September

September

மின்னொளி பாய்ச்சி மீன்பிடிப்புக்கு எதிர்ப்பு மக்கொனை, பயாகலையில் ஆர்ப்பாட்டம்

பேருவளை, மக்கொனை, பயாகலைப் பகுதிகளைச் சேர்ந்த சிறிய அளவில் கடற்றொழில் துறையில் ஈடுபடும் மீனவர்கள் நேற்று (28) காலை மக்கொனையில் காலி வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்னொளி பாய்ச்சி கடலில் மீன்பிடிப் பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காலி வீதியில் மக்கொன நகருக்கு சமீபமாக படகுகளை வீதிக்கு கொண்டு வந்து மீனவர்கள் சுலோகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலி வீதியில் 20 – 30 இடைப்பட்ட படகுகளை வைத்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் போது படகு ஒன்றும் தீவைக்கப்பட்டுள்ளது.

இதனால் காலி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பெருமளவிலான பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கலகத் தடுப்புப் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர். ஒரு மணி நேரமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் பின்னர் அமைதியாக முடிவுற்றது  

ஈரான் ஜனாதிபதியூடன் பிரதமர் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் 64ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க அங்கு ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நஜாத்தைச் சந்தித்துக் கலந்துரயாடியுள்ளார். இரு தலைவர்களுக்குமிடையிலான இச்சந்திப்பு கடந்த 25ஆம் திகதி நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.

உலகத் தலைவர்கள் பலர் பங்கேற்ற ஐ.நா. சபையின் 64ஆவது அமர்வில் இலங்கை சார்பாகக் கலந்துகொண்ட பிரதமர் நேற்று முன்தினம் அங்கு உரையாற்றினார். இதன்போது பிரதமர் சிங்கள மொழியிலும் உரையாற்றியமை விசேட அம்சமாகும

கனகராயன்குளத்தில் புதிய பொலிஸ் நிலையம் திறப்பு!

கனகராயன்குளம் மற்றும் மாங்குளத்தில் பொலிஸ் திணைக்களத்தின் புதிய கட்டடங்கள் இரண்டு திறந்து வைக்கப்பட்டன. இதன் ஓர் அங்கமாக கனகராயன்குளத்தில் புதிய பொலிஸ் நிலையத்தை பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண ஞாயிறன்று  திறந்து வைத்தார்.
 
இதேவேளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் ஒன்றையும்  அவர் வைபவரீதியாக மாங்குளத்தில் திறந்து வைத்தார்.

வான்புலிகளின் ஆளில்லா வேவு விமானப் பாகங்கள் மீட்பு: பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள்  பாவிக்கப்பட்டதாக கருதப்படும் ஆளில்லா வேவு விமானம் ஒன்றின் உதிரிப் பாகங்களை மீட்கப்பட்டிருப்பதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
 
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேசம், வெள்ளாமுள்ளிவாய்க்கால், ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (27.09.2009)  படையினரால் மேற்கொள்ளப்பட்ட  தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளால் பாவிக்கப்பட்டதாக கருதப்படும் ஆளில்லா வேவு விமானம் ஒன்றின்  உதிரிப் பாகங்கள் மீட்கப்பட்டிருப்பதாக இலங்கைப் பாதுகாப்புத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

ஆளில்லா வேவு விமானத்தின் இரண்டு உடைந்த சிறகுகள், விமானத்திற்கான ஒளிப்பதிவுக் கருவி, விமான இயந்திரம் ஆகியவையும், அவற்றுக்கான மூன்று சக்கரங்களும், பயிற்சி விமானம் ஒன்றின் இயந்திரமுமே கண்டெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கைப் பாதுகாப்புத்துறை அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தற்போது இலங்கைப் படையினரால் மீடகப்பட்டுள்ள ஆளில்லா வேவு விமானத்தின் பாகங்கள், கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான வேவு விமானத்தின் பாகங்கள் எனவும், இது இலங்கை அரசினால் திட்டமிட்டு சர்வதேச நாடுகளுக்கு பரப்பப்படும் பிரசாரத்தின் ஓர் அங்கம் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.

இராணுவத்தின் வெள்ளி விழா நிகழ்வூகள் ஒக்டோபர் 02ஆம் திகதி ஆரம்பம் – இராணுவக் கண்காட்சிக்கும் ஏற்பாடு

இலங்கை இராணுவத்தின் 60 வருடப் பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெள்ளி விழா நிகழ்வுகள் அடுத்த மாதம் 02ஆம் திகதி முதல் வெகுவிமர்சையாக ஆரம்பமாகவுள்ளன.

