2010

2010

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோள் கொடுக்கும் லிற்றில் எய்ட்

Mannar_Children_Projectலிற்றில் எய்ட் இரண்டாவது ஆண்டாகத் தனது உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. தற்போது லிற்றில் எய்ட் உடன் குளோபல் மெடிகல் எய்ட் டென்மார்க் மெடிகல் சென் புரொன்ரியர்ஸ் ஆகிய சர்வதேச அமைப்புகளும் அகிலன் பவுண்டேசன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் அயர்லன்ட் ரீஸ்ரோரேசன் சொசைட்டி ஆகிய அமைப்புகள் லண்டனில் லிற்றில் எய்ட் உடன் இணைந்து உதவித் திட்டங்களை முன்னெடுக்கின்றனர். இலங்கையில் டி லா சலே பிரதேர்ஸ், சிந்தனை வட்டம், சென் அந்தோனிஸ் கல்லூரி, புனித தோமையர் கடற்தொழிலாளர் சங்கம், அகம், வோல்தம்ஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலயம் என்பனவும் லிற்றில் எய்ட் உடன் இணைந்து உதவித் திட்டங்களுக்கு ஒத்தாசை வழங்கி வருகின்றன.

Eluvaitheevu_Well_Project1.
2010 யூலையில் எழுவை தீவில் 130000 நிதியில் அப்பகுதி மக்களுக்கு நன்னீர் அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்குமாறு அயர்லன்ட் ரீஸ்ரோரேசன் சொசைட்டி சார்பில் சீறிபதி சிவனடியார் ஒரு ஒன்றுகூடலை ஏற்பாடு செய்து சேகரித்த நிதியை லிற்றில் எயட்க்கு கையளித்தார்.

ஒக்ரோபர் 19 நன்னீர் கிணறு அமைக்கும் திட்டம் முற்றுப்பெற்று மக்களுடைய பாவனைக்கு விடப்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்ற புனித தோமையர் கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் தங்கள் உழைப்பை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தை நிறைவு செய்து கையளிக்கும் நிகழ்வில் லிற்றில் எய்ட் சார்பில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரி கொன்ஸ்ரன்ரைன் லிற்றில் எயட் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் உதயனன் ஆகியோர் கலந்து கொண்டனர். புனித தோமையர் கடற்தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ரி செல்வதாஸ் துனைச் செயலாளர் ஜஸ்ரின் பெர்னான்டோ நிர்வாகஸ்தர் எம் ஜே ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Mannar_Children_Project2.
லண்டன் அகிலன் பவுண்டேசன் லிற்றில் எய்ட் ஏற்பாட்டில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முன்னாள் சிறுவர் போராளிகளை டி லா சலே பிரதேர்ஸ் இன் மேற்பாவையில் பராமரித்து வருகின்றனர். இவ்வாண்டு ஜனவரியில் அகிலன் பவுண்டேசன் உத்தியோகபூர்வமாக இச்சிறுவர் போராளிகளை பொறுப்பேற்று அருட்சகோதரர்களின் மேற்பார்வையில் பராமரிக்கின்றனர். அருட் சகோதரர் கே எஸ் யோகநாதன் இவர்களுக்குப் பொறுப்பாக உள்ளார். அவர்கள் சென் எக்சேவியர் கல்லூரியில் தங்கள் கல்வியையும் தொடர்கின்றனர்.

இம்மாணவர்களுக்கு தங்குமிட வசதி இன்மையால் இவர்களுக்கு ஒரு கட்டிடதை அமைத்து ஒரு தொகுதியினரை அங்கு தங்க வைப்பதற்கு அகிலன் பவுண்டேசன் முன் வந்தது. 3000000 செலவில் அமைக்கப்பட்ட இக்கட்டிடம் ஒக்ரோபர் 20ல் திறந்து வைக்கப்பட்டது.

