ஐக்கிய நாடுகள் சபையின் 64ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க அங்கு ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நஜாத்தைச் சந்தித்துக் கலந்துரயாடியுள்ளார். இரு தலைவர்களுக்குமிடையிலான இச்சந்திப்பு கடந்த 25ஆம் திகதி நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.
உலகத் தலைவர்கள் பலர் பங்கேற்ற ஐ.நா. சபையின் 64ஆவது அமர்வில் இலங்கை சார்பாகக் கலந்துகொண்ட பிரதமர் நேற்று முன்தினம் அங்கு உரையாற்றினார். இதன்போது பிரதமர் சிங்கள மொழியிலும் உரையாற்றியமை விசேட அம்சமாகும