தெரிவு செய்யப்பட்டார்.

1999ல் யாழ் வாக்காளர்கள் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களுக்கு தெளிவான சமிஞ்சையை வழங்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி 43 வீதமான வாக்குகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 46 வீத வாக்குகளையும் பெற்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சந்திரிகா குமாரதுங்க இரண்டாவது தடவையாக ஜனாதிபதியானார்.

2005 தேர்தலில் யாழ்ப்பாண வாக்காளர்களுடைய விருப்பத்திற்கு மாறாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானார். இத்தேர்தலில் தமிழ் மக்களுடைய வாக்களிக்கும் உரிமையை தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாகத் தடுத்தமையினால் தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் சுதந்திரமாக தங்கள் வாக்குகளை அளிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தால் அன்று மகிந்த ராஜபக்ச தோல்வி அடைந்திருக்கலாம்.

மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்துடன் யாழ்  – சிங்கள வாக்காளர்களுக்கு பொதுவாக இல்லாத தேர்தல் விஞ்ஞாபனத்துடன் நடத்தப்பட்ட முதல் இரு ஜனாதிபதித் தேர்தல்களும் யாழ்  – சிங்கள வாக்காளர்களின் தெரிவில் பாரிய வேறுபாட்டைக் காட்டி நிற்கின்றன. யாழ் வாக்காளர்களுடைய தெரிவுக்கு மாறாகவே இலங்கையின் ஜனாதிபதியை இலங்கையர்கள் தெரிவு செய்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் பகுதிகளைப் பொறுத்தவரை 2010 தேர்தலுடன் ஓரளவு ஒப்பிடக் கூடிய தேர்தலாக 1982 ஜனாதிபதித் தேர்தலை எடுத்துக் கொள்ள முடியும். பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழ் பகுதிகளுக்கு விஜயம் செய்வது, தமிழ் மக்களுடைய நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக வெளியிடப்படும் அறிக்கைகள், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட தமிழ் ஆயுதக் குழுக்கள் பலவீனப்பட்டு உள்ள நிலைமை, தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவது என்பன இத்தேர்தலை 1982 தேர்தலுடன் ஒப்பிடக் கூடிய நிலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 1982ல் தமிழர் விடுதலைக் கூட்டணி ஜிஜி பொன்னம்பலத்தை ஆதரிக்கவில்லை. அதே போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம் கெ சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கவில்லை. 1982 ஜனாதிபதித் தேர்தல் போன்று மும்முனைகளில் தமிழ் பகுதிகளின் வாக்கு பதியப்படும். ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக் கூட்டு, தமிழ் வேட்பாளர் என வாக்குகள் செலுத்தப்படும்.

இந்தப் பின்னணியிலும் கடந்த கால தேர்தல் முடிவுகளில் இருந்தும் பின்வரும் முடிவுக்கு வர முடியும். ஆனால் இது முடிந்த முடிவாக அமைய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
1. 1982 தேர்தலைப் போன்று 2010 தேர்தலிலும் தமிழ் மக்களுடைய வாக்குகள் மும்முனைகளில் செலுத்தப்படும்.
2. தமிழ் வேட்பாளரான எம் கெ சிவாஜிலிங்கம் கணிசமான தமிழ் வாக்குகளைப் பெறுவார். ஆனால் அவரது வாக்குகள் ஜனாதிபதித் தெரிவுக்காக மற்றுமொரு வாக்குக் கணக்கெடுப்பை ஏற்படுத்தும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.
3. இரு பிரதான வேட்பாளர்களில் யாழ்ப்பாணத்தவர்கள் மத்தியில் பொன்சேகா விருப்பத்திற்கு உரியவராக உள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அவரை வெளிப்படையாக ஆதரிக்கின்றது.
4. யாழ்ப்பாணத்தவர்களின் அரசியல் தெரிவில் இருந்து மாறுபட்ட தெரிவையே வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களில் உள்ளவர்கள் மேற்கொள்வதால் வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான நிலை இருக்கும்.
5. யாழ்ப்பாணத்தவர்களின் தெரிவுக்கு மாறாகவே இலங்கையின் ஜனாதிபதி வெற்றி பெற்றிருப்பதால் 2010 ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மை வாக்குகள் ஜெனரல் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்டால் அவர் நாட்டின் ஜனாதிபதியாவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.