இத்திறப்பு விழாவில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் அப்பகுதி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். இக்கட்டிடத்தை அகிலன் பவுண்டேசன் நிறுவனர் கோபால கிருஸ்ணன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் லிற்றில் எய்ட் சார்பிர் ரி கொன்ஸ்ரன்ரைன் கலந்துகொண்டார். சென் எக்செவியர் கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் ஸ்ரெயின்ஸ்லஸ உம் கலந்துகொண்டார்.

Kayts_St_Anthonys_College_Project3.
லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் உதவியுடன் லற்றில் எய்ட் ஊர்காவற்துறையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான மற்றுமொரு திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. சென் அந்தோனிஸ் கல்லூரியில் தங்கியுள்ள மாணவர்களை ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் பொறுப்பேற்று அருட் தந்தை ரொபின்சன் மேற்பார்வையில் பராமரிக்கின்றனர்.

பெரும்பாலும் சைவ சமயத்தவர்களான இந்த மாணவர்கள் தங்கள் சமய வழக்கங்களை சுயாதீனமாகப் பின்பற்றி வருகின்றனர். மத வேறுபாடுகளுக்கு அப்பால் மனித நேயத்துடன் இந்த உதவித்திட்டம் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒக்ரோபர் 19ல் அருட்தந்தை ரொபின் யையும் நிர்வாகஸ்தர் வின்சன் நடராஜாவையும் லிற்றில் எய்ட் குழுவினர் சந்தித்து உரையாடினர். அச்சமயம் இம்மாணவர்கள் வட்டுக்கோட்டை யாழ்பாணக் கல்லூரியுடன் விளையாட்டு போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NavaJeevan_N_and_Puniyameen_PM4.
கல்முணை மற்றும் திருகோணமலையில் மாணவ மாணவிகளுக்கு கணணிப் பயிற்சிகளை வழங்கி வரும் ‘தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பு’ அமைப்பிற்கு 7 கணணிகள் ஒக்ரோபர் 30 2010ல் கையளிக்கப்பட்டது. லிற்றில் எயட் சிந்தனை வட்டம் சார்பில் பிஎம் புன்னியாமீன் கணணிகளை ‘தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பு’ முகாமையாளர் நவஜீவனிடம் கையளித்தார்.

ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் கேசரித்த பயன்படுத்தப்பட்ட கணணிகளை லிற்றில் இலங்கைக்கு அனுப்பி சிந்தனைவட்டம் பி எம் புன்னியாமீன் ஒருங்கிணைப்பில் திருத்த வேலைகளையும் மேற்கொண்டது. இவற்றுக்கான செலவுகளை ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் மூலம் வடக்கு கிழக்கில் உள்ள மாணவர்களுக்கு கணணிகள் வழங்கும் ஒரு நீண்ட திட்டத்தை லிற்றில் எய்ட் ஆரம்பித்து வைத்துள்ளது. இத்திட்டம் முதலில் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் அகிலன் பவுண்டேசன் கற்பகவிநாயகர் ஆலயம் என்பனவற்றினால் நடாத்தப்படுகின்ற இல்லங்களில் உள்ள 1000 வரையான மாணவர்களுக்கு கணணி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிக்கின்றது.

Katpaga_RiceMill_Satchi_Gopal5.
ஒக்ரோபர் 16 2010 மூதூர் பாட்டாளிபுரம் கிராமத்தில் 3 கோடி ரூபாய் செலவில் ‘கற்பக அரசி ஆலை’ அமைக்கும் முயற்சி ஆரம்பித்து வைக்கப்பட்டு உள்ளது. லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலயத்தின் பெயரில் உருவாக்கப்பட உள்ள இந்த அரசி ஆலைக்கு ‘அகிலன் பவுண்டேசன்’ ஆதரவளிக்கின்றது. ஒக்ரோபர் 8ல் இலங்கை சென்ற அகிலன் பவுண்டேசன் நிறுவனர் எம் கோபாலகிருஸ்ணன் பல்வேறு உதவித்திட்டங்களை அங்கு மேற்கொண்டு வருகின்றார். அதன் ஒரு அங்கமாக இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் 1997 முதல் சிறுவர், பெண்கள், விதவைப் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சிறுதொழில், சிறு கடன் உதவிகள் வழங்கிவருகின்ற ‘அகம்’ அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