1949ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் வெள்ளி விழா நிகழ்வுகளின் முக்கிய அம்சமாக மாபெரும் இராணுவக் கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியின்போது இராணுவத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் பற்றிய தகவல்கள்,  புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் உட்பட போர்த் தளபாடங்கள் மற்றும் இராணுவத்திடமுள்ள யுத்த உபகரணங்கள் போன்றன காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

இக்கண்காட்சி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 07ஆம் திகதி முடிவடையவுள்ளது. இக்கண்காட்சிக்கு 50 ரூபா கட்டணமாக அறிவிடப்படவுள்ளதோடு கண்காட்சி நடைபெறும் தினங்களில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் இதனைப் பார்வையிட முடியும்.
ஒக்டோபர் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள வெள்ளி விழா நிகழ்வுகள் அடுத்த மாதம் 02ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள சமயக் கிரியைகளையடுத்து ஆரம்பமாகவுள்ளன.

பௌத்த சமயக் கிரியைகள் ஒக்டோபர் 02ஆம் திகதி அநுராதபுரம்,  ஜய ஸ்ரீ மகா போதி விகாரையிலும், இஸ்லாமிய சமயக் கிரியைகள் ஒக்டோபர் 05ஆம் திகதி கொழும்பு, தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளியிலும்,  இந்துசமயக் கிரியைகள் ஒக்டோபர் 06ஆம் திகதி மருதானை,  ஸ்ரீ பாலா செல்வநாயகம் மூர்த்தி கோயிலிலும், கிறிஸ்தவ சமயக் கிரியைகள் ஒக்டோபர் 07ஆம் திகதி கொழும்பு,  கத்தோலிக்க தேவாலயத்திலும் நடைபெறவுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய மீனவர் தாக்குதல் : விஜய்காந்த் இன்று டில்லியில் உண்ணாவிரதம்

இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்த், டில்லியில் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்.

இலங்கைத் தமிழர்கள் விவகாரம், கடந்த இரு வாரங்களாக தலைநகர் டில்லியை சூடேற்றி வருகிறது. இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை மீண்டும் அவரவர் இடங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.,க்கள் கடந்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரைச் சந்தித்து முறையிட்டனர்.

நாடாளுமன்ற எம்.பி.க்கள் அடங்கிய குழுவை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்போது வலியுறுத்தியும், இந்த கோரிக்கை குறித்து இதுவரை, எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

மேலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும், இந்தக் குழு வலியுறுத்தியது. ஆனால், இந்தச் சந்திப்புக்கு பிறகு தான், தமிழக மீனவர்கள் மீது மேலும் தாக்குதல்கள் அதிகமாக தொடர்ந்த வண்ணம் உள்ளன.

மீனவர்கள் பிரச்சினையை முன்னிறுத்தி, விஜய்காந்த்தின் உண்ணாவிரதம் இன்று டில்லியில் நடைபெறுகிறது. டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், காலை 9.00 மணி முதல் மாலை வரை நடக்கும் இந்த உண்ணாவிரத நிகழ்ச்சியில் பங்கேற்க, விஜய்காந்த், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் டில்லி வந்துள்ளனர்.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தை மற்றவர்கள் எல்லாம் கையில் எடுத்த நிலையில், சற்று மாற்றமாக இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தை, விஜய்காந்த் கையில் எடுத்து டில்லியில் உண்ணாவிரதம் இருக்கவுள்ளார்.

குஜராத் அருகே கடலில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களுக்குப் பாகிஸ்தான் கடற்படையினரால் தாக்குதல் ஏதும் நடந்துவிடாமல் இந்திய கடற்படை பாதுகாப்பு தருகிறது.

தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றனர்.அப்போது மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை இந்திய கடற்படை தருவதில்லை.

இந்திய கடற்படை தமிழக மீனவர்களுக்கு ஏன் உரிய பாதுகாப்பைத் தருவதில்லை என்ற கேள்வியை, இதுவரை எந்தக் கட்சியும் எழுப்பாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ICC Champions Trophy – 9th match, Group A : Australia v India – No result

Played at SuperSport Park, Centurion (neutral venue)
28 September 2009 – 

Australia innings (50 overs maximum)
 SR Watson  c Harbhajan Singh b Nehra  0 
 TD Paine†  c Harbhajan Singh b Mishra  56 
 RT Ponting*  run out (Gambhir)  65
 MEK Hussey  c Tendulkar b Sharma  67 
 CL White  not out  35
 CJ Ferguson  not out  2 
 Extras (b 1, lb 1, w 7) 9     
      
 Total (4 wickets; 42.3 overs) 234 (5.50 runs per over)
Did not bat JR Hopes, MG Johnson, B Lee, NM Hauritz, PM Siddle 
Fall of wickets1-3 (Watson, 2.2 ov), 2-87 (Paine, 16.4 ov), 3-175 (Ponting, 32.5 ov), 4-227 (Hussey, 40.1 ov) 
        