கடந்தகால தேர்தல்களில் தமிழ் மக்கள் வாக்களித்த முறையைக் கீழுள்ள இணைப்புகளில் காணலாம்:

1982_P_Election_SL

1988_P_Election_SL

1994_P_Election_SL

1999_P_Election_SL

2005_P_Election_SL

இன்று ஹைட்டியில் மீண்டும் நிலநடுக்கம்

haitibuidling-pd.jpgநில நடுக்கத்தால் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பலி கொண்ட ஹைட்டி தீவில், இன்று 6.1 ரிக்டர் அளவிலான பின்அதிர்வு ஏற்பட்டுள்ளது.  இதுதொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில், இன்று மாலை 4.33 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி காலை 6.03) தலைநகர் போர்ட்-அ-பிரின்ஸில் இருந்து வடமேற்கே 35 மைல் தொலைவில், பூமிக்கடியில் 13.7 கி.மீ ஆழத்தில் பின்அதிர்வு மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

haitibuidling-pd.jpgஅதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் இதனால் பீதியடைந்து தெருக்கள், சமவெளிப் பகுதிகளுக்கு வந்ததாகவும், பாதி இடிந்த நிலையில் இருந்த கட்டிடங்கள் முற்றிலுமாக சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 13ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் ஹைட்டியில் உயிரிழந்தனர். உலகளவில் 2வது மிக மோசமான நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தும் நிதியுதவி அளித்ததுடன், தங்கள் நாட்டு மீட்புக்குழுவினரை ஹைட்டி அனுப்பியுள்ள நிலையில் சக்தி வாய்ந்த பின்அதிர்வு இன்று ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் நலன் மறந்து டொலர்களின் பின்னால் சம்பந்தன் – ஐ.ம.சு.மு செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித தெரிவிப்பு

sampanthar.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படாமல் வெளிநாட்டு டொலர்களின் பின்னணியில் செயற்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காத சம்பந்தன் பிரிவினர் புலிகளின் இறப்பர் முத்திரையாகவே செயற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித மேலும் உரையாற்றுகையில்:-

புலிகளின் பிடியில் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்கித் தவித்த போதும், அவர்களை அரசாங்கம் பாதுகாப்பாக மீட்டெடுத்த போதும் சம்பந்தன் அந்த மக்களது சுக, துக்கங்களைக் கேட்டறிந்து அவர்களுக்குத் தேவையான எதனையும் செய்து கொடுக்கவில்லை.

கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்குத் தேவையான சகலவற்றையும் அரசாங்கமே செய்து கொடுத்தது. அந்தக் காலகட்டத்தில் அந்த மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் போன்றவர்களை தவிர வேறு எவரையும் தெரியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சம்பந்தனும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இந்தியாவின் பின்னணியில் செயல்படவில்லை. மாறாக வெளிநாடுகளின் டொலர்களின் பின்னணியில் செயற்படுகி ன்றனர்.

இந்தியாவுக்கு சென்று வரும் சம்பந்தன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அறிவித்தல்களை விடுத்து இந்தியா தமது பின்னணியில் இருப்பது போன்று காண்பிக்க முயல்கின்றார். அதில் எந்தவித உண்மையுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

30 வருடங்களுக்கு பின்னர் நாட்டில் பாரிய மாற்றங்களை குறுகிய காலத்தில் ஏற்படுத்தியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. இன்று மாபெ ரும் மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் சமாதான மாக வாழும் சூழல் காணப் படுகின்றது.

இந்த நாட்டிற்குத் தேவையான சகல மாற்றங்களையும் ஜனாதிபதி ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் மக்கள் மீண்டும் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

election_box.jpgஎதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பாகத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வாக்காளர்களுக்கு விரிவான அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கின்றார்.இந்தத் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குச்சீட்டு மிக நீளமானதாகிக் காணப்படலாம். வாக்காளர்கள் தமது வாக்குச்சீட்டைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அவசரப்படாமல் வாக்குச்சீட்டை நன்கு வாசித்த பின்னர் தாம் தெரிவு செய்யும் வேட்பாளருக்குத் தமது புள்ளடியை அல்லது ஒன்று (1) இலக்கமிடலாம். ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிப்பதோடு அவசியமெனக் கருதுமிடத்து இரண்டாவது, மூன்றாவது தெரிவையும் அடையாளமிட முடியும்.

ஒருவரை மட்டும் தெரிவு செய்வதானால் X புள்ளடியை இடமுடியும்.