2010 ஏப்ரல் முற்பகுதியில் ‘லிற்றில் எய்ட்’ திட்ட இணைப்பாளர் த ஜெயபாலனிடம் ‘அகம்’ திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் பொ சற்சிவானந்தம் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை வலியுறுத்தி விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த அரசி ஆலைக்கான திட்டத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட உதவித் திட்டங்கள்:

வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு கணணி வழங்கும் திட்டம் ஆரம்பம். – லிற்றில் எய்ட்

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வலியுறுத்துகிறது ‘அகம்’ திருகோணமலை இளைஞர் அமைப்பு

இலங்கை சுகாதார அமைச்சுக்கும் லிற்றில் எய்ட் க்கும் இடையே புரிந்தணர்வு உடன்பாடு
 
லிற்றில் எய்ட் காயப்பட்ட படைவீரர்களுக்கு இன்ரநெற் மையம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது
 
எழுவைதீவில் நன்னீர் கிணறு: லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்த வேலைத்திட்டம்
 
மதங்களைக் கடந்து இணைந்து உதவும் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் சென் அந்தனீஸ் கல்லூரியும்
 
200 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் ஆல் யாழ் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது!
 
சாதி மத இன பேதங்களைக் கடந்து லிற்றில் எய்ட் கரம் கொடுக்கின்றது.
 
புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டிருந்த 200 சிறுவர்கள் விடுதலை!
 
முன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு!
 
1.54 மில்லியன் அமெரிக்க டொலர் மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் மூலம் தமிழ் பகுதிகளுக்கு வழங்கப்பட்டது! : த ஜெயபாலன்
 
வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்
 
துப்பாக்கியில் இருந்து இசையை நோக்கி! – முன்னாள் குழந்தைப் போராளிகள் : ரி கொன்ஸ்ரன்ரைன்
 
மறக்கப்படும் வன்னி மக்களும், மறந்து போகும் புலம்பெயர் மக்களும். – லிற்றில் எய்ட்கள் தொடர வேண்டும்!!! : த ஜெயபாலன்
 
டென்மார்க்கில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் விநியோகம் : லிற்றில் எய்ட்
 
லிற்றில் எய்ட் இன் சின்னச் சின்ன உதவிகள் : வி அருட்சல்வன்
 
வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன்

Related Article:

லிற்றில் எய்ட் இன் தலைவியாக டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை நியமனம்! லிற்றில் எய்ட் 3.5 மில்லியன் மருந்துப் பொருட்களை விநியோகித்தது!வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்

லிற்றில் எய்ட் இன் தலைவியாக டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை நியமனம்! லிற்றில் எய்ட் 3.5 மில்லியன் மருந்துப் பொருட்களை விநியோகித்தது!

தேசிய பாதுகாப்புதின நிகழ்வையொட்டி வீரசிங்கம் மண்டபம் 5மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது.

இவ்வருடம் தேசிய பாதுகாப்புதின நிகழ்வுகள் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார். தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகளை ஒருங்கமைப்பதற்காக அமைக்கப்பட்ட 14 உபகுழுக்கள் நேற்று செவ்வாய் கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் கூடி கலந்துரையாடல்கள் மேற்கொண்டது.

ஜனாதிபதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய பாதுகாப்புதின நிகழ்வகளில் கலந்து கொள்வதை முன்னிட்டு வீரசிங்கம் மண்டபம் ஐந்து மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அன்றைய தினத்தையொட்டி பல நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘இயற்கை அனர்த்தத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பது’ என்கிற தொனிப்பொருளில் 23 ஊர்திகளின் அணிவகுப்பு கண்காட்சியும் இதில் ஒன்றாகும். இந்த அணிவகுப்பு யாழ். முற்றவெளியில் ஆரம்பமாகி யாழ்.நகரைச் சென்றடைந்து மீண்டும் முற்றவெளியை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சிறைக் கைதிகள் தொடர்பான தகவல்கள் கணனி மயப்படுத்தப்பட உள்ளன.

