பேருவளை, மக்கொனை, பயாகலைப் பகுதிகளைச் சேர்ந்த சிறிய அளவில் கடற்றொழில் துறையில் ஈடுபடும் மீனவர்கள் நேற்று (28) காலை மக்கொனையில் காலி வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்னொளி பாய்ச்சி கடலில் மீன்பிடிப் பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காலி வீதியில் மக்கொன நகருக்கு சமீபமாக படகுகளை வீதிக்கு கொண்டு வந்து மீனவர்கள் சுலோகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலி வீதியில் 20 – 30 இடைப்பட்ட படகுகளை வைத்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் போது படகு ஒன்றும் தீவைக்கப்பட்டுள்ளது.
இதனால் காலி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பெருமளவிலான பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கலகத் தடுப்புப் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர். ஒரு மணி நேரமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் பின்னர் அமைதியாக முடிவுற்றது