மூவருக்கு அடையாளமிட விரும்பினால் முதலாவது தெரிவுக்கு (1) என்று அடையாளமிட்ட பின்னர் இரண்டாவது, மூன்றாவது தெரிவுகளுக்கு முறையே 2,3 என அடையாளமிடமுடியும்.ஒரு வாக்குச்சீட்டில் ஒருவரைத் தெரிவு செய்து X புள்ளடி அல்லது (1) ஒன்று என அடையாளமிடப்பட்டிருப்பின் அந்த வாக்குச்சீட்டு செல்லுபடியானதாகும்.

முதலாவது தெரிவைத் தேர்ந்தெடுக்காமல் 2,3 என மட்டும் அடையாளமிடப்பட்டிருப்பின் அந்த வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும்.

வாக்குச்சீட்டொன்றை அடையாளமிட வேண்டிய நடைமுறை ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

3:1) “1” என்ற இலக்கத்தை அடையாளமிடுவதன் மூலம் ஒரு வேட்பாளருக்குத் தமது வாக்கை அளிக்க முடியும்.

3:2 )”2”என்ற இலக்கத்தை அடையாளமிடுவதன் மூலம் தமது இரண்டாவது விருப்பத்தை அளிக்க முடியும்.

3:3 ) “3” என்ற இலக்கத்தை அடையாளமிடுவதன் மூலம் தமது மூன்றாவது விருப்பத்தை அளிக்க முடியும்.

04: வாக்காளர் ஒருவர் தமது வாக்கை ஒரு வேட்பாளருக்கு மட்டும் அளிக்க விரும்பினால். “1”  என்பதற்குப் பதிலாக “புள்ளடி X இடப்பட்டிருந்தாலும் அந்த வாக்குச் சீட்டு செல்லுபடியாகும்.

04:1 முதலாவது தெரிவுக்குப் பின்னர் 2,3 அடையாளமிட்டு இரண்டாம், மூன்றாம் தெரிவை அடையாளமிட்டாலும் அது ஏற்றுக்கொள்ளப்படும்.

04:2 எவருக்கும் வாக்களிக்கப்படாத வாக்குச்சீட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட X புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டும் முதலாவது தெரிவில்லாத 2 ஆம் 3 ஆம் தெரிவை அடையாளமிடப்பட்ட வாக்குச்சீட்டும் முற்றாக நிராகரிக்கப்படும்.

எனவே வாக்காளர்கள் முதலாவது தெரிவை அறிவித்த பின்னர் தாம் விரும்பினால் 2 ஆம், 3 ஆம் தெரிவை அடையாளமிடமுடியும். அது கட்டாயமாக 2,3 என்று குறிப்பிடப்படவேண்டும் எனவும் தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தியிருக்கின்றார்.

ஓஷியானிக் கப்பல் அகதிகள்; 13 இலங்கையரை ஏற்க நியூசிலாந்து இணக்கம்

இந்தோனேசியாவின் தனஜங் பினாங் துறைமுகத்தில் ஓஷியானிக் வைக்கிங் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 78 பேரில் 13 பேரை ஏற்றுக் கொள்வது பற்றி ஆராய நியூசிலாந்து அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து குடியேற்ற அமைச்சர் ஜொனாத்தன் கோலமனின் செயலகம் இதை உறுதிசெய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவுஸ்திரேலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஓஷியானிக் வைக்கிங் கப்பலை இந்தோனேசியா வழிமறித்தது.

இந்தக் கப்பலில் இருந்த 78 இலங்கை தமிழ் அகதிகளில் 28 பேரை அமெரிக்காவும், 13 பேரை கனடாவும் 3 பேரை நோர்வேயும் ஏற்பதற்கு இணங்கியிருந்தன. அவுஸ்திரேலியா 22 பேரை அகதிகளாக தமது நாட்டில் குடியமர அனுமதிக்கவுள்ளது. இந்த நிலையில் எஞ்சியிருந்த 13 பேரையும் ஏற்றுக் கொள்வது பற்றி ஆராய நியூசிலாந்து முடிவு செய்துள்ளது.

இன்று இந்த 13 பேரும் நியூசிலாந்தில் குடியேறுவது பற்றிய விசாரணைகளுக்கு முகம் கொடுப்பதற்காக பிலிப்பைன்ஸ் புறப்படவுள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.