Magazine_Prisonஇலங்கையில் நாடு முழுவதிலுமுள்ள சிறைக் கைதிகளின் விபரங்களை கணனி மயப்படுத்த புனர்வாழ்வு மற்றும், சிறைச்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி சிறைகளிலிருக்கும் சுமார் 27ஆயிரம் சிறைக்கைதிகள் தொடர்பான சகல தகவல்களும் கணனி மயப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாகப் பதவியேற்றுள்ள புனர்வாழ்வு மற்றும், சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால் இது தெடர்பான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு கைதி சிறைச்சாலைக்கு வந்த நாள் முதல் அவர் விடுதலையாகும் வரையிலான தகவல்கள் அனைத்தும் தற்போது கோப்புகளிலேயே உள்ளன. அவை யாவும் கணனி மயப்படுத்தப்பட்டதும் கணப்பொழுதில் விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட உரிமையாளர்களற்ற காணிகள் பிரதேச சபையினால் கையேற்கப்படவுள்ளன.

யாழ். நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட உரிமையாளர்களில்லாத, பராமரிப்பற்ற காணிகளை நல்லூர் பிரதேசசபை கையேற்கவுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இவ்வாறான காணிகளின் முன்பாக ‘இக்காணி பிரதேச சபையினால் கையேற்றக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது’ என்ற வாசகங்களடங்கிய துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டு வருகன்றன.

இதேவேளை, டெங்கு ஒழிப்பைக் கவனத்தில் கொண்டு காணிகளிலுள்ள பற்றைகளை உரிமையாளர்கள் துப்புரவு செய்ய வேண்டும் எனவும் நல்லூர் பிரதேசசபையினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது,

யாழ்.குடாநாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் மீண்டும் அதிகரிப்பு.

யாழ்.குடாநாட்டில் மீண்டும் வழிப்பறி மற்றும், கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. நேற்று செவ்வாய் கிழமை பிற்பகல் 2 மணியளவில் மானிப்பாயில் பெண்ணொருவர் ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டை முடித்துக் கொண்டு வரும் வழியில் இருவர் அவரின் தாலிக்கொடியை அறுத்துள்ளனர். அவர்கள் தப்பியோடும் பொழுது குறித்த பெண் கூக்குரலிட அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் திருடர்களைப் பிடித்து நையப்புடைத்து மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

நேற்று முன்தினம் திங்கள் கிழமை இரவு கைதடியில் ஒரு இரவில் முன்று வர்த்தக நிலையங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கடந்த ஒருவாரத்தில் மட்டும் யாழ். குடாநாட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்கள் .இடம்பெற்றுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற கொள்ளை மற்றும், கடத்தல் சம்பவங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தன. தற்போது கொள்ளைச் சம்பவங்கள் மீண்டும் தலையெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் போராட்ட கால ஊடகவியலாளர் எஸ் சிவநாயகம் காலமானார்.

Sivanayagam_S_Journalistஊடக வியலாளர் எஸ் சிவநாயகம் தனது 80வது வயதில் நேற்று (நவம்பர் 29) கொழும்பில் காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கிய காலகட்டத்தில் ஊடகவியலாளராகச் செயற்பட்ட இவர் 1982ல்  யாழ்ப்பாணத்தில் வெளியாகிய சற்றடே ரிவியூ பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றியவர். இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் நேரடியாகத் தொடர்புபட்டு அதனுடன் வாழ்ந்தவர். அதன் பின்னர் சென்னையில் தமிழர் தகவல் நடுவத்திற்கு பொறுப்பாகச் செயற்பட்டவர்.

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது இறுதிக்காலப் பகுதியில் புற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார். இவர் கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் தனது கல்வியை மேற்கொண்டவர்.

