2010

2010

நியூஸிலாந்தை வீழ்த்தியது இலங்கை அணி

sri-lankan-cricketers.jpgஇந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணியை, நியூசிலாந்து வீழ்த்தியது. நேற்று தம்புள்ளவில் நடந்த 2 வது போட்டியில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின. நியூஸிலாந்து அணியை இலங்கை அணி 3 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 48.1ஓவர்களில் 192  ஓட்டங்களடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 40.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களைப் பெற்றது.

உபுல் தரங்க ஒரு நாள் அரங்கில் 17 வது அரை சதம் கடந்தார். 9 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் சேர்த்து தரங்க இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

100 விக்கெட்

நேற்றைய போட்டியில், நியூசிலாந்து வீரர் கப்டிலை அவுட்டாக்கிய இலங்கை வீரர் மலிங்கா, ஒரு நாள் போட்டிகளில் 100 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். தவிர, இந்த இலக்கை எட்டும் இலங்கையின் 11 வது வீரரானார்.

இதுவரை 68 போட்டிகளில் பந்து வீசிய மலிங்கா, 102 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் மிகக் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எட்டிய முதல் இலங்கை வீரர் என்ற பெருமை பெற்றார்.

மரண தண்டனையை சட்டத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பது அவசியம் -நீதியமைச்சு செயலாளர் தெரிவிப்பு

images-00.jpgமரண தண்டனையை சட்டத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நீதியமைச்சின் செயலாளர் சட்டத்தரணி சுகத கம்லத் தெரிவித்தார். மரண தண்டனை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இது ஒருபோதும் குற்றங்களை குறைத்துவிட உதவப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, நீதிமன்றத்தீர்ப்புகள் சுயாதீனமாக அமைய வேண்டும். இதில் எத்தரப்பினரதும் அழுத்தங்கள் இருக்க முடியாது. நீதித்துறையின் கெளரவம் இதன்மூலம் பாதுகாக்கப்படல் வேண்டும்.

அதிசய ஆமை

ggggg.jpgகொழும்பு ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் அதிசய ஆமை ஒன்றினை தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு அன்பளிப்புச் செய்துள்ளார். இவ்வதிசய ஆமையின் முன் பகுதியில் இரண்டு தலைகள், நான்கு கைகளும், பின் பகுதியில் இரண்டு கால்களும் காணப்படுகிறது.

அதன் தலை இருக்கும் இடத்தில் ஓடு இரண்டாக பிளவுபட்டுள்ளது போல் காட்சி தருகிறது. இரண்டு தலைகளிலும் உள்ள இரண்டு வாய்களாலும் உணவு உட்கொள்ள முடியும் என மிருகக் காட்சிசாலை பணிப்பாளர் ஆனந்த லொக்கு ரணமுக கூறினார்.

மூன்று வாரங்கள் வயதுடைய இவ்வாமை மிருகக் காட்சிசாலை மிருக வைத்திய பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.

பரீட்சைத் திணைக்களம் தனியான விசாரணை

கண்டியில் பரீட்சை எழுதவந்த தமிழ் மாணவி கை, கால் கட்டப்பட்டு, வாய்க்குள் துணி அடைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாக பரீட்சை திணைக்களம் தனியான விசாரணைகளை நடத்தும் என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

இந்த மாணவி பரீட்சை எழுத வந்த சக மாணவிகளினால் அல்லது மாணவர்களால் கட்டப்பட்டார் என்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை பரீட்சை திணைக்களம் எடுக்கும் என்றும் பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க கூறினார். இந்த விசாரணைகளை பரீட்சை திணைக்களத்தின் விசேட குழுவொன்று மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.

தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது

anura.jpgஜனநாயக தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சம்மத்தப்பட்ட முதலாவது இராணுவ குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பினை, சரத் பொன்சேகாவின் வழக்கறிஞர்கள் விடுமுறையில் உள்ளபோது ஏற்றுக்கொள்ள முடியாது என சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

‘சன்k’ கப்பல் கனேடிய கடற்பரப்பை அடைந்தது – சர்வதேச நியதிகளின் கீழ் விசாரணை

son-k.jpg200 தமிழர்களை ஏற்றிக்கொண்டு செல்வதாக சந்தேகிக்கப்படும் எம்.வி.சன்k கப்பல் கனேடிய கடல்பரப்பை அடைந்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  200 கடல் மைல் (370 கிலோ மீற்றர்) எல்லை கொண்ட கனடாவின் பிரத்தியேக பொருளாதார கடல் வலயப் பகுதியை அடைந்த இக்கப்பலை, அந்நாட்டு கடற்படையினர் தற்போது பிரிட்டிஷ், கொலம்பியா மாநில கரையோரத்தை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றனர் என கனேடிய செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

