கொழும்பு ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் அதிசய ஆமை ஒன்றினை தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு அன்பளிப்புச் செய்துள்ளார். இவ்வதிசய ஆமையின் முன் பகுதியில் இரண்டு தலைகள், நான்கு கைகளும், பின் பகுதியில் இரண்டு கால்களும் காணப்படுகிறது.
அதன் தலை இருக்கும் இடத்தில் ஓடு இரண்டாக பிளவுபட்டுள்ளது போல் காட்சி தருகிறது. இரண்டு தலைகளிலும் உள்ள இரண்டு வாய்களாலும் உணவு உட்கொள்ள முடியும் என மிருகக் காட்சிசாலை பணிப்பாளர் ஆனந்த லொக்கு ரணமுக கூறினார்.
மூன்று வாரங்கள் வயதுடைய இவ்வாமை மிருகக் காட்சிசாலை மிருக வைத்திய பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.