ராஜீவ் காந்தியின் படுகொலையை அடுத்த எஸ் சிவநாயகம் இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் 1993ல் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரிய இவர் லண்டனிலும் நீண்டகாலம் வாழ்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன் கொழும்பு சென்ற இவர் இறுதி யுத்தத்தின் போதும் அங்கேயே வாழ்ந்தவர்.

the_Pen_and_the_Gunஇவர் சில ஆண்டுகளுக்கு முன் தனது அனுபவத் தொகுப்பான ‘தி பென் அன் தி கன்’ என்ற நூலை வெளியிட்டு இருந்தார். மேலும் அதற்கு முன்பாக ‘ஸ்ரீலங்கா: விற்னஸ் ரு ஹிஸ்ரி’ என்ற நூலையும் எழுதி இருந்தார்.

இவருடைய இறுதி நிகழ்வு டிசம்பர் 02 கொழும்பில் நடைபெற உள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கம் இந்திய வெளியுறவமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம் மகஜர் கையளிப்பு

இந்திய வெளியுறவமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம் கையளிக்கவென தமிழ் கட்சிகள் அரங்கத்தினால் தயாரிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் அடங்கிய மகஜர் இன்றுகாலை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழ்க் கட்சிகளின் அரங்கம் சார்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் பொதுச்செயலாளர் ரி.சிறிதரன் ஆகியோரினால் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த மகஜரில் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், இனப்பிரச்சினைத் தீர்வு, இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள், நிவாரணங்கள், மக்களின் மீள்குடியேற்றம் போன்ற விடயங்கள்  உள்ளடக்கப்பட்டுள்ளன.

Shri. S.M.Krishna M.P.,
Honorable Minister for External Affairs,
Government of India.

Dear Sir,

We wish to thank you for the opportunity afforded to us to meet with you today.

We, the Tamil political parties have come to an understanding and constituted a common forum to strive for a permanent political solution to the ethnic problem and also to work towards solving the immediate issues faced by the Tamil people.

In this context, we have initiated discussions with the other concerned political parties including the TNA with a view to forge a consensus on the question of a political solution to the national question of Sri Lanka.

We believe that the political solution should be found within the frame work of a united Sri Lanka thus enabling the Tamil people to participate fully in their own governance in the North – East. The implementation of the 13th amendment in full will be a positive beginning of the political process in this regard.

Fully conscious of the historical, cultural, religious and linguistic ties the Tamil people of Sri Lanka have been having with the people of your great country since times immemorial and recognizing the efforts  taken and endeavours made by your great country with the noble objective of ensuring equality and justice to the Tamil people during the last several decades, it is our fond hope and fervent appeal that these efforts and endeavours should be taken forward in order to culminate soon in the evolution of a viable political solution to the national question of Sri Lanka that shall redress the long – felt political grievances of our people and satisfy their legitimate political aspirations within the frame work of a united Sri Lanka. 

It is against this background we seek your kind indulgence to submit for your kind and urgent attention some important issues that concern the interests and well being of our people. 
           
1. Meaningful Resettlement 

Although majority of the Internally Displaced Persons have been sent back to their former places of habitation, they have not been settled with adequate basic facilities.
a)   They are living in temporary shelters and tents.
b)   Some of the IDP’s have not been allowed to access their houses and properties on different grounds including the objection that they do not possess documents in proof of their claim.
c)   The return and resettlement of the people who still remain in the welfare camps needs to be given priority.
           
2. Providing adequate compensation for the people who lost their limbs, bread winners, family members and properties

While expressing our appreciation and gratitude for the various forms of assistance committed and provided by the government of India for the affected people in the North – East towards their resettlement and rehabilitation, we request that the Government of India be pleased to consider granting of more support and assistance to these people including:
(a)  Livelihood assistance to widows and their dependant children, and orphaned children who have lost both their parents,
(b) Artificial limbs and other help to those who have lost their limbs.
(c) Support and assistance to repair / rebuild / improve their damaged or destroyed houses.
(d) Assistance to resettled farmers to restart / improve the cultivation of their lands.
(e) Support to improve animal husbandry and livestock.
(f) Support for fishing activities. 
           