இக்கப்பலின் தற்போதைய வேகத்தின்படி இன்று வெள்ளி காலை கனடாவின் ஆட்சி எல்லைக்குட்பட்ட 12 கடல் மைல் (22 கி.மீ) நீர் பரப்பை இக்கப்பல் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கப்பலிலுள்ள ஆண்களும் பெண்களும் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

சிறார்கள் இருப்பின் அவர்கள் பிரிட்டிஷ் கொலம்பிய மாநிலத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சின் பராமரிப்பில் வைக்கப்படுவார்கள் என கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கப்பலில் முன்னதாக 200 இலங்கையர்கள் செல்வதாக தெரிவிக்கப்பட்ட போதும் தற்போது 500 பேர் இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இன்னும் கப்பலில் உள்ளவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த நிலையில் கப்பல் தொடர்பில் கருத்துரைத்துள்ள கனேடிய பொது பாதுகாப்பு துறை அமைச்சர் விக்டோவ்ஸ், கனேடிய துருப்பினர் இந்த கப்பலை கடந்த இரண்டரை மாதங்களாக கண்காணித்து வந்ததாக தெரிவித்துள்ளார். எனவே இந்த கப்பலில் இருப்பவர்கள் யார் என்பதில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கப்பலில் வருவோர் சர்வதேச நியதிகளின் அடிப்படையில் கனேடிய சட்டத்திற்கு இணங்க விசாரணை செய்யப்படுவார்கள் என கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இக்கப்பல் ஆட்கடத்தலில் ஈடுபடுவதாகவும் இது மிகவும் ஆபத்தான செயல் என்றும் தெரிவித்த அதிகாரி, அதில் பயணம் செய்த ஒரு பயணி இறந்துள்ளார் என்றும் உறுதிப்படுத்தாத தகவலும் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். இதேவேளை இன்னொரு கப்பலும் கனடாவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக கனேடிய அரசாங்கம் அச்சப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்கப்பலில் வருபவர்களைத் தங்க வைப்பதற்கென கனடா சிறைச்சாலைகள் தயாராக உள்ள நிலையில் விக்டோரியா பொது மருத்துவமனையில் 75 பேரைச் சேர்க்கத்தக்கமாதிரி அது மீளத் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முன்னாள் அவசர மருத்துவமனைகளும் இவ்வகதிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படவுள்ளன. தாய்லாந்து கொடியுடனான சன்k கப்பல் முன்னர் ஹரின் பனிச் 19 என்ற பெயரில் இருந்தது. 24 சிப்பந்திகளுடன் செயற்படும் சன்k கப்பல் வினோத் என்ற முன்னாள் கடற்புலியின் தலைமையில் பயணஞ் செய்வதாக தெரியவருகிறது.

முன்னர் ஆயுதக் கடத்தலுக்கு பயன்பட்டு வந்த இந்த கப்பலை கடந்த ஏப்ரல் மாதம் தாய்லாந்து கடற்படை ரோந்து படகுகள் கண்ணுற்றதாகவும் அப்போது முதல் அந்த கப்பல் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் குடியேற்றக்காரர்களை ஏற்றிக் கொண்டு கனடா செல்லும் முதல் கப்பல் சன்k அல்ல 10 மாதங்களுக்கு முன் ஓஸியன் லேடி என்ற கப்பலில் 76 இலங்கை தமிழர்கள் கனடாவுக்கு சென்றிருந்தனர். அந்த 76 பேரின் அகதி அந்தஸ்து தற்போது பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சன்k மற்றும் ஓஸியன் லேடி ஆகிய கப்பல்கள் புலிகளுக்கு சொந்தமானவை என தெரியவருகிறது.

இந்நிலையில் நேற்று இந்தியாவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஒருவர், உலகளாவிய ரீதியில் புலிகள் இயக்கத்தினர் உட்பட 1500 தமிழர்களை கடந்த ஒன்றரை வருட காலத்தில் 36 கப்பல்கள் மூலம் கனடா, அவுஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு கடத்திச் சென்றுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இலங்கை சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் கனடாவை நோக்கிச் செல்ல தாய்லாந்தில் ஆயத்தமாவதாக பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.இந்தக் கப்பல்களில் 500 தமிழ் சட்டவிரோதக் குடியேறிகள் பயணிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த சட்டவிரோத குடியேறிகளில் தமிbழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கனடாவை நோக்கிப் பயணித்து வரும் இலங்கைச் சட்டவிரோதக் குடியேறிகளைக் கொண்ட கப்பலுக்கு அந்நாட்டு அதிகாரிகள் அளிக்கும் மரியாதையின் அடிப்படையில் ஏனைய இரண்டு கப்பல்களும் பயணத்தைத் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கனேடிய அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

பீட்டர் ஹேய்ஸ் மன்னார் விஜயம்

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் டாக்டர்.பீட்டர் ஹேய்ஸ், கடந்த 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை மன்னார் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவருடன் இணைந்து அவரது மனைவி கிரிஸ்டி ஹேய்ஸும் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

சாட்சியங்களைத் திரட்டும் 3ம் நாள்

கொழும்பில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் மையத்தில் முன்னாள் சட்ட மா அதிபர் சீ.ஆர். டி சில்வா தலைமையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் சாட்சியங்களைத் திரட்டும் பணிகளின் மூன்றாம் நாள் இன்றாகும். இன்றைய தினம் எஸ்.எல். குணசேகர மற்றும் ஆனந்த சங்கரி ஆகியோர் சாட்சியமளித்தனர்.

