குவைத்தில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 22 நாடுகளைச் சேர்ந்த 17 ஆயிரம் பேரை அந்த நாட்டின் உள் துறை அமைச்சு நாடு கடத்த திட்டமிட்டு ள்ளதாக குவைத் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளவர்களுக்கான விமான சீட்டுக்களை நாடு கடத்தல் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய மத்திய முகவர் சமூகம் கொள்வனவு செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் உள்துறை அமைச்சின் அறிக்கையின்படி சுமார் ஆயிரம் இலங்கையர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், சுமார் 4000 பங்களாதேசியர்களும் 3500 இந்தியர்களும் நாடு கடத்தப்படவிருப்பதுடன், ஆப்கானிஸ்தான், எகிப்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் சட்டவிரோத குடியேற்றவாசிகளும் நாடு கடத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.