3. Steps taken to disturb the demographic composition  and thereby disrupt national reconciliation

One of the main reasons for the discontent between the communities was the state sponsored colonization by successive governments in the past with the motive of altering the demographic composition in the North East. Even today attempts are being made to do the same that obstructs the reconciliation between the communities.
                  
We are concerned that the proposal to establish settlements of the members of the security forces and their families numbering many thousands will drastically alter the demographic composition in the Northern and Eastern provinces that had been recognized as the areas of historical habitation in the Indo-Sri Lanka accord of 1987. We are of the firm view that nothing should be done to disturb the demographic composition of the Northern and Eastern provinces and cause disruption of the process of national reconciliation.
        
4. Civil Administration

We are of the considered view that the establishment of a full and complete civil administration without any involvement of the Security Forces in the Northern and Eastern provinces is the need of the hour to facilitate and ensure normalcy and the rule of law in this region.

We assure our cooperation in and support to every effort that the Government of India may take to achieve national reconciliation in Sri Lanka.

Thanking You,
Yours Sincerely,

V. Anandasangaree – TULF
A. Rajamanickam – EPDP
S.C. Chandrahasan – TPF
S. Chandrakanthan – TMVP
D. Sithadthan – PLOTE
M.K. Shivajilingam – TNLA
T. Sritharan – P-EPRLF
P. Uthayarajah – Sri-TELO
N. Kumaraguruparan – DPF

வன்னியில் இடம்பெற்ற அவலமும் புலி ஆதரவு அமைப்புகளின் மகிந்த எதிர்ப்புப் போராட்டமும் : த ஜெயபாலன்

MR_Protest_Heathrowதமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவுகளாக இயங்கிய அமைப்புகள் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வருகையைக் கண்டித்து எதிர்ப்பு அணிவகுப்பொன்றை ஹீத்ரோ விமான நிலையத்தில் நடத்தினர். நடந்து முடிந்த யுத்தத்தில் ஜனாதிபதி ராஜபக்சவைக் குற்றவாளி என்று சொல்லி அவரது வருகையைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக இலங்கை மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொள்வதற்காக லண்டன் வந்துள்ள ஜனாதிபதி ராஜபக்சவை பொலிஸார் வழமையான முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு வழியால் அழைத்துச் சென்றுள்ளனர். அதனால் ஜனாதிபதி ஆர்ப்பாட்டக்காரர்களை நேருக்குநேர் சந்திக்கவில்லை.

ஆனால் இந்த ஆர்பாட்டம் காரணமாக சிறிலங்கா எயர்லைனில் வந்த பயணிகள் அனைவரும் இரவு 12:00 மணிவரை விமான நிலையத்திற்கு உள்ளேயே இருக்க வைக்கப்பட்டனர்.

ஒக்ரோபர் பிற்பகுதியில் அமைச்சர் ஜீல் பீரிஸ் ற்கு எதிராகவும் ஒரு கண்டன நிகழ்வு லண்டனில் இடம்பெற்றது. கண்டன நிகழ்வுக்கு முன்னதாகவே ஜீஎல் பீரிஸ் தனது உரையை முடித்துக் கொண்டு மண்டபத்தை விட்டுச் சென்றிருந்தார்.

MR_Protest_Heathrowநடந்து முடிந்த யுத்தத்தில் இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மிக மோசமான முறையில் மனித உரிமைகளை மீறியிருந்தனர். யுத்தத்தின் முன்பகுதியில் 2009 பெப்ரவரி வரை 1200 பேர்வரையே கொல்லப்பட்டு இருந்தனர். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தப் பகுதியில் தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக்கி யுத்தத்தை முடுக்கிவிட்ட போது மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். சர்வதேச நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் பொது மக்களைப் புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதை தொடர்ந்தும் ஆதரித்தே வந்தனர்.