புலிகளுக்கு சார்பான – எதிரான – அரசுக்கு நம்பகமற்றவர்களின் A to Z வரையான பெயர்ப்பட்டியல்

LTTE LOGOA முதல் Z வரையான பெயர்கள் கொண்ட பட்டியலும் அவர்களது அரசியல் நிலைப்பாடும் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளையும் தற்போதைய இலங்கை அரசையும் மையப்படுத்தி அவர்கள் என்ன அரசியல் நிலைப்பாட்டில் உள்ளனர் என்ற குறிப்புகளுடன் இத்தொகுப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அத்துடன் அமைப்புகள் ஊடகங்கள் பற்றிய தகவல்களும் அவற்றின் அரசியல் நிலைப்பாடுகளும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால் இப்பட்டியலில் தெளிவாகத் தெரியக் கூடிய தவறான தகவல்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இப்பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து காலமான சதாசிவம் கிருஸ்ணகுமார் (கிட்டு) முதல் நோர்வேயின் இலங்கைக்கான சமாதானத் தூதுவர் எரிக் சோல்கைம் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறுவதாக இலங்கை அரசுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போவதாக கூறிவருகின்ற அமெரிக்க செனட்டர் புருஸ்பெயின் உட்பட பலரது பெயர்களும் அவர்களது அரசியல் நிலைப்பாடுகளும் வெளியிடப்பட்டு உள்ளது.

பிரித்தானியாவில் ரூட் ரவி உட்பட பலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களாகக் குறிக்கப்பட்டு உள்ளனர். கவுன்சிலர் போல் சத்தியநேசன், ஆர் ஜெயதேவன் போன்றவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை உடையவர்கள் என்றும் அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இப்பட்டியலில் பிரித்தானியா உட்பட்ட ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள பலரது பெயர் விபரங்களும் அவர்களது அரசியல் நிலைப்பாடுகளும் அடங்கி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் புலிகள் தொடர்பான அரசியல் நிலைப்பாடும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

மேலும்  சிங்கள மக்கள் மத்தியில் அரசுக்கு மாறுபட்ட கருத்துடைய பிரயன் செனவிரரட்னே போன்றவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் காட்டப்பட்டு உள்ளது.

இப்பட்டியலில் உள்ளவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் என்ற வகையிலும் கே பி க்கு ஆதரவானவர்கள், கே பி க்கு எதிரானவர்கள் என்ற வகையிலும் குறிப்பிடப்பட்டு உள்ளனர். கே பி க்கு ஆதரவானவர்கள் என்ற வகைப்படுத்தலைத் தவிர அரச ஆதரவாளர்கள் என்று யாரையும் குறிப்பிடவில்லை. ஏசியன் ரிபியூன் ஆசிரியரை டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர் என்றே குறிப்பிட்டு உள்ளது.

இப்பட்டியல் யாரால் என்ன நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டது என்றோ ஏன் வெளியிடப்பட்டது என்றோ இதுவரை தெரியவில்லை. ஆனால் இப்பட்டியல் ஏதோ ஒரு வகையில் தற்போதைய இலங்கை அரசினால் நம்பகமற்றவர்களாக கருதுபவர்களின் பட்டியலாகவே பெரும்பாலும் உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டவர்கள் தற்போதைய இலங்கை அரசு மீது விமர்சனம் உடையவர்களே பெரும்பாலும் இப்பட்டியலில் உள்ளனர்.

இப்பட்டியல் இலங்கைநெற்றில் இருந்து பெறப்பட்டு இங்கு பதிவு செய்யப்படுகின்றது.

LTTE_ACTIVISTS_and_LTTE_and_GOVERNMENT_OPPONENTS

ஆகஸ்ட் 16ம் திகதி வரை விளக்கமறியல்

 vijitha-herath.jpgகாலியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கடமைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள், பொலிஸாரைத் தாக்கினார்கள் ஆகிய குற்றச் சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அஜித் குமார மற்றும் மாகாண சபை உறுப்பினர் நலின் ஹேவகே உட்பட 10 பேரை ஆகஸ்ட் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.