 Bowling  
 A Nehra 8 1 38 1 
 P Kumar 8 0 34 0 
 I Sharma 7.3 0 53 1 
 A Mishra 9 0 45 1
 Harbhajan Singh 9 0 54 0 
 SK Raina 1 0 8 0  
   
India team    
G Gambhir, SR Tendulkar, R Dravid, SK Raina, MS Dhoni*†, V Kohli, A Mishra, Harbhajan Singh, A Nehra, I Sharma, P Kumar 

Match details
Points Australia 1, India 1
 
Umpires BF Bowden (New Zealand) and IJ Gould (England)
TV umpire Asad Rauf (Pakistan)
Match referee JJ Crowe (New Zealand)
Reserve umpire AL Hill (New Zealand

வி்டுதலை வேண்டி அ’புரம் சிறைச்சாலை தமிழ்க் கைதிகள் உண்ணாவிரதம்

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தம்மை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, திங்கட்கிழமை நண்பகல் முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் கவனத்திற்கு அரசியல் கைதிகள் கொண்டு வந்துள்ளனர்.

இரண்டு தொடக்கம் ஐந்து வருடங்கள் வரையில் எந்தவிதமான வழக்கு விசாரணைகளுமின்றி இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கம் கூறுகின்ற இவ்வேளையில், விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் இவர்கள் கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

தண்ணீர் மாத்திரம் அருந்தி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள இவர்கள் நீதி அமைச்சின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நேரில் வந்து தங்களிடம் உறுதிமொழி வழங்கும் வரையில் தமது உண்ணாவிரதம் தொடரும் எனத் தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தன் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் தலைவர்களாக இருக்கின்றார்கள். பல முன்னணி தலைவர்கள் இன்று அரசாங்கத்திடம் சரணடைந்துள்ளனர்.

அவர்களில் சிலர் விசாரணைகளின் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தங்களைத் தடுத்து வைத்திருப்பது குறித்து அவர்கள் பெரிதும் விசனம் தெரிவித்திருப்பதாகவும் ஆனந்தன் தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் 43 பேருக்கு ஆதரவாக மகசின், பூஸா, வெலிக்கடை உட்பட ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜெஸ்ஸி ரைடர் காயம் காரணமாக நீக்கம் ஐ.சி.சி. அபராதத்திற்கும் உள்ளானார்

270909n-s.bmpநியூஸிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜெஸ்ஸி ரைடர் காயம் காரணமாக சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதன்படி ஜெஸ்ஸி ரைடருக்கு பதில் அரோன் ரொட்மன்ட் சாம்பியன்ஸ் தொடருக்கான நியூஸிலாந்து அணியில் இணைக்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்து அணிக்காக இதுவரை 7 டெஸ்ட் மற்றும் 3 இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ள ரொட்மன்ட் இதுவரை ஒருநõள் சர்வதேச போட்டிகளில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையுடனான போட்டியின்போது ஒழுங்கீனமாக செயல்பட்ட ரைடருக்கு ஐ.சி.சி. அபராதம் விதித்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த இந்த போட்டியில் 74 ஓட்டங்களை பெற்ற ரைடர் ஆட்டமிழந்து அரங்கு திரும்பியதன் பின் உடைமாற்றும் அரையில் இருந்த நாற்காலியை தனது துடுப்பாட்ட மட்டையால் தாக்கி உடைத்துள்ளார்.

இது ஐ.சி.சி. ஒழுங்கு விதி 1.2 ஐ மீறும் செயலாகும். இதனால் ரைடருக்கு ஐ.சி.சி. மத்தியஸ்தர் ஜவகல் ஸ்ரீனாத், போட்டிக் கட்டணத்தில் இருந்து 15 வீதம் அபராதம் விதித்தார்.

மன்னார் அபிவிருத்தி குறித்து அமைச்சர் தலைமையில் நேற்று கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தி சம்பந்தமான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று காலை 10.00 மணியளவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் மன்னர் மாவட்டத்தைச் சேர்ந்த பல அதிகாரிகளுடன் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் வீதி, மின்சாரம், விவசாயம், உட்கட்டமைப்பு போன்ற வேலைத்திட்டங்களை மீள் குடியேற்ற அமைச்சுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்வது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் நடைமுறையிலுள்ள பாதுகாப்புக் கெடுபிடிகள் தொடர்பாக மக்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் பேசி, உடன் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தர்.

கலந்துரையாடலை அமைச்சின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் என். எம். முனவ்பர் ஏற்பாடு செய்திருந்தார்