2008ல் யுத்தம் உச்சகட்டத்தில் இருந்தபோது லண்டனில் இடம்பெற்ற கொமன்வெல்த் மாநாட்டிலும் ஜனாதிபதி ராஜபக்ச கலந்துகொண்டிருந்தார். அப்போதும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இம்முறை ஜனாதிபதி ஒக்ஸ்போர் மாணவர்களின் நிகழ்வில் உரையாற்ற இருப்பது இரண்டாவது தடவையாகும். அதையொட்டியும் புலி ஆதரவு அமைப்புகள் தங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க ஒக்ஸ்போர்ட் நோக்கி செல்ல உள்ளனர்.

தற்போதைய விஜயத்திற்கு முன்பாக ஜனாதிபதியின் விஜயம் ஒத்திவைக்கப்பட்டது. தாங்கள் யுத்தக் குற்றத்திற்கு எதிராக வழக்கு தாங்கல் செய்ய உள்ளதாலேயே இலங்கை அரசு அந்த விஜயத்தை கைவிட வேண்டி ஏற்பட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்புகள் அறிவித்தன. ஆனால் இப்போது ஜனாதிபதி லண்டனிலேயே தங்கி உள்ளார்.

மேலும் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரன் போலிக் கடவுச்சீட்டில் ஆயுதத்துடன் வந்து பிரித்தானியாவில் பிடிபட்ட போதும் அவருக்கு எதிராக எவ்வித மனித உரிமை மீறல் நடவடிக்கைகளையும் யாரும் பதிவு செய்யவில்லை. சர்வதேச உரிமை அரைமப்புகள் நூற்றுக்கணக்கான மனித உரிமை மீறல் குற்றங்களை விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராகச் சுமத்திய போதும் அவர்களால் முரளிதரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

நடந்து முடிந்த இறுதி யுத்தத்தை மேற்கு நாடுகள் சிசிரிவி இல் பார்ப்பது போன்று செய்மதிகளினூடாகப் பார்த்து ஆதாரங்களையும் கைவசம் வைத்துள்ளனர். ஆனால் மனித உரிமைகளை அவர்கள் அரசியல் பலப் பரீட்சைக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். மனித உரிமைகளுக்காக யுத்தக் குற்றம் என்று வந்தால் இலங்கை ஜனாதிபதி மட்டுமல்ல அமெரிக்க அதிபர் பிரித்தானியப் பிரதமர் என்று பட்டியல் நீளும் என்பது மேற்கு நாடுகள் நன்கு அறியும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பொது மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நன்று அறிந்து கொண்ட இலங்கை அரசும் அவர்களை விடுவிப்பதற்கான காத்திரமான முயற்சிகளை எடுக்காமல் புலிகளுக்கு எதிரான பதில் தாக்குதலை மூன்று லட்சம் மக்கள் மத்தியில் நடாத்தியது.

மேலும் யுத்தத்தின் இறுதிப் பகுதிகளில் இந்த யுத்த வலயத்திற்குள் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடாத்தி உள்ளனர். பொது மக்கள் மீது செல் தாக்குதல்களையும் புலிகள் நடத்தி உள்ளனர்.

MR_Protest_Heathrowதற்போது யுத்தத்தில் தோல்வியடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அரசினைப் பழிவாங்குவதற்கான மாற்று வழியாக மனித உரிமை மீறல்களைப் பயன்படுத்த முற்பட்டு உள்ளனர். நடந்து முடிந்த யுத்தத்தில் அரசு மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியுள்ளது. ஆனால் அரசுக்கு எதிராக மனித உரிமைகளைத் தூக்கிப்பிடிக்கின்ற தமிழீழ விடுதலைப் புலி சர்வதேச அமைப்புகளும் வன்னியில் ஆயிரக் கணக்காண மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளனர். அங்கு வகைதொகையின்றி மனித அவலம் நடந்தால் சர்வதேச சமூகம் தமிழீழத்தைப் பெற்றுத் தரும் என்று பிரச்சாரம் செய்து மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி மிகமோசமான மனித அவலத்துக்கு காரணமாக இருந்தனர்.

யுத்தக் குற்றவாளி இலங்கை அரசு மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் சர்வதேச அமைப்புகளும் தான். அதனால் எதிரியாகக் கருதிய இலங்கை அரசிடம் நியாயம் கேட்கும் அதேவேளை தம்மைக்காக்க வேண்டிய தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் சர்வதேச கட்டமைப்புகளும் தாங்கள் அம்மக்களுக்கு இழைத்த துரோகத்திற்கு நியாயம் கிடைக்க வழி செய்து கொண்டு எதிரியிடம் நியாயம் கேட்பதே முறையானது.

”அரச எதிர்ப்பு அணுகுமுறையை கைவிட முடிவு செய்துள்ளோம்” வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதை கூட்டமைப்பு கைவிட்டது.

TNAநேற்று திங்கள் (நவம்பர் 29) மாலை நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிப்பதைத் தவிர்த்து வாக்களிப்பில் கலந்து கொள்ளமல் விட்டது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, அபிவிருத்தி ஆகிய விடயங்களில் அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமாக கலந்துரையாடி அதற்காக அரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு விரும்புவதால், அரச எதிர்ப்பு அணுகுமுறையை கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாகவே நேற்று வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பில் கலந்து கொண்டு அதனை எதிர்ப்பதை தவிர்த்துக் கொண்டதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கூட்டமைப்பு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

”நாடாளுமன்றில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு எவ்விதமான நிவாரணத்தையும் வழங்கவில்லை. இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியமர்வு முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய ஒன்று எனக் கூறிவரும் ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்டத்தின் ஒதுக்கீடுகளில் இது எவ்விதத்திலும் பிரதிபலிக்கவில்லை. இதற்கு மேலாகப் போர் முடிவுற்ற நிலையிலும் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இந்நிலையில் தமிழ் மக்களின் மீள்குடியமர்வு. புனர்வாழ்வு. அபிவிருத்தி போன்ற விடயங்களில் அரசாங்கம் கூட்டமைப்புடன் அக்கபூர்வமான பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக கூட்டமைப்பின் நல்லெண்ணத்தைத் தெரிவிக்கும் முகமாகவே வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெகெடுப்பில் எதிர்த்து வாக்களிப்பதிலிருந்து கூட்டமைப்பு விலகியிருந்தது.”  இவ்வாறு கூட்டமைப்பின் விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று மாலை இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்களிப்பில் 150 வாக்குகள் ஆதரவாகவும், 46 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. 104 மேலதிக வாக்குகளால் இது நிறைவேறியது.

ஏதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி ஆகியன எதிராக வாக்களித்தன. அரசுடன் தற்போது இணைந்துள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஆகியன ஆதரவாக வாக்களித்தன.

கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

rsambanthan.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மலைவர் இரா. சமப்நதன் சுகவீமுற்று கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வரம்நிலையில். நேற்று செவ்வாய் கிழமை இந்தியத்தூதுவர் அசோக் கே. குhந்தா வைத்திய சாலைக்குச் சென்று சம்பந்தினன் உடலநலம் குறித்து விசாரத்துள்ளார்.

கூட்டமைப்பின் தலைவர் இருதயக் கோளாறு காரணமாக தமிழ் நாட்டில் சிகிச்சை பெற்று வந்தார். மீண்டும் அவர்சிகிச்சைக்காக தமிழ் நாட்டுக்கு செல்லவேண்டிய வேளையில் திடீரென அவர் சுகவீனமற்ற நிலையில்  கொழும்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர் சம்பந்தன் மாதத்திற்கு பாராளுமன்றம் செல்லாதிருப்பதற்கான பிரேரனை செப்ரம்பர் 23ல் பாராளுமன்றத்தில் அங்கிகரிக்கப்பட்டு இருந்தது. வயதடைந்துள்ள இவர் அண்மையில் இந்தியாவில் சிகிச்சை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

சம்பந்தருடைய உடல்நிலை வலுஇழந்து செல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலுவும் இழந்து செல்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைமை மாவை சேனாதிராஜாவா சுரேஸ் பிரேமச்சந்திரனா என்ற போட்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் நெருக்கடியை உண்டு பண்ணியுள்ளது.